Contact us at: sooddram@gmail.com

 

எனது வகுப்பறை...!

2009 ஜனவரி 3.

நேற்று இரவு மிகவும் பயங்கரமாகக் கழிந்தது. ராணுவ ஹெலிகாப்டர்களும் தலிபான்களும் என் கனவில் வந்துகொண்டே இருந்தனர். எனது இதயம் நிறைந்த ஸ்வாட் பள்ளத்தாக்கில் ராணுவத் தாக்குதல்கள் துவங்கிய நாள் முதலே இப்படிப்பட்ட கனவுகள் துன்புறுத்துகின்றன. பள்ளிக்குச் செல்லவே பயமாக இருக்கிறது. பெண் குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வரக்கூடாது என தலிபான்கள் உத்தரவு போட்டிருக்கிறார்கள். எங்கள் வகுப்பில் 27 பேரில் 11 பேர் மட்டுமே வருகிறார்கள்”.

2009 ஜனவரி 5.

காலையில் பள்ளிக்கு அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தேன். பள்ளிச் சீருடையை அணிவதற்கு கையில் எடுத்தபோதுதான் நினைவுக்கு வந்தது. யாரும் சீருடை அணிந்து கொண்டு வராதீர்கள் என்று பள்ளி முதல்வர் கூறியிருக்கிறார். எனவே எனக்குப் பிடித்தமான இளஞ்சிவப்பு நிற உடையை அணிந்துகொண்டேன். எனது நண்பிகள் எல்லோருமே சீருடைக்கு பதிலாக வேறு உடை அணிந்து வந்தார்கள். அன்று பள்ளிக்கூடமே வண்ணமயமாகக் காட்சியளித்தது. ஆனால் மைதானத்தில் இறைவணக்கத்திற்காக கூடியபோது, வண்ண உடைகளும் அணியக்கூடாது; அது தலிபான்களுக்கு பிடிக்காது என்று முதல்வர் அறிவித்தார்”.

2009 ஜனவரி 14.

நாளையிலிருந்து குளிர்கால விடுமுறை துவங்கப்போகிறது. ஆனால் என் மனது மிகவும் வேதனையோடு இருக்கிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படித்தான். விடுமுறை என்ற மகிழ்ச்சி எங்களிடம் இல்லை. ஏனென்றால் விடுமுறையை அறிவித்த பள்ளி முதல்வர், மீண்டும் எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் என்பதைச் சொல்லவில்லை. தலிபான்களின் உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. பெண் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடாது என அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள். இனிமேல் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரவே முடியாமல் போய்விடுமோ? வகுப்பறையை விட்டு வெளியே வரவே மனமில்லை. இனிமேல் நான் எப்போது இங்கு வரப்போகிறேன்?”.

* * *

பேரழகு ததும்பும், பச்சைப் பசேலென்ற மலைகள் சூழ்ந்த பகுதி ஸ்வாட் பள்ளத்தாக்கு.


பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வசிரிஸ்தான் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள முக்கிய நகரம் மிங்கோரா. இங்கு தனியார் மழலையர் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகிற ஒரு கல்வியாளரின் மகள் மலாலா யூசப்ஜாய். அந்த 11 வயதுச் சிறுமி எழுதிய டைரிக் குறிப்புகள்தான் மேலே நாம் படித்தது.

தலிபான்களின் உத்தரவால் ஏற்கெனவே 2008ம் ஆண்டில் வசிரிஸ்தான் பிரதேசத்தில் 150 பள்ளிக்கூடங்கள் அழிந்துவிட்டன. 2009ல் அவர்கள், ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள பள்ளிக்கூடங்களை குறி வைத்தார்கள். மிங்கோரா நகரத்தில் குஷால் பள்ளியில் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி மலாலாவால், தலிபான்களின் கட்டளையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டாக்டராக வேண்டுமென்ற கனவோடு படித்துக் கொண்டிருக்கும் நான் ஏன் பள்ளிக்கூடம் போகக்கூடாது என மனதுக்குள் கேள்வி எழுப்பினாள். தந்தை கொடுத்த தைரியத்தால், அந்தக்கேள்வியை ஊர் முழுக்க உரக்க எழுப்பினாள். சக மாணவிகளை தைரியப்படுத்தினாள்.

தலிபான்களின் கட்டளையை மீறி பள்ளிக்கூடத்திற்கு வந்தாள். சில நாட்களில் இதர மாணவிகளும் துணிவு கொண்டவர்களாக பள்ளிக்கு வந்தார்கள்.

வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைத் தாண்டி இச்செய்தி நாடெங்கும் பரவியது. தலிபான்களை எதிர்த்து, பெண் கல்வி உரிமையை நிலைநாட்டிய மலாலாவை, பாகிஸ்தான் முழுவதும் உள்ள குழந்தைகளும் பெண்களும் போற்றினார்கள். உலக அளவில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் அமைதி விருதுக்கு மலாலாவின் பெயர் 2011ல் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் பாகிஸ்தான் அரசாங்கமே மலாலாவுக்கு தேசிய அமைதி விருது வழங்கி கவுரவித்தது.

* * *

தலிபான்கள், இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தையும், அதை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் பயங்கரவாதத்தையும் தூக்கிப்பிடிக்கும் கொடியவர்கள்.
ஆப்கானிஸ்தானம் இவர்களது பிறப்பிடம். அமெரிக்காவே இவர்களை உருவாக்கிய தந்தை.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தார்கள்; ஜனநாயகக் குடியரசை நிறுவிய தோழர் நஜிபுல்லாவை கொடூரமான முறையில் படுகொலை செய்தார்கள்; தாங்கள் விதிக்கும் சட்ட திட்டங்களைப் பின்பற்றாதவர்களை இஸ்லாத்தின் எதிரிகள் என்று கூறி ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்களை துடிதுடிக்கக் கொன்றொழித்தார்கள். அமெரிக்காவால் பால் வார்க்கப்பட்ட ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தோடு இணைந்து, ஆப்கனில் பல்லாண்டுகாலம் மனிதகுலமே வெறுத்து ஒதுக்கக்கூடிய கொடுங்கோல் ஆட்சியை நடத்தினார்கள்.

புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், தான் வளர்த்த இந்தப் பாம்புகளை பிடிக்காமல் போய்விட்டது அமெரிக்காவுக்கு. ஆப்கனில் ஜனநாயகத்தை மீட்கிறோம் என்ற பெயரில் அந்நாட்டையே அழித்தொழித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஆப்கனின் எல்லையிலிருந்து பாகிஸ்தானின் எல்லைக்கு பெருவாரியாக இடம்பெயர்ந்தார்கள் தலிபான்கள்.

* * *

வசிரிஸ்தானும் ஸ்வாட் பள்ளத்தாக்கும் தலிபான்களின் கொலைக்களங்களாக மாறின. இஸ்லாத்தின் பெயரால், இஸ்லாத்திற்கே நேர் எதிராக, திருக்குர்-ஆனுக்கு நேர் முரணாக, நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு எதிராக ஷரியத் சட்டம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள். பெண் குழந்தைகளை வெறுத்து ஒதுக்கினார்கள். அவர்களது கல்வியைப் பறித்தார்கள். நானூறுக்கும் அதிகமான பள்ளிக்கூடங்களை தரைமட்டமாக்கினார்கள். 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகளின் கல்வியை நாசமாக்கினார்கள். பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இதைத் தடுப்பதற்கு மாறாக மவுனம் காத்தார்கள். தனது மக்களை அமெரிக்கா தாக்கினாலும், தலிபான்கள் தாக்கினாலும் தங்களது நாற்காலியை பாதுகாத்துக் கொள்ள வேடிக்கை பார்ப்பது மட்டுமே கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் வாடிக்கையாக இருந்திருக்கிறது.

* * *

கொடியவர்களை எதிர்த்து வீரச் சமர்புரிந்த மக்கள், அரசு அதிகாரிகள், நேர்மையான காவல்துறை அதிகாரிகள் என வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்துவிட்ட தலிபான்கள், பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்கும் மலாலாவின் உயிரையும் பறிக்கத் திட்டமிட்டனர்.

2012 அக்டோபர் 9.

பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மலாலாவின் தலையிலும் கழுத்திலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. வெள்ளை நிறச்சீருடை ரத்தத்தால் நனைந்தது. மலாலாவின் தோழிகள் ஷாஜியாவையும் கியானத்தையும் குண்டுகள் துளைத்தன. துடிதுடித்து வீழ்ந்த இவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மலாலா லண்டன் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மலாலா என்ற சிறுமியின் போர்க்குரலை இப்போது பாகிஸ்தான் தேசமே எழுப்பிக் கொண்டிருக்கிறது!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com