Contact us at: sooddram@gmail.com

 

ஆயிரக்கணக்கான குடியேறிகள் கிரீஸுக்கு படையெடுப்பு: ஹங்கேரியிலும் பலர் நிர்க்கதி

கிரீஸ் துறைமுகங்களுக்கு பாரிய எண்ணிக் கையிலான குடியேறிகள் வருவதை கட்டுப்ப டுத்த அந்நாட்டு அரசு தயாராகி வரும் நிலை யில் மேலும் ஆயிரக்கணக்கான குடியேறிகள் அங்கு சென்றடைந்துள்ளனர். லெஸ்போஸ் தீவில் இருந்து 4,200க்கும் அதிகமானவர்களை ஏற்றிய இரு கப்பல்கள் நேற்று முன்தினம் இரவு பிரவுஸ் துறைமுக த்தை அடைந்துள்ளன. முன்னெப்போது இல் லாதவகையில் தீவிரமடைந்திருக்கும் குடியேறி களின் படையெடுப்பை கையாள்வதில் முழு ஐரோப்பிய ஒன்றியமும் திணறி வருகிறது. ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிப்பதை ஹங்கேரி பொலிஸார் தடுத்த தால் அந்நாட்டு ரயில் நிலையத்திற்கு வெளி யில் நூற்றுக்கணக்கான குடியேறிகள் நிர்க்கதி யான நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும் பாலானவர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத் தைச் சேர்ந்தவர்களாவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக் கட்டுப் பாட்டு நிறுவனமான போர்தொக்ஸின் அறிவிப் பின்படி, கடந்த வாரத்தில் மாத்திரம் கிரீஸ் நாட்டுக்கு 23,000 குடியேறிகள் வந்தடைந்துள் ளனர். இது முந்தைய வாரத்தை விடவும் 50 வீத அதிகரிப்பாகும்.

அத்துடன் இந்த ஆண்டில் மாத்திரம் 160,000 பேர் கிரீஸை வந்தடைந்துள்ளனர். இதன் மூலம் கடந்த ஆண்டின் வருகை எண்ணிக் கையை அது ஏற்க னவே தாண்டியுள்ளது.

எனினும் இவ்வாறான ஆபத்தான பயணத்தில் கடந்த ஒருசில தினங்க ளில் பலரும் பலியாகி யுள்ளனர். துருக்கியில் இருந்து கிரீஸின் கோஸ் தீவை நோக்கி புறப் பட்ட இரண்டு படகுகள் மூழ்கியதில் சிரிய நாட் டவர்கள் என்று நம்பப்ப டும் குறைந்தது 11 பேர் பலியானதாக நேற்று செய்தி வெளியானது.

அதிகமானோர் வந்த வண்ணம் இருப்பதால் இந்த விபத்துகள் குறி த்து கவனிக்க போதிய வசதி இல்லை என்று பல நாடுகளும் கைவிரி த்துள்ளன. ஆனால், நிர்வாகத்தினர் மேலும் கரிசனை காட்டவேண் டும் என்று உதவி நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்துள்ளன.

கிரேக்கம் முகம் கொடுத்திருக்கும் நெருக் கடி நிலை குறித்து ஐரோப்பிய உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி பிரோகொபிஸ் பவ் லோபவ்ஸ் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான் கொயிஸ் ஹொல்லன்டேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதில் ஏதன்ஸ் நகருக்கு அரு காமை துறைமுகமான பிரவுஸிற்கு செவ்வாய் பின்னேரம் வந்தடைந்த கப்பலில் சுமார் 1,749 குடியேறிகள் இருந்துள்ளனர். இந்த கப்பலில் வந்த சிரிய நாட்டு ஆசிரியர்  'நாங்கள் மனிதர்கள் எங்களுக்கு உதவுங் கள்" என்று ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து சுமார் 2,500 பேரை ஏற்றிய மற்றொரு கப்பல் நேற்று காலை இந்த துறை முகத்தை வந்தடைந்துள்ளது.

டப்லின் ஒழுங்குமுறை என்று அழைக்கப் படும் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின்படி, அக திகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வந்தடையும் முதல் நாட்டிலேயே தஞ்சம் கோர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஆனால் குடியேறி களின் வாயிலாக இருக்கும் கிரீஸ் மற்றும் இத்தாலி நாடுகளை வந்தடைபவர்கள் மேலும் வடக்கை நோக்கி பயணிக்கின்றனர். பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகளை கட்டுப்ப டுத்த முடியாதிருப்பதாக அந்த இரு நாடுகள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில் ஹங்கேரி நிர்வாகம் கிழக்கு புடபெஸ் ரயில் நிலையத்தில் குவிந்திருக்கும் குடியேறிகளை பதிவு செய்வதை கைவிட்டுள் ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டாலேயே இவர்களால் வியன்னா மற்றும் தெற்கு ஜேர் மனிக்கு ரயிலேறி செல்ல முடியும்.

இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாயன்று ஹங்கேரி நிர்வாகம் குடியேறிகளுக்கு ரயில் நிலையத்தை மூடியது. ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடு என்ற வகையில் எல்லை கட்டுப்பாடுகளை நிலைநிறுத்தும் கடப்பாட்டை செயற்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட் டதாக ஹங்கேரி விளக்கமளித்திருந்தது.

இதனால் சுமார் 2000 பேர் ரயில் நிலையத் திற்கு வெளியில் நேற்று முன்தினம் இரவை கழித்தனர். நிர்வாகம் ரயிலேறுவதை தடுத் ததை அடுத்து அத்திரமடைந்தவர்கள், பெறப் பட்ட ரயில் டிக்கெட்டை அசைத்து 'ஜேர்மனி, ஜேர்மனி" என்று கூச்சலிட்டனர்.

தாம் ஆஸ்திரியா அல்லது ஜேர்மனிக்குச் செல்ல நூற்றுக்கணக்கான ய+ரோக்களை டிக்கெட்டுக்கு செலவிட்டதாக அந்த கூட் டத்தில் இருந்தவர்கள் குறிப் பிட்டனர்.

இந்நிலையில் நாட்டில் இருக்கும் பதிவுசெய்யப்பட்ட அனைத்து குடியேறிகளும் பொருளாதாரா குடியேறிக ளாக கருதப்பட்டு அவர்கள் வந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஹங்கேரி குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பவை எட்டும் குடி யேறிகளின் எண்ணி க்கை உச்ச கட்டத்தை அடைந் துள்ளது. கடந்த ஜுலையில் மாத்திரம் 107,5000 பேர் வந்தடைந்துள்ளனர். இதில் ஜேர்மனி இந்த ஆண்டில் 800,000 குடியேறிகளுக்கு அடைக்கலம் வழங்க முன் வந்துள்ளது. அது கடந்த ஆண்டை விடவும் நான்கு மடங்கு அதிகமாகும்.

அதேபோன்று ஐரோப்பவை நோக்கி வரும் குடியேறிகள் சந்திக்கும் உயிராபத்தும் அதிக ரித்துள்ளது.

கடந்த வாரம் ஆஸ்திரியாவில் லொறி வண்டி ஒன்றுக்குள் இருந்து 71 குடியேறிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனைய டுத்து ஆஸ்திரியா தனது ஹங்கேரி எல்லையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத் தியது.

குடியேறிகள் பிரச்சினை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை மற்றும் நீதி அமைச் சர்கள் வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி பிரசல்ஸில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வுள்ளனர்.
 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com