Contact us at: sooddram@gmail.com

 

"நாங்கள் என்ன தான் பாவம் செய்தோம்?'’ இலங்கை நாட்டினர் கதறல்

எங்கள் நாட்டில் நடந்த சம்பவத்துக்கு, எங்களை ஏன் துன்புறுத்தவேண்டும். நாங்கள் என்ன பாவம் செய்தோம்?,'' என்று இலங்கை நாட்டிலிருந்து வந்த பெண்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இலங்கை, புத்தளம் மாவட்ட,ம சிலாவம் பகுதியைச் சேர்ந்த 184 பேர் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவுக்காக, கடந்த இரண்டாம் தேதி விமானம் மூலம் தமிழகம் வந்தனர். அவர்கள், நேற்று முன்தினம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர். இதையறிந்த பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இலங்கை நாட்டினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பூண்டிமாதா கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நேற்று காலை அவர்கள் வேளாங்கண்ணி கோவிலில் பிரார்த்தனை செய்ய சென்ற போதும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் போராட்டம் நடத்தினர்.

இதனால், வேளாங்கண்ணியிலிருந்து, அதே வேன்களில், அவர்கள் நாடு திரும்ப, திருச்சி விமான நிலையம் புறப்பட்டனர். வரும் வழியில், திருவாரூர் பைபாஸ் ரோட்டில் அவர்களின் வேன் மீது செருப்பு வீசப்பட்டது. பின், திருச்சி மாவட்டம், காட்டூர் அருகே வந்த போது, அவர்களுடைய வேன்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். அதன் பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இலங்கை நாட்டினர், திருச்சி விமான நிலைய போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரப்பட்டனர்.

தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து செலீன் என்ற பெண்மணி கூறும் போது, ""நாங்கள் என்ன பாவம் செய்தோம்?. எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அன்னையை கும்பிட குழந்தைகளுடன் வந்தோம். எதிர்ப்பால், மீண்டும் ஊர் திரும்புகிறோம். ஏன் எங்களை தாக்குகின்றனர். எங்கள் நாட்டில் நடந்ததற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும். கடவுளை கும்பிட கூட அனுமதி மறுப்பது சரியில்லை,'' என்று கூறினார்.

இலங்கை நாட்டைச் சேர்ந்த ஜூட் என்பவர் கூறுகையில், "அப்பாவிகளான எங்கள் மீது, தாக்குதல் நடத்துவது எந்த வகையில் சரி. குழந்தைகளும், பெரியவர்களும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும், பத்து நாட்களுக்கு விசா இருந்தும், எங்களால் இங்கு தங்க முடியவில்லை. மாதாவை கூட தரிசிக்க முடியவில்லை, என்பது வருத்தமளிக்கிறது,'' என்று கூறினார்.

இலங்கையின் உளவுத்துறை அதிகாரி ரோஷன் கூறுகையில், "சாமி கும்பிட வந்தவர்களை, இப்படி விரட்டி அடிப்பது சரியில்லை. இவர்கள், நாடு திரும்ப உரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இன்றே (நேற்றே) அவர்கள் தனி விமானம் மூலம் நாடு திரும்புவர்,'' என்று கூறினார்.

தினமலர் பத்திரிகையில் வந்த செய்திகளுக்கு வாசகர்களின் கருத்துக்களையும் இங்கு பதிவு செய்கின்றோம்

Samy Chinnathambi - rayong, தாய்லாந்து

இலங்கை அதிபர் சாவாகாசமாக ஊர் ஊராக சென்று சாமி கும்பிட்டு சென்றார். அவர் உறவினர்களும் அப்படியே வந்து சாமி கும்பிட்டு சென்றார்கள். எங்கே எதிர்ப்பும் செருப்பு வீச்சும் செய்ய வேண்டுமோ அங்கே சும்மா இருந்து விட்டு பொதுமக்களை விரட்டி அடிப்பது நம் மீது எதிர் மாறான என்னத்தை மட்டுமே ஏற்படுத்தும். நாம் விரட்டி அடிக்க வேண்டியது இலங்கையின் அரசியல் தலைவர்களை, ராணுவ அதிகாரிகளை. ஆனால் நாம் விரட்டி அடித்து கொண்டு இருப்பது பொது மக்களை. இது முற்றிலும் பொறுத்தமான செயல் இல்லை. பாகிஸ்தானிலும் நல்ல மக்கள் இருக்கிறார்கள், இலங்கையிலும் நல்ல மக்கள் இருக்கிறார்கள். இந்த மாதிரி செயல்கள் நம் நோக்கத்தை தவறானதாக மாற்றிவிடும். உலகம் சுருங்கி வரு வேலையில் உலக மக்களிடையே நல் இணக்கமும் நட்பும் பெருகி வர வேண்டியது அவசியம். ஆனால் இதனை அரசியல் வாதிகளும், மத அமைப்புகளும் தங்கள் சுய லாபத்திற்கு வசதியாக பிரச்சினையாக்கி பொது மக்களை பிரித்து வைத்து கொள்கிறார்கள். நாம் தவறான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்துவிட்டு ஐந்து வருடம் கையை கட்டி கொண்டு உக்காந்து கொள்வதில்லையா? இங்கே மட்டும் என்ன நல்ல அரசியல்வாதிகளா இருக்கிறார்கள். நம் நாடே கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் தான் இருக்கிறது.

G.Prabakaran - Chennai, இந்தியா

குழந்தைகள் பெண்கள் கல்வீச்சில் காயம் பட்டு செல்வதை தொலைகாட்சியில் பார்க்கும்போது மனது வலிக்கவே செய்கிறது. எதிர்ப்பில் வன்முறை இல்லாமல் இருக்க வேண்டும். இது போன்ற செயல்கள் தமிழனுக்கு அவமானத்தை தேடித்தரும். அங்கே உள்ள சிங்கள ராணுவம் தான் தமிழர்கள் மீது பயங்கரமான தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அந்நாட்டு ராணுவம் செய்த தவறுகளுக்கு இலங்கையின் மக்களை தண்டிப்பது நியாயம்மல்ல. பின் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.

Nandu - Chennai, இந்தியா

உணர்ச்சி வசப் படாமல் யோசியுங்கள். சாமி கும்பிட வந்தார்கள் மேல் தப்பில்லை. ஆனால் நம் உறவுகளைக் கொன்று குவித்து கும்மாளமிட்டுவிட்டு நம் மண்ணிலேயே கால் வைக்கும் அளவுக்கு மறதி அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் வந்தவர்கள். ஆனாலும் குழைந்தைகளும் உள்ள கூட்டத்துள் கல்லெறிந்து எதிர்ப்பைக்காட்டுவது சரியான செயலல்ல. அப்புறம் நமக்கும் அவர்களுக்கும் என்னதான் வேறுபாடு? மனித இனம் மன்னிக்க முடியாத கொடுமைகளை நிகழ்த்தியவர்களுக்கு நம் மண்ணின் சாமியருள் வேண்டுமாம். எதிர்ப்பை பதியவைக்காமல் வரவேற்று வாரியனைக்க வேண்டுமென்கிறார்களா? நம்மூர் மீனவர்கள் மீன் பிடிக்கச்சென்றால் உயிரோடும் மானத்தோடும் பாதுகாப்போடும் திரும்புவார்கள் என்ற உத்தரவாதம் இல்லாமல் இருக்கும் நிலையை ஏற்படுத்தியவர்கள் யார்? நம் ஆட்களால் அவர்களின் கடலுக்குள் கூட கால் வைக்க முடியவில்லை. பேதம் பார்ப்பதாக என்ன வேண்டாம். நம்மைக் கொன்று குவித்தவர்களாய் இருந்தாலும் அவர்களும் நம் சகோதரர்கள் என்று எண்ணுவது நாம். ஆனால் அவர்களிடத்தும் மனித நேயம் வேண்டுமென்று எதிர் பார்ப்பதில் என்ன தவறு?

ravi - toronto, கனடா

தரிசனம் செய்ய வந்த மக்களை துன்புறுத்துவது முட்டாள்தனமானது. கோழைதனமானது. வெட்கம் கெட்ட மானம் கெட்ட செயல். காந்தி பிறந்த நாட்டில் இது நடந்திருப்பது நமக்கு சகிப்புத்தன்மை குறைந்து வருவதை காட்டுகிறது. இலங்கை அரசு செய்த குற்றத்திற்கு அந்த நாட்டு மக்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் தான் ஆதரித்தார்கள் என்று சொல்லி பழிவாங்குவதற்கும் தீவிரவாதிகளின் செயல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழ் அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டு தமிழனின் மானத்தை வாங்கும் இந்த அமைப்புகளை உடனடியாக ஜெயிலில் தள்ள வேண்டும். கண்மூடிக்கொண்டு பிரபாகரனை ஆதரிக்கும் இந்த அமைப்புகள் பிரபாகரன் செய்த தவறுகளை கண்டுகொண்டதே இல்லை.

Ktsnb Deen - riyadh, சவுதி அரேபியா

ஸ்ரீலங்கா காரங்களுக்காக நீங்க ஏன் அடிச்சுக்கிறீங்க. ஸ்ரீலங்கா காரங்க எல்லாருமே இலங்கை தமிழன் உள்பட, தமிழ்நாட்டுகாரற்களை இங்கே அரபு நாடுகளில் கேவலமாக பேசுகிறான் ,தொல்லை தருகிறான் எனபது தெரியுமா உங்களுக்கு.

குஞ்சுமணி சென்னை - Chennai , இந்தியா

ஹலோ டீன் நீங்க சொன்னது ஒரு வாசகமா இருந்தாலும் திருவாசகம் , எந்த இலங்கை தமிழனாவது அவங்க பிரச்னைக்கு தீக்குளிச்சானா ? தமிழ்நாட்டுல நம்மளோட இருந்த போராடறது விட்டுட்டு ஆஸ்திரேலியாவுக்கு கள்ள தோனில போறாங்களே அத யாரும் ஏன்னு சிந்திச்சு பாக்கமாட்டாங்களா?...

thangairaja - Dammam, சவுதி அரேபியா

ராஜபக்சேவையும் சிங்கள ராணுவத்தினரையும் வெகு சீக்கிரத்திலேயே நல்லவர்களாக்கி விடுவார்கள் தமிழகத்திலுள்ள காடையர்கள். எதை சாதிப்பதற்காக இந்த வெறியாட்டம்., விருந்தோம்பலுக்கு பெயர் போன .....மாற்று மானிலத்தவர்களை மாற்று மொழிக்காரர்களை கூட அரவணைத்து முதல்வர்களாகவும் சினிமா சூப்பர் ஸ்டார்களாகவும் வைத்து அழகு பார்க்கும் இந்த தமிழினம் ஏனிந்த கீழ் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. கோபப்பட வேண்டிய நேரத்தில் வீட்டுக்குள் உறங்கி விட்டு நிராயுதபாணிகளாக வரும் பக்தர்களை அசிங்க படுத்துவது நமது ஆன்மீகத்திற்கே அவமானம். தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஆளும் கட்சி வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை பாலிசியை கை விடுவது பொறுப்பான அரசாக நடந்து கொள்ள உதவும். கால்பந்து வீரர்களை வெளியேற சொன்னது வெறியர்களுக்கு தூண்டு கோளாகி விட்டது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com