Contact us at: sooddram@gmail.com

 

40 ஆண்டுகளுக்கு பின் சிரியாமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

கொலன் ஹைட்ஸ் பகுதியிலுள்ள இஸ்ரேல் இராணுவ முகாமிற்கு சிரியாவில் இருந்து மோட்டார் குண்டுகள் விழுந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல், சிரியா மீது எச்சரிக்கை ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த 1973 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்திற்கு பின்னர் இஸ்ரேல், சிரியா மீது தாக்குதல் நடத்துவது இது முதல் முறையாகும். ஏற்கனவே சிரியாவில் தொடரும் அரச எதிர்ப்பு போராட்டம் அயல் நாடுகளான துருக்கி, லெபனான் எல்லைகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலும் இதில் தலையிட்டுள்ளது.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கொலன் ஹைட்ஸ் பகுதியில் அண்மையில் இஸ்ரேல் இராணுவ வாகனம் ஒன்றின் மீது சிரியாவிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் துருப்புகள் எல்லைப் பகுதியில் உஷார்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இது குறித்து ஐ.நா.விடம் முறையிட்டது.

இந்நிலையில் சிரியாவில் இருந்து மீண்டும் மோட்டார் குண்டுகள் இஸ்ரேல் இராணுவ முகாமில் விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே இஸ்ரேல் சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் இது எச்சரிக்கை தாக்குதல் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இதன் போது இஸ்ரேல், சிரியா மீது ஒரே ஒரு தமூஸ் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவ தரப்பு கூறியுள்ளது. இந்த ஏவுகணை இலக்குகளை தெளிவாக தாக்கக்கூடியது. ஆனால் தாம் இலக்கு எதனையும் தாக்கவில்லை என இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

சிரியாவில் இடம்பெறும் அரச படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலில் இஸ்ரேல் பகுதிக்குள் தவறுதலாக துப்பாக்கி குண்டுகள் தாக்குவதோடு மோட்டார் குண்டுகளும் விழுந்து வருகின்றன. இவ்வாறு சிரிய படை நடத்திய எறிகணை தாக்குதல் தவறுதலாக இஸ்ரேல் எல்லை வேலியை தாண்டி யூதக் குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இனிமேலும் எல்லை தாண்டி தாக்குதல்கள் இடம்பெற்றால் இஸ்ரேல் அமைதியாக இருக்காது என ஜரூசலத்தில் வைத்து இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். எமது சிரிய எல்லைப் பகுதியில் என்ன நடக்கிறது என கூர்மையாக அவதானித்து வருகிறோம். எதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம்என கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடிய இஸ்ரேலிய வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் நெதன்யாகு கூறினார்.

ஏற்கனவே சிரியா - இஸ்ரேலுக்கு இடையில் நீண்ட காலமாக யுத்த சூழல் நீடித்து வருகிறது. இரு நாட்டு எல்லையில் ஐ.நா. படை யுத்த சூன்ய பகுதியை கடைப்பிடித்து வருகிறது.

துருக்கி எல்லையில் ஏவுகணை தளம்

மறுபுறத்தில் சிரியாவின் துருக்கி எல்லையிலும் இரு நாட்டுக்கும் இடையில் பதற்றம் நீடிக்கிறது. அண்மையில் சிரியாவின் எறிகணை தாக்குதலால் துருக்கி கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து துருக்கி, சிரியா மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது.

அத்துடன் சிரியாவைத் தாக்குவதற்கு துருக்கி பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெறப்பட்டது. இந்நிலையில் சிரிய எல்லையில் துருக்கி இராணுவத்தை பலப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறது. அத்துடன் எல்லைப் பகுதியில் நேட்டோ ஏவுகணைத் தளத்தை அமைப்பது குறித்து துருக்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த தகவலை துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல் தெரிவித்தார். சிரியாவின் எந்த வகையான அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள எமக்கு முழு உரிமை உள்ளது. இதனால் எல்லையில் அமெரிக்க பெட்ரொயிட் ஏவுகணைத் தளத்தை நிறுவுவது குறித்து நேட்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குல் கூறினார்.

எனினும் துருக்கி எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் சிரிய இராணுவம் கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து முன்னேறி வரும் கிளர்ச்சியாளர்கள் துருக்கி எல்லைப் பகுதியில் இருக்கும் ராஸ் அல் அயின் பகுதியை கடந்த சனிக்கிழமை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சிரிய இராணுவம் ராஸ் அல் அயின் மீது ஹெலிகொப்டர் மூலம் தாக்குதல் நடத்தியதோடு பீரங்கி தாக்குதலையும் நடத்தியது.

லெபனானிலும் பதற்றம்

அதேபோன்று சிரியாவின் மற்றுமொரு அயல் நாடான லெபனானில் சிரிய மோதலை ஓட்டி பதற்றம் நீடித்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலவரத்தில் மூவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஐவர் காயமடைந்தனர்.

தெற்கு லெபனான் கரையோர நகரான சிடோனில் இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. லெபனானின் ஷியா பிரிவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா வுக்கும் சலபி பிரிவு தலைவரான ஷெய்க் அஹமத் அஸிர் ஆதரவாளர் களுக்கும் இடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் சலபி பிரிவு தலைவரான அஹமத் அஸிர் ஹிஸ்புல்லா அமைப்பு சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு ஆதரவளிப்பதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு சிடோன் பகுதியில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் சுவரொட்டிகளை கிழித்தெறியும்படி தமது ஆதரவாளர்களை கோரியுள்ளார். இதனைத் தொடர்ந்தே இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் அதனை ஒட்டி லெபனானிலும் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருகிறது. அண்மையில் பஷர் அல் அஸாத்திற்கு எதிராக செயற்பட்டு வந்த லெபனான் உளவுப் பிரிவு தலைவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் தொடரும் வன்முறைகளில் இதுவரை 37,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக சிரியா தொடர்பில் கண்காணித்து வரும் மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com