Contact us at: sooddram@gmail.com

 

எகிப்து ஜனாதிபதி முர்சியின் அரசியல் சாசன அறிவிப்பை தொடர்ந்து உள்நாட்டில் பதற்றம்

எகிப்து ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் அரசியல் சாசன அறிவிப்பை ஜனாதிபதி மொஹமட் முர்சி வெளியிட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இந்த அறிவிப்புக்கு எதிராக அந்நாட்டு நீதிபதிகள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, முர்சிக்கு ஆதரவாக சக்திவாய்ந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நேற்று பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. எகிப்தில் ஜனநாயக முறையில் முதல் முறையாக தேர்வான ஜனாதிபதி முர்சி தமது முடிவே இறுதியானது என்றும் நீதித்துறை உட்பட அதற்கு எதிராக யாரும் செயற்பட முடியாது எனவும் கடந்த வியாழக்கிழமை அரசியல் சாசன அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மொஹமட் முர்சிக்கு எதிராக மிதவாதிகள் மற்றும் மதச் சார்பற்றோர் தலைநகர் கெய்ரோவில் இருக்கும் தஹ்ரியார் சதுக்கம் மற்றும் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முர்சி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என உச்ச நீதித்துறை கவுன்ஸில் அழுத்தம் கொடுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை அவசரமாக கூடிய அந்த கவுன்ஸில் முர்சியின் அறிவிப்பு நீதித்துறைக்கு எதிரான நடவடிக்கை என விமர்சித்தது. இதற்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிபதிகள் அழைப்பு விடுத்தனர்.

ஜனாதிபதி முர்சி தனது புதிய அதிகாரத்தை பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலத்து வழக்கு தொடுனர் அப்துல் தல் மிகைட் மஹ்மூத்தை நீக்கிவிட்டு புதிய வழக்கு தொடுனராக தலத் இப்ராஹிம் அப்துல்லாவை நியமித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை நீதிபதிகள் நடத்திய ஊடக மாநாட்டில், தம்மை நீக்கியதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக முன்னாள் வழக்கு தொடுனர் மிகைட் மஹ்மூத் குறிப்பிட்டார். அத்துடன் நீதித் துறைக்கு எதிராக தலையிடுவதற்கு அவர் ஜனாதிபதி முர்சிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதில் நீதிமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தும் படி நீதிபதிகள் இந்த ஊடக மாநாட்டில் கோரிக்கை விடுத்தனர். முர்சியின் புதிய அரசியல் சாசன அறிவிப்பின் மூலம் எகிப்தின் எந்த ஜனாதிபதியும் அனுபவிக்காத அதிகாரத்தை முர்சி பெற்றிருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மறுபுறத்தில் எகிப்து அரசில் பெரும்பான்மை அங்கத்தவர்களைக் கொண்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவாக நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, நாளை பிரமாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை முர்சிக்கு ஆதரவாக பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பிரமாண்ட ஊர்வலம் ஒன்றை நடத்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. மறுபுறத்தில் முர்சிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை எதிர்ப்பாளர்களும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

புதிய அரசியல் சாசன பிரகடனத்தின்படி எகிப்தின் புதிய அரசியல் அமைப்பை வரையும் அரசியல் அமைப்பு குழுவுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும், அதனை கலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்தோர் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்த அரசியல் அமைப்புக் குழுவின் புதிய அரசியல் அமைப்பு கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதாக மிதவாதிகள், மதச் சார்பற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதியின் புதிய அரசியல் சாசன அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் அதற்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதில் கடந்த வெள்ளிக்கிழமை ஆயிரக் கணக்கானோர் தஹ்ரியார் சதுக்கத்தில் கூடி முர்சி பதவி விலகவேண்டும் என்றும் அவர் இராணுவ சட்டத்தை அமுல்படுத்துவதாகவும் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்நாட்டின் மிதவாத அரசியல்வாதியும் ஐ.நா. அணுக் கண்காணிப்பகத்தின் முன்னாள் தலைவருமான மொஹமட் அல் பரதியும் பங்கேற்றார்.

எனினும் ஒரு சில பகுதிகளில் முர்சிக்கு ஆதரவானோருக்கும் எதிரானோருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அலக்சாண்ட்ரியாவில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் 100 பேரளவில் காயமடைந்துள்ளனர். அதேபோன்று முஸ்லிம் சகோ தரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான நீதிக்கும் சுதந்திரத் திற்குமான கட்சியின் அலக்சான்ட் ரியாவில் உள்ள தலைமையகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 5 நகரங்களில் மேற்படி கட்சியின் அலுவலகங்கள் முர்சி எதிர்ப்பாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்க் கட்சி தொண்டர்கள் அடங்கிய குழுவொன்று கெய்ரோவில் உள்ள தஹிரியார் சதுக்கத்தில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளது. அவர்களுடன் நேற்று முன்தினம் மேலும் சில தொண்டர்கள் சேர முயற்சித்த போது, பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

எனினும் ஜனாதிபதி மொஹமட் முர்சியின் புதிய அரசியல் சாசன அறிவிப்பு புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படும் வரையே அமுலில் இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

முர்சியின் அரசியல் சாசன பிரகடனம்

  • மக்கள் எழுச்சி போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான கொலை அல்லது வன் முறையை கட்டவிழ்த்துவிட்டோருக்கு எதிரான விசாரணை மீளவும் நடத்தப்படும்.

  • மொஹமட் முர்சி அதிகாரத்திற்கு வந்த பின் மேற்கொள்ளப்பட்ட அரசியல் காசன பிரகடனம், சட்டங்கள் மற்றும் கட்டளைகளை எந்த தனி நபர்களாலோ அல்லது அரசியலாலோ அல்லது அரச கட்டமைப்பாலோ ரத்துச் செய்ய முடியாது.

  • பொது வழக்கு தொடுனரை நான்கு ஆண்டு தவணைக் காலத்திற்கு ஜனாதிபதியே நியமிப்பார். இவர் குறைந்த பட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.

  • அரசியல் யாப்பு குழுவுக்கு புதிய அரசியல் அமைப்பை வரைவதற்கான காலக்கேடு மேலும் இரு மாதங்களால் அதிகரிக்கப்படும்.

  • நீதித் துறைக்கு அரசியல் யாப்பு குழுவையோ அல்லது பாராளுமன்ற மேலவையையோ (சூரா கவுன்ஸில்) கலைக்கும் அதிகாரம் இல்லை.

  • மக்கள் எழுச்சியை பாதுகாப்பதற்கும், தேசிய ஐக்கியத்திற்காகவும் அல்லது தேசத்தின் பாதுகாப்பிற்காகவும் ஜனாதிபதிக்கு எந்த நடவடிக்கையை எடுக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com