Contact us at: sooddram@gmail.com

 

மாணவர் வன்முறைக்குப் பின்னால் வங்குரோத்து ஜே.வி.பி.

வாக்குப் பலத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்றுமே சாத்திய மில்லை என்று உணர்ந்து கொண்டுள்ள ஜே. வி. பி.யினர், வன்முறை மூலம் அதனை நிறைவேற்ற முயற்சிப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க குற்றஞ் சாட்டியுள்ளார். இதற்காக பல்கலைக்கழக மாணவர்களை ஜே. வி. பி.யினர் பயன்படுத்துவதாகவும் இது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து கூறியுள்ள அவர், எங்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் உயர் கல்வியை சீர் குலைத்து, அவர்களை மீண்டும் 1971ம் ஆண்டிலும், 1987-88-89ம் ஆண்டுகளிலும் அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதம் தாங்கிய வன்முறை போராளிகளாக மாற்றி, அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஜே.வி.பி.யினர், இப்போது தீவிரமாக மேற் கொண்டுவரும் முயற்சிகளை, அரசாங்கம் மட்டுமன்றி, பொதுமக்கள் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர், எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம் பித்துள்ளார்கள்.

கடந்த காலத்தில் வன்முறைகளை கைவிட்டு, மீண்டும் ஜனநாயக அரசியலில் சேர்ந்து விடுவதைப் போன்று பாசாங்கு செய்து வந்த ஜே.வி.பி.யினர், தங்களுக்கு மக்களின் வாக்குப் பலத்தின் மூலம், அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றுவது என்றுமே சாத்தியப்படாது என்ற உண் மையை உணந்திருக்கின்ற காரணத்தினால், வேறு வழியின்றி அப்பாவி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவ, மாணவி களையும் அங்கு பட்டதாரி படிப்பை மேற்கொள்ளும் பெளத்த பிக்கு மாணவர்களையும், பகடைக் காய்களாக பயன்படுத்தி, தங் களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற் காக வன்முறை களை கட்டவிழ்த்த வண்ணம் இருக்கி றார் கள்.

ஜே.வி.பி.யினரின் இந்த தீய எண்ணத்தை புரிந்துக் கொண்டுள்ள நாட்டு மக்கள், குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் இப்போது ஜே.வி.பிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள். இது பற்றி கருத்து தெரிவித்த உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க; இன்னும் மூன்று மாதங்களில் பல்கலைக் கழகங்களில் வன் முறைகளுக்கு தூப மிட்டுவரும் ஜே.வி.பி.யின் கைப்பொம்மை களாக இருந்துவரும் ஒருசில மாணவத் தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அறிவித்தார்.

இதுவரை காலமும் பல்கலைக்கழக மாணவர்களே வன்முறைகளை சட்டத்தின் காவலர்களான பொலிஸார் மீதும், பல் கலைக்கழகத்தின் ஆசிரியர் மீதும் கட்ட விழ்த்து விட்டு பல்கலைக்கழகங்களை செயலிழக்கச் செய்து வந்தார்கள்.

ஆனால், இன்று இவர்களின் தான் தோன்றித் தனமான சட்டவிரோத செயற் பாடுகளை இனிமேலும் மெளனமாக இருந்து சகித்துக் கொள்ள முடியாத நிலையில் பொதுமக்களும் வன்முறையில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது வன் முறைகளை மேற்கொள்ள ஆரம்பித் திருக்கிறார்கள்.

இந்தியாவின் இடதுசாரி அமைப்புக்களை போன்று, இலங்கையில் ஜே.வி.பி. அமைப்பினர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தனக்கென செல்வாக்கு தளத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதனை பல்கலைக் கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஊடாக பயன்படுத் துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று, உயர் கல்வி அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள 15 பிரதான பல் கலைக்கழகங்களில், ஆறு பல்கலைக் கழகங்களில் இன்று மாணவர் மத்தியில் அமைதியின்மையை ஜே.வி.பி.யினர் பின்னணியில் இருந்து தோற்றுவித் துள்ளனர். உபவேந்தர்கள் தாக்கப்படு கின்றனர். மாணவர்கள் தங்களுக் கிடையில் சண்டை போட்டு, இரத்தம் சிந்துகின்றனர். பரீட்சைகளை நடத்த முடியாத அளவிற்கு வன் முறைகள் அதிகரித்துள்ளன. பல்கலைக் கழகங்களின் சொத்துக்களும் உடமைகளும் பல்கலைக் கழக மாணவர்களினால் நாசமாக்கப் படுகின்றன.

ஆகவே, ஜே.வி.பி.யினரும் வன்முறை களில் ஈடுபடும் அக்கட்சியை ஆதரிக்கும் மாணவர்களும், பல்கலைக்கழகங்களில் வன்முறைகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது நிச்சயம் அவர்களுக்குப் பாரதூரமான விளை வுகளை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்பதை நாம் ஞாபகப்படுத்த விரும்பு கிறோம் என்றும் அவர் மேலும் குறிப் பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com