Contact us at: sooddram@gmail.com

 

குமரகுருபரன் இந்தமாதிரி கீழ்த்தரமாக பேசக்கூடாது

குமரகுருபரனின் அறிக்கைக்கு குகவரதன், ராஜேந்திரன் கூட்டாக பதிலடி

ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து விலகுகின்றார் என்று தெரிவித்து அக்கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் என். குமரகுருபரன் விடுத்த அறிக்கைக்கு அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரனும் உப செயலாளர் சண் குகவரதனும் பதிலடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

கடந்த சுமார் பத்து வருட காலகட்டத்தில் என் குமரகுருபரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினராக முதல் பாதியிலும், அடுத்த பாதியில் மேல்மாகாணசபை உறுப்பினராகவும் பதவி வகித்தார். நடைபெற்று முடிந்த தேர்தலில் மேல்மாகாணத்தில் பலத்த வாக்கு சிதறடிப்புகளுக்கு மத்தியில் எமது சொந்தச் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 51,000 வாக்குகளை பெற்று நமது கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், போதுமான வாக்குகள் கிடைக்காமையால் குமரகுருபரன் தனிப்பட்டமுறையில் வெற்றி பெறவில்லை. இந்த தோல்வியை தேர்தல் நடைபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்னரே அவர் உணர தொடங்கி விட்டார். இதிலிருந்தே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தனிப்பட்ட தோல்வி என்பது, தனக்கு ஒரு பத்தாண்டாக அரசியல் அந்தஸ்து தந்த கட்சியின் வெற்றியையே மாசுபடுத்தும் அளவுக்கு ஒரு மனிதனை எவ்விதம் கொண்டு செல்கிறது என்பதற்கு இன்று குமரகுருபரன் ஒரு எடுத்துகாட்டாக திகழ்கிறார்.

குமரகுருபரன் தானும் அங்கத்தவராக இருந்த, தானும் கலந்து கொண்ட, அரசியல் குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட கட்சி முடிவுகளை பகிரங்கமாக ஊடகங்களில் விமர்சனம் செய்து கட்சி கட்டுப்பாட்டை பாரதூரமாக மீறியுள்ளார். கட்சிக்கு உள்ளே உரையாடவேண்டியவற்றை வெளியே முழு நாட்டுக்கும் கேட்கும் விதத்தில் பேசியது இவரது செயற்பாட்டில் காணப்படும் மிகப்பெரிய பாரதூர முரண்பாடு ஆகும். கடந்த மார்ச் 29 ஆம் திகதி கொழும்பில் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் தினத்துக்கு முன்னர் 25ஆம், 26ஆம் திகதிகளில் தொலைகாட்சி நிகழ்வு ஒன்றில் நமது கட்சியில் இருந்து வெளியேறி அரசுடன் இணைந்துகொண்ட பிரபா கணேசனுடன் ஒன்றாக அமர்ந்து நமது கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த இரண்டு நாள் நிகழ்சிகளும் இப்போதும் யூடியூப் வலையில் காணப்படுகின்றன. தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டே நாள்கள் இருக்கும்போது இவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு தலைவரை அரசியல் நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி விமர்சித்த விதம் கண்டு தலைநகர தமிழ் சமூகம் அதிர்ச்சியுற்றது.

அதையடுத்து தேர்தல் முடிவுற்ற பின் ஏப்ரல் முதலாம் திகதி மற்றொரு தொலைகாட்சி நிகழ்வில் கலந்து கொண்டு கட்சி நிலைபாடுகளை குமரகுருபரன் மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதன்பிறகு கடந்த ஞாயிற்றுகிழமை 6 ஆம் திகதி, அரசின் தமிழ் மொழியிலான பிரசார பீரங்கியாக அரசு கட்டுப்பாட்டில் வெளியாகும் தினகரன் வாரமஞ்சரியில் (இது இவர்களது அதாவது குகவரதன், ராஜேந்திரன் கற்பனை) இடம் பெற்ற அவரது முழுபக்க நேர்காணலில் கட்சி தலைவரையும், கட்சி நிலைபாடுகளையும் மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில் ஒரு இடத்தில் "இன நல்லிணக்கம் காணவேண்டுமென்றால் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தி விட்டு அரசுடன் இணைந்து செயற்படலாமே" என தலைவர் மனோ கணேசனை கிண்டல் செய்துள்ளார். மேல்மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க களமிறக்கிய குழுக்களை பின்தள்ளி நடைபெற்று முடிந்த தேர்தலில் நமது கட்சி சவால்களுக்கு மத்தியில் சிங்கள நாட்டு தலைநகரில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் தமிழ் மக்களின் அதிகப்படியான மக்களாணையை பெற்றுள்ளது.

ஆனால் கட்சிக்கு மக்கள் தந்த இந்த வெற்றியை கொண்டாடி, பிரதி தலைவர் என்ற முறையில் இந்த வெற்றியை மென்மேலும் முன்னெடுப்பதை விடுத்து, தான் தனிப்பட்ட முறையில் வெற்றி பெற்று பதவி பெறவில்லை என்ற ஆற்றாமை காரணமாக என். குமரகுருபரன் தோல்வியின் விரக்தியில் முறை தவறிய கருத்துகளை வெளியிட தொடங்கிவிட்டார். நமது மக்கள் தேர்தலில் வாக்களித்த அந்த மை காய்வதற்கு முன்னரேயே, உருவாகியுள்ள எழுச்சிகரமான சு+ழலை மாசு படுத்தும் விதமாக, குமரகுருபரன் கூச்சல் எழுப்பி வருகிறார். தலைநகர தமிழ் மக்களிடம் தோற்றுபோயுள்ள அரசாங்கத்தில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதியுடன் ஒன்றாக அமர்ந்து, அரசு ஊடகங்களை பாவித்து, அரசின் சதி முயற்சிகளுக்கு துணை சேர்க்கும் விதத்தில் குமரகுருபரன் நடந்துக்கொண்டு ள்ளார். கட்சியில் பொறுப்புள்ள பிரதி தலைவர் பதவியில் இருந்து கொண்டு, இவை அனைத்தையும் குமரகுருபரன் செய்து முடித்த பிறகே வேறு வழியில்லாமல் நமது கட்சியின் அரசியல்குழு கடந்த திங்கட்கிழமை 7ம் திகதி கட்சி தலைமையகத்தில் கூடி ஏகமனதாக முடிவு செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். பொய்தோற்றம் தற்போது கட்சியின் அரசியல்குழு ஒழுங்கு நடவடிக்கை எடுத்த பிறகு, கட்சி கட்டுப்பாட்டை மீறிய தனது குற்றங்களை நியாயப்படுத்தி கொண்டு, அதற்கு "ஜனநாயகம்" என்றும், "பாசிச தலைமைக்கு தவறை சுட்டிக்காட்டுகிறேன்" என்றும், "உண்மையை கூறுகிறேன்" என்றும் போலித்தனமான தலைப்புகளை வழங்கி "ஜனநாயகத்துக்காக போராடியவர்" போன்றதான ஒரு "பொய்தோற்றம்" காட்டும் கருத்துகளை குமரகுருபரன் இணையத் தளங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.எந்த ஒரு நாட்டில், எந்த ஒரு அரசியல் கட்சி, பொறுப்பான பிரதி தலைவர் பதவியில் இருந்தபடி இத்தகைய மோசமான கட்டுப்பாட்டு மீறல்களை செய்யும் நபரை சகித்து கொள்ளும் என குமரகுருபரனிடம் நாம் வினவ விரும்புகிறோம். அதிலும் கொள்கை தடம் பிரண்ட, நாடாளுமன்ற உறுப்பினரான தனது சொந்த சகோதரரையே கட்சியை விட்டு விரட்டியடித்த நமது தலைவர் மனோ கணேசன் இதை எப்படி சகித்து கொள்வார் என நாம் வினவ விரும்புகிறோம். நடைபெற்ற மேல்மாகாணசபை தேர்தலில் நமது கட்சி நமது சொந்த ஏணி சின்னத்தில் தனித்துவமாக போட்டியிட்டிருக்காமல், ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்பதுதான் குமரகுருபரனின் பிரதான வாதம். தனது இப்போதைய விமர்சன கருத்துகள் அனைத்தையும் சொல்லி முடிக்க, நடைபெற்ற தேர்தலில் நமது கட்சியின் சார்பிலேயே போட்டியிட்டு தோல்வியடையும் வரை அல்லது தோல்வி கண்ணுக்கு தெரியும் வரை குமரகுருபரன் காத்திருந்துள்ளார்.

மேல்மாகாணசபை தேர்தலில் தனித்து ஏணி சின்னத்தில் போட்டியிடும் முடிவை குமரகுருபரனும் கலந்துகொண்ட அரசியல் குழு கூட்டம் எடுத்திருந்தது. அரசியல் குழுவில் தனது கருத்தை கூறி பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஒப்புதலை பெறவேண்டும். அதுதான் ஜனநாயகம். அது முடியாமல் போய் எடுக்கப்படும் முடிவுகளில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டால் கட்சியில் இருந்து அல்லது அரசியல் குழுவில் இருந்து வெளியேற வேண்டும்.

இதில் எதையும் செய்யாமல், அரசியல் குழுவின் முடிவின் அடிப்படையிலேயே குமரகுருபனும் நமது கட்சியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டு, ஏணி சின்ன வேட்பாளராக போட்டியிட்டார்.

இன்று தேர்தலில் தோல்வியடைந்தவுடன் தானும் கலந்துகொண்டு அரசியல்குழு எடுத்த முடிவை, மறந்துவிட்டு தலைவரை தனிமைபடுத்தி விமர்சனம் செய்கிறார். ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்று இருந்தால் குமரகுருபரன் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பார் என்பது இவர் இன்று நடந்துகொள்ளும் முறையில் தெரிகிறது.

இன்று இவருக்கு தான் வெற்றி பெற முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. ஆகவே ஜனநாயக வரம்புகளை மீறி கூச்சல் எழுப்பி மக்களை குழப்புகிறார். இது என்ன ஜனநாயகம் என குமரகுருபரனிடம் கேட்கின்றோம். ஊடக தடை கிடையாது ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பதற்கும், நியாயமான கருத்துக்களைச் சொல்வதற்கும் எவருக்கும் தடை இல்லை. தானும் சேர்ந்து எடுத்த கட்சி முடிவுகளை பகிரங்கமாக விமர்சிப்பதற்கு தான் தடை. மஹிந்தவின் தடை பல தாண்டி "எங்கள் ஐக்கியம், எங்கள் வாக்கு, எங்கள் பலம்" என்ற கோ'த்தின் அடிப்படையில் நாம் பெற்ற தனித்துவ தமிழின வெற்றியை கொச்சை படுத்துவதற்குதான் தடை.

இது குமரகுருபரனுக்கு நன்கு தெரியும். ஆனால் ஒன்றும் விளங்காத அடம் பிடிக்கும் சிறு குழந்தையை போல் நடந்துகொள்கிறார். தேர்தல் தோல்விகளுக்கு காரணம் தேட வேண்டும் உண்மையில் கடந்த பத்து வருடங்களாக மாநகரசபையிலும், மாகாணசபையிலும் கட்சி வழங்கிய பதவிகளை அனுபவித்து வந்த இவர், இந்த மேல்மாகாணசபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இதற்கு முன்னர் 2010ம் வருடம் நடைபெற்ற கொழும்பு மாவட்ட பாராளுமன்ற தேர்தலிலும் அவருக்கு வேட்பாளர் நியமனத்தை கட்சி வழங்கி இருந்தது. அதிலும் அவர் தோல்வியடைந்தார்.

கடந்த பத்து வருடங்களாக பதவியில் இருந்தாலும் அவரால் வாக்காளர்களின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போய் விட்டது. தனது பதவி காலத்தில் காத்திரமாக எதையும் குமரகுருபரன் செய்துவிடவில்லை என்பதையும், மேல்மாகாணசபையை ஒரு மேடையாக பாவித்து, இந்த காலகட்டத்தில் தமிழ் இனத்தின் அதிஉயர் எதிர்பார்ப்பான "அதிகார பகிர்வு" கோட்பாட்டை வலியுறுத்தவில்லை என்பதையும் இது காட்டுகிறது. மேல்மாகாணசபையில் நமது கட்சியின் குழுத்தலைவராக இருந்த குமரகுருபரன் ஒரு நாளும் சபையில் உரை நிகழ்த்தவில்லை என்பதும், விவாதங்களில் கலந்துகொள்ளவில்லை என்பது சோக வரலாறு.

தன் உடல் நிலையை காரணம் காட்டி சபை நிகழ்வுகளில் காத்திரமாக பங்கு பற்றுவதை அவர் தவிர்த்து வந்தார். ஆனால், தொடர்ந்தும் பதவி மட்டும் வேண்டும் என்பதில் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், மக்கள் அவருக்கு உரிய பதிலை வழங்கி விட்டார்கள். தனது தொடர் தோல்விகளுக்கு மூல காரணம் என்ன என்பதை குமரகுருபரன் தேட வேண்டும். அதை விடுத்து வெற்றி பெற்றவர்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, தேர்தல் தோல்வியின் பிறகு வெற்றி பெற்றவர்களையும், தன்னை விட அதிக வாக்கு பெற்றவர்களையும், தனக்கு பத்து வருட அரசியல் வாழ்வு தந்த தலைவரையும், கட்சியையும் தரக்குறைவான முறையில் விமர்சித்து சிறு பிள்ளைத்தனமாக கருத்து வெளியிடுவது பண்பற்ற செயல்.

வரலாற்றை மறந்துவிட்டார் உண்மையில் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களது மறைவுக்கு பிறகு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் குமரகுருபரன் பதவி இறக்கம் செய்யப்பட்டார். இதுதான் உண்மை. இந்நிலையில் நமது கட்சியில் வந்து குமரகுருபரன் இணைந்து கொண்டார். தனது மறைந்த தந்தை வீ.பீ. கணேசன் அவர்களின் நண்பர் என்ற ஒரே காரணத்தால், அவருக்கு அன்று நமது கட்சியில் அடைக்கலம் கொடுத்து, அந்தஸ்து தந்தவர் நமது தலைவர் மனோ கணேசன் ஆகும்.

இதே காரணத்தால்தான் குமரகுருபரன் தனது உடல் பருமன் தொடர்பான நலக்குறைவு காரணமாக, கடந்த காலங்களில் கட்சி பொது செயலாளர் பணியையும், மக்கள் பிரதிநிதி பணியையும் ஆற்றுவதில் விட்ட பல தவறுகளை பொறுத்துக்கொண்டு தலைவர் அனைத்து பொறுப்புகளையும் தன் தலையிலேயே தூக்கி போட்டுக்கொண்டு அமைதி காத்தார். இந்த உண்மை வரலாற்றை குமரகுருபரனின் மனசாட்சி மறந்து விட்டது. கட்சி பிளவு கிடையாது; தனிநபர் விவகாரம் கட்சியை விமர்சிக்கும் சஜpத் பிரேமதாச மீது ரணில் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆகவே தன் மீது ஏன் நடவடிக்கை என குமரகுருபரன் முட்டாள்தனமாக கேள்வி எழுப்புகிறார். ஐக்கிய தேசிய கட்சியில் கட்சியை பகிரங்கமாக விமர்சித்த பலருக்கு இன்று நியமனம் வழங்காமல் ரணில் விக்கிரமசிங்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆனால், சஜீத் மீது நடவடிக்கை எடுத்தால் கட்சி பிளவு படும் என்பதால் அது எடுக்கப்படவில்லை. குமரகுருபரன், சஜீத் பிரேமதாச அல்ல. இன்று நாம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அவருக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் கைகோர்க்க கட்சியில் ஒருவரும் இல்லை என்பது அவருக்கு தெரியும். அவரது செல்வாக்கு கட்சியில் எந்தளவு என்பது அவருக்கு நன்கு தெரியும். தலைவர் பெயரை சொல்லி தலைவரின் நிழலிலே, வாக்கு வாங்கி, பதவியில் இருந்த குமரகுருபரன் என்ற பாம்பு, தன்னை பரமசிவனாக கருதிக்கொள்ள கூடாது. இது தனிநபர் ஒழுங்கு நடவடிக்கை விவகாரம்.

கட்சி பிளவு கிடையாது என்பதற்கு நாங்களே சாட்சி. சிங்கள பெண்மணி சகோதரி பிரியாணி குணரத்ன நமது கட்சியில் இருந்து வெளியேறிய சில நபர்கள் அச்சொட்டாக சொல்லிய அதே பல்லவியைதான் குமரகுருபரனும் பாடுகிறார். முதலில் சகோதரி பிரியாணி குணரத்ன யார் என்பதை குமரகுருபரனுக்கு நாம் ஞாபகப்படுத்துகிறோம். பிரியாணி கட்சிக்குள் திடீரென வந்து நுழைந்தவர் அல்ல. 2006 ஆம் ஆண்டு கடத்தல், காணாமல் போதல், படுகொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக கொழும்பில் மக்கள் கண்காணிப்பு குழுவை தலைவர் மனோ கணேசன், நடராஜh ரவிராஜ் எம்பி, சிறிதுங்க ஜயசு+ரிய ஆகியோர் ஸ்தாபித்தனர். அந்த அமைப்பின் செயலாளராக ரவிராஜpன் சிபாரிசின் அடிப்படையில் தலைவரால் நியமிக்கப்பட்டவர்தான், பிரி யானி குணரத்ன ஆகும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை முதுமாணி பட்டதாரி. மனித உரிமைகள் பற்றிய அவரது ஆய்வின் போது நடராஜ ரவிராஜுக்கு அறிமுகமாகி அதன்மூலமே நமது கண்காணிப்பு குழுவுக்கும், கட்சிக்கும் அறிமுகமானவர். அன்றைய ஐநா மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் இலங்கை வருகையை, மக்கள் கண்காணிப்பு குழுவின் சார்பாக முன்னின்று ஒழுங்கு படுத்திய, பேரினவாதத்திற்கு எதிரான மனித உரிமை போராளி. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் கிராமிய பிரிவின் இயக்குனாராக இருந்துகொண்டு, போர் நிறுத்த காலகட்டத்தில், கிளிநொச்சி சென்று அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனை சந்தித்து கலந்துரையாடினார் என பிரியாணி மீது விமல் வீரவன்ச எம்பி பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியதால் புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்.

இதுவே சகோதரி பிரியாணி தொடர்பாக நாம் சொல்லக்கூடிய சுருக்கமான வரலாறு. இன நல்லிணக்கத்தின் அடையாளம் "பிரியாணி குணரட்ண என்ற சிங்களப் பெண்மணிக்கு தன்னுடைய ஆசனத்தை வழங்கியது ஏன்? இது பெரும் அநியாயம்" என குமரகுருபரன் கூச்சல் எழுப்புகிறார். இவர் ஒரு விடயத்தை நேர்மையற்ற முறையில் திட்டமிட்டு மறைக்கிறார். ஆசனத்தை எவரும் எவருக்கும் தூக்கி கொடுக்க முடியாது. கட்சியிலே நியமனங்களை வழங்குவது கட்சியின் அரசியல் குழுவாகும். அதுவே இங்கே நடைபெற்றது.

தலைநகரில் தமிழின உரிமை குரலை எழுப்பும் அதேவேளையில், நாம் நேர்மையான இன நல்லிணக்கத்துக்கும் தயாராக இருக்கின்றோம் என்பதை அடையாளப்படுத்தும் நோக்கில் கொழும்பு மாநகரசபைக்கு ஒரு முற்போக்கு சிங்களவரை நியமிக்க வேண்டும் என நமது கட்சி தீர்மானித்தது. அவ்வேளையில் அதற்கு பொருத்தமானவராக சகோதரி பிரியாணி குணரத்ன அரசியல் குழுவால் தெரிவு செய்யப்பட்டார்.

2012 ஆம் வருட ஜனவரியில் நடைபெற்ற அரசியல்குழு கூட்டத்தில் இந்த இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவை தேர்தல் ஆணையாளருக்கு பொது செயலாளர் என்ற முறையில் அறிவித்தவரே குமரகுருபரன் ஆகும். இதைதான் இப்போது இவர் அநியாயம் என்கிறார். தமிழர் என்ற போர்வையில் வந்து சோரம் போகும் ஜந்துக்களை விட மாற்று இனத்து முற்போக்காளர்கள் பல மடங்கு மேல் என்பதை குமரகுருபரனுக்கு ஞாபகப்படுத்துகிறோம். இதே அடிப்படையில்தான் இன்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன நமது கட்சியின் பெயரில் தெகிவளை-கல்கிசை மாநகரசபையில் உறுப்பினராக இருக்கின்றார். நடைபெற்று முடிந்த தேர்தலில் நமது கட்சி தெகிவளை பகுதியில் சுமார் 3,000 வாக்குகளை பெற்றுள்ளது.

ஆனால், விக்கிரமபாகுவின் கட்சி 100 வாக்குகளைகூட பெறவில்லை. இருந்தும் நாம் அவருக்கு அங்கீகாரம் அளித்து வருகிறோம். ஏனென்றால் நமது கட்சி, தமிழர் உரிமை கோஷம் எழுப்பும் கட்சியே தவிர, தமிழ் இனவாத கட்சி அல்ல. தலைவரின் வழிகாட்டல் இதுவாகும். இதை குமரகுருபரன் அறியாதவர் அல்ல. தமிழின தனித்துவ ஐக்கியம் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடபகுதி தேர்தல்களில் ஒத்துழைப்பு வழங்குகிறோம். அதுபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு தெற்கில் ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த அடிப்படையிலேயே நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்பது நமது கொள்கையாகும். ஐக்கிய தேசிய கட்சியுடன் போட்டியிட்டு நாம் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கையில் இந்த தமிழின ஐக்கியம் தீர்மானிக்கப்படுவதில்லை.

தமிழின தனித்துவ ஐக்கியம் என்பது அதைவிட உயர்ந்த விடயம் ஆகும். ஆகவே நாம் இன்று தனித்துவமாக நாம் பெற்றுள்ள இரண்டு ஆசனங்கள் என்பது ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து பெறும் நான்கு ஆசனங்களுக்கு சமன் என்பதை தமிழ் தேசிய உணர்வாளர்கள் அறிவார்கள். அடுத்த தேர்தலில் படிப்படியாக இந்த எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இந்நிலையில் பெரும்பான்மை கட்சி சின்னத்திலேயே கட்டாயமாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும் என குமரகுருபரன் சொல்வது நாம் ஏற்றுகொள்ள முடியாது. ஐதேகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டிருந்தால், வரையறுக்கப்பட நியமனங்களே கிடைத்திருக்கும்.

இந்நிலையில் கட்சியில் உள்ள இளையோரை பின்தள்ளிவிட்டு தானே நியமனம் பெற்று, தானே மீண்டும் பதவி பெறும் சாத்தியம் அதிகமாகியிருக்கும் என்ற கணக்கின் அடிப்படையிலேயே இன்று குமரகுருபரன் கருத்து வெளியிடுகிறார். அந்த எதிர்பார்ப்பு கைகூடாததன் விளைவாகவே இன்று நமது கட்சியின் தனித்துவ பயணத்தை குமரகுருபரன் விமர்சிக்கிறார் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஐதேக மீதான காதல் ஐதேகவின் கொழும்பு மாவட்ட எம்பி ஒருவருடன் குமாரகுருபரனுக்கு இருக்கின்ற நெருக்கம் எமக்கு தெரியும். நமது கட்சியை ஐதேகவிடம் கொண்டு சென்று இவர் அடவு வைக்க போட்ட திட்டமும் எமக்கு தெரியும். இந்த பிரிவுக்கு பிறகு அவர் கடைசியில் ஐதேகவில் போய் நிற்க போவதும் எமக்கு தெரியும். தனது தனிப்பட்ட சொந்த வயிற்று பிழைப்பு அரசியலுக்காக கட்சியை பெரும்பான்மை கட்சியிடம் காட்டிகொடுக்கும் நபர்களை வரலாறு மன்னிக்காது என்பதை குமரகுருபரன் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐதேகவுடன் கூட்டு இலங்கையில் தேசிய கட்சிகள் என்று தம்மை சொல்லிக்கொள்ளும் பெரும்பான்மை கட்சிகள், சிங்கள பௌத்தத்தைதான் தமது தேசிய கொள்கையாக கடைபிடிக்கின்றன. என்றைக்கு, மூவினத்தவரையும் உள்ளடக்கி "நாம் இலங்கையர்" என்ற உண்மையான தேசிய கொள்கையை பெரும்பான்மை கட்சிகள் கடைபிடிக்கின்றனவோ அதுவரை நாம் நமது இனரீதியான கட்சிகளை கலைக்க முடியாது. பெரும்பான்மை கட்சிகளில் நேரடியாக இணையவும் முடியாது. ஐதேகவுடன் நாம் கடந்த காலங்களில் கூட்டு சேர்ந்துள்ளோம். இனியும் நாம் சேருவோம். ஆனால், நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டத்தின் காரணமாக உருவாகும் அந்த கூட்டணிகள், தேர்தல் கூட்டுகளே தவிர, கொள்கை கூட்டுகள் அல்ல. உள்ளூராட்சிசபை தேர்தல்களில் இருந்து மாகாணசபை, பாராளுமன்றம் என்று எல்லா தேர்தல்களிலும் நாம் ஐதேகவுடன் கூட்டு சேர்ந்து யானை சின்னத்தில்தான் கட்டாயம் போட்டியிட்டாக வேண்டும் என்பது பொது விதி யல்ல.

அப்படியென்றால் எமக்கு எதற்கு ஒரு பதிவு செய்யப்பட்ட தனியான கட்சி? குமரகுருபரன் மேல்மாகாணசபையில் கிடைக்கும் ஒரேயொரு ஆசனத்துக்காக, தமிழின தேசிய பயணத்தை அழிக்க முயலக்கூடாது.

தேர்தல் கூட்டு என்பது சம்பந்தப்பட்ட இரண்டு கட்சிகளும் விரும்பி செய்து கொள்வதாகும். பலவந்தமாக ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் அரசியல் வல்லுறவு செய்ய முடியாது. அவர்களுக்கு நாம் தேவை, நமக்கு அவர்கள் தேவை, என்று வரும்போதுதான் தேர்தல் கூட்டு ஏற்படுகிறது. இனி வரும் எதிர்காலத்தில் கொழும்பில் தமிழ் வாக்குகள் தேவையென்றால் ஐதேக எங்களை நாட வேண்டும். அந்த வெற்றிகரமான சூழலை நாம் இன்று ஏற்படுத்திவிட்டோம். அதை அழிக்க குமரகுருபரன் பேரினவாதிகளுடன் கூடி சதி செய்ய கூடாது. பொது எதிரணி இந்த நாட்டில் இன்னமும் பொது எதிரணி உருவாகவில்லை. நாம் ஒரு எதிரணி கட்சி. நாம் எப்படி போட்டியிட்டாலும் இந்த மகிந்த அரசுக்கு நாம் எதிரானவர்களே. ஐதேகவில் போட்டியிட்டால் மாத்திரமே எதிரணி என சொல்வது போக்கிரித்தனமாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com