Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை உயர்ஸ்தானிகரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்படும் - நாராயணசாமி

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்திற்குரியது. இன்னொரு நாட்டில் அமர்ந்து கொண்டு அந்த நாட்டைப்பற்றி அவர் கூறிய கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ள மத்திய மந்திரி நாராயணசாமி அந்த பேச்சு தொடர்பில் கண்டனம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி நாராயணசாமி காரைக்காலில்  ெய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,   ''காரைக் கால் பகுதியை சேர்ந்த சுமார் 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அவர்களது 4 படகுகளையும் இலங்கை அரசு கையகப்படுத்தி உள்ளது. காரைக்கால் மீனவர்கள் அங்குள்ள திருகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதும் திருமுருகன் எம்.எல்.ஏ என்னிடம் உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து இலங்கையில் உள்ள நமது தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, நமது மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

மேலும், ஏற்கெனவே இலங்கை அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள படகுகளுடன், தற்பொழுது கையகப்படுத்தப்பட்டுள்ள நான்கு படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நேரடியாக சந்தித்து பேசியுள்ளேன். அவரும் இதுதொடர்பாக இலங்கை அரசுடன் பேசி வருகிறார். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி படகுகளை திரும்ப பெற நடவடிக்கை எடுப்போம்.

மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் கலந்து பேசி இந்திய மீனவர்கள் எந்த எல்லை வரை மீன்பிடிப்பது? எந்தக் காலங்களில் மீன்பிடிப்பது என்றும், அதுபோன்று இலங்கை மீனவர்கள் எந்த எல்லை வரை மீன்பிடிப்பது? எந்தக் காலங்களில் மீன்பிடிப்பது என்றும் முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம்.

இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. நமது மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதற்கு, இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் நமது மீனவர்கள் மீது புகார் கூறுவதுதான் காரணமாகும். எனவே இந்திய-இலங்கை மீனவர்களிடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது. தமிழக முதலமைச்சரும், இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனும் பிரதமரை சந்தித்து பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் காலந்து கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞரும் பிரதமருக்கு கடிதம் எழுதி அதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

நானும் இரண்டு முறை பிரதமரை சந்தித்து இலங்கை அரசு தொடர்ந்து நமது மீனவர்களை துன்புறுத்தி வருகிறது. நமது மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துகிறது. மீனவர்களை சிறைபிடிக்கிறது. படகுகளை கையகப்படுத்துகிறது. குறிப்பாக தலைவர் ராஜீவ் காந்திஜயவர்த்தன ஒப்பந்தத்தில் இலங்கையில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழக மக்களுக்கு சிங்களவர்களைப் போன்று அனைத்து அதிகாரங்களும் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தும் அதனை இன்று வரை செய்யவில்லை.

நல்லெண்ணக் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. எனவே, இதுபோன்ற தருணத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இலங்கைக்கு செல்வது தொடர்பான சாதக, பாதகங்களை யோசித்து முடிவு செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளேன். பிரதமரும் அதனை ஏற்றுக் கொண்டு, நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன். புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆறரை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு பிரதமர் மதிப்பளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒரு நாட்டின் தூதுவர், அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. இந்தியா சுதந்திரமான நாடு. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டிற்கு பிரதமர் செல்வதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் உரிமை மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் உள்ளது.

இதுதொடர்பான இலங்கை நாட்டின் தூதரின் கருத்துக்கள் கண்டனத்திற்குரியது. இன்னொரு நாட்டில் அமர்ந்து கொண்டு அந்த நாட்டைப்பற்றி அவர் கூறிய கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமை இலங்கை நாட்டின் தூதருக்கு இல்லை என்று திட்டவட்டமாக கூறப்படும்.

இலங்கை கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படை கப்பல்கள் அதிகளவில் ரோந்து வருகின்றன. அதுபோன்று நமது இந்திய கடல் எல்லைப்பகுதியில் நமது தென்மண்டல கப்பற்படையின் கப்பல்களும், ரோந்து படகுகளும் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

நாகப்பட்டிணத்திலும் கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இருநாட்டு
மீனவர்கள் கலந்து பேசும்போது கச்சதீவு பிரச்சினை குறித்து பேசப்படும்''என்று கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com