Contact us at: sooddram@gmail.com

 

நாட்டின் எப்பாகத்திலும்

இனவிகிதாசாரத்தை மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை - அமைச்சர் பசில் ராஜபக்ஷ

நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஓர் இனத்தினதும் இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன விகிதாசாரத்தை மாற்றும் எந்த குடியேற்றத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வரவு - செலவுத் திட்டத்தின் ஆறாவது நாள் விவாதத்தை நிறைவு செய்து வைத்து அமைச்சர் உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்புக் குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும். இந்த விவாதத்தின் நிறைவு உரையை இரண்டு பிரிவுக ளாக ஆற்ற விரும்புகிறேன். முதலில் எதிர்க் கட்சியினர் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்க விரும்புகிறேன்.

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காதிருக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவைப் பாராட்டுகிறேன். வடக்கின் மீள்குடியேற்றப் பணிகளுக்கு ஒத்துழைப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வடக்கில் மீள்குடியேற்றம் என்பது சுலபமானது அல்ல. சகல கட்டமைப்புகளும் அழிக்கப் பட்ட நிலையில் பெரும் தொகை யான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றோம். முதலில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்கின்றோம். சிலர், மீள்குடியேற்றத்திற்கு நிதி ஒதுக்கப்பட வில்லை என்று கூறுகிறார்கள்.

வடக்கு நீர்ப்பாசனத்திற்கென 1385 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீதி புனரமைப்புக்கென 1065 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகளை அகற்ற 700 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு அபிவிருத்திக்கென இரண்டு இலட்சத்து 44 ஆயிரத்து 835 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களைத் தவறாக வழிநடத் தாதீர்கள். நாடு முன்னேறுவதற்கு நீர், மின்சாரம் இன்றியமையாத வளங்களாகும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது. வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமே வாக்களித்துள்ளனர்.

வடக்கில் இந்திய இராணுவம் இருந்த போதும் சரி. போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலமானாலும் சரி உயர் பாதுகாப்பு வலயங்களில் யாரும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன் முதலாகத் தமிழ் மக்களைக் குடியமர்த்தினார். 20 வருடங்களுக்கு முன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைக்கூட குடியமர்த்தவில்லை.

நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஒரு இனத்தினதும் இன விகிதாசாரத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வில்லை. அந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவோம்.

பல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக ஐ.தே.க. குற்றஞ்சாட்டியது. ஆனால் 38 அரச நிறுவனங்கள் இலாபமீட்டுவது குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. 2009 இல் 11,981 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டது. ஆனால் 2010 இல் இன்றுவரை 20 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளது. இந்த வருட முடிவில் 26 மில்லியன் ரூபாவாக இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நஷ்டம் ஈட்டும் அரச நிறுவனங்களை இலாபமீட்ட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரவு - செலவுத் திட்டம் எந்த மாதிரி என எதிர்க் கட்சி கேள்வி எழுப்பியது. இது இலங்கை மாதிரிமஹிந்த சிந்தனைமாதிரியாகவே இந்த வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தோட்டப் பகுதி உட்பட சகல இனப் பிரிவினரையும் உள்ளடக்கியதாகவே வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சி குற்றச்சாட்டியது. ஆனால் 90 அலகிற்கு அதிகம் பயன்படுத்தினாலே கட்டணம் உயரும். மொத்த மின் பாவனையாளர்களில் 70 வீதமானவர்கள் 90 அலகை விட குறைவாகவே பயன்படுத்துகின்றனர். குறைவாக மின்சாரம் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்.பிகளுக்கும் 90 அலகிற்கு குறைவாக மின்சாரத்தை பாவிக்குமாறு கோருகிறோம்.

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கட்டண உயர்வு அமுலாகாது. பாடசாலைகள், மதஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டு ள்ளது. எதிர்வரும் போகத்தின் போது 1550 மில்லியன் மெற்றிக்தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி இந்த வருடத்தில் 4189 மெற்றிக்தொன் மொத்த நெல் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. இது 17 வீத அதிகரிப்பாகும். இதனூடாக சுதந்திரத்தின் பின் அதிகூடிய நெல் உற்பத்தி இந்த வருடத்திலே பதிவாகிறது. வடக்கு, கிழக்கிலும் இம்முறை கூடுதலான நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

குரக்கன் மற்றும் உழுந்து உற்பத்தியில் தன்னிறைவு காணும் வகையில் இம்முறை வன்னிப் பிரதேசத்தில் குரக்கன் மற்றும் உழுந்து பயிரிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல் அரச ஊழியர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் அளிக்கப்பட்டு வந்தன. இம்முறை வரவு - செலவுத் திட்டத்தினூடாக குறைந்தது 1250 ரூபா சம்பளம் அதிகரிக்கிறது. சிலருக்கு 3 ஆயிரம் ரூபாவுக்கு மேல் உயருகிறது.

2010 இல் மின் உற்பத்தி 10 வீதத்தினால் அதிகரித்துள்ளது. வடக்கு, கிழக்கிலும் மின் உற்பத்தியில் இணைந்துள்ளதே இதற்குக் காரணம். வடக்கு, கிழக்கில் மின் உற்பத்தியை 50 வீதத்தினால் உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். படகுகளின் பதிவுக் கட்டணம், திருத்தக் கட்டணம் என்பன நீக்கப்பட்டுள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com