Contact us at: sooddram@gmail.com

 

அரசும் தமிழ்க் கூட்டமைப்பும் இணைந்தே பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது

போருக்கு பிந்திய வட மாகாணத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதென வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சபையின் கன்னி அமர்வு நேற்று, கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்றது. இங்கு சபை தவிசாளர், உப தவிசாளர் தெரிவின் பின்னர் கன்னியுரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, சர்வதேச சமூகம் வடபகுதி மக்களுக்கு தொழில் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்க வேண்டும். வடமாகாண சபையானது மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சட்டவரையறைக்குள் செயற்படவுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கு இருக்கிறதுஎன்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.

வட மாகாண சபையின் கன்னி அமர்வு நேற்று காலை, கைதடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மாகாண சபை கட்டடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது சபைத் தவிசாளராக கந்தையா சிவஞானமும் உப தவிசாளராக அன்ரனி ஜெகநாதனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

வட மாகாண சபையின் முதல் அமர்வு நேற்று காலை 9.30 மணிக்கு வட மாகாண செயலாளர் கிருஷ்ண மூர்த்தியின் தலைமையில் நடைபெற்றது. சபையின் தவிசாளரையும், உப தவிசாளரையும் தெரிவு செய்யுமாறு அவர் முதலமைச்சரை கோரினார். இதன்படி தமிழரசுக் கட்சி சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட சி.வி.கே. சிவஞானம் இந்தப் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

இவரின் பெயரை மாகாண அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா முன்மொழிய மாகாண அமைச்சர் பொன்னையா ஐங்கரநேசன் வழிமொழிந்தார். இதன் பின்பு உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதற்கு அன்ரனி ஜெகநாதனின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மாகாண அமைச்சர் பத்மநாதன் சத்தியமூர்த்தி பெயரை முன்மொழிய மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து தவிசாளர் சிவஞானத்தின் தலைமையில் நடவடிக்கைகள் இடம்பெற்றதோடு முதல் நிகழ்வாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உரைநிகழ்த்தினார். அவரது உரையைத் தொடர்ந்து எதிர்க் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கந்தசாமி கமலேந்தின் (ஈ.பி.டி.பி) உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் உரையாற்றினர்.

முஸ்லிம்கள் சார்பாக த.தே.கூ. உறுப்பினர் அஸ்மினும் அரசாங்கத்தின் சார்பாக ஐ.ம.சு.மு. உறுப்பினர் ஜெயதிலகவும் உரைநிகழ்த்தினர். சபை நடவடிக்கைகள் எதுவித சச்சரவுகளுமின்றி பிற்பகல் 12.15 மணியளவில் நிறைவடைந்ததாக அறிய வருகிறது. அடுத்த அமர்வு நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறும் என சபை தவிசாளர் கந்தையா சிவஞானம் இங்கு அறிவித்தார்.

அன்றைய தினம் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியினால் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்படவுள்ளது. வட மாகாணத்தின் கன்னி அமர்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன், த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை வட மாகாண ஆரம்ப அமர்விற்கு முன்னதாக வட மாகாண சபை புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

வட மாகாண ஆளுநர், முதலமைச்சர், த.தே.கூ. உறுப்பினர்கள் ஆகியோர் ஊர்வலமாக கைதடியிலுள்ள புதிய கட்டடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் இந்த ஊர்வலத்தில் சில த.தே.கூ. உறுப்பினர்கள் பங்கேற்காது ஒதுங்கி நின்றதாக அறியவருகிறது. கடந்த செப்டெம்பர் 21ம் திகதி நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலில் த.தே. கூட்டமைப்பு 30 ஆசனங்களையும் ஐ.ம.சு.மு. 7 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா மு.கா. ஒரு ஆசனத்தையும் வெற்றியீட்டியது.

இந்த நிலையில் தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் வட மாகாண சபை அமர்வு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கன்னி அமர்வு சிறப்பாக நடைபெற்றதாக அறியவருகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com