Contact us at: sooddram@gmail.com

 

மாகாண சபைகளை பயனற்றதாக்கினால் பாதிக்கப்படுவது மாகாண மக்களே

* வடக்கில் இராணுவத்தை குறைப்பதற்கு சிங்கள தலைவர்களுக்கும் எண்ணம் வரவேண்டும்

* மாகாண யாப்பின்படி முதலமைச்சரே ஆட்சித் தலைவர், ஆளுநர் அல்ல

மாகாண சபைகளை பயனற்றதாக்கி வைப்பதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் மாகாண மக்கள்தான். எனவே இந்த மாகாண சபைகளைப் பயனுடையதாக மாற்ற வேண்டுமென முன்னாள் வடக்கு - கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வட மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றி இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், மேற்கண்டவாறு கூறினார். வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தினை குறைப்பார்கள் என நினைப்பது தவறு. இராணுவத்தை குறைக்க வேண்டுமென்றால் சிங்களத் தலைவர்களுக்கும் அந்த நோக்கம் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “அரசியல் யாப்பு, முதலமைச்சருக்குத்தான் அதிகாரத்தினைக் கொடுத்திருக்கிறது. முதலமைச்சர்தான் யாப்பின்படி ஆட்சித் தலைவராகும். ஆளுநர் அல்ல. ஆனால், இங்கு ஆளுநர் தலையிடக்கூடாதென்று ஒரு தீர்மானம் போடப்படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

2013 ஆம் ஆண்டின் பின்னர் பார்த்தால், 2009 முதல் 2013 வரையும் வடக்கு மாகாணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

1988 டிசம்பர் மாதம் இருந்து, 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் 15 அல்லது 16 மாதங்களும், பின்னர் ஒன்றரை வருடம் என்ற இந்த காலகட்டத்தில், அநுபவம் தான் வடக்கு மாகாணத்தின் அநுபவம்.

கிழக்கு மாகாணத்தின் அநுபவம் 10 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, வடக்கு கிழக்கு மாகாணத்தின் அநுபவங்களை காலகட்டத்தில் என்ன நடந்திருக்கின்றது என்ன நிலைக்கு வந்திருக்கின்றது. என்பதனை நாங்கள் பின்னோக்கி பார்த்து அதிலிருந்து கற்று முன்னோக்கி போவதற்கு வழியை பார்க்க வேண்டி இருக்கின்றது.

இலங்கை ஒரு நாடு. இங்கு 3 இனங்கள் வாழ்கின்றன. தமிழ் மக்கள் ஒரு தேசம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, அந்த சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட ஒரு தீர்வு வேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு புறம் இருக்கின்றார்கள். எது சொன்னாலும் மாகாண சபைகள் என்பதுதான் யதார்த்தம். அந்த யதார்த்தத்தினை இன்று யாரும் புறக் கணித்து விட முடியாது. இல்லை என்பதினால் மாகாண சபை இல்லாமல் போவதில்லை.

மாகாண சபைகளை இல்லாமல் ஆக்கமுடியுமா, இல்லாமல் போகுமா என்று கேட்டால், மாகாண சபைகள் இல்லாமல் போகாது, மாகாண சபைகள் இருக்கத்தான் போகின்றன.

ஒரு பாத்திரம் தான் வடமாகாண சபை. அந்த மாகாண சபைக்குள் சில அதிகாரங்கள் இருக்கின்றன. 1988 முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி ஒரு அனுப வம். வடமாகாண சபை தொடர்பான மதிப்பீட்டினை மேற்கொள்ளும் போது, இந்த இரண்டு அனுபவங்களும் பிரதானமானவை.

கிழக்கு மாகாணத்தின் சில அனுபவங்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

தென்னிலங்கை மாகாணங்களை பொறுத்தவரையில், ஏறத்தாழ அந்த மாகாணங்களில், பெரும்பாலும், மாகாண த்தில் யார் ஆட்சியில் இருந்தார்களோ அவர்கள் தான் மத்தியிலும் ஆட்சியில் இருந்தார்கள்.

அதனால், அங்கு ஒரு முரண்பாடும் வரவில்லை. மாகாண சபையில் இருப்பவர்களுக்கு அதிகாரம் இருக் கின்றதா என்பது மக்களுக்கு தெரியாமல் இருந்தது.

ஏனென்றால், தென்னிலங்கை மாகாண சபைகளில் இருப்பவர்கள் எதை நினைத்தாலும் மத்திய அரசாங் கத்தில் இருப்பவர்கள் செய்து கொடுத்தார்கள். மக்களை பொறுத்தவரையில், மாகாண சபைகளுக்கு அதிகாரம் உண்டா இல்லையா? செயல்பட முடிகின்றதா செயல்பட முடியவில்லையா என்பது பற்றி அங்கு கேள்விக்குறியாக இருக்கவில்லை.

ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அந்த கேள்விக்குறி இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது. 1988 மற்றும் 1990 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தான் மாகாண சபைகள் வந்திருந்தன. அதற்கு முன்னர் இருந்தது ஆயுதப் போராட்டம்.

வடமாகாண ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கயிறு இழுவைப் போட்டி நடைபெற்று வருகின்றது.

ஆளுநருக்கு அதிகாரம் உண்டா, முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டா என்ற போது, இரண்டு ஆட்சி முறை நடைபெறுகின்றதா என நினைக்க தோன்றுகின்றது.

வடமாகாண சபை தொடர்பில் எந்தவொரு தெளிவு மின்றி இருக்கின்றார்கள்.

முதலமைச்சர் மற்றும் அமைச் சர்கள் கொண்ட அமைப்பு, ஒரு சட்டத்தினை மாகாண அமைச்சு நிறை வேற்றுவதாக இருந்தால், மத்திய அமைச் சில் இருக்கும் சட்டத்திற்கு அமைவாக நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு இருக்கின்றதென்றால் அங்கு அனைத்தும் சரியாக நடைபெறுகிறதென்று இல்லை.

வெறும் இனப்பிரச்சினைக்கான தீர்;வு அல்ல. இலங்கை நாட்டில் இருக்கும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங் களையும், மாகாண சபைகளுக்கு வழங்குகின்றபொழுது, மாகாண மட்டத்தில் இருக்க கூடிய மக்களும் அதில் பங்குபற்றி, நாட்டின் அபிவிருத்தியை உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும், கொண்டு போவதற்கான அமைப்பே மாகாண அமைப்பு.

அதை புரிந்து கொள்ளாமல், இந்த மாகாண சபைக்கு ஏதாவது கொடுத்து விட்டால், தமிழர்கள் இதை வேறு எங்கேயாவது கொண்டு போய்விடுவார்களோ என்று ஒரு எண்ணத்தினை சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப் பட்டிருக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து இருந்தாலும், மாகாண சபைகளின் அதிகாரத்தில் தலையிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசு அதைத்தருவதாக இல்லை, இதைத்தருகிறார்கள் இல்லை என எதிர்மறை யாக விடயங்களை சொல்வதையே வழக்கமாக கொண் டுள்ளார்கள். எந்த கால கட்டத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடமாகாண சபை தேர்தலை நடத்து என்று குரல் கொடுக்கவில்லை.

வடமாகாண சபையின் ஊடாக தமிழ் மக்களுக்கு நன்மை செய்து, அதனுடாக செல்வாக்கினை பெற முடியு மென்ற அர்த்த்தில் சபை தேர்தலில் போட்டியிட்டார்கள் என்று அர்த்தப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

வடமாகாண சபை பயனற்றது, தமிழர்களின் நலனுக்கு எதிரானது, தமிழர்களின் உச்ச நலனுக்கு ஆபத்தானது என கருதப்படுவதனால், அது செயற்பட கூடாதென்பதற் காக வடமாகாண சபை நிர்வாகத்தின் மீது இருக்கின் றார்களா, அல்லது அது செயற்படுத்தப்பட வேண்டுமென் பதற்காக இருக்கின்றார்களா? என்பது புரியவில்லை.

வடமாகாண சபை செயற்படுத்தப்பட முடியாமல் இருப்பது வேறு விடயம். செயற்படுத்த முனைந்தும், மத்திய அரசு தடையாக இருக்கிறதென்றால் அது மற்றொரு விடயம்.

இங்கு ஒரு முயற்சி இருக்கின்றது. வடமாகாண சபை செயற்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காக அதில் குந்தியிருப்பதாக இருந்தால், இது வடமாகாண சபைக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளை ஒழிக்க வேண்டுமென்ற சுலோகம் காத்திரமானதும் நேரானதும் என்று சொல்ல முடியாது. 13வது திருத்தத்தினை அரசியல் யாப்பில் இருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, மறை முகமாக செய்வது போன்று இருக்கின்றது.

மாகாண சபைகளின் அனுபவத்தில் மாகாண சபைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

மாகாண சபைகளை முன்னேற்றுவதற்கான வாய்ப்புக் களை தேட வேண்டும். அத்துடன், முன்னேற்றுவதற்காக போராட வேண்டும்.

மாகாண சபைகளை பயனற்றதாக ஆக்கி வைத்தி ருப்பதன் மூலம், நட்டப்படுபவர்கள் மாகாண மக்கள் தான். எனவே, இந்த மாகாண சபைகளை பயனுடை யதாக மாற்ற வேண்டுமென்று நினைத்தால், முயற்சித் தால், அதில் செய்வதற்கு பல விடயங்கள் இருக் கின்றன.

வடமாகாணத்தில் இருந்து இராணுவத்தினை குறைப் பார்கள் என்று நினைப்பது தவறு, இராணுவத்தினரை குறைக்க வேண்டுமென்றால், அந்த நோக்கம் சிங்கள தலைவர்களுக்கும் இருக்க வேண்டும். யுத்தம் நிறை வடைந்த பின்னர் இராணுவத்தினரை வைத்திருப்பது பெரும் செலவு. இராணுவ செலவு என்றால், அது உற்பத்தி சாராத செலவு.

இராணுவத்தினரை வைத் திருந்தால், இரண்டு கிலோ வெங்காயம் கூட பெற முடியாதென்று தமது வாக்கு களுக்காக சொல்லுவார்கள். வாக்குகளுக்காக எதையும் சொல்லலாம் என்றால், அவர்களும் அரசியல் வாதிகளே என்றும் குறிப்பிட்டார்.

வடமாகாண சபை சட்டங்கள் எதையும் ஆக்கவில்லை என்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. வடமாகாண சபைக்கு ஆதரவானவர்கள் சிங்களவர்கள். அவர்களும் சொல்கின்றார்கள் மாகாண சபை எந்த சட்டத்தினையும் ஆக்கவில்லை, வேறு தீர்;மானங்களை நிறைவேற்றுகின்றார்கள் என்று கூறுகின்றார்கள்.

வடமாகாண சபையில் சட்டத்தினை ஆக்குவதற்கு என்ன பிரச்சினை இருக்கின்றதென்று தெரியாதென்றும், மாகாணத்திற்கு சம்பந்தமில்லாத தீர்;மானங்கள் பல நிறை வேற்றப்பட்டுள்ளன.

வடமாகாண சபை ஆட்சியில் இருப்பது பல கட்சிகளின் கூட்டு. வெளிப்பார்வைக்கு பார்க்கும் போது வடமாகாண சபை செயல்படாமல் இருக்கின்றது என்று அடையாளம் காணப்படுகின்றது.

அனைத்து வசதிகளையும் அமைச்சர்களுக்கும், உறுப் பினர்களுக்கும் எடுப்பதற்கு ஒரு தயக்கமும் இல்லை. தனிப்பட்ட விடயங்களில் செய்கின்ற அந்த திறமை நம்பிய தமிழ் சமூதாயத்திற்கு செய்து காட்டவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

மாகாண சபைகள் என்பதில் பல குறைபாடுகளும் இருக்கின்றன. அதில் பல வாய்ப்புகளும் இருக்கின்றன. இல்லாத ஒன்றிற்காக ஏங்கிக்கொண்டு இறப்பதை விட, இருப்பதை எடுத்துக் கொண்டு முன்னேறுவது சிறந்த தென்ற சாதாரண மனித இயல்பினை கடைப்பிடிக்க வேண்டும்.

வடமாகாண சபைக்கு தேவையான என்ன இருக்கின்றது என கேட்டு சண்டை போடுவதை விட்டு, அதை விட்டும், அபிவிருத்திக்கான நிதிகள் போதாது என்று மத்திய அரசி டம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியதுடன், அரசியல் யாப்பு முதலமைச்சருக்கு தான் அதிகாரத்தினைக் கொடுத்திருக்கின்றது. முதலமைச்சர் தான் யாப்பின் படி ஆட்சித் தலைவர் ஆளுநர் அல்ல. இங்கு ஆளுநர் தலையிட கூடாதென்று ஒரு தீhமானம் போடவில்லை.

சட்டங்களை உருவாக்குவதில் மாகாண சபை உறுப் பினர்களின் கையில் இருக்கின்றது.

இரண்டு சட்டங்களை ஆக்கி அவரிடம் வைத்திருக்க கொடுத்ததை விட 200 சட்டங்களை ஆக்கி ஆளுநரின் கையில் கொடுக்க வேண்டும்.

அதன்போது, தென்னிலங்கையில், உள்ள சிங்கள சக்திகளும் கேட்பார்கள்.

ஏய் ஆளுநரே என்ன செய்கிறாய் என்று, ஆனால், தற்போது மத்திய அரசும், ஆளுநரும் தப்பிக் கொள் வதற்கான அனைத்து வழிகளையும் வடமாகாண சபை திறந்து விட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com