Contact us at: sooddram@gmail.com

 

2ஸ்பெக்ட்ரம் விவகாரம்

சிக்கினார் சிதம்பரம்

2ஜி விவகாரம் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, சிதம்பரத்தின் பதவிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக, பிரதமருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி எழுதிய கடிதம், புதிய பூதத்தை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக, மன்மோகன் சிங், நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ. வலியுறுத்தியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கான விலை நிர்ணயம் தொடர்பாக, 2006ல், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி, பிரதமருக்கு எழுதியதாக வெளியாகியுள்ள கடிதம், புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.

கடந்த 2006 ஜனவரியில், இராணுவத்திடம் இருந்து கூடுதல் ஸ்பெக்ட்ரத்தை பெற்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யவும், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யவும், மத்திய அமைச்சரவை குழுவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தார்.

இதனடிப்படையில் அமைச்சரவை குழு, 2006 ஜுனில் தன் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணய அதிகாரம் அமைச்சரவைக் குழுவுக்கு இருப்பதை விரும்பாத, அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி, 2006 பெப்ரவரி 1 இல், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தனது துறைக்கே வேண்டும் என, அப்போது வலியுறுத்தினார். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், அமைச்சரவை குழுவுக்கான அதிகார வரம்பை குறைக்க வலியுறுத்தியும், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணய அதிகாரத்தை தங்கள் அமைச்சகத்திற்கு வழங்குவதை உறுதி செய்யக்கோரியும், 2006 பெப்ரவரி 28ம் திகதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தயாநிதி கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது? உங்களை சந்தித்தபோது, இராணுவ அமைச்சகத்திடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை விடுவித்து, தனியார் நிறுவனங்களுக்கு, வழங்கும் விவகாரத்தில், மத்திய அமைச்சரவைக் குழுவின் செயல்பாடுகள் பற்றி பேசினோம். அப்போது, இந்த விடயத்தில் அமைச்சரவை குழுவின் செயல்பாடு, நாங்கள் விரும்பியபடி இருக்கும் என, நீங்கள் உறுதி அளித்தீர்கள்.

அமைச்சரவை குழுவின் செயல்பாடு, ஸ்பெக்ட்ரத்தை எடுத்துக்கொள்ளும் அளவில் மட்டுமே இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், அதற்கு மாறாக அமைச்சரவை குழுவுக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டு இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் வழக்கமான பணிகள் பாதிக்கும் என, நினைக்கிறேன். எனவே, தயவுகூர்ந்து, இந்த விடயத்தில் அமைச்சரவை குழுவின் செயல்பாடுகள் விடயத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுகிறேன். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை தொடர்ந்து, அமைச்சரவை குழுவின் செயல்பாடுகளில், 2006 டிசம்பர் 7 இல் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இராணுவத்திடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை பெறும் விவகாரத்தை மட்டும், அமைச்சரவை குழு கவனிக்கும் என, அமைச்சரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த விவகாரத்தை தான், தற்போது பா.ஜ.கட்சியினர் கையில் எடுத்துள்னர். ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்திடமே தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், கூட்டணி தர்மம் கருதி இந்த முடிவை பிரதமர் எடுத்ததாக பா.ஜ கட்சியினர் கூறுகின்றனர்.

பிரதமரின் இந்த முடிவு தான், பின்னாளில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடப்பதற்கு காரணமாக அமைந்து விட்டதாகவும், எதிர்க் கட்சியினர் கூறுகின்றனர். எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜ. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், பிரதமருக்கு தயாநிதி எழுதிய கடிதம் தொடர்பாக பிரதமர் மன்மோன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும். இது, வாய்மூடி மெளனமாக இருக்க வேண்டிய விடயம் இல்லை. குற்றச் செயலுக்கு உடந்தையாக இருக்கும் செயல் என கூறியுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com