Contact us at: sooddram@gmail.com

 

தரைவழி தாக்குதலுக்கு எல்லையில் படைகளை குவிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் இரவு, பகல் பாராமல் காசா பகுதியில் வான் தாக்குதல்களை நடத்தியதோடு, இஸ்ரேல் துருப்புகள் தரைவழி தாக்குதலுக்காக எல்லையோரத்தில் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை ஹமாஸ் அமைப்பின் இராணுவ தளபதி அஹமட் ஜபரி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தீவிரமடைந்த மோதலில் நேற்று முன்தினம் காசாவில் இருந்து இஸ்ரேலின் வர்த்தக நகரான டெல் அவிவுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இஸ்ரேல் இராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. காசாவிலிருந்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர்.

எனினும் இஸ்ரேல் விமானங்கள் காசா மீது தொடர்ந்தும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறான தாக்குதல்களால் 1.2 மில்லியன் மக்கள் செரிந்து வாழும் சிறு பகுதியான காசாவில் 6 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சந்தேகப்படும் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ரொக்கெட் தாக்குதல் தளங்கள் மீதே தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. இவ்வாறு வெள்ளிக்கிழமையில் மாத்திரம் காசா பகுதிக்குள் 45 நிமிடங்களில் 85 ஏவுகணைகள் வெடித்துள்ளன. இதனால் காசா எங்கும் புகைமூட்டங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

இதில் ஒரு ஏவுகணை ஹமாஸ் அமைப்பின் உள்துறை அமைச்சு அலுவலகத்தை தாக்கியுள்ளது. தவிர, காசா பிரதமர் இஸ்மயில் ஹனியானின் வீட்டுக்கு அருகில் இருக்கும் மின்பிறப்பாக்கி கட்டிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே காசா மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இது வரை காசாவில் 350 க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ நேற்று அறிவித்தது.

மறுபுறத்தில் காசா போராளிகள் கடந்த மூன்று தினங்களில் 400 க்கும் அதிகமான ரொக்கெட் தாக்குதல்களை தெற்கு இஸ்ரேல் மீது நடத்தியது. இதில் வெள்ளிக்கிழமை இரவு காசாவில் இருந்து இஸ்ரேல் மீது 11 ரொக்கெட்டுகள் விழுந்துள்ளன. கடந்த புதன்கிழமை மதியம் தொடக்கம் காசாவில் இருந்து 280 ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனினும் மேலும் 131 ரொக்கெட்டுகளை இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு முறை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என இஸ்ரேல் இராணுவம் நேற்று அறிவித்தது.

கன்தில் காசா விரைவு

இதனிடையே எகிப்து பிரதமர் ஹிஷாம் கன்தில் நேற்று காசா விரைந்தார். பலஸ்தீனத்திற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தவே எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சியால், அந்நாட்டு பிரதமர் கன்தில் காசாவுக்கு அனுப்பப்பட்டார்.

இதன் போது இஸ்ரேலின் தாக்குதலுக்கு தமது கண்டனத்தை வெளியிட்ட கன்தில் இது ‘பேரழிவு’ எனவும் விபரித்தார்.

ரபா எல்லையினூடாக நேற்றுக் காலை தாக்குதல் அபாயத்திற்கு மத்தியில் கன்தில் காசாவுக்கு சென்றார்.

அங்கு அவர் காசா நகரில் ஷிபா மருத்துவமனைக்கு சென்று தாக்குதலால் கொல்லப்பட்ட உடல்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அதில், “காசாவில் ஏற்பட்டிருக்கும் பேரழிவை பார்த்துக் கொண்டு என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது. இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். முழு உலகமும் இந்த தாக்குதலை நிறுத்த பொறுப்பேற்க வேண்டும். இந்த தாக்குதலை நிறுத்த எகிப்து எந்த நடவடிக்கையை எடுக்கவும் தயங்க மாட்டாது” என கன்தில் எச்சரித்தார்.

எகிப்து பிரதமர் தனது விஜயத்தின் போது ஹமாஸ் தலைமைகளை சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடினார்.

இதேவேளை, ஹிஷாம் கன்திலின் வருகையையொட்டி காசா மீது மூன்று மணி நேரம் போர் நிறுத்தம் கடை பிடிக்கப்படுவதாக இஸ்ரேல் முன் கூட்டியே அறிவித்தது. ஆனால் இஸ்ரேல் இராணுவம் கன்திலின் வருகைக்கு பின்னரும் காஸா மீது தாக்குதலை தொடுத்துள்ளது. கன்திலின் வருகையின் போது இஸ்ரேல், காசா மீது நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட இரு பலஸ்தீனர் கொல்லப்ப ட்டதாக ஹமாஸ் கூறியுள்ளது.

எனினும் இஸ்ரேல் இராணுவம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஆனால் கன்திலின் வருகையை மதிக்காமல் காசாவிலிருந்து தான் இஸ்ரேல் மீது சுமார் 50 ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. “எகிப்து பிரதமர் வருகையை ஒட்டி இஸ்ரேல் இணங்கிய மூன்று மணி நேர யுத்த நிறுத்தத்தை மீறி அவரது வருகையை மதிக்காமல் ஹமாஸ் செயற்பட்டது” என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் பேச்சாளர் ஒலிர் ஜென்ட்ல்மன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் எகிப்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு காசாவில் ஆட்சியில் இருக்கும் ஹமாஸ் அமைப்புடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பலஸ்தீன கிளையாகவே ஹமாஸ் அமைப்பு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அமெரிக்காவின் 1.3 பில்லியன் இராணுவ உதவியை பெறும் எகிப்து அரசு மேலும் உதவ வேண்டும் என ஹமாஸ் பிரதமர் இஸ்மயில் ஹனியான் வலியுறுத்தி யுள்ளார்.

“எதிரிகளை ஒழிக்க எகிப்து சகோதரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இஸ்ரேல் - காசா மோதல், இஸ்ரேல் - எகிப்துக்கு இடையிலான 1979 ஆம் அண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி உடன் படிக்கைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. உள்நாட்டில் இஸ்ரேல் மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்தும் படி எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனினும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் முர்சி அரசு சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

டெல் அவிவுக்கு தாக்குதல்

காசாவிலிருந்து இஸ்ரேலின் வர்த்தக நகரான டெல் அவிவுக்கு ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரொக்கெட் தெற்கு டெல் அவிவின் கடற்பகுதியில் விழுந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் காசாவில் இருந்து மிகத் தொலைவான இடத்திற்கு நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல் இதுவாகும். இதனால் இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

டெல் அவிவின் ஜப்பா பகுதியை தாண்டி இந்த ரொக்கெட் கடலுக்குள் விழுந்தாக அங்கிருக்கும் ஏ.எப்.பி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டெல் அவிவ் எங்கும் பொலிஸாரால் சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளது.

“பிரான்ஸ் தூதரகத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்தபோது ரொக்கெட் ஒன்று வந்து கடலுக்குள் விழுவதை கண்டேன். இதனையடுத்து சைரன் ஒலி ஒரு நிமிடத்திற்குள் நின்றதையடுத்து மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு எங்கு பாதுகாப்பு முகாம் இருக்கிறது என்று தெரியவில்லை” என ஏ.எப்.பி. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1991ம் ஆண்டு கல்ப் யுத்தத்திற்கு பின்னர் டெல் அவிவ் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை என இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு ஈராக்கினால் டெல் அவிவ் மீது ஸ்குட் ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

இதனிடையே டெல் அவிவ் மீதான தாக்குதலுக்கு பலஸ்தீன போராளிக் குழுவான அல் குத்ஸ் படை பொறுப்பேற்றுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட பஜ்ர் 5 ரொக்கெட் மூலம் மத்திய இஸ்ரேலின் கடற்கரை நகருக்கு தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘குத்ஸ் படை ஆக்கிரமிக்கப்பட்ட நகரான டெல் ரபியா (டெல் அவிவ்)வுக்கு பஜ்ர் 5 ரொக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நகரின் பாரிய அதிர்வு ஏற்பட்டது’ என அந்த குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டெல் அவிவின் ஜப்பா பகுதி காசாவிலிருந்து வடக்காக 60 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ளது. ஆனால் பஜ்ர் 5 ரொக்கெட் 75 கிலோ மீற்றர்சென்று தாக்கக்கூடிய வலுக்கொண்டது.

30,000 வீரர்களுக்கு அழைப்பு

இதேவேளை, டெல்அவிவ் மீது காசாவிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது இராணுவத்தை உஷார்படுத்தியுள்ளது. காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இராணுவ பயிற்சி பெற்ற 30,000 சிவிலியன்களை இராணுவ சேவைக்கு அழைக்க இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஹுட் பராக் அனுமதி அளித்துள்ளார்.

இதனையொட்டி பீரங்கிகளை கொண்டு செல்லும் லொறிகள் மற்றும் பல ஆயுத வாகனங்கள் இஸ்ரேலின் காசா எல்லையை நோக்கி நகர்ந்து வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல பஸ்களிலும் இராணுவத்தினர் எல்லையோரத்தை சென்ற வண்ணம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் அமைப்பு டெல்அவிவ் வரை தாக்குதல் நடத்தும் அளவுக்கு தமது ஆயுத சக்தியை அதிகரித்துள்ளமை இஸ்ரேலுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் காஸா போராளிகள் தெற்கு இஸ்ரேலின் நிஷொன் லெட்சியோன் பகுதி வரைதான் தமது தாக்குதலை நடத்தும் சக்தியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் காசா மீதான தாக்குதலை விரிவுபடுத்தும் வகையில் மேலும் 30,000 இராணுவ பயிற்சி பெற்ற சிவிலியன்களை இராணுவ சேவைக்கு அழைக்கவுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் சிரேஷ்ட கபினட் அமைச்சரான மொஷெ யாலொன், ‘இஸ்ரேல் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தயாராக இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்தார். தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் இஸ்ரேல் படை காஸாவுக்கு ஊடுருவும். யார் தொடர்ந்து தாக்குதலை தொடர்வார்களோ அவர்களின் தலைவிதி அவர்களின் கையில் இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக் வெளியிட்ட அறிவிப்பில், ‘குஷ்டான் அப்பாலும் தனது தாக்குதல் சக்தியை அதிகரித்திருப்பது எமது இராணுவ நடவடிக்கையை விரிவுப்படுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விரிவுபடுத்தல் நடவடிக்கை மூலம் எதிர்த்தரப்பினர் தமக்கான பதிலை பெற்றுக் கொள்வார்கள். எமது மக்களை பாதுகாப்பதற்கு இஸ்ரேல் தேவைப்படும் எந்த நடவடிக்கையையும் எடுக்க தயாராக இருக்கிறது’ என்று பராக் எச்சரித்தார்.

ராஜதந்திர முன்னெடுப்புகள்

ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அடுத்த வாரம் எகிப்து மற்றும் இஸ்ரேலுக்கு சென்று அமைதி முயற்சியில் ஈடுபடவுள்ளதாக ஐ. நா. ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து மேலதிக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மறுபுறத்தில் இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல்களை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு ஹமாஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ள நாடுகளிடம் அமெரிக்கா வலியுறுத்தி இருப்பதாக வெள்ளை மாளிகை ஆலோசகர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். “எகிப்து, துருக்கி மற்றும் ஐரோப்பாவில் எமது ஒரு சில நட்பு நாடுகளைக் கொண்டு ஹமாஸின் ரொக்கெட் தாக்குதல்களை நிறுத்த அழுத்தம் கொடுத்து வருகிறோம்” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பென்னட்டா இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்தினார். “வொயிஸ் ஒப் அமெரிக்கா” வுக்கு அவர் அளித்த பேட்டியில், “தற்போது இஸ்ரேல் செய்ய வேண்டியதைத் தான் அவர்கள் செய்கிறார்கள்.

காசாவில் இருந்து வரும் தாக்குதலை இலக்குவைத்தே அவர்களும் தாக்குதல் நடத்துகிறார்கள். சிவில் இலக்குகளை தவிர்த்து அவர்கள் தாக்குதலை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

தவிர, பிரான்ஸ் பிரதமர் பிரன்கொய்ஸ் ஹொல்லான்டே மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கொமரூன் ஆகியோர் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்துள்ளனர்.

எனினும் காசா மீதான தாக்குதலுக்கு ஈரான் மீண்டும் ஒரு முறை கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் திட்டமிடப்பட்ட தீவிரவாதம் என ஈரான் இஸ்ரேலை விமர்சித்தது. அதேபோன்று இஸ்ரேலுடன் போராடிவரும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது கடும் கண்டனத்தை வெளியிட்டது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com