Contact us at: sooddram@gmail.com

 

பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி!

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த புலித் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டுஅம்மான் ஆகியோரது மரணம் குறித்து இலங்கை அதிகாரிகள் அளித்த தகவல்களில் திருப்தியடைவதாக சி.பி.ஐ., தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடுவதாக, "தடா' சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, புலிகள் தலைவர் பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், நளினி, சந்தானம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. நளினி, முருகன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். சிவராசன் உட்பட 12 பேர் மரணமடைந்தனர்; பிரபாகரன் உட்பட நான்கு பேர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கை ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் நடந்த சண்டையில்,புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாகவும், அவரது உடல் நந்திகடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.

இந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அந்த அடிப்படையில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது மரணச் சான்றிதழை வழங்கும்படி, இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால், அதுபோல எந்த சான்றிதழும் வழங்கப்பட்டதாக தகவல் இல்லை.

இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அமிர்தலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக, இலங்கை கோர்ட்டில் அந்நாட்டு போலீசார், கடந்த ஆண்டு ஓர் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், "பிரபாகரனும், பொட்டுஅம்மானும் இறந்துவிட்டனர்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், "ராஜிவ் கொலை தொடர்பான வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரன் மற்றும் பொட்டுஅம்மானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, கைவிட வேண்டும்' என, "தடா' கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், மரணச் சான்றிதழ் அல்லது வேறு ஆவண ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி கூறிய கோர்ட், சி.பி.ஐ.,யின் அறிக்கையை ஏற்க மறுத்தது.

கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, தலைமைப் புலனாய்வு அதிகாரி, ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்தார். அதில், "கொழும்பில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையிலும், இலங்கை அதிகாரிகள் அனுப்பிய கடிதங்களில் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையிலும், ராஜிவ் கொலை வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனும், பொட்டு அம்மானும் மரணமடைந்துவிட்டனர் என திருப்தியடைகிறோம். அதனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட வேண்டும். மேலும், இந்த வழக்கில் சந்தேகத்துக்குரிய நபர்கள் பற்றி தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த, "தடா' சிறப்பு நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, "பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக, புலன் விசாரணை ஏஜன்சியால் நிரூபிக்க இயலும் என இக்கோர்ட் நம்புகிறது. அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட உத்தரவிடப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்
மூலம், புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக, இந்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com