Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையர்கள் தாக்கப்பட்டமைக்கு அஸ்வர் எம்.பி. கண்டனம்

இலங்கையிலி ருந்து தமிழ் நாட் டுக்கு யாத்திரை சென்றிருந்த யாதிரிகர்கள் தாக்கப்பட்ட சம்பவ த்தை வன்மையாகக் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். கிண்ணியாவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து கதிர்காமக் கந்தன் ஆலயத்துக்கு பாதயாத்திரை செல்லும் தமிழ் யாத்திரிகர்களை பெரும்பான்மையின சிங்கள மக்கள் மிகுந்த இன்முகத்துடனும், சந்தோசத்துடனும் மலர்மாலைகளை அணிவித்து அவ்வப்பிரதேசங்களில் வரவேற்கின்றார்கள்.

கொழும்பு தலைநகரில் கம்பன்விழா வெகு விமரிசையாகக் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் எதுவிதமான இடையூறுகளுமின்றி பங்குபற்றுகின்றார்கள். கொழும்பு தமிழ் சங்கத்தில் வாராவாரம் தமிழ் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மணிமேகலை பிரசுரத்தின் புத்தகங்கள் கூட இங்கே வெளியிட்டு வைக்கப்படுகின்றன. எனது நண்பர் ஒருவரின் இருபது புத்தகங்கள் இங்கு வெளியிடப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில் தமிழ் இலக்கண, இலக்கிய செயற்பாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் பாரிய ஊக்குவிப்பை வழங்கி வருகிறது. இதனை யாவரும் அறிவார்கள். கொழும்பில் நடைபெறும் வேல் உற்சவத்தின் போது ஜனாதிபதி அலரிமாளிகையின் வெளியேவந்து ஊர்வலத்தை வரவேற்பார். எந்தவொரு நாட்டிலும் இப்படி நடப்பதில்லை.

கொழும்பு வடக்கிலுள்ள களனி கங்கை முதல் தெஹிவளை பாலம்வரை வாழும் தமிழ் மக்கள் சந்தோசமாகவும், மகிழ்ச்சியோடும் செல்வச்செழிப்புடனும் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை சுதந்திரமாக எதுவித இடையூறுமின்றி மேற்கொள்கின்றனர். வெள்ளவத்தை மயூராபதி அம்மன் கோவிலிலிருந்து பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில்வரை தமிழ் பெண்கள் பால்குட பவனி செல்கின்றனர். இதனை பெரும் பக்தி மரியாதையுடன் பெரும்பான்மை மக்கள் வரவேற்கின்றனர். இவ்வாறு இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரியம், கலாசாரம் பாதுகாக்கப்படுவதுடன் அவை வளர்ச்சியடைவதற்குத் தேவையான ஊக்குவிப்புக்களையும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வழங்கி வருகின்றது.

இதனை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அறிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இனியாவது அறிந்துகொள்ள வேண்டும். இதனை கருணாநிதி தெரிந்துகொள்வது அவசியம். இவ்வாறான நிலையில் இலங்கையி லிருந்து தமிழ் நாட்டுக்கு யாத்திரை சென்றிருந்த யாதிரிகர்களை தாக்கியதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. இது பள்ளிவாசல்களை உடைக்கும் யுகம் அல்ல. பள்ளிவாசல்களை கட்டும் யுகமே மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி. ஜனாதிபதி அவர்கள் நுவரெலியாவில் பள்ளிவாசல் ஒன்றை அண்மையில் திறந்துவைத்தார். காத்தான்குடியில் புதிய பள்ளிவாசல் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். பள்ளிவாசலை உடைத்த வரலாறு புலிகளுடையது.

வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை உடுத்த உடையோடு வெளியேற்றிய புலிகள் அங்கிருந்த 74 பள்ளிவாசல்களை உடைத்து சேதமாக்கினார்கள். இது பற்றிய முழுமையான விபரங்களை அமைச்சர் ரிசாட் பதியுதீன் வைத்துள்ளார். வடக்கில் மாத்திரமல்லாமல் கிழக்கிலுள்ள மூதூர் உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்து முஸ்லிம்களை புலிகளே வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட அந்த முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் யுகத்தில்தான். இந்த உண்மைகளை தமிழ் நாட்டு முஸ்லிம்களும் உலக முஸ்லிம்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com