Contact us at: sooddram@gmail.com

 

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க மறுத்தல்  அமெரிக்க அதிபரின் அடாவடித்தனம்

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஐ.நா. மன்றத்தில் ஆற்றியுள்ள உரை யானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பிரதிபலிக்கக் கூடிய விதத்திலும், இஸ்ரேலுக்கு அதன் உறுதி யான ஆதரவினைத் தெரிவித்திடும் விதத்திலும் அமைந்துள்ளது. பாலஸ் தீனத்தின் பகுதிகளை ஆக்கிரமித் திருப்பது தொடர்பாக ஐ.நா. மன்றம் நிறைவேற்றியுள்ள பல தீர்மானங்களை, மிகவும் வெட்கங்கெட்ட முறையில் இஸ் ரேல் மீறியிருப்பது குறித்தோ, சுதந்திர பாலஸ் தீனம் உருவாவதை அது ஏற்க மறுப்பது குறித்தோ அது கொஞ்சங் கூடக் கவ லைப்படவில்லை. இவ்வாறு பாரக் ஒபாமா பேசியிருப்பதானது, இஸ் ரேலையொட்டி பாலஸ்தீனம் உருவாவ தற்கு வழிசெய்திடும் ஐ.நா. மன்றத்தின் 181ஆவது தீர்மானத்தினை முற்றிலும் மீறும் செயலாகும்.

ஐ.நா.மன்றத்தில் அதிபர் ஒபாமா சென்ற ஆண்டு ஆற்றிய உரைக்கு நேரெதி ராக இந்த ஆண்டு பேசியிருக்கிறார். சென்ற ஆண்டு அவர், “பாலஸ்தீனம் உருவாவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல உறுதி அளித்தஅவர், இந்த ஆண்டு, “அமைதி நிலவுவது எப்படிக் கடினமானதுஎன்றும், பாலஸ் தீனம் உருவாவதற்கான தீர்மானம் பாது காப்புக் கவுன்சிலில் கொண்டுவரப்பட் டால், அதற்கு எதிராக ரத்து அதிகாரம் (வீட்டோ) பயன்படுத்தப்படும் என்றும் பேசியிருக்கிறார்.

2008 நவம்பர் 9 இல் அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்து நாம் குறிப்பிட்ட வாசகங்களையே இது மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர், முதன்முதலாக அமெ ரிக்காவின் அதிபராக வந்திருப்பது தொடர்பாக உலகம் முழுவதும் மகிழ்ச்சி யும் நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்ட சமயத்தில் நாம் குறிப்பிட்டோம்: “சிறந்த தோர் உலகை நிறுவ இது பயன்படுமா? அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடந்த கால அனுபவம் நமக்குப் புலப்படுத்துவது என்னவெனில், எக்காலத்திலும் சிறுத் தைப்புலி தன் புள்ளிகளை மாற்றிக் கொள்ளாது என்பதுதான்.’’

பாலஸ்தீனியர்களைப் பொறுத்தவரை தங்கள் போராட்டத்தைத் தொடர வேண் டும் என்பது மட்டுமல்ல, அதனை நிச்சய மாக மேலும் உக்கிரமாக நடத்திட வேண் டும் என்பதும் இப்போது அவர்களுக்குத் தெளிவாகிவிட்டது.

அதிக அளவில் வாசிக்கப்படும், ஹாரெட்ஸ் என்னும் இஸ்ரேல் நாளிதழ், 2011 செப்டம்பர் 23 அன்று, கீழ்க் கண்ட வாறு குறிப்பிட்டிருக்கிறது: “ஒபாமாவின் பேச்சு முன்னெப்போதையும்விட இப் போது யூத இனத்திற்கு ஆதரவான ஒன் றாக இருப்பதைக் காணும்போது, இஸ் ரேல் இதனைக் கொண்டாடுவதற்குக் காரணங்கள் உண்டு. பாலஸ்தீன விடு தலை இயக்கத் தலைவர்கள் இனி அமெ ரிக்காவுடன் மோதல் போக்கைக் கடைப் பிடிப்பார்கள். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அபெட் ராப்போ சானல் 2 தொலைக்காட்சி அலைவரிசையில், அமெரிக்கர்கள் இஸ் ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே யான மத்தியஸ்தர்களாக இனியும் தொடர முடியாது என்று கூறியிருக்கிறார்.’’

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கான நடவடிக்கை களைப் பிரதிபலிக்கும் விதத்தில் அதிபர் ஒபாமா யூத ஆதரவு நிலையினை எடுத்திருப்பது தெளிவாகிறது. பாலஸ் தீனத்திற்கு ஆதரவாக ஐ.நா.வில் வாக் களிப்பது அழிவினைக் கொண்டுவரும்என்று நியூயார்க் டைம்ஸ் இதழ் குறைகூ றியிருக்கிறது.பாலஸ்தீனியர்கள் இஸ் ரேலைத் துன்புறுத்திட, சட்டபூர்வமற்ற தாக்கிட மற்றும் இறுதியில் அழித்திடு வதற்கான தங்களுடைய முடிவில்லா பிரச்சாரத்திற்கு வேறொரு கருவியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் குற்றஞ்சாட்டியிருக்கிறது. பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படுமானால் அதற்கு அளித்து வரும் நிதிகள் திரும்பப் பெறப்படும் என்று கன்சர்வேடிவ்கள் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க காங்கிரஸ் மிரட்டியிருக்கிறது.

பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்படுமா னால், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டார்கள் என்று அமெரிக்க ஆதரவு இஸ்ரேலியர்கள் கட்டவிழ்த்துவிடும் பொய்ப்பிரச்சாரங் களை முறியடிக்கக்கூடிய வகையில் பாலஸ்தீனத் தலைவர் முகமது அப்பாஸ், ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீ மூனுக்கு அதிகாரப்பூர்வமான முறையில் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார். அதில் அவர், ஐ.நா. பாலஸ்தீனத்தை அதன் 1967 எல்லைகளுக்கு உட்பட்டு அங்கீகரிக்க வேண்டும் என்றும், அவ் வாறு அங்கீகரிக்கப்படும் பாலஸ்தீனம், இஸ்ரேலுடன் அமைதியான முறையில் வாழ்ந்திடும் என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கோருவதே ஐ.நா. மன்றத் தின் 181ஆவது தீர்மானத்தின் அடிப் படையில்தான். இத்தீர்மானமானது கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலைநகராக விளங்கும் என்றும் குறிப் பிட்டிருக்கிறது.

மேற்கத்திய நிறுவனங்கள் சில நடத் திய வாக்கெடுப்பில், உலகம் முழுவதும் உள்ள பாலஸ்தீனியர்களில் 83 விழுக் காட்டினர் ஐ.நா.வின் முடிவை ஆர்வத் துடன் வரவேற்றிருக்கிறார்கள். “பாலஸ் தீனத்திற்கு எதிராக ஐ.நா.மன்றத்தின் பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா தன் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்து மானால், அரபுநாடுகளுடனும் முஸ்லிம் மக்களுடனும் உறவுகளை மேம்படுத்திக் கொண்டிருப்பதாக அது கூறிடும் வார்த்தைகள் அர்த்தமற்றவைகளாகி விடும்என்று பல அரபு நாடுகள் எச்ச ரித்திருப்பதாகதி எகனாமிஸ்ட்இதழ் குறிப்பிட்டிருக்கிறது. “பாலஸ்தீனம் அமைப்பதற்கு எதிராக அமெரிக்கா வாக் களிக்குமானால், சவுதி அரேபியா இதுநாள்வரை அமெரிக்காவுடன் நட்புறவு வைத்துக்கொண்டிருப்பதுபோல் அது மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்காதுஎன்று சவுதி உளவு ஸ்தாப னத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் கூறியதாக அந்த ஏடு மேலும் தெரிவித் திருக்கிறது.

தற்போதுள்ள கடுமையான பொருளா தார நெருக்கடி மற்றும் பொருளாதார மந் தத்தின் பின்னணியில், யூதர்கள் கட்டுப் பாட்டில் உள்ள நிதி மூலதனத்தின் தயவு, கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தைப் புதுப் பித்திட, அதிபர் ஒபாமாவுக்கு மிகவும் முக் கியமாகத் தேவைப்படுகிறது. அதன் காரணமாகவே தான் மீண்டும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக இத்தகைய மிகவும் அடாவடித்தனமான நிலைப்பாட் டினை எடுத்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், அமெ ரிக்கா தன் உலக அளவிலான மேலா திக்கத்தை வலுப்படுத்தும் குறிக்கோளு டன், மேற்கொள்ளும் திட்டங்கள் உலக மக்களில் பெரும்பாலோருக்கு மிகப் பெரிய அளவில் துன்ப துயரங்களையே கொண்டுவரும். இதன் பொருள், பாலஸ் தீன மக்களுக்கு நாடு குறித்த அவர்க ளின் அடிப்படைகளை தொடர்ந்து மறுப் பது என்பதாகும்.

ஆயினும், அமெரிக்கா, ஐ.நா. பாது காப்புக் கவுன்சிலில் தன் ரத்து அதிகார உரிமையைப் பயன்படுத்தும் என்று அச்சுறுத்திக் கொண்டிருப்பதால், பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு அமைவது மேலும் காலதாமதமாகலாம்.

மேற்கு ஆசியாவில் நிரந்தர அமைதி நிலவ வேண்டுமானால், அதற்கு பாலஸ் தீனம் அதனுடைய 1967க்கு முந்தைய எல்லைகளுடன் உருவாக்கப்படுவதன் மூலமாகவே சாத்தியம். இதற்கு இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும். கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலைநகராக அறிவிக்கப்பட வேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் என்னும் சிறுத்தைப்புலி தன் புள்ளிகளை எப் போதும் மாற்றிக்கொள்ளாது. அதன் அடா வடித்தனங்கள் முழுமையாக எதிர்த்து முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com