Contact us at: sooddram@gmail.com

 

பிஹார் சட்டசபைத் தேர்தலில் சாதியா அல்லது அபிவிருத்தியா?

இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் ஒக்ரோபர் 21ந் திகதியிலிருந்து நவம்பர் 20ஆம் திகதி வரை ஆறு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. தேர்தல் முடிவு நவம்பர் 24ந் திகதி வெளியிடப் படும்.

பதினைந்து வருடங்களாக தொடர்ச்சியாக ஆட்சி செய்த கட்சியான லல்லு பிரசாத் யாதவ்வின் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தள்ளைத் தோற்கடித்து ஐக்கிய ஜனதா தள்- பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி 2005ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஐக்கிய ஜனதா தள்ளின் நிதிஷ் குமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஐக்கிய ஜனதா தள்- பாரதிய ஜனதா கட்சி அணி, ராஷ்டிரிய ஜனதா தள்- லோக் ஜனசக்தி கட்சி அணி, காங்கிரஸ், இடதுசாரிகள் என நான்கு முனைப் போட்டி இடம்பெறுகின்ற போதிலும் முதலிரு அணிகளுமே பிரதான போட்டியாளர்கள்.

பிஹார் மாநிலத்தில் சாதி அடிப் படையிலேயே வாக்களிப்பு இடம்பெறு வது முந்திய காலங்களில் வழமையாக இருந்தது. நிதிஷ் குமாரின் அரசாங்கம் கடந்த ஐந்து வருட காலத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை நிறை வேற்றியிருப்பதால் இத் தேர்தலில் மக்கள் சாதிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அபிவி ருத்திக்காகத் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று ஆளும் கூட்டணியினர் கூறுகின்றனர்.

பதினைந்து வருட காலம் இல்லாத அளவுக்குக் கடந்த ஐந்து வருடங்களில் பிஹாரில் அபிவிருத்தி ஏற்பட்டிருப்பதை ஒத்துக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி மத்திய அரசாங்கம் நிதி வழங்கியதாலேயே அபிவிருத்தி சாத்தியமாகியது என்று உரிமை கோருகின்றது. இதே நேரம், ராஷ்டிரிய ஜனதா தள் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்வும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானும் தேர்தலின் போது மக்கள் சாதி அபிமானத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பதில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பிரதான இரண்டு அணிகளினதும் தலைவர்கள் பிஹாரில் கணிசமான தொகையினராக உள்ள மூன்று பெரிய சாதிகளைச் சேர்ந்தவர்கள். லல்லு பிரசாத் யாதவ் யாதவ் சாதியைச் சேர்ந்தவர். ராம் விலாஸ் பஸ்வான் தலித். நிதிஷ் குமார் குர்மி வகுப்பைச் சேர்ந்தவர்.

மக்கள் சாதி அடிப்படையில் பிரிந்து வாக்களிப்பார்க ளேயானால் உயர் சாதியினரும் முஸ்லிம்களும் தீர்மான சக்தியாக அமையலாம். கடந்த சட்டசபைத் தேர்தலில் உயர் சாதியினரில் பெரும் பான்மையானோர் ஐக்கிய ஜனதா தள்- பாரதிய ஜனதா கட்சி அணிக்கே வாக்களி த்தனர். மாநில அரசாங்கம் முன்மொழிந்த நிலச் சீர்திருத்த ஆலோசனை உயர் சாதியினரின் சொத்துடைமைக்கு அச்சுறுத்தலாக அமைவதைக் காட்டி உயர் சாதியினரை வென்றெடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கியிருக்கின்றது.

ஆளும் கூட்டணிக்குள் உறவு சுமுகமாக இல்லை. பாரதிய ஜனதா கட்சிக்கும் ஐக்கிய ஜனதா தள்ளுக்குமிடையே நீறுபூத்த நெருப்பாகப் பகைமை இருந்து வருகின்றது. கடந்த ஜூன் மாதத்தில் பிஹாரின் தலைநகர் பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்ற போது பாரதிய ஜனதா கடசிக்கும் நிதிஷ் குமாருக்குமிடையே முரண்பாடு வெடித்தது.

முதலமைச்சர் என்ற வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இராப்போசன விருந்தை நிதிஷ்குமார் திடீரென ரத்துச் செய்யும் அளவுக்கு அந்த முரண்பாடு ஆழமானதாக இருந்தது. இரண்டு கட்சிகளும் தேர்தலை மனதில் வைத்துச் சமரசம் செய்து கொண்ட போதிலும், உள்ளூரப் பகைமையுணர்வு இல்லாதிருக்காது.

பிஹார் தேர்தல் பிரசாரத்துக்கு நரேந்திர மோடியும் வருண் காந்தியும் வரக்கூடாது என்று நிதிஷ்குமார் விதித்த நிபந்தனையைப் பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொண்டிருக்கின்றது. நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர். இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

வருண் காந்தி பகிரங்கமாகவே முஸ்லிம்களைக் கேவலப்படுத்திப் பேசியவர். முஸ்லிம்களின் வாக்குகளை எதிர்பார்ப்பதாலேயே நிதிஷ் குமார் இவ்விருவரும் தேர்தல் பிரசாரத்துக்கு வரக்கூடாது என்கின்றார். நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் நிதிஷ்குமாரின் இந்த நிபந்தனை முஸ்லிம் வாக்காளர்களைப் பெருமளவில் திருப்திப்படுத்துமென எதிர்பார்க்க முடியாது.

பிஹாரில் ஆட்சியைக் கைப்பற்றும் எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியிடம் இல்லை. மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் கடந்த தேர்தலின் போது ஒன்பது ஆசனங்களை மாத்திரம் காங்கிரஸ் கட்சியினால் பெற முடிந்தது. இந்தத் தடவை ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் காங்கிரஸ் கட்சியின் இலக்கு. ராகுல் காந்தி இந்த இலக்கை ஈட்டித்தருவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகின்றார்கள்.

லல்லு பிரசாத் யாதவ் தனது மகனை தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றார். மகனை முதலமைச்சராக்குவது அவரின் திட்டம். நிதிஷ்குமாரா அல்லது லல்லுவின் மகனா முதலமைச்சர் என்பது நவம்பர் 24ம் திகதி தெரிந்துவிடும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com