Contact us at: sooddram@gmail.com

 

மீள்குடியேறும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை

வடக்கில் பல சவால்களுக்கு மத்தியில் அமைச்சர் ரிசாட் துணிச்சலான சேவை

இந்த நாட்டின் தேசிய இனங்களான சிங்கள, தமிழ் மக்கள் எவ்வாறு நீண்ட காலம் வாழ்கிறார்களோ அவ்வாறே நீண்ட காலம் வாழ்ந்து வரும் முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமாகும். முஸ்லிம்கள் தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்களுடனும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடனும் அன்பு பேணி ஐக்கியம் வளர்த்து, வாழ்ந்து வருபவர்கள். சமய ரீதியான தனித்துவங்களும் வழிபாட்டு முறைகளும் வேறுபட்ட போதும் மொழியால் ஒன்றுபட்டு பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்பவர்கள். வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் தாய் மொழியும் போதனா மொழியும் தமிழ் என்பதால் அங்கு வாழும் தமிழ் சகோதரர்களுடன் வாழ்வியல் ரீதியாக ஒன்றிணைந்து ஒன்றுபட்டு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம், வர்த்தகம், மீன்பிடி, தோட்டச் செய்கை போன்ற தொழில்களிலே அப்துல் காதரும், ஐயா த்துரையும் ஒற்றுமையாக தொழில் புரி ந்து இன பேதமற்று வாழ்ந்தமை வரலாறு. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ், முஸ்லிம் பாடசாலைகளிலே பாத்திமாவும் பரமேஸ்வரியும் அருகமர்ந்து அன்பைப் பரிமாறி நல்ல நண்பர்களாய் சோதரர்களாய் வாழ்ந்து வந்த இனிய இன உறவு வடக்கு கிழக்கில் நிலவியது. சிங்கள தமிழ் மக்களின் சமயக் கொள்கைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றுக்கு உரிய கண்ணியம் கொடுத்து மதித்து வாழும் இயல்பும் முஸ்லிம்களின் பண்பாகும்.

ஆயினும் 1983க்குப் பின் வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் புலிகளின் கையை ஓங்க வைத்தது. புலிகள் முஸ்லிம்களை வேற்றுக் கண்ணோடு நோக்கினர். பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் நன்னிலையில் இருப்பதை சகிக்காத புலிகள், முஸ்லிம்களை பல வழிகளிலும் நசுக்கினர். முஸ்லிம் கடைகளில் கப்பம் பெற்றனர். வாகன உரிமையாளர், விவசாயிகளிடம் பணம் பெற்றனர். விறகு வெட்டிப் பிழைக்கும் தொழிலா ளரிடம் கூட வரி அறவிட்டனர். 1990 வரையான காலப்பகுதியில் முஸ்லிம்க ளுக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் அனந்தம். இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் இறைமையை மதித்துப் பேணுபவர்கள். சிங்கள மன்னர்களின் காலம் தொடக்கம் அந்நியரின் படையெடுப்பை எதிர்த்து சிங்கள மன்னர்களுக்கு உறுதுணையாக நின்று போரிட்ட வர்கள் முஸ்லி ம்கள். வேண்டிய போதெல்லாம் தம் உயிரைப் பணயம் வைத்து நாட்டின் நலனுக்கு தம்மை அர்ப் பணித்தவர்கள். சுதந்திர இலங்கையிலும் நாட்டின் பிரிவினையை முஸ்லிம்கள் விரும்பவில்லை. ஒரே நாடெனும் கொள்கையுடன் செயல்பட்டனர். தேசிய அரசுக்கு விசுவாசமாக வாழ்ந்து வரு பவர்கள். எனவே புலிகளின் தனிநாட் டுக் கோரிக்கைக்கும் பிரிவினைக்கும் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் இணக்கம் இல்லை என்பதை அறிந்த புலிகள் முஸ்லிம்களை வருத்தினர். மேலும் வடக்கிலே தனித் தமிழ் ஈழம் அமைக்கும் செயற்பாட்டுக்கு வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்தனர். 1990 ஐப்பசியில் புலிகளின் பாசிச கொள்கையின் கோர முகம் தலைகாட்டியது. காலாகாலமாக சொந்த மண்ணில் சுகமாக வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்கள் ஒரு நாள் கெடுவில் ஊரைவிட்டு விரட்டப்பட்டனர். சொத்து சுகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. வழிச்செலவுக்கான பணம் தவிர ஏனைய அனைத்தையும் தாரைவார்த்து விட்டு வெளியேறிய முஸ்லிம்கள் அகதிகளாய், அபலைகளாய் அல்லல் பட்டு புத்தளம், குருநாகல் போன்ற இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அகதிகள் எங்கு சென்றார்களோ அங்கெல்லாம் வாழ்ந்த முஸ்லிம்கள் பரோபகார சிந்தையுடன் உதவி நல்கினர்.

அன்றைய ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசு அலட்டிக் கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு வேண்டிய உதவியைச் செய்யவில்லை. ஆயினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் மு.கா. ஸ்தாபகர் மர்ஹும் அஷ்ரப் அகதிகளுக்கு தற்காலிக வாழ்வியல் வசதிகளை செய்ததுடன் உலர் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுத்தார். விடுதலைப் புலிகள் விரட்டியதால் வடபுல முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் எண்ணிலடங்கா. 50,000 குடும்பங்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. கல்வீடுகளில் உள்ள ஓடுகள், கதவு நிலைகள் உடைத்து எடுக்கப்பட்டன. வீடுகளில் உள்ள பொருட்கள், தளபாடங்கள் சூறையடப்பட்டன. முஸ்லிம்களின் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு உரிமையான பல ஆயிரம் வயல் நிலங்கள் தென்னந் தோட்டங்கள் காடாகும் நிலை ஏற்பட்டன. அவற்றில் பெறவேண்டிய 23 ஆண்டு களுக்கான பயன்கள் இழக்கப்பட்டன. தொழில் செய்த தோணிகளும் வலைகளும் அழிக்கப்பட்டன. சுமார் 79 பள்ளிகள் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டன. 69 முஸ்லிம் பாடசாலைகள் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன.

பல்லாயிரம் பில்லியன் பெறுமதியான சொத்துக்களை முஸ்லிம்கள் இழந்தனர். ஒரு காலம் நம்முடன் வாழ்ந்த முஸ்லிம்கள் இத்தனை அழிவுகளுக்கும் அல்லல் துன்பங்களுக்கும் ஆட்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு வடக்கில் சொந்த வயல்கள் தோட்டங்கள் உள்ளன. வீடமைக்கும் காணிகள் இருந்தன. எனவே இந்த அபலை மக்கள் வடக்கில் மீண்டும் வாழும் உரிமை உடையவர்கள் என்ற மனோபாவமும் மனிதாபிமான எண்ணமும் வடபுல அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் அதிகாரிகள் சிலருக்கும் இல்லாமல் போனது விந்தையே. அரசு முஸ்லிம்கள் தொடர்பில் அக்கறை கொண்டு உழைத்து வருகின்ற போதும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பூரணமாக நிறைவேறாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் வடபுல சுயநலமிகளின் குறுக்கீடாகும். 23 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்து வளர்ந்த இளைஞர் சமூகத்துக்கு முஸ்லிம்கள் வடக்கில் வாழ்ந்த வரலாறு, அவர்களுக்கு இங்கே வாழும் உரிமையும் காணி பூமியும் உண்டு என்ற விடயங்கள் தெரியாதிருக்கலாம். பழைய வரலாற்றை இளைஞர்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய தார்மீகக் கடமை பெரியவர்களுக்கும் உண்டு என்பதை அவர்கள் மறுக்க முடியாது.

முஸ்லிம்களுக்கு உரிமையான வயல் காணிகளில் மற்றவர் அத்துமீறி பயிர் செய்கின்றனர். காணிகளை விடாமல் அடம் பிடிக்கின்றனர். வடபுல முஸ்லிம்கள் பயிர் செய்த காணிகள் 23 ஆண்டுகளில் காடாகிவிட்ட நிலையில் இந்த காணிகள் 1994, 1995 ஆம் ஆண்டுகளில் காணிக் கச்சேரி வைக்கப்பட்டு புதியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதால் முஸ்லிம்களின் காணிகள் பறிபோயுள்ளன. விடத்தல்தீவு முஸ்லிம்களுக்கு ஜெகநாதன் மி.தி. அவர்களால் அளிக்கப்பட்ட சன்னார் மேட்டுநிலக் காணி இன்று வேற்றிடங்க ளைச் சேர்ந்தவர்களுக்கு உரிமையாகி விட்டது. இந்த சுற்றாடலில் முஸ்லிம்கள் அரசிடம் காணி பெறுவதை சுயநலம் கொண்ட அதிகாரிகளும் மதவாதிகளும் தடை செய்வது வேதனையான விசயம்.

இடம்பெயரும்போது 1/4 ஏக்கர் காணியில் இருந்த இரு குடும்பங்கள் தற்போது 8,10 குடும்பங்களாகிவிட்ட காரணத்தால் புதிய குடும்பங்களுக்கு காணி தேவைப்படுகின்றது. இத்தகைய காணி போதாத பிரச்சினைதான் இன்று மீள் குடியேறும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.

மன்னார் தாராபுரத்தில் பிறந்து அகதி முகாமில் வாழ்ந்து அல்லல்பட்ட அமைச்சர் றிசாட்டை தவிர எந்த முஸ் லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் குடியேற்றத்தில் எந்தவித அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே முஸ்லிம் பிரதிநிதியான அமைச்சர் றிசாட் அவர்களே அரச காணிகளைப் பெற்று மீள்குடியேற்றத்தை நிறைவு செய்ய முயற்சிக்கிறார். அவரின் முயற்சிகளுக்கு வன்னி எம்.பி ஹுனைஸ் பாரூக் உத்வேகம் அளிக்கிறார். வன்னி எம்.பிக்கள் என்ற வகையிலும் இஸ்லாமி யர் என்ற வகையிலும் அவர்கள் எடுக் கும் முயற்சிகள் இனத்துவேசக் கண்கொண்டு மற்றவர்க ளால் நோக்கப்படுகின்றது. அதனால் அமைச்சர் ரிஷாட் மீது வீண்பழி சுமத்தும் கீழ்த்தரமான செயலில் அதிகாரிகளும் இனவாதிகளும் ஈடுபடுகின்றனர்.

(அடுத்த வாரம் தொடரும்)

(சுஐப் எம். காசிம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com