Contact us at: sooddram@gmail.com

 

நந்திக்கடல், வெள்ளமுள்ளி வாய்க்கால் ஊடாக

பிரபாகரன் கடைசியாக இருந்த விஷ்வமடு, புதுக் குடியிருப்பு பிரதேசங்களுக்கு மட்டுமன்றி பிரபாகரனின் வீட்டிற்கும் கூட மின்சாரம்

அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் வடக்கிற்கு தேசிய மின் கட்டமைப்பினூடாக முழுமையான மின்சார வசதி அளிக்கப்படும். இதனூடாக யாழ். குடா அடங்கலாக வடக்கு பிரதேசத்தில் காணப்படும் மின்சார சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு ஏற்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை அதி சக்தி வாய்ந்த மின் பரிவர்த்தனை தொகுதியும் மின் உபநிலையமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதனை எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வட பகுதிக்கு மின்சார வசதி அளிப்பது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவிய லாளர் மாநாடு நேற்று மின்சார அமைச்சில் நடைபெற்றது.

யாழ். குடாவிற்கு மின்சாரம் வழங்குவதற் காக மின்சார சபைக்கு வருடாந்தம் 2800 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டு வருவ தாகவும் புதிய மின்பரிவர்த் தனை தொகுதி பூர்த்தியாவதோடு இந்த நஷ்டம் பெருமளவு குறைவ டையும் என்றும் அமைச்சர் கூறினார். வட மாகாணத்தில் உள்ள சகல பிரதான நகரங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் பிரபாகரனின் வீட்டுக்கு மட்டுமன்றி வட பகுதி மின்கட்டமைப்பை அழித்தவர்களுக்கும் மின்சார இணைப்பு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

1987 ஒக்டோபர் மாதம் புலிகளுக்கெதிரான ராணுவ நடவடிக்கையை இந்திய இராணுவம் ஆரம்பித்தபோது வவுனியா- கிளிநொச்சி மற்றும் வவுனியா- மன்னார் மின் இணைப்பு கட்டமைப்புகளை புலிகள் இயக்கம் அழித்தது. வவுனியா- மன்னார் மின் இணைப்பு தொகுதி நிர்மாணிக்கப்பட்டு 9 நாட்களிலே அதனை புலிகள் அழித்தனர். இதற்காக பெற்ற கடன் இன்றும் செலுத்தப்படுகிறது. இதனை முழுமையாக இன்னும் மீளமைக்க முடியவில்லை. இந்த நிலையிலே மூன்று தனியார் மின் நிலையங்களின் உதவியுடன் யாழ். குடாவுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இங்குள்ள ஒரு இலட்சத்து 22 ஆயிரம் பாவனையாளர்களுக்கு மின்சார சபை நஷ்டத்திலே மின்சாரம் வழங்கி வருகிறது.

யாழ். குடாவுக்கு மின்சாரம் வழங்குவதற்காக மின்சார சபைக்கு வருடாந்தம் 2800 மில்லியன் ரூபா நஷ்டத்தை தாங்குகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்காகவும் வருடாந்தம் 22 ஆயிரம் ரூபா நஷ்டத்தை தாங்குகிறோம். தமிழ் மக்களுக்கு அநீதி இழைப்பதாக கூறுபவர்களுக்கு இந்த உண்மை தெரியாது. முழு வட மாகாணத்திற்கும் முழுமையாக மின்சார வசதி அளிப்பதற்காக 33 கிலோ வோர்ட் அதிவேக மின் கம்பி தொகுதி அமைக்கப்பட்டு வருகிறது. நந்திகடல் வெள்ள முள்ளிவாய்க்காலினூடாகவும் இந்த மின் கம்பிகள் நிர்மாணிக்கப்படுகின் றன. புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு பகுதிகளுக்கும் மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதான நகரங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி வழங்கியுள்ளோம்.

பிரபாகரன் கடைசியாக இருந்த விஷ்வமடு, புதுக் குடியிருப்பு பிரதேசங்களுக்கு மட்டுமன்றி பிரபாகரனின் வீட்டிற்கும் கூட மின்சாரம் வழங்க முடிந்துள்ளது. யுத்த காலத்தில் புலிகள் தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டுமே மின்சாரம் வழங்கினர்.

ஆனால் எமது அரசாங்கம் வட பகுதிக்கான மின் கட்டமைப்பை நாசப்படுத்தியவர்கள் உட்பட சகல வட பகுதி மக்களுக்கும் மின்சார வசதி வழங்கி வருகிறது. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு ஒரு வருடம் வரை இலவசமாகவே மின்சார வசதி வழங்கப்படுகிறது.

வவுனியாவில் இருந்து கிளிநொச்சி யூடாக சுண்ணாகம் வரை அமைக்கப் படும் மின்சார பரிவர்த்தனை கட்டமைப் பின் முதற் கட்டம் நிறைவடைந் துள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் 3200 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் வவுனியா- கிளிநொச்சி இடையிலான மின்சார பரிவர்த்தனை கட்டமைப்பும் உப மின் நிலையமும் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. இதனை எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி திறந்து வைப்பார். இரண்டாம் கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இப்பணிகள் அடுத்த வருட நடுப்பகுதிக்குள் நிறை வடையும்.

கிளிநொச்சி - யாழ்ப்பாணத்திற்கிடையில் மேலதிக துரித மின்பரிவர்த்தனை தொகுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர சுண்ணாகத்திலும் உப மின்நிலையமொன்றை அமைக்க உள்ளோம். வட மாகாணத்திற்கு தேசிய மின் கட்டமைப்பினூடாக முழுமையாக மின்சாரம் வழங்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் மின் உற்பத்தி நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு எதிர்வரும் டிசம்பரில் இந்த பணிகள் நிறைவடையும். இதற்காக 3.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

தனியார் துறையினூடாக ஒரு அலகு 38 ரூபாவுக்கே கொள்வனவு செய்து வடக்கிற்கு வழங்கி வருகிறோம். கிளிநொச்சி மின் உப நிலையம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நாம் அடைந்து வரும் நஷ்டம் 1500 மில்லியன் ரூபாவினால் குறைவடையும்.

வட பகுதிக்கான மின்சார திட்டங்கள் யாவும் அடுத்த வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும். அதன் பின்னர் பிரதான மின் கட்டமைப்பினூடாக வடக்கிற்கு மின்சாரம் வழங்கப்படும். இதனூடாக யாழ். உட்பட வட பகுதியில் இடைக்கிடை ஏற்படும் மின்சார துண்டிப்புகள் பாதிப்புகள் யாவும் தீரும்.

மன்னாரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் அதி சக்தி வாய்ந்த மின் பரிவர்த்தனை நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இங்கும் சிறிய உப மின் நிலையமொன்றை அமைக்கப்படும். தற்பொழுது யாழ். மாவட்டத்திற்கு 95 வீதமும் வவுனியாவுக்கு 70 வீதமும் மன்னாருக்கு 60 வீதமும் வன்னி பிரதேசத்துக்கு 35 வீதமும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருட இறுதிப் பகுதிக்குள் முழு வடக்கிற்கும் முழுமையான மின்சாரம் வழங்க உள்ளோம். இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com