Contact us at: sooddram@gmail.com

 

பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பிரேரணை ஐ.நா. சபையில் இன்று முன்வைப்பு

வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதில் அமெ. உறுதி. பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பெற முயற்சி

பலஸ்தீனை ஐக்கிய நாடுகள் சபையின் 194ஆவது நிரந்தர அங்கத்துவ நாடாக அங்கீகரிக்க கோரும் பிரேரணையை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இன்று ஐ.நா. பொதுச் சபையில் முன்வைக்கவுள்ளார்.  எனினும் பலஸ்தீனின் ஐ.நா. தனிநாட்டு கோரிக்கைக்கு எதிராக பாதுகாப்புச் சபையில்வீட்டோஅதிகாரத்தை பயன்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மஹ்மூத் அப்பாஸிடம் நேரடியாக குறிப்பிட்டுள்ளார். பராக் ஒபாமா நியூயோர்க்கில் நேற்று முன்தினம் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹ ஆகியோரை தனித்தனியே சந்தித்து மத்திய கிழக்கு விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் தனிநாட்டுக் கோரிக்கையை கை விடுமாறு கேட்டுக் கொண்டார். மறுபுறத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புக் குறித்து பென்ஜமின் நெதன்யாஹவிடம் உறுதியளித்தார்.

எனினும் பராக் ஒபாமாவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இடம்பெற்றதாக மஹ்மூத் அப்பாஸ் சந்திப்புக்கு பின்னரான ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பலஸ்தீன அங்கத்துவம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக செயற்படுவோம் என வெள்ளை மாளிகைக்கான பாதுகாப்புச் சபை பேச்சாளர் பென் ரோட்ஸ் தெரி வித்தார். மஹ்மூத் அப்பாஸை சந்தித்த போது ஜனாதிபதி ஒபாமா இந்த தகவலை குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மஹ்மூத் அப்பாஸ் தனிநாட்டு கோரிக்கையை ஐ.நா. சபையின் முன்வைக்க மாட்டார் என்ற சிறு எதிர்பார்ப்பு இன்னும் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சமாதானத்திற்கு குறுக்கு வழி இல்லை - ஒபாமா

இதேவேளை, பலஸ்தீன, இஸ்ரேல் தலைவர்களை சந்திப்பதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார். 36 நிமிடங்கள் கொண்ட அந்த உரையில் பலஸ்தீன தனிநாட்டு கோரிக்கைக்கு எதிராக தனது கருத்தை வெளியிட்டார். இதில், ‘நீண்ட காலமாக தொடரும் மத்திய கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண குறுக்கு வழி எதுவும் இல்லை. இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலமே இது முடி வுக்கு வர வேண்டும்என்று குறிப்பிட்டார்.

66ஆவது ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பராக் ஒபாமாவின் உரையில் மேலும் கூறியதாவது; “அறிக்கைகள் மற்றும் ஐ.நா. தீர்வின் மூலம் சமாதானத்தை எட்ட முடியாது. அது சாத்தியமாக இருந்தால் இப்போதே செயற்படுத்த முடியும். ஆனால் இரு தரப்புக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தை மூலமே இதற்கு தீர்வு காண முடியும்.

ஓர் ஆண்டுக்கு முன் நான் இந்த இடத்தில் இருந்து சுதந்திர பலஸ்தீனத்திற்கு அழைப்பு விடுத்தேன். நான் அதனை இப்போதும் நம்புகிறேன். பலஸ்தீனர் களுக்கு அவர்களுக்கான தனி நாடு தேவை. ஆனால் இஸ்ரேல், பலஸ்தீன் ஆகிய இரு தரப்பும் உணர்ந்தே இது செயற்படுத்தப்பட வேண்டும்என்றார்.

வீட்டோவுக்கு சார்கோசி எதிர்ப்பு

எனினும் பலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்காவீட்டோஅதிகாரத்தை பயன்படுத்துவது மத்திய கிழக்கில் நிலைமையை மோசமடையச் செய்யும் என பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி தனது பொதுச் சபை உரையில் குறிப்பிட்டார். 60 ஆண்டுகளாக தோல்வி யடைந்த மத்திய கிழக்கு சமாதான பேச்சு வார்த்தை முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இதன்படி பலஸ்தீன, இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தை ஒரு மாதத்திற்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் எல்லை மற்றும் பாதுகாப்பு குறித்து 6 மாதங்களுக்குள் இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் பெறப்பட்டு இறு தித் தீர்வு ஓர் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேற்குக் கரையில் ஆதரவு

முன்னதாக மேற்குக் கரையின் ரமல்லா மற்றும் நப்லுஸ் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு பலஸ்தீன தனிநாட்டு கோரிக்கைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். எனினும் பலஸ்தீனில் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பு ஐ.நா. அங்கத்துவத்திற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இஸ்ரேல் எல்லைகளுடன் கூடிய முழு பலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும் என ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

அப்பாஸ் உரை இன்று

இந்நிலையில் பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இன்று ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார். அதில் ஐ.நா.வில் பலஸ்தீனத்திற்கு தனிநாடு கோரியதாக அவரது உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பலஸ்தீனத்தை ஐ.நாவின் 194 ஆவது அங்கத்துவ நாடாக கோரும் விண்ணப்பத்தை மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கவுள்ளார். எனினும் அவரது உரைக்கு முன்னரோ அல்லது பின்னர் அந்த விண்ணப்பம் சமர்பிக்கப்படு வது என்பது தெளிவில்லை என பலஸ் தீன விடுதலை இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் நபீல் ஷாத் சி. என்.என். தொலைக் காட்சிக்கு தெரிவித்ததுள்ளார்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தை செயலாளர் நாயகம் பான் கீ மூன் அங்கீகாரத்திற்காக பாதுகாப்பு சபையிடம் வழங்குவார். இந்த விண்ணப்பத்தை ஆய்வு நடத்தும் பாதுகாப்புச் சபை அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்.

இதில் பலஸ்தீன தனிநாட்டு கோரிக்கை அங்கீகரிக்க பாதுகாப்புச் சபையில் 15 உறுப்பு நாடுகளில் ஆதரவாக 9 நாடுகள் வாக்களிக்க வேண்டும். எனினும் அமெரிக்கா சிறப்பு அதிகாரமானவீட்டோஅதிகாரத்தை பயன்படுத்தினால் அது நிராகரிக்கப்படும்.

இந்த நிலையில் ஐ.நா. தனிநாட்டு கோரிக்கை அங்கீகரிக்க 193 நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் மூன்றில் இரண்டு வாக்குகளை பெறவேண்டி வரும். அதாவது 126 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். எனினும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்த கோரிக்கைக்கு எதிராக செற்படுகின்ற நிலையில் பொதுச் சபையில் முன்றில் இரண்டு பெறுவது குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது.

எனினும் பொதுச் சபையில் பெரும்பான்மையை பெற்றால் பலஸ்தீனம் தொடர்ந்தும் பார்வையாளர் அங்கத்துவத்தை பெறும். ஐ.நா. பார்வையாளராக பலஸ்தீனம் நீடிக்கும் பட்சத்தில் அதற்கு ஐ.நா. வில் உரையாற்ற முடியும். வாக்களிக்க அதிகாரம் இல்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com