Contact us at: sooddram@gmail.com

 

கறுப்பின இளைஞனின் கொலை
அமெரிக்காவெங்கும் கலவரம் பரவுகிறது

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் பெர்கு சன் நகரில் கறுப்பின இளைஞனை சுட்டுக் கொன்ற வெள்ளையின பொலிஸ் அதிகாரி மீது எந்த குற் றச்சாட்டும் சுமத்தப்படாததற்கு எதிரான ஆர்ப்பாட ;டம் அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் பரவியு ள்ளது. நியூயோர்க் தொடக்கம் சியட்டில் வரை பல நக ரங்களில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட் டங்கள் அமைதியாக இடம்பெற்றபோதும் கலிபோ ர்னியாவின் ஒக்லான்ட் நகரில் இடம்பெற்ற ஆர்ப் பாட்டத்தில் கலவரம் வெடித்தது. அதேபோன்று சற்று பதற்றம் நிலவிய பெர்குசன் நகரில் 44 பேர் கைதுசெய்யப்பட்டனர். எனினும் திங்கள் இரவு போன்று நேற்றுமுன்தினத்தில் நகரில் கலவரம் ஏற்படவில்லை.

இதில் மைக்கல் பிரவுன் என்ற கறுப்பின இளை ஞனை கொன்ற பொலிஸ் அதிகாரி அளித்த பேட்டியில், தனது பணியையே தான் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் 9ம் திகதி டெரன் வில்சன் 18 வயதான இளைஞனை சுட்டுக் கொன்றது பெர்குசன் நக ரில் பல வாரங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆபிரிக்க-அமெரிக்க மக்கள் பெரு ம்பான்மையாக வாழும் பெர்குசன் நகரின் பெரும்பான்மை மக்கள் இந்த கொலையை செய்த பொலிஸ் அதி காரி மீது கொலை குற்றச்சாட்டு சும த்தப்பட வேண்டும் என்று கோருகி ன்றனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து விசாரித்த ஜ_ரிக்கள் குறி த்த பொலிஸ் அதிகாரி மீது எந்த குற்றச்சாட்டு சுமத்த முடியாது என்று கடந்த திங்களன்று தீர்ப்பு அளித்த னர்.

ஜ_ரிக்களின் முடிவை ஏற்க மறு க்கும் பிரவுன்ஸ் குடும்பத்தினர் இந்த தீர்ப்பு நீதிய ற்றது என்று குறிப்பிட்டுள்ளனர். எனினும் தீர்ப்பு க்கு பின்னர் இடம்பெற்ற வன்முறைகளுக்கும் அவ ர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

பெர்குசன் நகரம் போதிய அளவு சுமுகமாக இரு ப்பதாக சென் லுவிஸ் பகுதி பொலிஸ் பிரதானி ஜோன் பெல்மர் செவ்வாய் இரவு குறிப்பிட்டிருந் தார். பெர்குசன் நகரில் சுமார் 21,000 மக்கள் வாழ் கின்றனர். எனினும் கலவரக்காரர்கள் நகர மண் டப கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடி மீது கல் லெறிந்ததை அடுத்து ஒரு முறை மாத்திரம் கண் ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று கார் ஒன்றின் மீது தீ வைக்க முயற்சித்ததை அடுத்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

நகரில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க பொலிஸாரு க்கு உதவியாக சுமார் 2,200 தேசிய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும் அமெரிக்காவின் 12 நகரங்களில் ஆர்ப் பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கிளவ லான், லொஸ் ஏஞ்சல்ஸ், ஒக்லான்ட், அட்லா ன்டா, போட்லான்ட், சிக்காகோ மற்றும் போஸ்டன் ஆகிய நகரங்களும் உள்ளடங்கும்.

ஒக்லான்டின் சான் பிரான்ஸிஸ்கோ பே பகுதி யில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இடம்பெற்ற வன்முறையில் கலவரக்காரர்கள் பொலிஸ் கார்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை சேதப் படுத்தினர். கடற்கரை நகரான இங்கு 406,000 மக்கள் வாழ்கின்றனர். இதில் பழைய கார் விற்பனை நிலையம் மற் றும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலை யம் உட்பட பல இடங்களிலும் கொள்ளை சம்பவ ங்களும் பதிவாகியுள்ளன. இதனால் பிரதான வீதி கள் குறுகிய காலத்திற்கு மூடப்பட்டிருந்ததாக சி. பி.எஸ். அமெரிக்க தொலைக்காட்சி செய்தி வெளி யிட்டுள்ளது.

கடந்த திங்கள் இரவு ஒக்லான்ட் நகரில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2,000 பேர் பங்கே ற்றிருந்தனர். இதன்போது 43 பேர் கைதுசெய்ய ப்பட்டுள்ளனர். முன்னதாக பர்குசன் நகர மண்டபத்திற்கு அரு கில் பொலிஸ் வாகனம் ஒன்று தீக்கிரையாக்கப்ப ட்டது. அங்கு தொடர்ந்து கண்ணீர்ப்புகைப் பிர யோகம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பகுதியில் பல கவச வாகனங்களுடன் பாரிய அளவிலான பொலிஸார் நிலைகொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் இருந்து பொது மக்களை வெளியேற்ற போலிஸார் முயற்சித்த தால் பதற்றம் மேலும் அதிகரித்தது. எவரேனும் வீதியில் இருந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் எச்சரித்தனர். இதனைத் தொட ர்ந்து வீதிகளில் இருந்து ஒருசிலர் விரட்டியடிக்கப் பட்டனர். நகரில் மக்கள் ஒன்றுதிரண்டிருக்கும் பகு திக்கு மேலால் பொலிஸ் ஹெலிகொப்டர்களும் வட்டமிட்டன.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சிக்காகோ வில் வைத்து செவ்வாயன்று உரையாற்றும்போது, வன்முறைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடு வோரை மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டார். இதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் விசார ணைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்றும் குறி ப்பிட்டுள்ளார்.

மைக்கல் பிரவுன் நிராயுதபாணியாக சரணடைய முயன்றபோதே டெரன் வில்சன் அவரை சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த சம்ப வம் குறித்து வில்சன் ஏ.பி.சி. நியுஸ் தொலைக் காட்சிக்கு முதல் முறை பேட்டி அளித்துள்ளார். "நான் தெளிவான சுயநினைவுடனேயே இருக்கி றேன். ஏனென்றால் நான் எனது பணியை சரியாகவே செய்தேன்" என்று அந்த பேட்டியில் அவர் குறி ப்பிட்டுள்ளார்.

பிரவுன் ஒரு பலம்மிக்க மனிதன் என்று விபரித்திருக்கும் அவர், ஒரு ஐந்து வயது சிறுவன் (மல்யுத்த வீரர்) ஹல் ஹோகனை பிடித்திருப் பது போலவே அப்போது நான் உணர்ந்தேன் என்றார். பிரவுன் சர ணடைவதற்கு கையை உயர்த்தி இருந்த நிலையிலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சம்ப வத்தை பார்த்த ஒருசிலர் கூறும் சாட்சியத்தை வில்சன் நிராகரித்து ள்ளார். இந்த சம்பவத்தில் நிறவாதம் எந்த பங்கையும் வகிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரவுன் மொத்தம் 12 முறை துப் பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப் பதாக அவரது பிரேத பரிசோத னையில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் பிரவுன் தப்பியோட முயற்சித்தபோது அவரை பலமுறை சுட வேண்டி ஏற்பட்டதாக வில்சன் தனது வாக்குமூலத் தில் குறிப்பிட்டுள்ளார். எனினும் நிராயுதபாணியான ஒருவர் பல தடவைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இல க்காவதற்கும் குறிப்பாக தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்குமான அபாய நிலை குறி த்து சம்பவத்தை ஆராய்ந்த நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"பொலிஸ் அதிகாரியான வில்சனுக்கு பிரவுன் நிராயுதபாணியாக இருப்பது தெரியும். ஏற்கனவே அவர் மீது இரு முறை துப்பாக்கிச்சூடு நடத்தி இரத் தம் வழிந்துகொண்டிருக்கும்போது தப்பியோடுவ தற்காக அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக துப்பாக் கிச்சூடு நடத்தியது ஏன்? ஏன் அவரது தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த இடத்திலேயே கொன் றார்?" என்று சென் லுயிஸ் பகுதி வழக்கறிஞரான பொப் மக்கலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com