Contact us at: sooddram@gmail.com

 

மீண்டும் அகதிகள் தமிழகம் வருக : கியூ பிரிவு போலீசார் விசாரணை!

(சாகரன்)

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதால், இலங்கை நிலவரம் குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் போர் நடந்தபோது, அங்கிருந்து ஏராளமான அகதிகள் படகு மூலம் ராமேஸ்வரம் வந்து, போலீஸ் விசாரணைக்குப் பின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். போர் முடிவுக்குப் பின் அகதிகள் வருகையும் முற்றிலும் குறைந்தது. தமிழக முகாம்களில் தங்கிய அகதிகள் பலர , அரசின் அனுமதி பெற்று, இலங்கை திரும்பினர். ஏராளமானோர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனிடையே இலங்கை மற்றும் வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள், விமானம் மூலம் தமிழகத்திற்கு வரத்துவங்கி உள்ளனர். இலங்கை வவுனியாவைச் சேர்ந்த பெண் அகதி, சவுதியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, உரிய அனுமதியுடன் மண்டபம் முகாம் வந்துள்ளார். இவரைப் போல் இலங்கை மட்டகளப்பைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும், இலங்கையிலிருந்து விமானம் மூலம் அகதியாக தமிழகம் வந்துள்ளார்.

அவர்கள் கூறியதாவத : இலங்கையில் உள்ள நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை. ராணுவத்திற்கு,புலிகள் குறித்த சந்தேகம் உள்ளதால், இன்னும் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. மேலும், தமிழகத்தில் உள்ள வசதிகள் போல் அங்கு இன்னும் சரியாக கிடைக்காததால், தமிழகத்தில் இருக்கவே விரும்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். மண்டபம்
வந்த அகதிகளிடம் கியூ பிரிவு போலீசாரும், இலங்கை நிலவரங்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஆனால் விடயம் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில் இலங்கை இராணுவத்தினால் முள்ளக்கம்பிக்கு பினால் அடைக்கப்பட்ட அல்லது சரணடைந்த தீவிர புலி உறுப்பினர்கள் இலஞ்சம் கொடுத்து முகாமிலிருந்து தப்பி வெளியே கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் இவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் சிறப்பாக பொது மக்களிடம் இருந்து ஏற்பட்டிருப்பதால் தமிழ் நாட்டிற்கு தப்பி வருவதாக அறிய முடிகின்றது. இவர்கள் முகாங்களிலிருந்து பணம் கொடுத்து தப்பி வந்ததை இராணுவத்திக்கு அறிவிப்பதில் இவர்களால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தீவிரமாக இருந்ததாகவும் அறிய முடிகின்றது.

மேற்கத்தைய நாடுகளுக்க தப்பிச் செல்வதற்கான இடைத்தங்கல் சரணாலயமாக தமிழகத்தை அல்லது நிரந்தரமாக தங்கிவிடும் இடமாக தமிழகத்தை முன்னாள் புலி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிய முடிகின்றது.

இதன் ஒரு வடிவமாகத்தான் புலிகளின் முக்கிய உறுப்பினர் மு. திருநாவுக்கரசு (இவர் தீவிர இந்திய எதிர்பாளர் கூட) மண்டபம் முகாமிற்கு தப்பி வந்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததும், இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு உசார் அடைந்த போது இவர் தமிழ் நாட்டிற்குள்ளேயே புலிகளுக்காக வேலை செய்யும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் உதவியுடன் இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழுவதாகவும் அறிய முடிகின்றது. இந்திய அகதிகள் முகாங்களில் வசதிகள் அதிகம் என்பது எல்லாம் அங்கு வாழ்ந்து பார்த்தவர்களுக்கு தெரியும் எவ்வளவு 'உண்மை' என்று. எனவே தமிழ் நாட்டிற்கான 'அகதிகள்' வருகை இன்னும் தொடரும்.

விமானத்தில் இலங்கையிலிருந்து இந்தியா வருபவர்கள் வசதி படைத்த அகதிகளே என்பதையும் கவனிக்க வேண்டும். புலம் பெயர் நாடுகளில் உள்ள உறவினர்களின் டாலர்களில் வாழும் 'ஏழை'களாக இருக்க வேண்டும். உண்மையான அகதிகள் இன்றும் தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் வசதிகள் வாய்ப்புபகள் இன்றி இரண்டில் இருந்து இருபத்தி ஐந்து வருடங்களாக வாடி வதங்குகின்றனர். இவர்கள் வாழ்வு மறுக்கப்பட்டவர்கள். மாறாக வசதியான வாழ்வில் சிலவற்றை இழந்தவர்கள் அல்ல.

(செய்திகளின் அடிப்படையில் ஆக்கம்: சாகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com