Contact us at: sooddram@gmail.com

 

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அடிப்படை வசதிகளுடன் மீள்குடியேற்றப்படுவர்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை செய்ய முற்படும்போது சர்வதேச நாடுகள் நிதி வழங்குவதிலிருந்து விலகிக் கொள்ளும் நிலை காணப்படுவதாகவும், இதற்கு சில அரச அதிகாரிகளும் துணைபோயுள்ளதாக தெரிவித்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, எந்தத் தடைகள் வந்தபோதும் வடமாகாணத் திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களது தாயக பூமியில் மீள்குடியேற்றி அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் நாம் செய்து கொடுப்போம். அதற்கெதிராக செயற்படும் அனைத்து சக்திகளையும் வலுவிழக்கச் செய்வோம் என்றும் கூறினார்.

மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலப் பிரிவில் மக்கள் வங்கியின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மக்கள் வங்கி பொன்விழா வீடமைப்பு திட்டத்தின் 50 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கில் கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த விடுதலைப்புலி களின் செயற்பாடுகள் அழிக்கப்பட்டு மீண்டும் அமைதிச் சூழல் ஏற்படுத்தப்பட் டுள்ளது. இன்று மக்கள் அச்சமற்ற சூழலில் வாழ்கின்றனர். அன்று பயங்கர வாதிகளினால் அழிக்கப்பட்டவற்றை இன்று அதை விட பாரிய மாற்றங்களுடன் நவீன காலத்தின் தேவைக் கேற்ப கட்ட டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என்பன ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே.

தமது சிறிய சிறிய தேவைகளை அடைந்து கொள்வதற்காக சில சக்திகள் அதனை மறக்கடிக்க முற்படுகின்றனர். அதனை காரணம் காட்டி வடக்கில் பாரிய மனித படுகொலைகளை இந்த அரசு செய்ததாக பிழையான தகவல்களை சர்வதேச இணையங்களுக்கு சில அரசியல்வாதிகள் வழங்கி வருகின்றனர்.

வன்னியில் வாழ்ந்த மக்கள் எண்ணிக்கை யைப் பார்க்கிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதாக பொய் தக வல்களை கூறுபவர்களுக்கு எம்மிடம் சரியான தகவல் கோவை இருக்கின்றது. பாடசாலையில் கற்றவர்கள் முதல் வாழ்ந்து உயிர் நீத்தவர்கள் வரை சரியான எண்ணிக்கையுண்டு என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த ஜனாதிபதியும் அரசாங்கமும் ஆட்சியில் இருக்கும் வரை ஒரு போதும் மீண்டும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் மேலோங்க இடமளிக்கமாட்டோம். வடக்கில் வாழ்ந்த மக்கள் இடம் பெயர்க் கப்பட்டு எங்கு சென்றிருந்தாலும் அவர் கள் அவர்களது தாயக மண்ணில் மீள்குடி யேறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

அதே போன்றுதான் அரச அதிகாரிகளும் இவ்வாறு செயற்பட வேண்டும். எம்மிடம் இனவாதம் இல்லை. அதனால் தான் நாம் வடக்கையும், வடக்கு மக்களையும் நேசிக்கின்றோம். ஆனால், வடக்கில் உள்ள சில அதிகாரிகள் இன்னும் குறுகிய இனவாத சிந்தனைக்கு துணைபோய் மக்களை குழப்பி மீண்டும் ஒரு யுத்தத்துக்கு தளத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றன.

இலங்கை தேசத்தில் எப்பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்த போதும் அவர்கள் விரும்பிய பிரதேசங்களில் சுதந்திரமாக வாழக்கூடிய நிலையை இன்று நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். மடு திருத்தலத்தை மிகவும் குறுகிய காலத்துக்குள் பெரும் நிதிச் செலவில் புனரமைப்புச் செய்துள்ளோம்.

அதேபோன்று மன்னார் திருக்கேதீஸ்வரம் கோவிலை நவீனமயப்படுத் நடவடிக்கை யெடுத்துள்ளோம். அதற்காக இந்திய நாட்டின் பொறியியலாளர்கள் வருகைத் தரவுள்ளனர் என்றும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறினார்.

கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றும்போது,

ஆயுத ரீதியாக பிரச்சினைக்கு தீர்வில்லை என்பதை விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து பேச்சுவார்த் தைக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார். அதனை அவர் நிராகரித்தார். அதன் பின்னர் தான் மனித மீட்சி போராட்டத்தின் பின்னர் இன்று நாடு நிம்மதியை கண் டுள்ளது என அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் கூறியதாவது;

கிழக்கில் அத்தனை மக்களும் மீள்குடி யேற்றப்பட்டு தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என்ற பேதமின்றி வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். இன்று வடக்கில் தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க, பெளத்த மதத் தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்தி ருக்கின்றார்கள். எனில், அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாடு சகல மதங்களுக்கும், மனிதர்களுக்கும் சொந்தமான நாடு. அதில் யாருக்கும் கூடுதல், குறைதல் இல்லை. அவர்கள் விரும்பிய மதங்களை பின்பற்றலாம். மொழியினை பேசலாம். ஆனால் அதற்கு மாறாக மதம், இனம் மொழி ரீதியாக அவர்களை கூறுபோட்டு மீண்டும ஒரு யுத்தத்தை ஏற்படுத்த சிந்திக்கும் சக்திகளுக்கு சாவு மணியை இந்த வட மாகாண மக்கள் அடிப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com