Contact us at: sooddram@gmail.com

 

யாழ்ப்பாணத்து நிலத்தடி நீர் மாசுபடுதல் பற்றி பத்தமநாபா ஈபிஆர்எல்எவ்

சுன்னாகம் பிரதேச கிணறுகளில் எண்ணெய் கலப்பு. தீர்வை எட்டாமலே கவனிப்பை இழந்துவரும் ஜீவாதாரப் பிரச்சனை. பாரதூரத்தன்மையை புரிந்து செயற்பட வேண்டும். பிரதேச மக்களின் பதட்டத்தை போக்குதலும் வேண்டும். கடந்த 30, 40 வருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் உவர் நீராகும் சாத்தியம் உள்ளதாக உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்கள், ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப் பட்டது. தொடர்ந்து வெவ்வேறு காலகட்டங்களில் இது பற்றித் தெரிவிக்கப்பட்டு வந்தது. மரம், செடி, கொடிகளை அழித்து கட்டிடங்களை உருவாக்குவது, விவசாயிகளின் அபரிமித உரப்பாவணை, மித மிஞ்சிய நீர் இறைப்பு, நிலத்தில் வீசப்பட்ட குண்டுகள், விதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் என்பன நிலத்தடி நீரையும் மண்ணின் தன்மையையும் பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சுற்றாடல் பாதுகாப்பு பற்றி அக்கறையற்ற தொழில்துறை உருவாக்கம், இடத்தெரிவு என்பவற்றையும் இங்கு குறிப்பிடலாம்.


யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலத்திற்குக் கீழ் ஒரு ஆற்றோட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. தொண்டமானாறு, நிலாவரை மற்றும் கைதடி கீரிமலை பகுதிகளுக்கிடையேயான நிலத்தடி தொடர்பு பற்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஒரு இடத்தில் நீர் மாசடையும் போது குடாநாட்டின் பெரும்பகுதி நீர்வளம் பாதிப்புக்குள்ளாகும் நிலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
நாவற்குழி, தொண்டமானாறு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடலுடன் கலக்கும் உப்பாறு, வடமராட்சி கடல்நீர் ஏரி ஆகியவற்றை உள்ளடக்கி முன்வைக்கப்பட்ட ஆறுமுகம் திட்டம் மூலம் இந் நீர் ஏரிகளில் மழைகாலங்களில் நீரை சேமித்து தண்ணீர் கடலில் சேருவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் உவராவதை குறைக்கலாம். நீண்டகாலத்தில் தடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் காலத்திற்குக் காலம் பல தடவை முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் இன்னும் முழுமையடையவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் தீவுப்பகுதி, வடமராட்சி மற்றும் யாழ் நகரம் , பூநகரி பகுதிகளின் குடிநீர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இரணைமடு குளத்திலிருந்து குடிநீரை விநியோகிப்பது பற்றி துறைசார்ந்த வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக பல நாடுகள் இத்திட்டத்திற்கு உதவ முன்வந்தன. ஆனால் வடமாகாணசபை மற்றும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் சிலரது ஒப்புதலின்மை மற்றும் எதிர்ப்பு காரணமாக இந்த குடிநீர் விநியோகத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இந்த வருடமும் மழைக்காலத்தில் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்த போது குளத்தில் நீரை தேக்கி வைக்க முடியாமல் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் கடலுக்குச் செல்ல விடப்பட்டது.
மனித குலம், ஜீவராசிகள், எமது இயற்கையின் வாழ்வு, பண்பாட்டின் குருதியோட்டம் இந்த தண்ணீர்.
யாழ் குடாநாட்டின், செம்மண் பிரதேச நீர் வளம் மக்களின் பெரும் சொத்து என்ற ஆழ்மன உணர்வு இல்லாமல் போனதால் தற்போது யாழ் குடாநாட்டின் அச்சுவேலி, சுன்னாகம், திருநெல்வேலியை உள்ளடக்கிய பிரதேசங்களின் தண்ணீர் வளத்திற்கு ஆபத்து வந்துவிட்டது.
சுன்னாகம் மின்சார நிலையம் 50 களில் இருந்து செயற்பட்டு வந்தபோதும் கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்துவிடும் சாத்தியம் பற்றி பெரிதாக நாம் அலட்டிக்கொள்ளவில்லை.
இப்போது சுன்னாகம் மின்சார நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பதும் தொடர்ந்து பரவிச் செல்வதும் கண்டறியப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக ஆண்டாண்டு காலமாக இந்த தண்ணீருடன் தான் மக்களின் வாழ்வு கட்டியமைக்கப்பட்டது. அந்த மக்களின் வாழ்விற்குப் பங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது.
1989 காலப்பகுதியில் புகையிரதப் போக்குவரத்து தடைப்பட்டதைத் தொடர்ந்து மின்சார நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பாளர்களின் கிணறுகளில் எண்ணெய் மணம் உணரப்பட்டது. இதன் பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தப் பிரதேச கிணறுகளின் நீரில் எண்ணெய் கலந்திருப்பது அவதானிக்கப்பட்டது. புதிய தனியார் மின்நிலையம் நிறுவப்பட்ட பின்னர் 2012இல் தான் இந்தப்ப பிரச்சனை தீவிர கவனிப்புக்கு உள்ளானது. கழிவு எண்ணெய் கலந்திருப்பது தெளிவாகத் தெரியவந்தது.
உள்ளுர் பிரஜைகள் குழுவினர், சமூக அக்கறையாளர்கள் இந்தப் பிரச்சனையை சுகாதாரத்துறை, உள்ளுராட்சி நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை, நீர்வழங்கல் சபை உட்பட பொறுப்பும் அதிகாரமும் உடைய அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர். ஆனால் காலா காலத்தில் இதன் பாரதூரத்தன்மையை உணர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. என்பது பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட மக்களின் மனக்குறையாகும். இப்போது அனைவரும் இந்தப் பிரச்சனையில் அக்கறைகாட்டி வருகின்றபோதும் நிலைமை கட்டுமீறி விட்டது.
இது வெறும் தண்ணீர் பிரச்சனை மாத்திரமல்ல ஒரு சமூகத்தின் இருப்பு, வாழ்வு பற்றி எமது பல்லுயிரியல் சகவாழ்வு பற்றிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த எண்ணெய் கலப்பினால் குடாநாட்டின் ஏனைய இடங்களுக்கு குடிநீரை வழங்கிய சுன்னாகம் பிரதேசம் இப்போது குடிநீருக்காக உள்ளுராடச்p நிர்வாகத்தின் தண்ணீர் பவுசர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது.
இந்த எண்ணெய் கலப்பினால் பாதிக்கப்பட்ட கிணறுகளின் நீரை பயன்படுத்துவது இப்பிரதேச மக்களின் உடல் நலத்திற்கு கேடாகியிருப்பதுடன் கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதால் அவற்றின் இறைச்சி மற்றும் விவசாய விளைபொருட்கள் வாயிலாக எதிர்கால சந்ததியே பாதிப்புக்கு உள்ளாக நேரும் எனவும், ஈயம் போன்ற உலோகங்கள் இந்த கழிவு எண்ணெயுடன் சேர்ந்து கிணற்று நீரில் கலந்திருப்பின் அந்தக் கிணறுகள் பாவனைக்கு தடைசெய்யப்பட வேண்டும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது இவ் எண்ணெய் கலப்பின் பாரதூரத்தன்மையை உணர்த்துவதாயுள்ளது.
முடிந்தால் முடியாததொன்றுமில்லை.
இந்தப் பிரச்சனையை ஆறப்போடப்படுவதால் நிலைமை மேலும் தீவிரமடையலாம். எனவே உடனடியாகவே இது தொடர்பான நிபுணர்களை முழுநேரமாக களத்தில் இறக்கியாக வேண்டும்.
சமுத்திரங்களில் எண்ணெய் அகற்றும் தொழில்நுட்பம் இருக்கிறது. அதேபோல் நிலத்தடி நீரில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை என்றில்லை.
இன்று நீர் மாசடைந்தால் அதனை சுத்திகரிக்கும் தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. இதற்கு எமது உள்ளுர், பலம் பெயர் துறைசார் நிபுணர்களின் அறிவும் ஆற்றலும் பெறப்பட வேண்டும். பல்வேறு தரப்பினரும் இணைந்து முயற்சி செய்வதன் மூலம் எம் நீர்வளத்தை பாதுகாக்க முடியும்.
பஞ்சாப் பொற்கோயில் குளத்தை தூர் வாருவதற்கு சீக்கிய சமூகமே திரண்டது. இது சமூகப் பிரக்ஞை கொண்ட சமுதாயத்திற்கு அடையாளமும் முன் உதாரணமுமாகும்.
யார் மீதும் குற்றத்தை போடுவதை விடுத்து இதற்கான உதவிகளைச் சாத்தியமான இடங்களில் இருந்து விரைவாகப் பெற முயல வேண்டும்.
“கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றி நாட்டத்தில் கொள்ளாது நாளில் மறக்கும்” அலட்சியம் தண்ணீருக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை நீக்குவதற்கு எவ்விதத்திலும் உதவாது.
தண்ணீர் வளம் சிறப்பாக உள்ள இலங்கையில் நீர் மாசடைதல் ஒரு பொதுவான பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.
வட மத்திய மாகாணத்தில் 20 வீதமானவர்களுக்கு சிறுநீரக நோய்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வவனியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதேபோல் நீரில் இரசாயணக் கழிவுகள் கலப்பதை ஆட்சேபித்து வெலிவேரியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதும் அதில் மூன்று கிராமவாசிகள் உயிரிழந்ததும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டியதாகும்.
காப்பிரேட் உலகம் சாதாரண மக்களின் வாழ்வை கண்டு கொள்வதில்லை. 1977இல் திறந்த பொருளாதாரக் கொள்கை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயே எமது நீர் நிலைகள் மாசடையும் அபாயம் குறித்து பேசப்பட்டது.
இலங்கையின் நன்நீர் வளத்தை பாதுகாப்பதற்கான நிகழ்ச்சி நிரல் அரசாங்கங்களின் செயற்திட்டங்களில் உள்ளடக்கப்படவில்லை. இது மக்களின் ஜீவாதார நலன்கள் தொடர்பாக எவ்வளவு பிரக்ஞை இருக்கிறது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
சுன்னாகம் பிரதேசத்தில் கிணற்று நீர் மாசடைந்திருப்பதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நீர்வளத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் விசேட ஏற்பாடு செயலணி மத்திய மாநில அரசுகளால் துரிதமாக நிறுவப்பட வேண்டும்.
பத்திரிகை அறிக்கைகள், கலந்துரையாடல்கள், ஆய்வுகள், கவனயீர்ப்புக்கள் உண்ணாவிரதங்கள் மூலமாகத் தீவிரமாகப் பேசப்பட்ட சுன்னாகம் பிரதேச மக்களின் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பான பிரச்சனை எந்தவித தீர்வும் எட்டப்படாமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அல்லது மந்த நிலை அடைந்துள்ளது. ஆய்வு முடிவுகளோ, நியமிக்கப்பட்ட குழுக்களின் ஆலோசனைகள், பரிந்துரைகளோ பெறுபேறுகளோ இன்னும் மக்கள் முன் வெளிப்படுத்தப்படவில்லை.
எண்ணெய் கலப்பால் பாதிக்கப்பட்டுள்ள கிணறுகளின் நீரை பரிசோதித்து கிணறுகளை அடையாளம் காண்பதற்கான வழிமுறைகள் இலகுப்படுத்தப்பட வேண்டும். எண்ணெய் கலந்திருப்பதாக சந்தேகப்படும் கிணறுகளின் நீரை இலவசமாக பரிசோதித்துக கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுவது கழிவு எண்ணெய் கலப்பின் பாதிப்புக்களிலிருந்து பிரதேசவாசிகளை பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவும். எண்ணெய் கலப்புள்ள கிணற்று நீரை கால் நடைகளுக்கும், விவசாயத் தேவைகளுக்கும் சுத்திகரித்துப் பயன்படுத்தக் கூடிய எளிய முறைகள் பற்றியும் பிரதேச மக்களுக்குத தெளிவுப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய எளிய உபகரணங்களை தயாரிப்பதற்கு உதவியளித்தல் வேண்டும். இந்த எண்ணெய் கலப்பால் நோயாளிகளாகி விடுவோம். எமது எதிர்கால சந்ததி உடல் உள குறைபாடுடையவர்களாகி விடுவர் என பீதியடைந்திருக்கும் மக்களுக்கு உண்மை நிலைமையை விளக்கி அவர்களுக்கு ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான பாதிப்புக்களிலிருந்து விடுவிப்பதும் அவசியமாகும்.
பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நடமாடும் மருத்துவ சேவையினை மேற்கொள்வதும் குடி தண்ணீரை இழந்த மக்களுக்கு உடனடியாக தண்ணீர் தாங்கிகள் மூலம் நீர் விநியோகம் செய்வதும் அவசியமானதே. ஆனால் பாதிக்கப்பட்ட நிலத்தடி நீர் சுத்திகரிக்கப்பட வேண்டியது பிரதானமாகும்.
அதற்கான தொழில் நுட்பங்கள் எமது அண்டை நாடான இந்தியாவிலும், ஜப்பான் போன்ற வேறு நாடுகளிடமும் இருக்கின்றன. எனவே சகல பிரிவினரதும் ஒத்துழைப்பையும் பெறமுடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. தொய்வின்றி துரிதமாகச் செயற்படுவது அவசியம்.
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Pathmanabha EPRLF) 15-03-2015
சுன்னாகம் பிரதேச கிணறுகளில் குடிநீர் மாசடைந்திருப்பது தொடர்பாக பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் இனால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com