Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்க தூதுவர் கொலை

லிபியாவுக்கு அமெரிக்க போர் கப்பல்கள் விரைவு, முஸ்லிம் நாடுகளெங்கும் ஆர்ப்பாட்டம்

லிபியாவில் அமெரிக்க தூதுவர் ஆயுததாரிகளின் தாக்குதலில் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா லிபியாவுக்கு இரு போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நீதி நிலை நாட்டப்படும் என அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோரே லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது அங்கிருந்த அமெரிக்க தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டிபன் மற்றும் மேலும் மூன்று அமெரிக்கர் கொல்லப்பட்டனர்.

எனினும் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என கூறியுள்ள அமெரிக்கா அது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தனது இரு போர் கப்பல்களை லிபியா கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜோர்ஜ் லிட்டில் கூறுகையில், அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டிபன் கொல்லப்பட் டதைத் தொடர்ந்து லிபியாவிற்கு கலவரத் தடுப்பு கடற்படையினர் 50 வீரர்களுடன், இரு கப்பல்கள் அனுப்பிவைக்கப்ப ட்டுள்ளன. இவர்கள் தூதர் கொல்லப்ப டுவதற்கு முன் எப்படி கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு வலையத்தினை மீறி தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளனர் என்றார்.

ஏற்கனவே அரபு நாடுகளைச் சுற்றி 95 அமெரிக்க போர் கப்பல்கள் நிற்கின்றன. இதில் லிபியா நோக்கி அனுப்பப்பட்டுள்ள யு.எஸ்.எஸ். லபூன், யு. எஸ். எஸ். மெக்பால் ஆகிய இரு போர் கப்பல்களும் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டதாகும்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியதாவது, ‘தாக்குதல் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

நீண்ட காலமாக அமெரிக்காவுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் உள்ளன. அதனால்தான் இது போன்ற தாக்குத ல்கள் நடந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்டுவோம்.

அமெரிக்கா ஒருபோதும் அரபு மக்களுக்கோ லிபியாவின் புதிய அரசுக்கோ எதிரானது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’ இவ்வாறு அவர் கூறினார். தூதரகம் தாக்கப்பட்டதையடுத்து உலக நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு லிபிய இடைக்கால ஜனாதிபதி மொஹமட் அல் மகாரிப் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த கோலைகள் லிபியா பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல்களை நடத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் திரைப்படத்திற்கு எதிராக இரண்டாவது நாளாக கடந்த புதன் கிழமையும் எகிப்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதோடு நேற்றைய தினத்திலும் அது தொடர்ந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கலகம் அடக்கும் பொலிஸாருக்கும் இடையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதலில் 30 பேரளவில் காயமடைந்தனர். இதில் 10 கலகம் அடக்கும் பொலிஸாரும் உள்ளடங்குவர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டதோடு 12 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை கெய்ரோவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் ஊடுருவிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கொடியை கழற்றி அதற்கு பதில் இஸ்லாமிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட ங்கள் ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கும் பரவியுள்ளது. துனீஷியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கொடியை எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

எனினும் திரைப்படத்திற்கு எதிராகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். பலஸ்தீனின் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா பகுதியில் ஒரு சிறு குழு இந்த திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் அமெரிக்க கொடியை எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மொரோக்கோ, சூடான், ஈரான், ஈராக் ஆகிய நாடுகளிலும் திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனிடையே யெமன் தலைநகர் சனாவில் அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்க பொலிஸார் வானை நோக்கி சுட்டாலும் அவர்கள் அதனையும் மீறி தூதரக வளாகத்திற்குள் ஊடுருவியதோடு அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ மூட்டினர்.

எனினும் பாதுகாப்புப் படையினர் தூதரக வளாகத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றினாலும் அவர்கள் தொடர்ந்தும் தூதரகத்திற்கு வெளியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்க பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ள தோடு இந்த திரைப்படத்திற்கு ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது மனிதாபிமானம் அற்ற இழிவுபடுத்தும் செயல் என அவர் கூறியுள்ளார். இது தவிர ஆப்கானில் மேற்படி திரைப்படம் இருக்கும் யூடியும் இணையத்தள த்தை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது. எனினும் திரைப்படம் யூடியும் இணையத்தி லிருந்து அகற்றப்படவில்லை என அந்த இணையத்தளத்தின் உரிமை நிறுவனமான கூகிள் இன்க் அறிவித்துள்ளது.

ஆனால் அந்த திரைப்படம் எகிப்து லிபியா போன்ற நாடுகளில் பார்வையிடுவது முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com