Contact us at: sooddram@gmail.com

 

உள்நாட்டு விவகாரங்களில் அன்னியத் தலையீடு ஆபத்தானது - ஐ.நா. சபையில் இந்திய பிரதமர்

சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாதுஎன்று ஐக்கிய நாடுகள் சபையின் 66 வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். ‘ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமுல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது.

ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையை மதிக்கும் வகையிலும் காப்பாற்றும் வகையிலும் தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். வளர்ச்சிக்கு உற்ற சூழலை மக்கள் உருவாக்க உதவ வேண்டி கடமை ஒவ்வொரு அரசுக்கும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் அடி நாதமாகவும் அடிப்படை மனித சுதந்திரத்தின் சாரமாகவும் இருக்கிறது.

உலக நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்க நம்மிடையே ஒத்துழைப்பு அவசியம். முரண்பட்டு மோதலில் இறங்கினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. வரவேற்பு: நம்மிடையே புதிய உறுப்பினராக பங்கேற்கும் தெற்கு சூடானுக்கு இந்தியாவின் சார்பில் வரவேற்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சர்வதேச அரங்கில் இப்போது பொருளாதார ரீதியாக நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. உலக மயமாக்கல், ஒன்றை மற்றொன்று சார்ந்திருத்தல் போன்ற தத்துவங்கள் காரணமாக எல்லா நாடுகளுக்கும் தானாகவே பலன் கிடைத்துவிடும் என்ற நிலைமை முன்னர் இருந்தது.

இப்போதோ தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் போன்றவற்றை அமுல்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறைப் பயன்களைச் சமாளித்தே தீரவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. 2008 ல் தோன்றிய நிதி நெருக்கடி நிலை இன்னமும் தீரவில்லை. பல துறைகளில் இந்த நெருக்கடி மேலும் தீவிரம் அடைந்திருக்கிறது.

உலகப் பொருளாதாரத்துக்கே உந்து சக்தியாக விளங்கும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் இப்போது வெவ்வேறு காரணங்களால் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதனாலேயே சர்வதேச அளவில் மூலதன சந்தையிலும் பங்குச் சந்தைகளிலும் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

இதனால் வளரும் நாடுகளுக்கு பாதிப்பு அதிகம். அவை சர்வதேசச் சந்தைகளில் காணப்படும் நிலைமைகளால் உற்பத்தி இழப்பு, வேலை இழப்பு, வருமானம் இழப்பு ஆகியவற்றைத் தாங்கியதாக வேண்டும். அத்துடன் உள்நாட்டில் நிலவும் பணவீக்க விகித அதிகரிப்பால் உயர்ந்துவரும் விலைவாசியையும் சமாளித்தாக வேண்டும். தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை உயர்வாலும் உலக நாடுகள் அனைத்துமே பாதிப்படைந்து வருகின்றன.

வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இப்போது எல்லா நாடுகளிலுமே அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலை உயர்வாலும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள், காய்கறிகளின் விலை உயர்வாலும் எல்லா நாடுகளிலுமே அரசுகள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

மேற்காசியா, வளைகுடா, வடக்கு ஆபிரிக்கா ஆகியவற்றில் உள்ள நாடுகளில் மக்கள் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகிறார்கள். தங்களுடைய வறுமை, வேலையில்லா திண்டாட்டத்துக்குக் காரணம் ஆட்சியாளர்களின் அக்கறை இன்மையே என்று கருதுகிறார்கள்.

இதனிடையே பயங்கரவாதம் வேறு உலகின் பல்வேறு நாடுகளில் தலைதூக்கி வருகிறது. ஏராளமான அப்பாவிகள் இந்த பயங்கரவாதத்துக்கு இரையாகி வருகிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டிய கட்டாயம் சர்வதேச சமூகத்துக்குக் குறிப்பாக இந்த பொதுச் சபைக்கு இருக்கிறது.

வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் பல்வேறு துணைப் பிரச்சினைகளைத் தூண்டிவிடுகின்றன. சமூகங்களுக்கு இடையே சமமற்ற வளர்ச்சி, கல்வி வேலை வாய்ப்பில் ஒரு சில பிரிவினருக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுதல் அடிப்படை மனித உரிமைகளுக்குக் கூட வழியில்லாதிருத்தல் போன்றவற்றால் இளைஞர்கள் புரட்சிப் பாதைக்குச் செல்கின்றனர். இது பல நாடுகளுக்குப் பெருத்த தொல்லையாக உருவெடுத்து வருகிறது.

சர்வதேச அளவில் வாணிபம் அதிகரிக்க வேண்டிய கட்டத்தில், சர்வதேச வணிகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக இந்துமா சமுத்திரத்தில் கடல் கொள்ளைக்காரர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்தச் சவால்களையெல்லாம் நாம் சந்தித்தே தீர வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்கு இன்னமும் தீர்வு காணப்படாமலேயே இருக்கிறது. இதனால் மத்திய ஆசியாவில் வன்முறையும் அரசியல் நிலையற்றப் போக்கும் தொடருகின்றன. பாலஸ்தீனம் தனி நாடாக உருவாகும் நாளை இந்தியா ஆவலோடு எதிர்நோக்குகிறது என்றார் மன்மோகன் சிங்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com