Contact us at: sooddram@gmail.com

 

மலையக தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்கருதி பொது இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். - மக்கள் தொழிலாளர் சங்கம்

மலையக தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆரோக்கியமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுக்கிறது. இவ்வழைப்பை மக்கள் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாநாட்டின் போது  பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி இ. தம்பையா அச்சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் பேசும் போது தெரிவித்தார். 29.03.2014 அன்று இரத்தினபுரியில் நடைபெற்ற மக்கள் தொழிலாளர் சங்கத்தின் இரண்டவாது மாநாட்டில் ஆர். இராஜேந்திரன் சங்கத்தின் தலைவராகவும் எம். தியாகராஜா பொருளாளராகவும் மற்றும் ஏனைய புதிய நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

இம்மாநாட்டில் பலமான தொழிற்சங்கம் ஒன்றை கட்டுவதன் அவசியம், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி ஆராயப்பட்டதுடன் வென்றெடுக்கப்பட வேண்டிய தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அம்மாநாட்டில் உரையாற்றிய சட்டத்தரணி இ.தம்பையா மேலும் தெரிவித்ததாவது;

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையிலேயே இருக்கின்றனர். அவர்களின் அடிப்படை வர்க்க, இன,  உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் பொது இணக்கப்பாட்டுடன், பொது வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுவது காலத்தின் தேவையாகும். இதனை நிராகரிக்கும் தொழிற்சங்கவாதிகள் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதுடன், அவர்களின் இருப்பு நீண்டதாக இராது.

எனவே, மலையகத்தின் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான, பொது இணக்கப்பாட்டையும் பொது வேலைத்திட்டங்களையும் வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் தொழிற்சங்கங்களுக்கிடையே ஆரோக்கியமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கம் எதிர்பார்க்கின்றது. அங்கத்துவ போட்டி மனப்பான்மையும் தேர்தல்களில் வெற்றிபெற தொழிலாளர்களின் வாக்குகளை திரட்டிக் கொள்ளும் போட்டி மனப்பான்மையும் நீக்கப்பட வேண்டும். மாறாக  தொழிற்சங்கங்களிடையே பரஸ்பர தொடர்புகளும் புரிந்துணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதனூடாகவே தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முடியும். தொழிற்சங்கங்கள் பிரிந்து நின்று எதிரிகளாக செயற்படும் போது தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் முடியாது. உரிமைகளை வென்றெடுக்கவும் முடியாது.

தொழிலாளர்களை வலுப்படுத்த வேண்டுமெனின் தொழிற்சங்க இயக்கம் வலுவடைய வேண்டும். அவ்வாறு வலுவடைவதற்கு தொழிலாளர்களிடையேயும் தொழிற்சங்கங்களுக்கிடையேயும் ஐக்கியம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

தொழிற்சங்கம் என்பது முதலீடு இல்லாத சுய தொழிலாகவும் பெரும் வியாபார கம்பனிகளாகவும் இருக்கும் நிலை மாற வேண்டும். அத்துடன் கம்பனிகளுக்கு எவ்வித இடையூறுமில்லாத வகையில் தொழிலாளர்களின் உழைப்பை வழங்குவதனையும், இருக்கும் உரிமைகளையும் கையுதிக்கும் சம்மதத்துடன் தொழிலாளர்களின் உழைப்பை வழங்கும் நிலையை உறுதி செய்யும் வகையில் தொழிற்சங்கங்கள் இயங்குவதை அனுமதிக்க முடியாது. தொழில் உறவை பேணல் என்பது தொழிலாளர்களின் உரிமை மறுப்பிலும் தொழிலாளர்களின் அவலத்திலும் உற்பத்தி நடைபெற்று அதிக இலாபத்தை கம்பனிகளுக்கு சென்றடைவதை அடிப்படையாக கொண்டு இருத்தலாகாது; மாறாக உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் உயர்ச்சி என்பவற்றில் தங்கி இருக்கிறது.

இவற்றை எல்லாம் மறுக்கும் உலகமயமாதல் சூழ்நிலையில் தொழிற்சங்கங்கள் புதிய விதத்தில் செயற்பட வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக எமது மக்கள் தொழிலாளர் சங்கம் இயங்கும். அதற்கான ஒத்துழைப்பை தொழிலாளர்களிடம் நாம் வேண்டிநிற்கின்றோம்.  இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.

 

1. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்

அ. தேயிலை, றப்பர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பருவத்திற்கு பருவம் வேறுபாடுடையதாகவன்றி மாதாந்த சம்பளத்தின் அடிப்படையில் நிரந்தரமான சூத்திரமொன்றினூடாக நியாயமான முறையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஆ. வாழ்கை செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப வருடாந்த சம்பள உயர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்.

2. கூட்டு ஒப்பந்தம்

அ. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற் சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையிலான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுகின்ற தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களினதும் பங்களிப்பும் அந்தஸ்த்தும் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆ. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான நியாயமான, நிரந்தரமான திட்டமும் வருடாந்த சம்பள உயர்வுக்கான சூத்திரமும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இ. ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உட்பட தொழிலாளர்களின் ஓய்வூதி திட்டமும் முன்னேற்றகரமானவையாக பேணப்பட வேண்டும்.

ஈ. சம்பளம், சம்பள உயர்வு, தொழிலாளர்களின் வேலை நிபந்தனைகள் போன்றன குறைந்தபட்சம் இலங்கையில் தொழிற்சட்டங்கள் தராதரங்கள், சர்வதேச சட்டங்கள், தராதரங்களுக்கேற்ப கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பாடுகள் சேர்க்கப்பட வேண்டும்.

உ. தொழிலாளர்களின் நாளாந்த தொழில் உறவு பிரச்சினைகள் பற்றி பெருந்தோட்ட நிர்வாகங்களுடன் கலந்துரையாடல், இணக்கத்தீர்வு, நடுத்தீர்வு போன்ற வழிமுறைகளினூடாக தீர்க்கப்பட வேண்டும்.

ஊ. தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் பூரணமாக நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வுரிமைகள் நேரடியாக சட்டவாக்கங்களினூடாகவோ மறைமுகமான நடவடிக்கைகளினூடாகவோ பறிக்கப்படகூடாது.

3. பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களின் உரிமை, வாழ்வு கட்டியெழுப்புவதன் அடிப்படையில் பேணப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

4. தேயிலை, றப்பர் தென்னை பெருந்தோட்ட தொழிற்துறையை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்துறையும் ஏனைய மாற்று தொழிற்துறையும் பெருந்தோட்டத் துறைக்கு சமாந்திராக கட்டி வளர்க்க வேண்டும்.

5. தோட்டத் தொழில் துறையும் அதனோடு தொடர்புடைய மற்றும் மாற்று தொழிற்துறையினூடாக தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது வழித் தோன்றல்களுக்கும் அத்தொழில்வாய்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

6. பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கென குடியிருப்புக்கு தேவையான காணி வசதிகளுடன் வீடுகள் அமைக்கப்பட்டு வீதி போக்குவரத்து கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பாடசாலைகள், வைத்தியசாலைகள், நிர்வாக பரவலாக்கல் மையங்கள் போன்றன நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக கிராம அல்லது நகர குடியிருப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும்.

8. நீண்ட கால இலக்காக பெருந்தோட்டங்களும் அதனோடிணைந்த வளங்களும் பல்தேசிய கம்பனிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு தோட்டங்களில் உற்பத்திக்கென பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகள், இயற்கை வளங்கள் போன்றன தொழிலாளர்களுக்கும் அவர்களினது வழித்தோன்றல்களுக்கும் உரித்தாக்கப்பட்டு  தொழிலாளர்களின் பங்களிப்புடனான கூட்டுப் பண்ணை அடிப்படையில் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9. மலையக மக்;கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் தேசிய அபிலாசைகள் உறுதி செய்யும் அடிப்படையில் சுயநிர்ணயம், சுயாட்சி, சமத்துவம் என்பன அடிப்படையில் அவர்களின் அரசியல் தன்னதிகாரங்களும் உறுதி செய்யப்பட வேண்டும்.

10. தமிழ் தொழிலாளர்களுக்கு இன ரீதியான மத ரீதியான தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்; மொழி உரிமைகள் பேணப்பட வேண்டும்.

11. தமிழ் தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களிலும் வெளியிலும் இருக்கின்ற ஏனைய உழைக்கும் மக்களுடன் விவசாயிகளுடனும் ஐக்கியப்பட்டு மேற்கொள்ளகூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

12. பெருந்தோட்ட பெண் தொழிலாளர்கள், சிறுவர்கள் போன்றோரின் இலகுவாக ஊறுபடக்கூடிய நிலை மாற்றப்பட்டு அவர்களின் சமத்துவ உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com