Contact us at: sooddram@gmail.com

 

எச்சரிக்கை

கனடாவில் செல்வியின் பெயரால் கள்வனே கள்வனைத் தேடிய நாடகம்!

பாசிச புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, பெண் புலிகளால் மனிதகுலம் வெட்கித் தலைகுனியுமளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டு, அந்த ஏழை கிராமப்புற பிள்ளையை நார் நாராகக் கிழித்து படுகொலை செய்த, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியான செல்வி (செல்வநிதி தியாகராசா) அவர்களுக்கு, கனடாவில் 2011 அக்டோபர் 16ம்திகதி நினைவுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. செல்வி 1991ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30ந் திகதி யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் அருகிலுள்ள அவரது வீட்டிலிருந்து புலிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவருக்கு யாரும் நினைவஞ்சலிக் கூட்டம் நடாத்தவில்லை. இப்பொழுது மட்டும் ஏன் இந்தக் கூட்டம் என்பது தெரியவில்லை.

இந்தக் கூட்டத்தை கனடாவில் உள்ள சிலர் ஒழுங்கு செய்வதாகத்தான் வெளியில் சொல்லப்பட்டது. அதுபற்றிய சில ஊடக விளம்பரங்களிலும் செல்வியை யார் கடத்தியது என்று போடாமல், மொட்டையாக, “கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட செல்விக்கு அஞ்சலிக் கூட்டம்என விளம்பரம் செய்யப்பட்டதுடன், அந்தக் கூட்டத்தை யார் நடாத்துவது என்பதும் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவதற்காகவும், பேசுவதற்காகவும் தமது வாழ்நாளையே பாசிசப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் அர்ப்பணித்த சில முக்கியஸ்தர்கள் அணுகப்பட்டார்கள். மிகவும் உரிமையுடனும் ஆக்ரோசமாகவும்கூட அவர்கள் அணுகப்பட்டார்கள்.

ஆனால் கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் மத்தியிலிருந்து கிடைத்த தகவல் மற்றும் தமது சொந்த வளங்கள் மூலம் கிடைத்த விபரங்கள் மூலம் இந்தக்கூட்டம் திட்டமிட்ட ஒரு சதி வேலை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். செல்வியைக் கொலை செய்தவர்களின் பினாமியாகச் செயற்படும் சிலரே இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்கிறார்கள் எனத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, அந்த பிரமுகர்கள் கூட்டத்தில் பங்குபற்றாது, தமது நிலைப்பாட்டை கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு விளக்கிவிட்டு விலகிக் கொண்டார்கள்.

பின்னர் கிடைத்த தகவல்களின்படி, புலிகளின் புலனாய்வுப் பிரிவினரே இந்தக் கூட்டத்தை திட்டமிட்டு ஒழுங்கு செய்ததாகத் தெரிய வருகிறது. அதற்கான காரணங்களும் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டாலும், புலம்பெயர் நாடுகளில் புலிகள் பல காரியங்களைத் திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக புலிகளின் எதிர்ப்புரட்சிகர செயல்பாடுகளை புலம்பெயர் நாடுகளிலுள்ள முற்போக்குஜனநாயக சக்திகள் உரிய முறையிலும் துணிகரமாகவும் முகம் கொடுத்து பதிலடி கொடுத்து வருவதால், புலிகள் தற்பொழுது இந்த சக்திகளுடன் உறவாடும் சில உதிரிகளை தமது தேவைகளுக்குப் பயன்படுத்த முயன்று வருகிறார்கள். ஆனால் தகுந்த நேரத்தில் அந்த சக்திகள் நிலைமையை சாதுரியமாகக் iயாண்டு அவர்களது சதியை முறியடித்துவிட்டார்கள்.

இதில் ஒரு நல்லதும் மெச்ச சேண்டியதுமான விடயமென்னவெனில், சுமார் 30 பேர் வரையில் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தில், எந்தவொரு நல்ல மனிதரும் பங்குபற்றவில்லை. அமைப்பு ரீதியாகப் பார்த்தால் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, இடதுசாரிகள் என யாருமே பங்குபற்றவில்லை. பங்குபற்றியவர்கள் எல்லோருமே புலிப் பினாமிகள்தான். கனடாவில் இரண்டு அணிகள் தெளிவாக இனங்காணப்பட்டுள்ளன. ஒன்று, தமிழ் தேசிய வெறி, புலிச்சார்பு சக்திகள். மற்றது, முற்போக்கு ஜனநாயக சக்திகள். சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒருபோதும் ஒட்ட முடியாது.

செல்வியை கடத்திச் சென்று படுகொலை செய்த சக்திகளே அவருக்கு நினைவுக்கூட்டம் நடாத்தும் அயோக்கியத்தனம் நடந்துள்ளது. இது போன்ற கபட முயற்சிகளை மற்றைய நாடுகளிலும் புலிகள் அரங்கேற்ற முயற்சிப்பார்கள். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது. ஏனெனில் இலங்கையில் முற்று முழுதாக அழிக்கப்பட்ட புலிகள், புலம்பெயர் நாடுகளிலும் அழிவைச் சந்தித்து வருவதைத் தடுக்க முயற்சிப்பார்கள். அதற்கு சில நல்ல சக்திகளையும் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்பதற்கு இந்தக் கனடியக் கூட்டம் ஒரு உதாரணம்.

கனடாவில் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் சதிக்கு இரையான நல்ல சக்திகள் விழித்துக் கொள்வதும் அவசியம்.

- செல்வியின் நண்பர் குழாம் - கனடா

17.10.2011

சேரனை முன்னிலைப் படுத்திய கூட்டம் என்றால் வெள்ளிடைமலையாகத் தெரியும் யார் இந்தக் கூட்டத்திற்கு பின்னணி என்று. சில முற்போக்காளர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர், பங்காளராக அல்ல. நடத்துபவர்களின் முகத்திரையை விலத்திப் பார்ப்பதற்காக. அதில் நானும் ஒருவன். அவர்களின் முகத்திரையை மட்டும் அல்ல, செல்வியைக் கொன்றது, புலிகளின் ஏகபோகம், தமிழ் மக்களின் போராட்டத்தை முள்ளிவாய்காலில் கொன்று புதைத்தது புலிகள்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பும் புலிகளின் பாணியில் ஏகபோகத்தை தாங்கியே நிற்கின்றனர். இதனை முற்போக்கு பேசும் சிலரும் தூக்கி பிடிக்கின்றனர் போன்ற விடயங்களை கூறி அவர்களின் மௌனத்தை கலையவிடாமல் செய்து விட்டுத்தான் வந்தோம். கூடவே பார்வதி பேசினார் தான் செல்வியுடன் நெருங்கிப் பழகினவராம் அவர் சுறுசுறுப்பாம். ஆனால் அவரின் அரசியல் பற்றி தெரியாது என்று தான் சார்ந்தவர்களின் மனம் நோகாமல் பேசிவிட்டுச் சென்றார். கூடவே பத்மினி சிதம்பரநாதன், சிதம்பரநாதன் போன்வர்களுடான உறவையும் கூறிச் சென்றார். ஒரு குசுறு செய்தி அதிபர் ஆனந்தராஜ கொலையின் புலிகளுக்கான தகவல் வழங்கல் சிதம்பரநாதன் என்பது பார்வதிக்கு தெரியாமல் இருக்காதே. தற்போதைய 'தேடகப் பிரிவு' முகமூடி போட்டு நடாத்திய கூட்டம் இது. – தானாமூன 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com