Contact us at: sooddram@gmail.com

 

உலகின் எந்த இடத்திலும் ஒரே நேரத்தில் ஒரே கட்சி அமைச்சரவையிலும் எதிர்க்கட்சியிலுமிருந்தது கிடையாது

தேசிய அரசாங்கம் பற்றி கலாநிதி ஜயதிலகா பேசுகிறார்

பல துறைகளில் நிபுணரான கலாநிதி தயான் ஜயதிலகா நாட்டில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பாக தனது கருத்தை ஒரு நேர்காணல் மூலம் வெளிப்படுத்தினார். ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதை கலாநிதி ஜயதிலகா ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் இரண்டு கட்சி முறைகளின் இயல்பான போட்டி நடைமுறையை அது தற்காலிகமாக நிறுத்தி விட்டதாக அவர் கருதுகிறார். இந்த நகர்வு ஓர் ஆபத்தான விலகலாக அவர் கருதுவதுடன் இலங்கை அத்தகைய தேவைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேள்வி: தேசிய அரசாங்கம் என்றால் என்ன? எந்த மாதிரியான தருணங்களில் உலகம் இந்தக் கருவினைப் பயன்படுத்துகிறது?

பதில்: தேசிய அரசாங்கம் என்பதை ஒரு கூட்டு அரசாங்கம் என்பதுடன் சேர்த்து குழப்பக் கூடாது, அது பல கட்சிகள் சேர்ந்த ஒரு அரசாங்கம். தேசிய அரசாங்கம் என்பது அனைத்து கட்சிகளும் சேர்ந்த அரசாங்கம் அல்லது ஆகக் குறைந்தது இரு பெரிய போட்டிக் கட்சிகளை ஒன்று சேர்ப்பது ஆகும். பல கட்சி ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கை என்பது, பல இடைவெளிகளிலும் இருந்து வரும் போட்டி மற்றும் தெரிவுகளில் இருந்து குடிமக்களுக்கு வேண்டிய சிறந்த பெறுபேற்றினை வழங்குவது என்பதாகும், சாதாரணமாக சந்தை ஒன்றில் நடப்பதைப் போல, போட்டியானது நுகர்வோருக்கு சிறந்த பெறுபேற்றினை உறுதி செய்கிறது. எனவே அத்தகைய போட்டிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி, மிகவும் உயர்வான எதிர்பார்ப்புகள் உள்ள சூழ்நிலைகளில் தான் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுகிறது.

20ம் நூற்றாண்டில் தேசிய அரசாங்கம் அல்லது பெரிய கூட்டணிகள் உருவாக்கப்பட்டது இரண்டாம் உலகப் போர் நடந்த சூழ்நிலை மற்றும் எதிரியின் ஆக்கிரமிப்பு (பிரித்தானியா) மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான அழிவுகளின் மீள் கட்டமைப்பு (ஜேர்மனி) போன்ற சந்தர்ப்பங்களின்போதே. இலங்கையில் இன்று அத்தகைய தொலைவிற்கு ஒப்பிடக் கூடியதாக எதுவும் இல்லை.

எனவே தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கியது, இரண்டு கட்சி முறையில் அமைந்துள்ள இயல்பான போட்டி நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது, இது ஆபத்தான ஒரு விலகல்.

கேள்வி: இலங்கையில் உண்மையில் உருவாக்கப்பட்டிருப்பது என்ன? அது ஒரு தேசிய அரசாங்கமா அல்லது அதற்கு வேறு பெயர் ஏதாவது உள்ளதா?

பதில்: உண்மையில் அதை ஒரு தேசிய அரசாங்கம் என அழைக்க முடியாது. ஏனென்றால் தேசிய விடுதலை அல்லது அதுபோன்ற வேறு தேவைகள் என்பனவற்றுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான திட்டங்கள் எதுவும் அங்கில்லை.

கேள்வி: அத்தகைய ஒரு அரசாங்கத்தில் ஜேவிபி மற்றும் ரி.என்.ஏ என்பன இணைந்து கொள்ளாததை நீங்கள் எப்படி பார்க்கிaர்கள்?

பதில்: மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்ற ஜேவிபி உதவியது. தேசிய நிறைவேற்றுப் பேரவையில் பணியாற்றியது ரணில் விக்கிரமசிங்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆகிய இருவரையும் பற்றி விமர்சனம் செய்யாமல் இருப்பது மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவை விமர்சிக்கும் அதேவேளை அமெரிக்கா, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் பிரதமர் மோடியின் அறிக்கை என்பன பற்றி மெளனம் சாதிப்பது, போன்றவை ஒரு எதிர்க்கட்சியாக இழந்தவற்றை பெற முயற்சிப்பதற்கு காலம் கடந்துவிட்டது. ரி.என்.ஏயினை பொறுத்தமட்டில் அதற்கு கூட்டுச் சேர வேண்டிய தேவையில்லை ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்கவின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு கையாளவேண்டிய காரணிகளாகச் சொல்லப்படும் பிராந்தியங்களின் ஒன்றிணைவு பொதியினை மிகவும் செளகரியமாக ஒன்றாக அது உணருகிறது.

கேள்வி: ஸ்ரீ லங்கா சு.க எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகிக்கும் அதேவேளை அந்தக் கட்சியை சார்ந்தவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிப்பது நெறிமுறைக்கு ஏற்றதா? சு.க அப்படியான ஒரு நகர்வை மேற்கொள்ள அதனை தூண்டியது எது?

பதில்: உலகின் எந்த இடத்திலும் ஒரே நேரத்தில் ஒரே கட்சி அமைச்சரவையிலும் மற்றும் எதிர்க்கட்சியிலும் இருந்தது கிடையாது. ஸ்ரீ.ல.சு.க அமைச்சரவையில் இருப்பதானால் எவ்வாறு அதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்திருக்க முடியும்? இது முற்றிலும் அபத்தமானதுடன் பாராளுமன்ற நிறுவனங்களையே கேலிக்கூத்தாக்குகிறது. இதற்கான காரணம் சு.க வின் உயர்மட்டத்தினரிடையே, ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சித் திட்டத்தின்படி வேலை செய்யும் சந்திரிகா குமாரதுங்கவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இவர்கள் அனைவரும் சந்திரிகா குமாரதுங்காவின் விசுவாசிகள், எனவே அது என்னதான் பொருத்தமற்றதாக இருந்தாலும் அவர்கள் அவரது பாட்டுக்கு ஏற்ப ஆடுகிறார்கள்.

கேள்வி: இந்த நகர்வுகள் யாவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர அரசியல் மீள் பிரவேசத்தை தடுப்பதை இலக்கு வைத்து நடத்தப்படுவதாக சிலர் கூறுகிறார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிaர்களா?

பதில்: அது ஒரு நோக்கம், ஆனால் அந்த ஒன்று மட்டும்தான் மற்றும் அதுதான் பிரதானமானது என்று இல்லை. பிரதான நோக்கம் சந்திரிகா மற்றும் ரணில் ஆகியோரின் நீண்ட கால நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, விசேடமாக மிகவும் பிரசித்தமான இனப்பிரச்சினை, அதேபோல சந்திரிகா குமாரதுங்கா, சோனியா காந்தியின் பாத்திரத்தையும் ஜனாதிபதி சிறிசேன மன்மோகன் சிங்கினது பாத்திரத்தையும் “ஏற்பதற்கான திட்டம். மற்றொரு நோக்கம் சீனாவுடன் இலங்கை கொண்டிருக்கும் பாதுகாப்பு நெருக்கங்களை பலவீனப்படுத்தி அதற்குப் பதிலாக மேற்கத்தைய அல்லது இந்திய அமெரிக்க ஆதரவை பதிலீடு செய்வது. ஏனென்றால் மஹிந்த ராஜபக்ஷ வலிமை பெற்ற பிரசித்தமான ஒரு தேசியத் தலைவர் இந்த மீள் காலனித்துவ மயமாக்கும் முழு திட்டத்துக்கும் அவர் தடையாக இருப்பார், அதனால்தான் மேலாதிக்கமுள்ள புதிய வீரர்கள் அவருக்கு எதிராக இயங்குகிறார்கள்.

கேள்வி: பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க அரசாங்கத்திலிருந்து விலகி அரசாங்கத்திலுள்ள சு.க குழுவினருடன் இணைந்து கொண்டதை நீங்கள் எப்படி ஆய்வு செய்வீர்கள்?

பதில்: அவர் யாருடைய கொத்தடிமையாகவோ அல்லது கைப்பாவையாகவோ இருக்க விருப்பம் இல்லாதவர், அவர் ஒரு சுதந்திரமான கல்வியாளர். துரதிர்ஷ்டவசமாக இந்தக் காரணத்தால்தான் அவர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை.

கேள்வி: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணியை சேர்ந்த சில கட்சிகள் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனா எதிர்க்கட்சித் தலைவராக்கப்பட வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளனவே? அந்தப் பதவி தனியாகப் போட்டியிட்ட டி.என்.ஏ. அல்லது ரி.என்.ஏ போன்ற கட்சிகளுக்குப் போகுமா?

பதில்: யாருக்கு அது சென்றாலும் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்திருக்க முடியாது. இந்த விடயத்தில் யாராவது நீதிமன்றம் செல்ல முடியும்.

கேள்வி: புதிய அரசாங்கம் மற்றும் புதிய பிரதமர் நியமனத்தைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. முன்னாள் பிரதமர்கள் மற்றும் அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர்கள் ஆகியோர் மெளனத்தை கடைப்பிடித்தார்கள். அதிலுள்ள சட்ட நுணுக்கங்கள் என்ன? பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த மக்களுக்கு அது அவமானம் என நீங்கள் நினைக்கவில்லையா?

பதில்: நான் சொன்னது போல, இறுதியாக சந்திரிகா, சோனியா காந்தியின் பாத்திரத்தை நடிக்கும் வாய்ப்பை பெற்றதுடன் இறுதியாக ஒரு மன்மோகன் சிங்கையும் கண்டுபிடித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மீதும் அவர் செல்வாக்குச் செலுத்துகிறார். அவரும் மற்றும் ரணிலும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அவர்கள் மங்கள சமரவீர மற்றும் கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ன போன்றவர்களின் கொள்கை இணைப்புகளுடன் வாழுகிறார்கள். இங்கு மற்றும் வெளிநாடுகளில் அவர்களுடன் வேலை செய்து இணக்கத்துக்கு வரக்கூடிய வேறு யாராவது இருக்கிறார்களா என்பது கடவுளுக்குத்தான் தரியும்.

கேள்வி: ஒரு மரியாதைக்குரிய கல்விமான் மற்றும் அரசியல் ஆய்வாளன் என்கிற வகையில் 100 நாள் திட்டம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? ஏப்ரல் 23ல் பாராளுமன்றம் கட்டாயம் கலைக்கப்பட வேண்டுமா அல்லது வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் அதிக சமயம் வழங்கப்பட வேண்டுமா?

பதில்: சு.க வேட்பாளருக்கு வாக்களித்துள்ள 59 லட்சம் பேரும் 100 நாள் திட்டத்துக்கு வாக்களிக்கவில்லை. எனவே சு.க அதை நடைமுறைப்படுத்த உதவ வேண்டும் என்பதற்கு இந்த பூமியில் ஏதாவது காரணங்கள் உள்ளனவா? சமநிலையில், அந்த திட்டம் ஒரு தீமையானது என நான் நினைக்கிறேன் ஏனென்றால் அதன் முக்கிய குறிக்கோள் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை அகற்றுவது அல்லது அதனை கடுமையாக குறைப்பது என்பதாகும். தேர்தல்களைப் பொறுத்தமட்டில் அரசியல் அமைப்பின் இறுதிக் காலக்கெடுவான ஏப்ரல் 2016க்கு முதல் தேர்தல்களை அவர்கள் நடத்த வேண்டும் அல்லது ஆட்சி சம்பந்தமான சட்ட நெருக்கடிகள் தோன்றும் மற்றும் முரண்பாடுகள் ஒன்று திரள்வது ஆட்சியினை நடத்துவதை அசாத்தியமாக்கும்.

தீபால் வர்ணகுலசூரிய

மொழிபெயர்ப்பு: எஸ். குமார்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com