Contact us at: sooddram@gmail.com

 

வால் நட்சத்திரத்தில் இறங்கிய விண்கலம் பூமிக்கு முதல் புகைப்படத்தை அனுப்பியது


மனித வரலாற்றில் முதல் முறையாக வால் நட்சத்திரத்தில் தரையிறக்கப்பட்ட ஆய்வு இயந்திரம் பிலே அங்கு உறுதியாக நிலைகொண்டிருப்பதோடு பூமிக்கு புகைப் படங்களையும் அனுப்பியுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் இந்த ஆய்வு இயந்திரம் வால் நட்சத்திரத்தில் நிலைகொண்டிருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிலே ஆய்வு இயந்திரம் வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பை கடந்த புத னன்று முதல் முறை தொட்டபோதும் அது நூற்றுக்கணக்கான மீற்றர்கள் விலகிச் சென்று விட்டதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த வால் நட்சத்தை ஆய்வு செய்வதன் மூலம் ஆய்வு இயந்திரம் எமது சூரிய குடும் பத்தின் பூர்வீகத்தை கண்டறிய முயற்சிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பூமியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிலே ஆய்வு இயந்திரத்தை ஏந்திக் கொண்டு புறப்பட்ட ரொசெட்டா விண்கலம் 640 கோடி கிலோமீற்றர் (4 பில்லியன் மைல்கள்) பயணித்து 67பீ - ரிமோவ் - கெரசிமென்கா என்ற வால் நட்சத்திரத்தை சென்றடைந்தது.


விண்கலத்தில் இருந்து சலவை இயந்திரத் தின் அளவு கொண்ட பிலே ஆய்வு இயந்தி ரம் வால் நட்சத்திரத்தில் தரையிறங்குவ தற்காக கடந்த புதனன்று விடுவிக்கப்பட்டது. விண்கலத்திலிருந்து 7 மணி நேரம் பயணித்த ஆய்வு இயந்திரம் பனிக்கட்டிகள் படர்ந்த வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியது. பிலே இயந்திரம் தரையிறங்கிய முதல் செய்தி இலங்கை நேரப்படி நேற்று முன் தினம் இரவு 9.35க்கு பூமிக்கு கிடைத்தது.


எனினும் பூமியின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை பிலே இயந்திரம் ஆரம்பத்தில் இழந்து விட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை காலையாகும்போதே தொடர்பு மீளப் பெறப்பட்டது. இதனையடுத்து வால் நட்சத்திர மேற்பரப்பின் புகைப்படங்களையும் பிலே இயந்திரம் பூமிக்கு அனுப்பியது. அனுப்பப்பட்டிருக்கும் புகைப்படத்தில் வால் நட்சத்திரத்தின் பரந்த தோற்றமும் ஆய்வு இயந்திரத்தின் கால் பகுதியும் காணக்கூடியதாக உள்ளது.


எனினும் பிலே இயந்திரம் வால் நட்சத்திர மேற்பரப்பில் முறையாக இணையாத நிலையில் அது நீண்டகாலம் உறுதியாக நிலைகொள்வது குறித்து கவலை உள்ளது. பிலே இயந்திரத்தின் கால்பகுதியில் இருக்கும் கொக்கிகள் மேற்பரப்பில் சரியாக இணையவில்லை என நம்பப்படுகிறது.

பிலே ஆய்வு இயந்திரத்தின் முகாமையாளர் ஸ்டீபன் உலமக் குறிப்பிடும்போது, "கொக்கிகள் சரியாக இணையாத நிலையில் கட்டலைகள் பிறப்பிப்பது ஆபத்தான நிலையில் உள்ளது. அது பிலே இயந்திரத்தை விண்வெளியில் வீசி எறிந்து விடும்" என்று கவலை தெரிவித்தார். அதேபோன்று வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் துளையிடுவதும் கடினமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு துளையிடுவது இயந்திரம் உறுதியாக நிற்பதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.


"நாம் இன்னும் அங்கு உறுதியாக வேரூன்றவில்லை" என்று குறிப்பிட்ட அவர் "ஆய்வு இயந்திரத்தின் பளுவைக் கொண்டே அது இப்போது வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் நிலை கொண்டிருக்கிறது. முதல்முறை இயந்திரம் தரையிறங்கிய பின்னர் அது விலகிச் சென்றுவிட்டது உறுதியாகியுள்ளது. அது ஒரு கிலோமீற்றர் உயரம் வரை விலகிச் சென்றதாக ஒருசிலர் கூறுகிறார்கள். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை ஆய்வு இயந்திரம் சிறிய அளவில் விலகிச் சென்றது. இந்த விடயம் குறித்து நாம் முடிவொன்றை பெறுவதற்கு முன்னர் நாம் அது அனுப்பும் தகவல்களை பெற்று வருகிறோம்" என்றார்.


ஆய்வு இயந்திரம் தரையிறங்கியதை அடுத்து, ஜேர்மனியின் டர்மஸ்டட்டில் இருக்கும் ரொசெட்டா விண்கலத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருப்போர் உணர்ச்சிவசப்பட் டிருந்தனர். தரையிறங்கியதாக செய்தி கிடைத்தபோது ஆரத்தழுவி கொண்டாடிய அவர்கள் அது சரியானதாக அமையவில்லை என்ற செய்தியால் கவலையில் ஆழ்ந்தனர். 67பீ வால் நட்சத்திரத்தை வலம் வந்துகொண்டிருக்கும் பிலே இயந்திரத்தின் தாய் விண்கலமான ரொசெட்டா தற்போது பிலே இயந்திரம் எங்கே உள்ளது என்பதை அதன் விஞ்ஞான கெமராக்கள் ஊடாக தேடி வருவதாக குறித்த கெமராக்களுக்கு பொறுப்பான ஆய்வாளர் ஹொல்கர் சியர்க் குறிப்பிட்டுள்ளார்.


ரொசெட்டா விண்கலம் வால் நட்சத்திரத்தில் இருந்து பல மடங்கு கிலோமீற்றர் தொலைவில் இருப்பதால் அதிலிருந்து வரும் புகைப்படங்கள் அதிக தரவுகள் கொண்டதாக இல்லை. எனினும் இந்த புகைப்படங்கள் பிலே இயந்திரம் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க போதுமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்நிலையில் வால் நட்சத்திரத்தில் பிலே இயந்திரம் தொடர்ந்தும் உறுதியாக நிலைகொண்டிருந்தால் அது பல மாதங் களுக்கு அங்கு விஞ்ஞான ஆய்வுகளை முன்னெடுக்கும்.

இதன்போது வால் நட்சத்திரத்தின் இயற்கை காட்சிகளை தொடர்ந்து படம்பிடித்து பூமிக்கு அனுப்பவிருப்பதோடு, வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பின் இரசாயன கலவைகளையும் ஆய்வு செய்யும். இதன்மூலம் உயிர்களின் தோற்றம் மற்றும் பிரபஞ்சத்தின் உண்மைகளை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கிரகங்களுக்கு நீரை வால் நட்சத்திரங்களே கொண்டுவந்ததாக விஞ்ஞானிகளிடம் பரவலான ஒரு கோட்பாடு உள்ளது. அதேபோன்று பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான இரசாயன காரணங்கள் வால் நட்சத்திரத்தில் இருந்தே வந்ததாகவும் மற்றொரு கோட்பாடு உள்ளது.


மணிக்கு 1.35 மில்லியன் கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் 67பீ வால் நட்சத்திரத்தை நோக்கி கடந்த 2004 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரொசெட்டா விண்கலம் 10 ஆண்டு பயணத்திற்கு பின்னர் கடந்த ஓகஸ்டில் தனது இலக்கை எட்டியது. சூரியனில் இருந்து மிக நீண்டளவு தூரத்தில் இது நிலை கொண்டுள்ளமையால், இதன் சு+ரியக் கலங்கள் மிகவும் குறைந்தளவு சு+ரிய ஆற்றலைக் கொண்டுள்ளன.


இதனால் விண்கலத்தை முழுமையாக இயக்குவதற்குத் தேவையான மின்னாற்றல் போதாமையால் 31 மாதங்களுக்கு தூக் கத்தில் வைப்பதற்கு அதன் கட்டுப் பாட்டாளர்கள் முடிவெடுத்தனர். 2011 ஜ_ன் 8 ஆம் திகதி இவ்விண்கலம் ஆழ்ந்த தூக்கத்துக்கு அனுப்பப்பட்டது. இது மீண்டும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 20 இல், தான் விழித்துக்கொண்டதாகப் பூமிக்குக் குறிப்பை அனுப்பியது. தொடர்ந்து அது வால் நட்சத்திரத்தை நோக்கிப் பயணித்தது, அடுத்தடுத்த மாதங்களில், 67பீ இன் சார்பாக ரொசெட்டாவின் வேகத்தை மட்டுப் படுத்துவதற்காக சில அமுக்கி எரிப்புகள் இடம்பெற்றன. தொடர்ந்து 2014 ஓகஸ்ட் 6 இல் அது 67பீ வால் நட்சத்திரத்தின் சுற்றுவட்டத்துள் நுழைந்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com