Contact us at: sooddram@gmail.com

 

பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தியது தவறு

ஒரு நாட்டின் தேசியப் பிரச்சினையை அந்நாட்டுக்குள்ளேயே பேசித் தீர்ப்பதே யதார்த்தமான நடைமுறையாகும். தேசியப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதோ அன்றி சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கூக்குரலிடுவதோ ஆரோக்கியமானதல்ல. சர்வதேச விசாரணையென்ற கோஷம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் எனக் கூறுகிறார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி.

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களில் மிகவும் சிரேஷ்ட தலைவரான ஆனந்தசங்கரி கடந்த கால, நிகழ்கால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக மிகுந்த அனுபவம் கொண்டவராக விளங்குகிறார்.

யதார்த்தத்துக்கும் நடைமுறைக்கும் பொருத்தமில்லாத அரசியல் நடத்துவதால் எந்தப் பயனும் ஏற்படப் போதில்லையென்ற உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கும் அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோஷங்களை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியுமெனக் கூறுகிறார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி, இன்றைய நிலைவரம் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்குகள் குறித்தும் தினகரனுக்காகத் தனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

எமது நாட்டுக்குள் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் எந்தவித நடவடிக்கையையும் நான் நிராகரிக்கிறேன். இன பேதங்களை உருவாக்கும் முயற்சிகள் நன்மையைத் தந்துவிடப் போவதில்லை. மாறாக இனங்களுக்கிடையே விரிசல்களை அதிகமாக்குவதற்கே வழிவகுக்கும். ஜெனீவா தீர்மானத்தையும் நான் இந்தக் கோணத்திலேயே நோக்குகின்றேன்.

எமது சிறிய நாட்டுக்குள் இன ஐக்கியம் ஏற்பட்டாலேயே மக்கள் நிம்மதியாக வாழ முடியும். சர்வதேச விசாரணை தேவையென்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தாரக மந்திரமாகக் கொண்டு தற்போது செயற்படுகின்றனர்.

இவர்களது தற்போதைய அரசியல் போக்கானது இலங்கையில் பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்குமென்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் எனக் கூறினார் ஆனந்தசங்கரி.

கேள்வி: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா கடைப்பிடிக்கும் போக்குகள் திருப்தியானதெனக் கூறுகிaர்களா?

பதில்: இந்தியா தொடர்பாக இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்வது நல்லது. இந்தியா எமக்கு அயலில் உள்ள ஒரு வல்லரசு நாடு என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

இதற்கெல்லாம் அப்பால் சமயம். கலை, கலாசாரம். பாரம்பரிய தொடர்புகள் போன்ற பல்வேறு விடயங்களில் இரு நாடுகளுக்குமிடையே நெருக்கமான பிணைப்பு இருந்து வருகிறது. இலங்கையில் எத்தகைய நெருக்கடி ஏற்படினும் மேலைத்தேய நாடுகள் வந்து கைகொடுக்கப் போவதில்லை. இந்தியாதான் எவ்வேளையிலும் உதவக் கூடியதொரு பெரும் நாடு. அந்நாட்டைப் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனமல்ல.

கேள்வி: அவ்வாறானால் தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவைப் பகைத்துக் கொண்டுள்ளதாகக் கூறுகிaர்களா?

பதில்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமீபகால நடவடிக்கைகள் இந்தியாவுக்கு அதிருப்தியளித்து விட்டதாக நான் கருதுகிறேன். வடக்கு. கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது. அதற்கான தார்மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை.

தமிழ் மக்கள் சார்பான விடயங்களை முதலில் இந்தியாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அதனை விடுத்து மேற்கு நாடுகளிடம் சென்று கூறுவதனால் விளையப் போகும் பயன் எதுவுமில்லை. கூட்டமைப்பின் இத்தகைய போக்கினால் இந்தியா அதிருப்தியடை ந்துள்ளதென்பதே எனது அபிப்பிராயம்.

கேள்வி: அவ்வாறானால் இலங்கை அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்பது உங்கள் கருத்தாகுமா?

பதில்: நிச்சயமாக...... அதுதான் எனது உறுதியான கருத்து. இந்தியாவின் மத்தியஸ்தம் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமன்றி இலங்கை அரசாங்கத்துக்கும் பயன்தரும் என்றே நான் கருதுகிறேன்.

கேள்வி: ஜெனீவா தீர்மானம் தொடர்பாக உங்களது கருத்து எத்தகையது?

பதில்: இலங்கை விடயத்தில் இது ஒரு தேவையற்ற தலையீடாகும். உள்நாட்டு விவகாரத்துக்கு உள்நாட்டு பொறிமுறைகளின் கீழ் தீர்வு காணப்படுவதே பொருத்தமானது. இலங்கையின் பெரும்பான்மையின மக்கள் மாத்திரமன்றி சிறுபான்மையின தமிழ் முஸ்லிம் மக்களும் இதே எண்ணத்தையே கொண்டுள்ளனர்.

இதற்கு மாறாக ஜெனீவா தீர்மானம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது மேற்கொண்டு வருகின்ற தீவிர செயற்பாடுகள் பெரும்பான்மையினத்தவரையும் சிறுபான்மையினரையும் இரு துருவங்களாக்குவதற்கே வழிவகுக்கும். ஜெனீவா பிரேரணை குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி ஏற்கனவே கடிதம் எழுதியும் இருக்கிறேன்.

கேள்வி: ஜெனீவா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் நடுநிலை வகித்ததன் மூலம் இந்தியா துரோகம் இழைத்து விட்டதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர் சிலர் கூறுகின்றனரே.....

பதில்: இலங்கைத் தமிழருக்கு இந்தியா துரோகம் செய்ததா அல்லது தமிழ்க்கட்சிகள் இந்தியாவுக்குத் துரோகம் செய்தனவா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் மக்களாவர். ராஜீவ் கொலை தொடர்பாக வடக்கு, கிழக்கு

தமிழ் அரசியல் கட்சிகள் புலிகளை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. இது துரோகம் இல்லையா? ஆனால் நான் கண்டித்தேன். அன்றைய காலத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த குரல்தான் புலிகளின் குரல் என்று வெளியுலகுக்குக் காண்பிப்பதிலேயே அக்கட்சிகள் குறியாக இருந்தன. இந்தியாவின் மாபெரும் சக்தியான ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதன் தாற்பரியத்தை அக்கட்சிகள் புரிந்து கொள்ள மறுத்தன. இது துரோகமாகாதா? அதனையெல்லாம் மறந்து இன்று இந்தியா துரோகமிழைத்து விட்டதாகக் கூறுவதற்கு இவர்களுக்கு அருகதை கிடையாது.

கேள்வி: இன்றைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீங்கள் கருதுகிaர்கள்?

பதில்: இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்தப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்து பேச்சுக்கு முன்வர வேண்டும். சர்வதேச நாடுகளுக்குச் சென்று சந்திப்புகளை மேற்கொள்வதால் உரிய தீர்வு கிடைத்துவிடப் போவதில்லை.

இந்தியன் மொடல்ஆலோசனையை நான் ஏற்கனவே முன்வைத்திருந்தேன். இரா. சம்பந்தனும் அன்று இந்த யோசனையை ஏற்றுக் கொண்டிருந்தார். இந்தியன் மொடல்யோசனையை முன்வைத்துப் பேச்சு நடத்த வேண்டுமென்பதே எனது விருப்பமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்களது தீர்வு எத்தகையதென்பதை இன்னுமே வெளிப்படையாகக் கூறவில்லை. தீர்வு எதுவெனக் கூறாமல் ஏனையோர் மீது குற்றம் சுமத்துவது முறையல்ல.

கேள்வி: அவ்வாறானால் தாங்கள் கூறுகின்ற இந்திய மத்தியஸ்தம்.....

பதில்: பேச்சுவார்த்தை விடயத்தில் இந்தியாவின் மத்தியஸ்தத்தை இரு தரப்பினரும் விரும்பித்தான் ஆக வேண்டும். இந்தியாவை அனுசரித்துச் செயற்படுவது தவிர்க்க முடியாதது. அதுவே யதார்த்தம். இந்தியா இன்றி இங்கு தீர்வொன்று எட்டப்படுவது மிகவும் சிரமம் என்பதே எனது அபிப்பிராயம். இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் விதத்திலான தீர்வொன்று எட்டப்படுவதற்கு இந்தியா உதவுமென நம்புகிறேன். இரு தரப்பினருக்கும் பாரபட்சமாக அந்நாடு செயற்பட மாட்டாது.

கேள்வி: வடமாகாண சபையின் செயற்பாடுகள் தங்களுக்குத் திருப்தியளிக்கின்றதா?

பதில்: வடமாகாண சபையின் நிர்வாகத்தில் முரண்பாடுகளே மேலோங்கிக் காணப்படுகின்றன. வடமாகாண முதலமைச்சர் சிறந்ததொரு சட்ட அறிஞர். சட்ட விதிகளின் வரம்புகளுக்குள் இருந்து சேவையாற்றுவதற்கே அவர் உள்ளூர விரும்புவதாக எனக்குத் தெரிகிறது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் முதலமைச்சரின் செயற்பாடுகளை குழப்புவதாகத் தெரிகிறது. எமது நாட்டின் அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள்

எவையென்பது பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கையில் அரசியலமைப்பு வரையறைகளுக்கு அப்பால் கருமமாற்ற எத்தனிப்பது பலனளிக்கப் போவதில்லை. இத்தகைய நடவடிக்கைகளினால் வடமாகாண சபையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. ஆளுநருடன் புரிந்துணர்வு அடிப்படையில் செயல்பட்டு வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வது சிறந்த பலனைத் தரும். நடைமுறைச் சாத்தியமான வழியில் செயற்பட்டால் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.

கேள்வி: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு உள்ளதென தாங்கள் உணர்கிaர்கள்?

பதில்: இலங்கைத்தமிழர் மீது இந்தியாவுக்கு எப்போதும் அக்கறையுண்டு. வடக்கு, கிழக்குப் பிரதேசத்துக்கான தீர்வொன்றை இந்தியா விரும்புகிறது. ஆனால் இலங்கைளில் பெரும்பான்மை தரப்பினரின் இணக்கப்பாட்டுடனான தீர்வையே இந்தியா விரும்புகிறது. இலங்கையில் உள்நாட்டு விரிசல்களை உருவாக்காத விதத்தில் தீர்வு எட்டப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் எண்ணமாக உள்ளது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்று யாரையெல்லாமோ சந்தித்து வருகின்றனர்.

இத்தகைய போக்கை இந்தியா விரும்புமென்று நான் நம்பவில்லை. இந்தியாவைப் புறந்தள்ளி விட்டு தமிழ்க் கூட்டமைப்பு வேறொரு பாதையில் செல்லும் போது இந்தியா அதிருப்தியடையவே செய்யும். தமிழ்க் கூட்டமைப்பின் இன்றைய நிலைமை இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உலகில் அங்கீகரிக்க வைக்க வேண்டுமென இந்தியா உதவியதை மறந்து விடலாகாது,.

கேள்வி: பேச்சு மூலமான தீர்வுக்குரிய சந்தர்ப்பம் இன்னும் கைநழுவிப் போகவில்லையென்ற கருத்தில் உறுதியாக உள்Zர்களா?

பதில்: நிச்சயமாக... தமிழ் மக்கள் தரப்பில் சாதகமான சமிக்ஞைகள் காண்பிக்கப்பட்டால் அதற்குரிய வாய்ப்பு உண்டு.

கேள்வி: சற்று விளக்க முடியுமா?

பதில்: யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் மக்கள் சொல்லொணா துன்பமடைந்தனர். மக்களை வெளியேற புலிகள் அனுமதிக்கவில்லை. இவ்வேளையில் அரசாங்கமும் இராணுவமே மக்களுக்கு உதவின. இதனை எம்மால் மறுக்க முடியாது. வயோதிபர்களை இராணுவத்தினர் தூக்கிக் கொண்டு வந்தனர். மக்களைத் தங்க வைத்து உணவும் வழங்கினர்.

இங்கு நான் கூற விரும்புவது யாதெனில், மக்களுக்கு துன்பம் விளையும் வேளையில் கருணையும் அக்கறையும் வெளிப்பட்டதை நாம் கண்டோம். இதே போல இருதரப்பு பேச்சொன்று நட்புறவுடன் முன்னெடுக்கப்படுகையில் சமரசம், விட்டுக்கொடுப்பு ஆகியன ஏற்படலாம்.

பேச்சுக்கான சந்தர்ப்பம் ஏற்பட்டாலேயே சிறந்த விளைவுக்கான வாய்ப்பும் பிறக்கும். பேச்சுக்கான சூழலை உருவாக்குவது தமிழ்க்கூட்டமைப்பின் கைகளில்தான் உள்ளது.

நாட்டினதும் மக்களினதும் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்க் கூட்டமைப்பு யதார்த்தமாக செயற்பட வேண்டும். அதன் பின்னரே வெற்றியா அல்லது தோல்வியா என்பதை எம்மால் கண்டுகொள்ள வழியேற்படும்.

எஸ். பாண்டியன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com