Contact us at: sooddram@gmail.com

 

வடமாகாண சபை உறுப்பினர்கள் பதவியேற்பு

சித்தார்த்தன், சிவாஜிலிங்கம் உட்பட ஒன்பது உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு

சுய இலாபங்களுக்காக மக்களை கலவரத்துக்குள் தள்ள முடியாது - முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கேனஸ்வரன் முன்னிலையில் சந்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று முன்பகல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிலிருந்து தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்பது உறுப்பினர்கள் நேற்று சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியில் அங்கம் வகிக்கும் ஐந்து உறுப்பினர்களும் நேற்றைய இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் தர்மலிங்கம் சித்தார்த்ததனின் புளொட் உறுப்பினர்கள் இருவரும் செல்வம் அடைக்கலநாதனின் டெலோ கட்சியில் அங்கம் வகிக்கும் இரு உறுப்பினர்களும் நேற்று சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனிப்பட்ட முடிவுகளை எடுத்துள்ளது எனவும் அமைச்சர்களின் தெரிவில் கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அக்கட்சி அலட்சியப்படுத்தியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வட மாகாண சபையின் முக்கிய பொறுப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றும், அவ்வாறு நடக்கவில்லையென்றும், இதன்மூலம் மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அந்த குறிக்கோள் நிறைவு செய்யப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நேற்றைய சத்தியப் பிரமாண நிகழ்வில் டெலோ கட்சியின் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கலந்து கொண்டிருந்த போதும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் புளொட் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் வட மாகாண சபைக்குத் தெரிவான ஈ.பி.ஆர்எல்.எப். உறுப்பினர் ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன், சிவப்பிரகாசம் சிவமோகன், எம். தியாகராஜா, மயில்வாகனம் இந்திரராஜா, ஆறுமுகம் சின்னத்துரை, துரைராஜா ரவிகரன், புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன், தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், டெலோ அமைப்பின் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், குணசீலன் ஆகியோரே நேற்று சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கேற்காதவர்களாவர். அதேவேளை, நேற்றைய சத்தியப் பிரமாண நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், மக்கள் சார்ந்த முடிவுகளை தான்தோன்றித்தனமாக எடுக்கக்கூடாது.

வன்முறைக் காலத்தைக் கடந்து வந்துள்ளோம் என்பதை எவரும் மறக்கக்கூடாது எனவும் சுய இலாபத்திற் காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சுக்கள் தொடர்பில் யாராவது கேள்வி கேட்டிருந்தால் அதற்குப் பதில் கூற நாம் தயாராக இருப்பதாகவும் யாரும் அவ்வாறு தன்னிடம் கேட்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுக் காலை இந்த சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்றதுடன், நான்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

நேற்றுக் காலை யாழ். நகரிலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய வட மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அங்கிருந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு வருகை தந்ததும் பதவிப் பிரமாண நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கடந்த 7ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள தமது புதிய அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார். புதிதாக நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் தமது கடமைகளைப் பெறுப்பேற்கும் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்க்கூட்டமைப்பு பின்னர் அறிவிக்கவுள்ளது.”

நேற்றைய தினம் அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியிடம் தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமத்திரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com