Contact us at: sooddram@gmail.com

 

மனோவின் கட்சியிலிருந்து குமரகுருபரன் நீக்கம்

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து என்.குமரகுருபரன் நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரின் கட்சி அங்கத்துவமும் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என் அக்கட்சி அறிவித்துள்ளது.

இதன்படி ஜனநாயக மக்கள் முன்னணியை தேசிய ரீதியாகவும் சர்வதேசிய ரீதியாகவும் எந்த ஓர் ஊடக, சமூக, அரசியல் தளத்திலும் பிரதிநிதித்துவம் செய்யும் தகைமை உடனடியாக என்.குமரகுருபரனிடம் இருந்து அகற்றப்படுகிறது என்று அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக ஏற்றுக்கொள்ளாமை, பொறுப்புவாய்ந்த பிரதி தலைவர் பதவியில் இருந்தபடி கட்சியின் அரசியல்குழு எடுக்கும் தீர்மானங்களை ஊடகங்களில் பகிரங்கமாக விமர்சனம் செய்தமை, தேர்தலின் போதும் தேர்தலின் பின்னரும் கட்சியில் தனக்கு இருக்கும் கூட்டுப்பொறுப்பை பகிரங்கமாக மீறியமை மற்றும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களை முன்வைத்தே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குமரகுருபரன் நீக்கப்பட்டதை அடுத்து கட்சியின் உபதலைவர் வெற்றிடத்துக்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக கடமையாற்றிய வேலணை வேணியன், அக்கட்சியின் அரசியல் குழுவினால் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவித்தல் இந்நாட்டின் சகல ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் ராஜதந்திர நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும், கட்சியின் தொழிற்சங்க, இளைஞர், மகளிர் துணை அமைப்புகளை சார்ந்தவர்களும் அவருடன் எந்த ஒரு தொடர்புகளையும் பேணக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு கட்சி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கட்சி தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடியது.

வேலணை வேணியன், எஸ்.ராஜேந்திரன், ஜெயபாலன், சண். குகவரதன், வேலு குமார், எஸ்.கணேசன், கே.ரீ.குருசாமி, எஸ்.பாஸ்கரா, பிரியாணி குணரத்ன, லோரன்ஸ் பெர்னாண்டோ, எ.ராஜ்குமார், பிரதீப் ராஜகுமாரன், சண். பிரபாகரன், நந்தினி விஜேரத்தினம் உள்ளிட்ட கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவுகளை கட்சியின் ஊடக செயலாளர் சின்னத்தம்பி பாஸ்கரா அறிவித்தார்.

அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் நடத்தப்படும் வார இதழில் கடந்த ஞாயிற்றுகிழமை வெளியான தனது நேர்முகத்தில், கட்சியின் அரசியல்குழு முடிவுகளை பகிரங்க விமர்சனத்துக்கு உள்ளாக்கி, உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிட்டு, கட்சியின் பொறுப்பு வாய்ந்த பிரதித் தலைவர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் நடவடிக்கையில் என்.குமரகுருபரன் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

அதேபோல் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர், தொலைக்காட்சி  ஒன்றின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கட்சிக்கு எதிரான கருத்துகளை குமரகுருபரன் வெளியிட்டார்.
கட்சியின் வேட்பாளராக இருந்துகொண்டே இத்தகைய கருத்துகளை அவர் வெளியிட்டது, நமது கட்சியை தோல்வியடைய செய்ய முயன்ற அரசாங்கத்துக்கு சாதகமான நிலைப்பாடாகும்.

மேல்மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க அரசாங்கம் பல குழுக்களை களமிறக்கியது. இந்த அனைத்து குழுக்களையும் பின்தள்ளி நடைபெற்று முடிந்த தேர்தலில் நமது கட்சி மேல்மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் அதிகப்படியான மக்களாணையை பெற்றுள்ளது.

இதையடுத்து உருவாகியுள்ள மகிழ்சிகரமான சூழ்நிலையை பாழ் செய்து, தமிழ் மக்களிடம் தோற்றுபோயுள்ள அரசாங்கத்தை திருப்தி படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், ஜனநாயக மக்கள் முன்னணியை அழிக்க திட்டமிடும் அரசாங்கத்தில் இருக்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகளின் சதி முயற்சிகளுக்கு துணைபோக வேண்டாம் எனவும், உண்மைக்கு புறம்பான பொய்யுரைகளை தொடர்ந்தும் ஊடகங்களில் வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் என்.குமரகுருபரனிடம் அரசியல்குழு தெரிவித்து கொள்கிறது.

கடந்த சுமார் பத்து வருடங்களில், முதல் ஐந்து வருடங்களில் கொழும்பு மாநகரசபை உறுப்பினராகவும், அதையடுத்து மேல்மாகாணசபை உறுப்பினராகவும் செயற்பட்டதற்கான பதவி நியமனங்களை கட்சி வழங்கியது. கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியானது கொழும்பு மாவட்ட நியமனத்தையும் கட்சி வழங்கியது.

உடல்நலக்குறைவு காரணமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை உரிய முறையில் தன்னால் முன்னெடுக்க முடியாமையினால் தான் அத்தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனதை கவனத்தில் கொண்டு, தற்போது நடைபெற்று முடிந்த மேல்மாகாணசபை தேர்தலில் தான் வெற்றிபெற முடியாமைக்கான காரணங்களை தனக்குள்ளே தேடும்படியும், மிக நீண்ட காலம் பதவி வகித்துவிட்டு, இன்று வெற்றிபெற முடியாமல் போன பிறகு அதை மனதில் கொண்டு, மேல்மாகாண மக்களின் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சியின் மீதும், கட்சி தலைமையின் மீதும், அபாண்டமான சோடிக்கப்பட்ட குற்றசாட்டுகளை சுமத்த வேண்டாம்.

கட்சிக்குள்ளே புதிய இளைய தலைமுறையினர் உட்பிரவேசிப்பதை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு வழிவிட்டு கனவானாக நாகரீகத்துடன் நடந்து கொள்ளும்படியும் என்.குமரகுருபரனிடம் அரசியல்குழு கேட்டுக்கொள்கிறது.

அரசியல் குழுவின் ஒழுங்கு நடவடிக்கையை அறிவிக்கும் கடிதம் என்.குமரகுருபரனுக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்படும். இதன்படி தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடுத்து வரும் இரண்டு வாரத்துக்குள் எழுத்து மூலமாக பதிலளிக்க அவருக்கு ஜனநாயக ரீதியாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உரிய பதில், உரிய காலகட்டத்துக்குள் வழங்கப்படாதவிடத்து அவரது கட்சி அங்கத்துவம் முழுமையாக நீக்கப்பட்டு அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com