Contact us at: sooddram@gmail.com

 

உரிமை போராட்டத்தில் அனைத்தையும் இழந்ததுடன் எதனையும் பெறவில்ல  - கமலேந்திரன்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் இருந்தவற்றை இழந்தோமே தவிர எதையும் பெறவில்லை என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற வடமாகாண சபையின் கன்னியமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த அத்தனை போராளிகளையும் பலியாகிப்போன எமது மக்களையும் நினைவில் வைத்துக்கொண்டு எனது கன்னியுரையினை நிகழ்த்துவதில் பெருமையடைகின்றேன். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு கௌரவமான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துவதை முதல் கட்டமாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதை கட்டங் கட்டமாக நகர்த்தி தீர்வு நோக்கி முன்னேற வேண்டும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, புலிகளின் அறிவிப்புப்படி 651 புலிப் போராளிகளும் மிகக் குறைந்த மக்களுமே பலியாகி இருந்ததாக கூறப்பட்டது. இரு நாடுகளின் ஒப்பந்தம் எனும் அந்த வாய்ப்பை தமிழ் மக்கள் ஏற்று அரசியல் உரிமைக்கான போராட்ட வடிவத்தை நடைமுறை சாத்தியமான பாதையில் நகர்த்தி இருந்தால், 651ஆக இருந்த உயிரிழப்புக்கள் ஆயிரங்களாகவும், இலட்சங்களாகவும் அதிகரித்து இருக்காதுடன், ஈடு செய்ய முடியாத இழப்புக்களும் இங்கே நிகழ்ந்திருக்காது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாணமாகவும் பொலிஸ், காணி அதிகாரங்களும் இந்திய அரசின் பக்கபலமும் இந்தியாவின் உயர்தரமான உதவியும் தமிழ் மக்களுக்கு கிடைத்த அந்த பொற்காலத்தினை புலிகள் தூக்கி எறிந்ததுடன், பொறுப்பெடுத்தவர்கள் துஷ்பிரயோகம் செய்தார்கள்.  

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மாகாண சபையிலிருந்து நாம் உரிமை இலக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வந்துள்ளோம். எமது நிலைப்பாட்டை மாறி மாறி வந்த இலங்கை ஜனாதிபதிகளிடமும் சர்வதேச சமூகத்திடமும் வலியுறுத்தியும் வந்துள்ளோம்.

எம்மோடு தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றிய சிறந்த புத்திஜீவிகளையும் இழந்துள்ளோம். அவர்களின் தியாகமும், எமது நம்பிக்கை மிகுந்த போராட்டமும் இன்று நனவாகியுள்ளது.

இந்த மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இந்த மன்றில் எனது உரையினை ஆற்றிக்கொண்டிருந்தாலும் இந்த மாகாணசபை ஊடான ஆட்சியும் ஆளுமையும் எமது மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு வித்திடும் திட்டங்களை முன்மொழிய வேண்டும் என்றும் அத்தகைய பயனுள்ள திட்டங்களை ஆதரித்து தமிழ் மக்கள் பயன்பெறச் செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு உண்டு.

நலிந்து போயுள்ள எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் எமது எதிர்கால இளைய சந்ததிகளின் நலன் காக்கவும் அவர்களுக்கான முன்னேற்றப்பாதையினை வழிகாட்டிச் செல்லவும், சமூகத்தில் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு தனித்துவிடப்பட்டிருக்கும் தமிழ் இயக்கங்களின் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்தவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குமான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமது தோள்கள் மீது சுமைகளாக பாரப்படுத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான உடல், உள நலன் சார்ந்த வழிகாட்டுதல்கள், சிகிச்சைமுறைகள், நலனோம்பும் செயற்பாடுகளை எமது சுகாதாரத்துறையினர் விரைந்து மேற்கொள்ளவேண்டும்.

இயற்கை வளம் செழித்த எம் பிரதேசங்களில் கைத்தொழில், விவசாயம், என்பவற்றை ஊக்குவித்து மக்களுக்கு வருமானத்தையும் வேலைவாய்ப்புக்களையும் உள்வாங்கும் நிலைகளைத் தோற்றுவிப்பதற்கும், உள்ளுர் உற்பத்தியை நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் பெருக்கவும், உற்பத்தித் தொழில்பேட்டைகளை நிறுவி ஏற்றுமதி தொழில் வாய்ப்பை எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவும் நாம் முன்னின்று உழைக்கவேண்டும்.

எமது மக்கள் தமது தொழில்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் வங்கிகளின் செயற்பாடுகள் ஊடாக இலகு கடன்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக அவர்களது நடைமுறை வாழ்வுக்கான தொழிற்துறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் வேலைவாய்ப்புக்களையும் தோற்றுவிக்கலாம். இந்த வழிகள் நம் மக்களை சுபீட்சமான பாதைக்கு இட்டுச் செல்லும்.

கல்விக்குப் பெயர் பெற்ற வடபகுதி மக்கள் பல்வேறுபட்ட நெருக்கடியான சூழ்நிலைகளைக் கடந்து கல்வியில் பின் தங்கியுள்ளார்கள். இந்த நிலைமையை மாற்றி மீண்டும் கல்வியில் எமது முதல்தரத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். யுத்தத்தினால் எமது சிறார்கள் பலர் தம் கல்வியை முறையாகத் தொடர முடியவில்லை. பலர் பொருளாதார காரணங்களினாலும், யுத்தம் ஏற்படுத்திய இழப்புக்கள் காரணத்தினாலும் கல்வியை இடைநடுவே கைவிட்டுள்ளார்கள்.

கல்வியை மீண்டும் எமது இளைய சமுதாயத்தினர் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்குரிய வழிகாட்டல்களையும் அதற்கான மூலவளங்களையும் வடமாகாண கல்வியமைச்சு வழங்குவதற்கான ஆயத்தநிலைகளை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

நிரந்தரமானதும், கௌரவமானதுமான அரசியல் தீர்வு நோக்கிய பயணத்துக்கு வடமாகாண சபையை நாம் முன் நகர்த்திச் செல்ல வேண்டும். இந்த முயற்சியில் சகோதர முஸ்லிம் மக்களோடு இணக்கப்பாட்டை வலுப்படுத்திக் கொள்வதோடு, பெரும்பான்மை சிங்கள மக்களிடமும் எமது உரிமை கோரிக்கையின் நியாயங்களை தெளிவுபடுத்த நாம் உழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com