Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி, மு.காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பால் தாமதம்

முதலமைச்சர் யார்?

  • மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

  • முன்னாள் முதல்வரை மீண்டும் முதல்வராக்க பலமான முயற்சி

  • நஜீப்மஜீதை முதல்வராக்க சு. க. முக்கியஸ்தர்கள் அதீத ஆர்வம்

  • அமீர் அலியை முதலமைச்சராக்குவதில் ரிஷாத், அதாவுல்லா குறி

  • முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் விடாப்பிடி

கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே ஆட்சியை அமைக்குமென்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிழக்கின் முதலமைச்சராக போகின்றவர் யாரென்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவுமுள்ளது.

கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் அதன் பங்காளிக்கட்சிகளாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திரமுன்னணி ஆகியன தனித்துப் போட்டியிட்டு முறையே 7 ஆசனங்களையும், ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஐ.ம.சு முன்னணிக்கு தனித்துக் களமிறங்கிய மு.காவின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் அக்கட்சியின் ஆதரவு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவாரென்ற வினா அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. ஊடகங்கள் தமக்குக் கிடைத்த தகவல்களை வைத்து ஒரு சிலரை மையப்படுத்தி செய்திகளைப் பிரசுரித்து வருகின்றபோதும் இது குறித்து அரசின் உயர்மட்டம் தெளிவான அறி விப்பை இன்னும் விடுக்கவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கையை அடிநாதமாக வைத்து தேர்தல் காலங்களில் தமது பிரசாரங்களை முடுக்கி விட்டிருந்தது. தற் போதைய பேச்சுவார்த்தையிலும் அரச தலைமையிடமும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படு கின்றது. இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அதாவுல்லா தலைமை யிலான தேசிய காங்கிரஸும், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ¤ம் தமது கட்சிகளுக்கு முதலமைச்சர் பதவியைக் கோரியுள்ளன. இந்தக் கட்சிகளின் தலைவர்கள் கிழக்கு மாகாண விவகாரத்தைக் கையாளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அடங்கிய குழுவிடம் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளதுடன் தமது தெரிவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் அமீரலியை பிரேரித்துள்ளன.

தாம் தொடர்ந்தும் அரசாங்கத்துடனேயே இருக்கும் கட்சிகளெனவும் இன்ப துன்பங்களில் கைகொடுப்பவைகளெனவும் எடுத்தியம்பியுள்ளன.

கடந்த தேர்தலில் தமக்கு முதலமைச்சர் பதவி தொடர்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அது நிறை வேறாமற் போனமையையும் அவ்விரு கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை கிழக்கில் ஐ.ம.சு.முன்னணி ஆட்சியமைப்பதில் பங்காளியாகியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது கட்சியின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவருமான ஹாபிஸ் நkர் அஹமட்டை முதலமைச்சர் பதவிக்கு நியமிக்குமாறு அரசிடம் கோரி யுள்ளது. அதேவேளை முன்னாள் முதல மைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனையே (பிள்ளையான்) மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமென்ற ஒரு சாராரின் கோரிக்கைகள் வலுவாக எழுந்துள்ளதுடன் அது தொடர்பில் அரச உயர் மட்டத்துக்கும் உணர்த்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேவை என்ற விடயத்தில் மு.கா அரசிடம் உறுதியான கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கு அந்தப்பதவி கிடைக்கக் கூடாது என்பதில் அக்கட்சி தீவிரமாகவுள்ளது.

அதேவேளை மு.காவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுவதால் ஏற்படும் இடர்பாடுகளையும் சிக்கல்களையும் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரச மேல்மட்டத்திடம் தெளிவுபடுத்தி யுள்ளன.

நிலைமை இவ்விதமிருக்க முன்னாள் அமைச்சரும் திருமலை மாவட்டத்தில் ஸ்ரீ.ல.சு.க சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவருமான நஜீப் ஏ.மஜீத்தின் பெயரும் முதலமைச்சர் பதவிக்கு பலமாக அடிபடுவதுடன் அவர் நியமிக்கப்படுவதற் கான சாத்தியக் கூறுகள் மேலோங்கியி ருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மு.காவும், அதன் அரசியல் எதிரிகளான தேசிய காங்கிரஸ், அ.இ.முஸ்லிம் காங் கிரஸ் ஆகியன முதலமைச்சர் தொடர்பில் மாறுபட்ட கோரிக்கைகளை முன்வைத் திருப்பதனால் ஒரு குழப்பமான நிலை தோன்றியுள்ளது. எனவே எல்லோருக்கும் பொதுவான ஒருவராக நஜீப் ஏ.மஜீத் இனங்காணப்பட் டுள்ளாரெனவும் அவரை நியமிக்கும் வாய்ப்புகள் பெரிதும் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்ட கால விசுவாசியான நஜீப் ஏ.மஜீத், மர்ஹும் அஷ்ரப்பின் காலத்தில் சந்திரிகா - அஷ்ரப் ஒப்பந்தத்தின் பின்னர் இடம் பெற்ற பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் மு.கா. எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்டவர். மர்ஹும் அஷ்ரப், மு.கா தலைவர் ஹக்கீமுடன் நெருக்கமாகச் செயற்பட்டவர். அதேவேளை பிற்காலத்தில் அமைச்சர்களான, ரிசாட், அதாவுல்லா ஆகியோருடனும் நஜீப் ஏ.மஜீத் நல்லுறவுடன் செயற்பட்டு வந்தவர். அத்துடன் அமைச்சர் பதவி வகித்தவர். இத்தகைய காரணங் களினால் அவரது பெயர் பலமாக அடிபடுகின்றது.

தமிழ்க் கூட்டமைப்பு மிகவும் பணிவாக இறங்கி, பகிரங்கமாக முதலமைச்சர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவோ மென்று அறிவித்தமை முஸ்லிம் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மு.கா தலைமைத் துவத்துக்கு சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமையுங்களென்ற ஒரு சாராரின் கோரிக்கைக்கு வலு சேர்த்துள்ளது. அரச எதிர்ப்பு ஊடகங்களுக்கும் அரச எதிர்ப்பையே தொழிலாக நடத்தும் அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாம் யாருக்கு ஆதரவு வழங்குவதென்பதை பகிரங்கமாக இன்னும் அறிவிக்காத நிலையில் அக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உள்ளக விமர்சனங்களையும் உள் முரண்பாடுகளையும் தவிர்க்கும் வகையில் இன்று மீண்டும் கொழும்பில் கூடுகின்றது. தேர்தல் வெற்றியின் பின்னர் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் அக்கட்சியில் வெற்றிபெற்ற மாகாணசபை உறுப்பினர்கள், மு.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் தலைவர் ஹக்கீமின் இல்லத் திலும், தாருஸ்ஸலாமிலும், கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலிலும் கூடி நிலைமைகளை பலதடவைகள் ஆராய்ந்தனர். அரசாங்கம் மற்றும் தமிழ்க் கூட்டமைப்புடன் ஆட்சியமைப்பதிலுள்ள சாதக, பாதகங்கள் இங்கு விரிவாக ஆராயப்பட்டபோதும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் தலைவர் ஹக்கீமுக்கே தீர்மான மெடுக்கும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டன.

நிலைமை இவ்விதமிருக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங் கிரஸ் தமக்குத்தான் ஆட்சி அமைக்க ஆதரவளிக்குமென உறுதியாக நம்பி யுள்ளபோதும் அந்த நம்பிக்கை இப்போது படிப்படியாகக் கரைந்து வருகின்றது. வடக்கு - கிழக்கு இணைப்பு மற்றும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பிரதான கோஷங்களாக முதன்மைப்படுத்தி வாக்குகளை வசீகரித்த தமிழ்த்தலைமையுடன் முஸ்லிம் தலைமை கூட்டுவைக்கக்கூடிய சூழ்நிலை மிகவும் அரிதாகவேயுள்ளது. தலைவர்கள் என்னதான் கருதினாலும் முஸ்லிம் மக்களின் மனோபாவம் த.தே.கூ., மு.கா கூட்டுக்கு எதிராகவேயுள்ளது.

கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை மேசைகளில் முஸ்லிம் தனித்தரப்பு கோரிக்கையை ஏற்காத தமிழ்த்தலைமைகள் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு இவ்வளவு விட்டுக் கொடுப்புக்களைச் செய்வதும் அதன் காலில் விழாத குறையாக கெஞ்சி மண்டியிடுவதும் ஏன் என்ற வினாவுக்கு இன்றும் சரியான விடை கிடைக்கவில்லை அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்துவதற்கு இதுவே பொருத்த மான மார்க்கம் எனக் கூட்டமைப்பு கருதுவதனாலேயே முஸ்லிம் காங்கிரஸ¤க்கு இவ்வளவு விட்டுக்கொடுப்பு செய்வதற்கான மூலகாரணமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

(சுஐப் எம். காசிம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com