Contact us at: sooddram@gmail.com

 

ஜெனீவா பிரேரணை பயன் தராது, பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்வே நிஜம்

நான் கூறும் கருத்துக்கள் அழகிய எங்கள் இலங்கைத் தீவின் எதிர்கால சுபிட்சத் திற்கானவையாகும். நான் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சராக மட்டுமன்றி, தமிழ் பேசும் மக்க ளின் அரசியல் அபிலாசைகளையும், எண்ணங் களையும், இலட்சியங்களையும் ஈடேற்றும் யதார்த்தபூர்வமான நடை முறைகளை ஏற்று, எமது மக்களின் பிரதிநிதியாகவுமே இந்த சபையில் எனது கருத்துக்களை முன் வைக்கின்றேன். நான் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை களுக்காக எந்தளவிற்கு குரல் கொடுக்கின்றேனோ, அந்தளவிற்கு இலங்கைத் தீவின் இறைமையையும், சுயாதீனத்தையும், இன ஐக்கியத்தையும் விரும்புகின்றேன்.

இந்த நிலைப்பாட்டில் இருந்துதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை யின் 19 வது கூட்டத் தொடரிலும் நான் கலந்து கொண்டிருந்தேன்.

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை களை வென்றெடுக்கவும், சிதைந்து போன எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை மீளக் கட்டியமைத்து, அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தவும், அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டுவதற் காகவுமே நான் ஜெனீவா மாநாட்டில் கலந்து கொண்டிருந்தேன்.

நாம் எமது மக்களுக்கு வெளிப்படை யாகவே கூறி வருவது போல், இந்த நிலைப்பாடு எமது கட்சியின் நடைமுறை சார்ந்த கொள்கை யைக் கொண்டது.

நாம் ஜெனீவா மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கும், பெரும்பான்மை சமூகத்திற்கும் எமது நல்லெண்ண சமிக்ஞையை வெளிப் படையாகவே காட்டி இருக்கிறோம். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைமுறைக்கு ஏதுவான வழிமுறை எனக்கூறி ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்த தன் மூலம் அரசாங்கத்திற்கு மறைமுக ஆதரவு வழங்கியுள்ளனர்.

நாம் காலம் காலமாக கூறிவந்த “ஐக்கிய இலங்கைக்குள் நிலைத்து நிற்கத்தக்கதும், நடைமுறைக்கு ஏது வானதுமான அரசியல் தீர்வு” என்ற கோட்பாட்டை இன்று சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதை காலம் கடந்த ஞானமாக கருதுவதா. அல்லது, வழமை போன்ற அவர்களது சந்தர்ப் பவாத அரசியல் என்று கருதுவதா...?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்ததை நான் வரவேற்கின்றேன். ஆனாலும், அரசாங்கத்திற்கு ஒரு கருத்தும், அதற்கு மாறாக தமிழ் மக்களுக்கு இன்னொரு கருத்தும் கூறி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இரட்டைவேட அரசியல் நாடகத்தையே நாம் வெறுக்கின்றோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்திருந்த சமயம், அதனை நிராகரிப்பதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று அதனை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றது. இது என்ன வேடிக்கை.

ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்து, அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இன்று அமெரிக்கப் பிரேரணையை நிறை வேற்றாவிட்டால் விபரீத விளைவுகளை எதிர் கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக் கின்றார்கள்.

ஈ.பி.டி.பி.யினராகிய நாம், எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை குறித்து தெளி வான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறோம். நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து, நிலைத்து நிற்கக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தை வகுத்து செயற்பட்டு வருகின்றோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், நாம் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்ற எமது மக்களின் அரசியல் தீர்வு குறித்த நிலைத்து நிற்கக் கூடிய நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளும் பொதிந்திருக்கின்றன. ஆகவேதான், அமெரிக்கப் பிரேரணைக்கு முன்னராகவே நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வரவேற்றி ருந்தோம். அதை நடைமுறைப்படுத்துமாறும் கோரியிருந்தோம்.

இதுவரை அமெரிக்காவின் வரலாறுகள் யாவும் எமக்குப் பல உண்மைகளை கற்றுத் தந்திருக்கின்றன. உதவும் நண்பர்கள் போல் நடித்து, பிறநாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து, குழப்பங்களையும், கலகங் களையும் இன்று வரை விளைவித்துக் கொண்டி ருக்கும் வரலாறுகளை நாம் காண்கின்றோம். இந்த அனுபவங்களை கற்றுக் கொண்ட நாம் தெளிவான தொலைதூரச் சிந்தனைகளோடு தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை வெற்றி அடையாமல் போயிருந்தாலும், நல் லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இருந்திருக்காது. ஏனெனில், எமது வேலைத்திட்டத்தில் ஏற்கனவே அடங்கியுள்ள பல விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் கூறப்பட்டுள்ளன.

இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை வெற்றி பெற்றதான கற்பனையில் மார் தட்டிக் கொள்ளும் பெருமிதங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்றோ, இன ஐக்கியம் பேணப்பட வேண்டுமென்றோ மனவிருப்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. வெறுமனே தமது சுயலாபக் கனவுகள் ஈடேறியிருப்பதான உணர்ச்சி ஊட்டும் மாய வித்தைகளே அதில் வெளிப்பட்டு நிற்கின்றன.

எமது பிரச்சினையை நாமே பேசித் தீர்க்க வேண்டும். இனங்களுக்கிடையில் பகைமையை வளர்த்துக் கொண்டு, இன முரண்பாடுகளைத் தூண்டி விட்டுக் கொண்டு, அரசியல் உரிமைப் பிரச்சினைக்கோ அன்றி வேறெந்தப் பிரச்சினை களுக்கோ ஒரு போதும் தீர்வு கண்டுவிட முடியாது.

எமது அரசாங்கம் ஒரு செயல்திட்டத்தை வகுத்து, அதன் வழி செயற்பட்டும் வருகிறது. இச் செயற்திட்டத்தில் அடங்கியுள்ள எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை குறித்த பல விடயங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசாங்கம் தனது செயற்திட்டத்திற்கு அமைவாக எஞ்சியுள்ள விடயங்களையும் செயற்படுத்தும்.

அன்று நடைமுறையிலிருந்து வந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பல இன்று அகற்றப்பட்டுள்ளன. உதாரணமாக பாதுகாப்பு அனுமதி முறை, பிராயணங்களுக்கான முன் அனுமதி பெறல், தொழில் செய்வதற்கான பாதுகாப்பு அனுமதி, குறிப்பாக, கடற்றொழிலுக்கான அனுமதி, சோதனைச் சாவடிகள், வீதித்தடைகள், வீதி ரோந்துகள், வீதி சோதனைகள், பயணிகள் சோதனைகள், வீட்டுச் சோதனைகள், விடுதி சோதனைகள், ஊரடங்குச் சட்டம், அவசரகாலச்சட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட வீதிகள், இராணுவப் பதிவு முறைமைகள், இராணுவ அடையாள அட்டை முறைமை போன்றவை இன்று நடைமுறையில் இல்லை.

அன்று இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட பாடசாலைகள் பல விடுவிக்கப்பட்டு, புனரமைக் கப்பட்டு அவற்றில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மக்கள் பாவனைக்கு விடப்படாதிருந்த வணக்கஸ்தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் இன்று பொது மக்கள் சுதந்திர மாக சென்று வருகின்றார்கள். உதாரணமாக, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், கீரிமலை தீர்த்தக்கேணி, கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம், காரைநகர் கசுரினா கடற்கரை, முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில், கிளிநொச்சி கந்தசாமி கோவில், மன்னார் மடு தேவாலயம், திருக்கேதீஸ்வரம் போன்றவற்றை சொல்லலாம்.

யுத்தத்தின் போது சரணடைந்தும், கைது செய்யப்பட்டும் இருந்த பல்லாயிரக்கணக்கான முன்னாள் புலி உறுப்பினர்கள் இன்று புனர் வாழ்வளிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவில்லையா?

பாவனைக்கு விடுவிக்கப்படாதிருந்த பல்லா யிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மிதிவெடிகள் அகற்றப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவில்லையா?

தடைசெய்யப்பட்டிருந்த ஏ9 பாதை திறக்கப்படு வதானது யாழ். குடாநாட்டு மக்களின் சொர்க்க வாசலாகக் கருதப்பட்டது. அப்பாதை திறக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் இடம்பெற வில்லையா? கடந்த கால அழிவு யுத்தத்தினால் சேதமாகிப் போன வட மாகாணத்திற்கான புகையிரதப் பாதைகளை மீள அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படவில்லையா?

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையா?

அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறப்பட்ட பல இடங்கள் பொது மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்படவில்லையா? அவ்விடங்களில் இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீளக் குடியமர்த் தப்படவில்லையா?

சங்குப்பிட்டி பாலம் முதற் கொண்டு பல பாதைகள் புனரமைக்கப்படவில்லையா?

இலங்கையின் எவருக்கும் எந்தவொரு இடத்திற்கும் அச்சம், சந்தேகமின்றி சுதந்திரமாக சென்று வரக் கூடிய ஓர் சூழ்நிலை ஏற்படுத்தப் படவில்லையா?

இவற்றை அரசாங்கம் செய்வதற்கு எந்தவொரு ஆணைக்குழுக்களும் பரிந்துரை செய்திருக்கவில்லை. எந்தவொரு வெளியுலகத் தீர்மானங்களுக்கும், எதிர்த்தரப்பு அழுத்தங்களுக்கும் அடிபணிந்து அரசாங்கம் இவற்றை செய்திருக்கவுமில்லை.

இன்னமும் ஆற்றவேண்டிய பணி களை ஆற்றும் என்பதனை உறுதிபட இச்சபையில் கூறி வைக்க விரும்பு கின்றேன்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஓர் அழிவு யுத்தத்தை சந்தித்து வந்த நாம், யுத்தத்தின் சிதைவுகளில் இருந்து நிமிர்ந்தெழ கால அவகாசம் தேவை என்ற உண்மையை நிராகரிக்கவில்லை.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச் சினைக்குத் தீர்வுகாணும் வழிமுறையில் காலம் கடத்தும் தந்திரோ பாயங்களை செய்து வந்திருந்தன. அவ்வாறான ஒரு பொறுப்பற்ற செயலை இந்த அர சாங்கம் ஒரு போதும் முன் னெடுக்காது என்பது எமது நம்பிக்கை.

ஏனெனில், இலங்கை-இந்திய ஒப்பந் தத்திற்கு பிந்திய காலச்சூழலில் தமிழ் பேசும் தலைமைகளே அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் தட்டிக் கழிக்கும் சுயலாப அரசியலை நடத்தி வந்திருக்கின்றன.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்ட சமயத்தில் புலிகள் தரப் பில் 652 உறுப்பினர்கள் மாத்திரமே இறந்துள்ளனர் என்று புலிகள் அன்று உரிமை கோரியிருந்தனர். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது? கிடைத்த தீர்வுகளை ஏற்க மறுத்து, இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்களை சுயலா பத் தமிழ்த் தலைமைகள் யுத்த களத்தில் பலி கொடுத்திருக்கின்றனர். அழிவுகளுக்கும், அவ லங்களுக்கும் நீங்களே காரணமாக இருந்துவிட்டு இன்று உலகத்தின் கண்முன்பாக வெறுமனே போலி ஒப்பாரி வைத்து ஓலமிடுகின்aர்கள்.

உண்மையாகவே நீங்கள் மக்களின் அழிவு களை தடுக்க வேண்டுமென்று எண்ணியிருந்தால், இறுதி யுத்தத்தின் போது அப்பாவி பொது மக்கள் புலிகளால் மனிதக் கேடயங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த விடயத்தையும், தமது பாதுகாப்புத் தேடி புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட முயற்சித்த மக்களை புலிகள் கொன் றொழித்த விடயத்தையும் உலக நாடுகளுக்கு முறையிட்டு தடுக்க முன்வந்திருக்கலாம்.

இராணுவம் மடுவுக்கு வந்தால் நீங்கள் மதவாச்சியில் நிற்பீர்கள் என்றும், இராணுவம் கிளிநொச்சிக்கு வந்தால் நீங்கள் கொழும்பிலே நிற்பீர்கள் என்றும் கூறினீர்கள். பீரங்கி பலம் கொண்டு அரசுடன் பேசுவோம் என்aர்கள், 40 ஆயிரம் சவப்பெட்டிகளை படையினருக்காக தயாராக வைத்திருங்கள் என்aர்கள், இதே சபையில் வைத்து அவ்வாறு வீரமுழக்கமிட்ட நீங்கள், இப்போது 40 ஆயிரம் மக்கள் பலியாகி விட்டார்கள் என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்aர்கள்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் முதற்கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாசா, சந் திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ என அனைத்து அரசுகளோடும் பேசி எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை க்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத் திருந்தன. அந்த அரிய வாய்ப்புகளை சுயலா பத் தமிழ்த் தலைமைகள் சரிவரப் பயன்படுத்தி இருந்தால், எமது மக்கள் அழிவுகளைச் சந்தித் திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நடந்திருக்காது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தனது அங் கத்தவர்களை நியமிக்காமல் விதண்டாவாதம் பேசி வருகிறது. சுயலாப அரசியல் கருதிய தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் கூட்டமைப்பினர் வழமையான நோக்கத்திற்கு அமைவாக தமிழ் மக்களை நெருக்கடி மிக்க பதற்ற நிலைக்குள் தொடர்ந்து வைத்திருந்து அவர்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். கடந்த ஒக்டோபரில் அரசு கோரியிருந்தமைக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான தனது அங்கத்தவர்களை நியமித்திருந்தால் இம்மாதத்திற்குள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் முற்றுப் பெற்றிருக்கும். தமது தேர்தல் வெற்றிக்காக மட்டும் அரசியல் சித்து விளையாட்டு நடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறிக்குள் எமது மக்கள் தொடர்ந்தும் வீழ்ந்து விடப் போவதில்லையென்பதை கூட்டமைப்பினர் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே எமது அரசாங்கம் தனது செயற் திட்டத்திற்கு அமைவாக தமிழ் பேசும் மக்க ளின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கும் ஏனைய முழுமையான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று கூறி அதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பங்களிப்புக்களை இதயசுத்தியுடன் வழங்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஜெனீவா பிரேரணை என்பது ஒரு மாய மான். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் தீர்வு என்பதே நிஜ மான். எனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் எமது அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினைக்கு நடைமுறைக்கு ஏதுவான நிலையான தீர்வை எட்டுவதற்கு பங்களிப்பு வழங்குமாறு அனைத்து தரப்பினருக்கும் எமது மக்கள் சார்பாக மனிதாபிமான அழைப்பினை விடுக்கின்றேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com