Contact us at: sooddram@gmail.com

 

மக்களோடு மக்களாய்

தவறுகளை கண்டிக்கின்றார் நல்லவற்றை பாராட்டுகின்றார்

கரடியனாறு சம்பம் போன்று இனி நடக்காமல் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்: துரைரட்ணம்

கரடியனாறு வெடிப்புச் சம்பவமானது முழுநாட்டையுமே விழிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களையும் கூட ஒருகணம் திகைப்படையவைத்துள்ளது. எனவே கரடியனாறு சம்பவம் போல் இனி நடக்காமல் பாத்துக் கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.

கரடியனாறு சம்பவம் குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டு அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இச்சம்பவமானது இக்கிராமத்தையும், பிரதேசத்தையும், மாவட்டத்ததையும், ஏன் முழுநாட்டையுமே விழிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களையும் கூட ஒருகணம் திகைப்படையவைத்துள்ளது. இனியும் இப்படியொரு சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு இது தொடர்பான வேலைகளில் ஈடுபடும் நிறுவனங்களும், அரசும் மிகவும் அவதானமாக செயல்படுவதோடு கண்காணிப்பும், மேற்பார்வையும்அவசியமாக்கப்பட வேண்டும்.

இச்சம்பவ தினத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர்கள், முறைபாடு காரணமாக பொலிஸ் நிலையம் வந்தவர்கள் நிறுவனத்தில் வேலைசெய்தவர்கள், கமநலச்சேவை கேந்திர நிலையத்திற்கு வேலை நிமித்தம் சென்றவர்கள் எனப் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

இச்சம்பவம் நடந்த பகுதியில் உள்ள மக்கழும் பாதிக்கப்பட்ட மக்களும் மிகவும் வறியமக்கள். இவர்களின் இறுதிக் கடமைக்காக பாலர்சேனை, இலுப்பையடிச்சேனை கிராமத்திற்கு நான் இவர்களின் வீடுவீடாகசென்று பார்தபோது இவர்களின் வறுமை சொல்லிலடங்காது. இதனால் விரைவாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இச்சப்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை செங்கலடி பிரதேச வைத்தியசாலை, கரடியநாறு மாவட்ட வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் கடமையாற்றிய ஊழியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், பணிப்பாளர் இவர்கள் அனைவரினதும் துரிதசேவையானது மிகவும் பாராட்டதக்க சேவையாகும்.

இதேவேளை இச்சம்பவத்தின் போது உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற அரச, தனியார் நிறுவன வாகன உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் இவ்விடத்தில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நானும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரும் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடும்போது வாகனத்தில் கொண்டுவந்தவர்களை இறக்குவதும் இவர்களுக்கான மருத்துவ கடமைகளை மிகவும் அக்கறையுடனும் சேவை மனப்பாங்குடனும் விறுவிறுப்பாக செயலாற்றியமையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்கக்கூடியதாக இருந்தது. இதுசேவையின் முன்னுதாரணமே. இந்த நல்ல சேவைக்கு பரிபூரண ஒத்துழைப்பை பாதுகாப்புதரப்பினர் வழங்கிக் கொண்டிருந்தனர்.

தற்செயலாக நடந்த இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிடப்படும் விடயங்களை அரசு கவனத்தில் கொள்வது சிறந்ததாகும். குறிப்பாக இச்சம்பவம் இனிமேலும் நடக்காமல் பாத்துக்கொள்வதற்கு அரசு பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும், பொதுமக்களும் சமூகத் தலைவர்களும் இது தொடர்பான செயல்பாடுகள் நடக்கும் பகுதிகளில் எதிர்காலத்தில் அவதானமாகமும் விழிப்புடனும் இருப்பதோடு பாதுகாப்பற்ற முறையில் எதாவது வேலைகள் நடந்தால் உரியவர்களிடம் முன்கூட்டியே முறைப்பாடு செய்யவேண்டும். எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகளின் அச்சுறுத்தல் பலமாக இருந்தகாலத்திருந்து துரைரத்தினமும் அவரது சகபாடிகளும் கிழக்கில் தொடர்ந்து தங்கியிருந்து சேவையாற்றி வருகின்றனர். எக்காலத்திலும் தனது மக்களை விட்டு இந்த செயற்பாட்டுப் படை விலகிச் சென்றது கிடையாது. சுனாமியினால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியபோது பல தரப்பினரையும(தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள்) ஒழுங்கமைத்து சகல அரசியல் செயற்பாட்டாளர்களுடனும் இணைந்து சிறப்பாக செயற்பட்டதை இன்றும் கிழக்கு மக்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர். கிழக்கு மாகாண சபையில் இவர்தான் செயற்பாடு மிக்க எதிர் கட்சி (கவனிக்க எதிரிக் கட்சி அல்ல) செயற்பாடாளராக செயற்படுகின்றார். இவரின் ஆக்கபூர்வமான செயற்பாடு கிழக்கு மாகாண அரசு 'துரை கிழக்கு மாகாண சபைக்கு ஒரு சொத்து, கிழக்கு மாகாண சபையை சரியான செயற்பாட்டு வழியில் செல்ல உதவி செய்யும் சிறந்த நெறிபடுத்தாளர் மாறாக சரியான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் எதிரிக் கட்சியின் உறுப்பினர் அல்ல' என்று தங்களுடன் ஒருவர் என்ற கோதாவில் மதித்து செயற்பட்டு வருகின்றனர். இன்றும் இவ் வெடிவிபத்து சம்பவத்தை வெறுமனவே 'கண்டனம்' என்று செய்யாமல் விமர்சனக் கண்ணோட்டத்தில் தவறுகளை சுட்டிக்காட்டியும் இவை எவ்வாறு எதிர்காலத்தில் நடைபெறமால் தடுக்கலாம் என்பதிலிருந்து நல்லனவற்றை பாராட்டியும் தட்டிக் கொடுக்கும் செயற்பாடு பலருக்கும் ஒரு முன் உதாரணமாக அமைகின்றது. இவரதும் இவரது சகபாடிகளும் தொடர்ந்து தமது நல் சேவையினை, கடமைகளை கிழக்கு மக்களுக் செலுத்துவார்கள் என நம்புகின்றோம். தமிழ் குறும் தேசியம் பேசி மக்கள் வாக்குகளை குறி வைத்து மக்களுக்கு வேட்டு வைக்கும் வெத்து வேட்டுகள் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com