Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களெனக் கூறிக் கொள்வோரின் பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்பதோடு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால், தமிழ்க் கூட்டமைப்பினர் இங்கு வசிக்கும் அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலிக்கடாக்களாக்க முயல்கின்றனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்களின் பிள்ளைகள் எவராவது யுத்தத்தில் இறந்திருக் கிறார்களா? யுத்தத்தில் அங்கவீனம் உற்றிருக் கிறார்களா? அல்லது காயமடைந்திருக்கிறார்களா? துப்பாக்கியொன்றை ஏந்தியிருக்கிறார்களா? ஆகக் குறைந்தது விளையாட்டுத் துப்பாக்கி யொன்றையாவது அவர்களது கையில் கொடுத்திருப்பார்களா? தலைவர்களின் பிள்ளைகள் எல்லோரும் படிப்பது இங்கிலாந்தில் அல்லது கனடாவில், இந்தியாவில், பிரான்ஸில். இந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலிக் கடாக்களாக்கி அவர்களது பிள்ளைகளுக்கு சொகுசு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கிறார்கள். இதனாலேயே இன்று எமது அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலியாக்க முயல்கிறார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முல்லைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்று நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் வடமாகாணசபைத் தேர்தலுக்குப் பொறுப்பான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர்களான ரெஜினோல்ட் குரே, டியூ குணசேகர, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், பிரபா கணேசன், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில், புலிகளின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் லெப்டினன்ட் கேணலாகவிருந்த இளந்தென்றல் என அழைக்கப்பட்ட தெய்வேந்திரன் ரகுணந்தன் தலைமையிலான முன்னாள் புலி உறுப்பினர்கள் 7 பேர் ஜனாதிபதி அவர்களிடம் வெற்றிலையைக் கொடுத்து ஆளும் கட்சியில் இணைந்துகொண்டனர்.

இப்பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், உங்கள் பகுதிப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீர்த்துவைக்கப்படுகின்றன. வீதி அபிவிருத்தி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஒவ்வொன்றாக செய்துவருகிறோம். கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. இன்னமும் உங்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. அவை என்னவென்பது எமக்குத் தெரியும். வீடு மற்றும் காணிப்பிரச்சினைகளே அவை. இது உங்களுக்கு மட்டும் உள்ளவொரு பிரச்சினையல்ல. நான் ஹம்பாந்தோட்டைக்குச் சென்றாலும் அங்குள்ள மக்கள் முன்வைக்கும் பிரச்சினையும் இதுதான். தனக்கென ஒரு வீடு, தனக்கென ஒரு காணி வேண்டும் என்பது இந்த நாட்டிலுள்ள சகலரினதும் அடிப்படை பிரச்சினைதான்.

இதனைத் தீர்ப்பதற்கு நாம் ஒரு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தனக்கென ஒரு காணியில் தனக்கென ஒரு வீட்டை நிர்மாணித்துக்கொள்ளும் நிலையை ஒவ்வொருவருக்கும் பெற்றுக்கொடுக்கும் விதத்தில் அதற்கான சாத்தியவளக் கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து கொண்டு இருக்கின்றோம். நான் இங்கே நடந்துமுடிந்த யுத்தம் பற்றிப் பேசுவதற்கு வரவில்லை. பேசப்போவதுமில்லை. நீங்கள் அந்த யுத்தத்துக்கு முகங்கொடுத்தவர்கள். அதற்குள் வாழ்ந்தவர்கள் அதன் கொடூரம் என்ன என்பது உங்களுக்கு தெரியும்.

யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் தான் ஆகின்றன. உங்களது பிள்ளைகள் இளைஞர்கள், யுவதிகள் கல்வியை மேற்கொள்ளவேண்டியது மிக மிக அத்தியாவசியமானது. மிக விரைவாக அவர்களுக்கு கல்வியைப் பெற்றுக்கொடு ங்கள். பிள்ளைகள் கற்கும்போது அவர்களுக்கு வேலைவாய்ப் புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, தொழிற்பயிற்சிக ளைப் பெற்றுக்கொள்வதற்கு அதற்கான வழிவகைகளும் செய்யப்படும். வீதி அபிவிருத்தி செய்வதன் ஊடாக இந்தப் பகுதிகளுக்கு முதலீட்டாளர்கள் புதிய தொழில்முயற்சியாளர்கள் வந்து, புதிய தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கவும், அதன் ஊடாக உங்கள் பகுதி பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு, தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு சமூக மயமாக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நாட்டில் ஒரே சமூகமாக ஒரே மக்களாக வாழவேண்டும் என்ற ஒரு கடமையும், பொறுப்பும் எம் எல்லோருக்கும் இருக்கிறது.

வடக்கில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினோம். பொதுத் தேர்தலை நடத்தினோம். உள்ளூராட்சி தேர்தலை நடத்தினோம். இப்போது மாகாணசபைத் தேர்தலையும் நடத்துகிறோம். இவை அனைத்தும் மக்களின் நலனுக்காக அரசுடன் இணைந்துதான் செயற்பட வேண்டும். மாகாணசபை ஒன்று தனியான நாடொன்றைக் கோர முற்பட்டால் தனியான போராட்டத்தை ஆரம்பித்தால் தாம் தனியான குழுவாகச் செயற்படுவோம் என்று கூறினால் அரசுக்கும் மாகாணசபைக்கும் இடையே மோதல்தான் ஏற்படும் அபிவிருத்திகள் தடைப்படும். மக்களின் தேவைகள் பின்னோக்கிச் செல்லும். ஆகவே, தற்போதுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மாகாணத்துக்குக் கிடைக்கின்ற நன்மைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு தடையாக அமையும். இணங்கிச் செல்லக்கூடிய, இணைந்து செயற்படக்கூடிய மாகாணசபை ஒன்றுதான் தேவைப்படுகிறது.

ஜனநாயக ரீதியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்று கிடைத்த அனைத்தையும் பின்னோக்கிச் செல்வதற்கு, தமக்குக் கிடைக்கும் தற்காலிக நன்மைகளைக் கருதி மக்களின் உணர்வுகளையும் இனவாதத்தையும் தூண்டிவிட முயற்சிப்பது மிகவும் தவறானது என்பதுதான் என்னுடைய கருத்து. நாங்கள் இருக்கும்வரை எமது அரசு இருக்கும்வரை இந்த நாட்டைத் துண்டாட முடியாது. அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்களின் பிள்ளைகள் எவராவது யுத்தத்தில் இறந்திருக்கிறார்களா? யுத்தத்தில் அங்கவீனம் உற்றிருக்கிறார்களா? அல்லது காயமடைந்திருக்கிறார்களா? துப்பாக்கியொன்றை ஏந்தியிருக்கிறார்களா? ஆகக் குறைந்தது விளையாட்டுத் துப்பாக்கியொன்றையாவது அவர்களது கையில் கொடுத்திருப்பார்களா?

அதனால் பொய்யான பிரசாரங்களுக்கு ஏமாறவேண்டாம். இனவாதிகளுக்கு ஏமாறாமல் நீங்கள் எங்களுடன் கைகோர்த்துக்கொண்டு ஒரே சகோதரர் போன்று இணைந்து சகல இன மக்களும் ஒன்றிணைந்து உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் உங்களுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டும் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com