Contact us at: sooddram@gmail.com

 

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பக்கச் சார்பான தன்மையை மாற்றுவது அவசியம்'

.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை

பொதுச்சபையின் 69ஆவது அமர்வில் ஜனாதிபதி உரை

இலங்கை மீது சில தீய சக்திகள் அளவுக்கு அதிகமாக இலக்கு

கியூபா மீதான பொருளாதாரத் தடை நியாயமற்றது

பலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட வேண்டும்

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் அரசியல் நோக்கங்களைக் கொண்டதுடன் அளவுக்கு அதிகமானது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 69வது கூட்டத் தொடரில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய போதே, இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உள்ள சிலரின் தீய நோக்கத்தினால் யுத்தத்திற்கு பிந்திய இலங்கை துரதிஷ்டவசமாக பலியாகியுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் நாடு எட்டியுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மனித உரிமை பேரவை கணக்கிலெடுக்கவில்லை.

இலங்கை சில தீய சக்திகளால் அளவுக்கு அதிகமாக இலக்கு வைக்கப்படுவதாகவும் இலங்கையை விட உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய பாரிய பிரச்சினைகள் விடயங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் இறைமையை கணக்கிலெடுக்காது உலக நாடுகள் அந்நாட்டு விடயங்களில் தலையிடுவது சிறந்ததல்ல. ஐ.நா. மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகள் நியாயமற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சில மாற்றங்களைச் செய்து பக்கச்சார்பற்ற தன்மையை உறுதி செய்வது அவசியம். நிதி உதவிகளை வழங்கும் தரப்பினரின் பணயக் கைதியாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்கள் செயற்படுவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சர்வதேச ரீதியான சவால்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியது அவசியம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு எதிரான தன்னிச்சையான பொருளாதார தீர்மானங்களை இலங்கை எதிர்க்கின்றது.

நாடுகள் தொடர்பிலான விவகாரங்களின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள் கடுமையான கொள்கைகளை பின்பற்றுவதனை தவிர்க்க வேண்டும்.

கியூபா மீது எதேச்சாதிகார போக்கில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. கியூபா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டமை நியாயமற்றது.

பயங்கரவாதம் உலகின் அனைத்து நாடுகளு க்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை இலங்கை நன்கு உணர்ந்து கொண்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைளை இலங்கை முழுமையாக எதிர்க்கும்.

இலங்கையின் சகல மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிரிகளுடனும் நட்பு பாராட்டும் வெளியுறவுக்

கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு சர்வதேச சமூகம் காத்திரமான வகையில் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வுரையில் அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 69வது அமர்வின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டமைக்காக மேன்மைக்குரிய சாம் குடேசா (Sam Kutesa)  அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

“நிலை மாற்றக்கூடிய 2015 இற்குப் பின்னரான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை வழங்குதலும், அமுல்படுத்தலும்” என்ற இந்த அமர்விற்கான கருப்பொருள் சாலப்பொருத்தமானது, ஐ.நா. உருவாக்கப்பட்டதிலிருந்து உலகம் ஏராளமான மாற்றங்களுக்கு உட்பட்டு ள்ளது. அத்தோடு 2000 ஆம் ஆண்டிலிருந்து புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் அதிகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பல சவால்கள் இன்னமும் உள்ளன. இந்த நோக்கத்திற்காக நியாயமான உலகையும், நிலைத்திருக்கக்கூடிய கோளத்தையும் உருவாக்குவதற்கான ஒழுக்கநெறி மற்றும் நடைமுறையின் முககியத்துவம் புறக்கணிக்கப்பட முடியாதது.

இலங்கை தற்போது தலைமை வகிக்கும் பொதுநலவாய அமைப்பு ஐ.நா. உறுப்புரிமையில் கால்வாசிக்கும் மேற்பட்ட பங்கை வகிக்கிறது. 2015 இற்குப் பின்னரான புதிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்தும் நடைமுறைக்குப் பங்களிப்பதற்கு பொதுநலவாய அரச தலைவர்கள் நவம்பர் 2013 இல் கொழும்பில் இணங்கினர். அதியுச்ச வறுமையின் ஒழிப்பு, நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திக்கான மீள உறுதிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளுக்கான திட்டக்குழு முன்வைத்துள்ள நிலைமாற்றக்கூடிய இலக்குகளில் நாடுகளுக்கு இடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் என்பதும் ஒன்றாகும். தீர்மானம் எடுப்பதில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் குரலையும், பிரதிநிதித்துவத்தையும் மேம்படுத்துவதற்கு இந்த இலக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம்.

2015 இற்குப் பின்னரான நிகழ்ச்சி நிரலானது இந்த இலக்கில் கவனத்தைச் செலுத்த வேண்டும். அனைத்து நாடுகளினதும் அரசியல் விருப்பு, அர்ப்பணிப்பின்றி நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளை (SDGs)  அடைவது சாத்தியமற்றதாகும்.

புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளின் அடைவினைத் தடுத்த நியாயமற்ற வர்த்தக மற்றும் முதலீட்டு விதிகள் போன்ற கட்டமைப்புத் தடங்கல்களும், அரசியல் இடையீடுகளும் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியமாகும். ஆதரவுமிக்க சர்வதேச பொருளாதார சூழலொன்றின் உருவாக்கம், பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகளிலிருந்து உட்பட்டதான மேம்படுத்தப்பட்ட முதலீட்டுப் பாய்ச்சல்கள், ஒரு திறந்த பல்தரப்பு வணிக அமைப்பு ஆகியன முக்கியமாகும்.

சமாதானத்திற்காக ஐ.நா. அர்ப்பணிப்பு

இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னராக ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்ட வரலாற்றுத் தறுவாயை நாங்கள் அனைவரும் அறிவோம். அது காணப்பட்ட ஏழு தசாப்தங்களில் இன்னொரு பூகோளப் போரிற்குச் செல்வதிலிருந்து உலகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவதற்கு நோய்களை இல்லாதொழிப்பதற்கு, சிறுவர்களுக்குக் கல்வியூட்டல், சமாதானத்தை நிலைநாட்டல் ஆகியவற்றில் ஐ.நா. உதவியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்தாபக நோக்கினை மீள உறுதிப்படுத்துவதற்கு உலக சமூகம் வருடத்திற்கு வருடம் செப்டெம்பரில் ஒன்று சேர்ந்து வருகிறது.

சர்வதேச சமாதானம், பாதுகாப்பு, செழிப்பு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு ஐ.நா.வின் பங்கு இந்த தற்கால உலகிற்கு அத்தியாவசியமானது.

சம்பந்தப்பட்ட நாடுகளிலுள்ள பிரச்சினைகளின் சிக்கல் தன்மையைப் பற்றிய புரிதல் அல்லது ஏற்றுக்கொள்ளல் இன்றி உள்நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரல்களை அமுல்படுத்துவதற்கான கருவியாக மனித உரிமைகள் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் அனைவராலும் மனித உரிமைகள் ஒரு நன்னெறி நன்னடத்தைக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டுமே தவிர அரசியல் கருவியாக அல்ல. நாடுகளின் சமூக, கலாசாரப் பாரம்பரியங்களின் அமைப்புக்களைப் போதியளவில் கருத்திற் கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் வெளிப்புறத் தலையீடானது தவிர்க்க முடியாத முடிவாக நிலைகுலைதலிலேயே நிறைவடையும். உலகின் பல்வேறு பகுதிகள் இன்று இதற்கு மிகுந்த ஆதாரமாக உள்ளன.

மீள் புனரமைப்பு, புனர்வாழ்வு, நல்லிணக்கம் ஆகியவற்றில் இலங்கையானது 5 வருடங்களுக்குள் அடைந்துள்ள குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் தொடர்பாக மிகக் குறைவான கவனத்தை சிலர் செலுத்துகின்றனர். இவர்களால் புனையப்பட்ட நிகழ்ச்சி நிரல்களினால் துரதிஷ்டவசமாக பாதிப்படைந்த போருக்குப் பின்னரான இலங்கையும்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாறியுள்ளது. கணிசமான இந்த அடைவுகளைப் புறக்கணித்துக் கொண்டு எனது நாடு இன்று இலக்காகியுள்ளதில் ஐ.நா.வின் சமநிலையும், விகிதாசாரமும் குன்றிய தன்மை வெளிப்படையானது. மனிதாபிமான அவசர நிலைமை கொண்ட ஆழ்ந்த குழப்பமிகுந்த நிலைமைகள் காணப்படும் ஏனைய பகுதிகளுக்கான ஐ.நா.வின் அணுகுமுறைகளிலிருந்து இது முற்றிலும் முரணானதாகும்.

ஐ.நா. அமைப்புகள், பொறிமுறைகளின் அரசியல் நீக்கத்தோடு, வெவ்வேறு வகையான நிதி வழங்கலின் பணயக்கைதியாக இருப்பதை நிறுத்துவதையும் கொண்டிருக்க வேண்டும். கலந்துரையாடல் நிலைமைகளின் சிறப்பான புரிதல், தேசிய நிறுவகங்களைப் பலப்படுத்துவதற்கு உதவுதல் உட்பட ஒத்துழைப்பு மூலமாக அரசாங்கங்களுடன் பணிபுரிவதற்கு ஐ.நா. அமைப்புக்கள் வழிகளைக் கண்டறிய வேண்டும். பலவந்தப்படுத்தும் உத்திகளுக்குப் பதிலாக இந்த அணுகுமுறையானது பூகோள சவால்களுக்கான நிலைத்திருக்கக்கூடிய தீர்வுகளுக்கான தேடலாக, பல்தரப்பு இராஜதந்திரத்தின் பிரதான புள்ளியை உருவாக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டில் ஐ.நா.வின் 70வது வருடமானது, பூகோளத் தலைவர்கள் பாதுகாப்புச் சபையின் ஆரம்ப சீர்த்திருத்தத்திற்கு ஏற்றுக்கொண்ட 2005ம் ஆண்டு உலக உச்சிமாநாட்டின் 10வது வருடப் பூர்த்தியையும் குறிக்கிறது. இது சம்பந்தமான உறுதியான முடிவுகள் அடுத்த ஆண்டில் அடையப்படல் வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் சவால்கள்

காலநிலை மாற்றமானது எங்களது காலத்தில் காணப்படும் முக்கியமான சவால்களில் ஒன்றாகும். திடமான பூகோள பதில் நடவடிக்கையானது 2015ம் ஆண்டிற்கு முன்னர் கிடைக்கப்பெற வேண்டுமென்பதோடு, அது நெறிமுறையினதும், பொதுத்தன்மைக் கொள்கையின் அடிப்படையிலும் ஆனால் வெவ்வேறாக்கப்பட்ட பொறுப்புக்களின் அடிப்படையில் காணப்பட வேண்டும்.

பலஸ்தீனத்துக்கான இலங்கையின் ஆதரவு

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள வன்முறை மிகவும் வேதனை தருகிறது. இறையாண்மை மிக்க சுதந்திரமான ஈடேறக்கூடிய, ஒற்றுமையான பலஸ்தீன தேசத்தின் விரைவான சாத்தியப்பாட்டிற்கான இலங்கையின் ஆதரவை நான் மீள வலியுறுத்துவததோடு, இது பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளோடு, இஸ்ரேலின் அருகில் சமாதானமாக அமைய வேண்டும். ஐ.,நா. பலஸ்தீனத்தை முழு உறுப்பினராக விரைவில் வரவேற்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.

ஆசிய, ஆபிரிக்க கூட்டு ஒருமைப்பாடு

ஆசியாவிற்கும், ஆபிரிக்காவிற்குமிடையே கூட்டு ஒருமைப்பாடு தேவைப்படுகிறது என்பதில் இலங்கை உறுதியாக நம்புகிறது. சமூக பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கான ஆபிரிக்க மக்களின் முயற்சிகளைக் கண்டு மெச்சுகின்ற நிலையில் திறன் வளர்ப்பிலும், முக்கியமான துறைகளான அறிவு, வல்லமை பரிமாற்றங்கள் ஆபிரிக்காவிலுள்ள நாடுகளைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை இலங்கை ஆரம்பித்துள்ளது.

தீவிர கோட்பியல்களிலிருந்து உருவாகி தேசிய எல்லைப்புறங்கள் வழியே மக்களைப் பாதிக்கும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான பல்தரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

பயங்கரவாதம் பற்றிய புரிதல்

பூகோளம் முழுவதிலுமுள்ள தேசங்களின் பாதுகாப்புக்கும், உறுதித்தன்மைக்குமான கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் தொடர்ந்தும் காணப்படுகிறது. பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி துன்புற்ற நிலையில் ஜனநாயகப் பாரம்பரியம், உயர் சிந்தனைகள் வழியாக உருவாக்கப்பட்ட சமுதாயங்கள், சமூகங்கள், நிறுவகங்கள் ஆகியவற்றில் பயங்கரவாதம் செலுத்தும் சடுதியான பாதிப்புக்களைப் பற்றி இலங்கை நன்றாக அறியும். சர்வதேச பயங்கரவாதம் மீதான ஐ.நா.வின் விரிவான மாநாட்டின் விரைவான இறுதியாக்கம், ஏற்றுக்கொள்ளல் உட்பட பயங்கரவாதம் மீதான பல்தரப்பு நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் பலப்படுத்த வேண்டும். பயங்கரவாத நிதியளிப்பு, கடற்கொள்ளை, ஒழுங்குபடுத்தப்பட்ட சர்வதேச குற்றங்களின் அனைத்து வகைகளையும் எதிர்கொள்வத ற்குமான பல்தரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது.

ஒருதலைப்பட்டசமான பொருளாதார நடவடிக்கை

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கெதிரான ஒரு தலைப்பட்சமான பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்துவதோடு, கியூபாவிற்கெதிரான நீதியற்ற பொருளாதார, வர்த்தக நிதித் தடையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஐ.நா. பொதுச்சபைக்கான கோரிக்கையின் தொடர்ச்சியான ஆதரவாளராக இருந்து வந்துள்ளது. இந்த வகையான ஒரு தலைப்பட்சமான தடைகள் நாட்டின் அப்பாவிப் பொதுமக்களைப் பாதிக்கும் என்பதோடு, அவை நெறிமுறையற்றவை.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையானது அநேகமான புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துள்ளது. 2013 மனித அபிவிருத்திச் சுட்டியில் ஏனைய தெற்காசிய நாடுகளை முந்திக்கொண்டு தரவரிசைப்படுத்தப்படுவதில் இலங்கை வெற்றியடைந்துள்ளது.

மஹிந்த சிந்தனை நோக்கு

தேசிய அபிவிருத்தி உபாயமான மஹிந்த சிந்தனை “எதிர்காலத்திற்கான தூரநோக்கு” பின்பற்றப்படுவதன் மூலமாக இலங்கை அரசாங்கமானது அனைத்தும் உள்ளடங்கிய மற்றும் கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பேரினப் பொருளாதார முகாமைத்துவம், விவசாயத்தின் புத்துயிரளிப்பு, வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையம், வடிகாலமைப்பு மற்றும் நீர் விநியோகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி பலமான தொலைத்தொடர்பு வலையமைப்பு, சிறப்பாக விநியோகிக்கப்பட்ட கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி ஆகியன 2013 இல் 7.8% தனிநபர் மொத்த வருமான வளர்ச்சியிலும், தனிநபர் வருமானமாக 3,280 ஐ.அமெரிக்க டொலர்கள் ஆகியவற்றை விளைவாகத் தந்துள்ளன. வடக்கில் உட்கட்டமைப்பிலும், வாழ்க்கைத் தொழில்களிலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய முதலீட்டால் ஆதரவளிக்கப்பட்ட வடக்கின் பொருளாதார மற்றும் அரசியல் மேம்பாடும் இந்த வளர்ச்சியில் பங்களித்துள்ளது என்பது ஆழ்ந்த திருப்தியைத் தருகிறது.

வடகிழக்கில் புனரமைப்புப் பணிகள்

மே 2009 இல் பயங்கரவாதத்தின் முடிவினைத் தொடர்ந்து மக்களுக்கான எனது பொறுப்புக்களை நிறைவேற்றும் பொருட்டு, ஒப்பீட்டளவில் குறைவான காலமாக 4 வருடங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய அளவிலான

முரண்பாட்டிற்குப் பின்னரான புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற முன்னெடுப்புக்கள் அமுல்படுத்தப்பட்டன. அதி முக்கியமானதாக வடக்கில் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீள உருவாக்கப்பட்டுள்ளன. 28 வருடங்களின் பின்னர் வட மாகாண சபைக்கான தேர்தல் செப்டெம்பர் 2013 இல் நடத்தப்பட்டது.

ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்ற அர்ப்பணிப்பு

இந்தத் தறுவாயில் முரண்பாட்டின் முடிவைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் புதிய சமாதான யுகமொன்று உதித்திருந்த போது ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தை நினைவூட்டுகிறேன். எனது நாட்டுக்கும், ஐ.நா. இற்குமிடையிலான நெருக்கமான கூட்டுறவினையும், எதிர்காலத்தில் இணைந்து பணிபுரிவதற்கான எங்கள் அர்ப்பணிப்பினையும் வெளிப்படுத்துவதற்காக இது அமைந்தது. எங்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, எங்களது உள்ளூர் செயன்முறை யான நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றிற்கு சர்வதேச சமூகம் இலங்கைக்கு பரஸ்பர உணர்வையும், ஆதரவையும் வழங்குமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

குழப்பங்களிலிருந்து ஒழுங்கையும் சச்சரவுகளிலிருந்து ஒத்திசைவையும் நிறுவுவதற்கே அனைத்து மனித முயற்சிக ளும் காணப்பட வேண்டும் எனத் தெரிவித்த கெளதம புத்தரின்

வார்த்தைகளி லிருந்து நாங்கள் புத்துணர்ச்சியைப் பெற்றுகொண்டுள்ளோம். இந்த வார்த்தை களுக்கமைவாக தீய எண்ணங்களையுடைய விமர்சனங்களில் பாதிப்படையாதவாறு நல்லிணக்கம், தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முனனெடுக்கும் அதன் நோக்கத்தில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது.

உங்களனைவருக்கும் மும்மணிகளின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

நன்றி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com