Contact us at: sooddram@gmail.com

 

சுடலைக் குருவிகள் போன்றவர்கள் கூட்டமைப்பினர் - தவராசா

யுத்தத்தை நிறுத்தவும் முயற்சிக்காமல், அழிவுகளைத் தடுக்கவும் முன்வராமல் சுடலைக் குருவிகள் போல் உளறிக் கொண்டு திரிந்தவர்கள் தான் இந்த  தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அவ்வாறானவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தப்போவதாக அறிக்கை விடுக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.

பாசையூரில் நேற்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இருபது வருடங்களுக்கும் மேலாக, மாகாண சபை அதிகாரங்கள் தமிழ் மக்கள் அனுபவிக்கும் வகையில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் என்றும் அவர் கூறினார். கூட்டமைப்பு எமது கோரிக்கையை நிராகரித்ததோடு 13 ஆவது திருத்தம் அர்த்தமற்றது. அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளை நிவர்த்திக்க கூடியதாக இல்லை என்றும் மாகாண சபை முறைமையை தொட்டும் பார்க்கப் போவதில்லை என்றும் கூறியவர்கள் இன்று மாகாண சபையின் பதவிகளுக்காக களத்தில் குதித்துள்ளனர்.

ஆயுத அச்சுறுத்தலுக்குப் பயந்து தமது தலைவர்களை மறந்து, மௌனித்த நடைபிணங்களைப் போல் இருந்தவர்கள் அரசியலையும், ஜனநாயகத்தையும் பேசவே அஞ்சி வாழ்ந்தவர்கள் என்பதையும் மறுந்துவிட்டார்கள் என்றும் அவர் கூறினார். நாம் துணிச்சலோடு 1994 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தீவகங்களிலிருந்து முகம் கொடுத்து ஏற்படுத்திய ஜனநாயக தளத்திலேயே இன்று இவர்கள் எமக்கு எதிராக அவதூறுகளையும், வீராவேசப் பேச்சுக்களையும் பேசுகின்றனர். இந்த ஜனநாயகத்தை அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் என்றும் அவர் சுட்டிக் காட்டினர்.

எமது அபிவிருத்திப் பணிகளை, சலுகைகள் என்றும், அடிமைத்தனம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறுகின்றனர். 1998 ஆண்டு நாம் யாழ்ப்பாணத்தின் உள்ளூராட்சி சபைகளைப் பொறுப்பெடுத்து ஆரம்பித்த அபிவிருத்திப் பணிகள்தான் இன்னும் தொடர்கின்றது என்பதனை இம்மாவட்ட மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

 நாம் செப்பணிட்ட வீதிகளிலேயே இன்று இவர்கள் பயணிக்கின்றார்கள். வீடு, உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய தேவைகளைப் எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த போதிலும், சலுகை என்றும் அடிமைத்தனம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விமர்ச்சிக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.

யுத்தத்தின் இறுதியில் பலியாகிப் போன எமது உறவுகளுக்காக விழி சிவக்க அழுததும், இரத்தமும் சதையுமாக கட்டிய துணிகளோடு சொல்லொண்ணா துயரங்கள் சுமந்து ஓடி வந்த எமது உறவுகளின் கண்ணீர் துடைக்க எமது கரங்களே நீண்டன. கட்சியின் உதவியும், கொழும்புத் தெருக்களில் கடைகடையாக அலைந்து பெறப்பட்ட உதவிகளையும் சுமந்து வந்து பசி தீர்க்க எம்மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தவர்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடி வந்த உறவுகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், கட்டம் கட்டமாக அந்த மக்கள் தமது சொந்த இடம் திரும்பவும் அரசுடன் வாதாடியும், போராடியும் வந்தவர்கள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் என்பதனை மறந்து விடக் கூடாதென்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இப்போது மீண்டும் ஆயுதம் ஏந்தப்போவதாக அறிக்கை விடுக்கின்றார்கள். தமிழ் மக்களே, நமக்கு இனியும் ஒரு இருண்ட யுகம் வேண்டாம். மாகாண சபை எனும் வாய்ப்பை பயன்படுத்தி அழிந்த நமது தேசத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமே தவிர, மாகாண சபை அதிகாரத்தை செயலிழக்கச் செய்து மீண்டுமொரு துயர யுகத்துக்குள் நாம் சென்று விடக்கூடாது.

இத்தனை காலமாக எதிர்ப்பு அரசியலுக்காக நீங்கள் வழங்கிய ஆதரவு அத்தனையும், அர்த்தமற்றதாகி விட்டது. அந்த அனுபவங்களிலிருந்து கொண்டு மக்களே இந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் எதிர் காலத்தையும் கௌரவமான தீர்வையும் பெற்று வாழ்வதற்காக நீங்கள் ஆதரவு தர வேண்டுமென்றும் வடக்கின் வசந்தத்தை வாழ்வின் வசந்தமாக்க நீங்கள் எல்லோரும் வெற்றிலைச் சின்னத்துக்கு உங்கள் வாக்குகளை வழங்கி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எங்களை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் உங்களை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com