Contact us at: sooddram@gmail.com

 

PFHRGD யினால் ஒழுங்கு செய்யப்பட்டு புது தில்லியில் 2011 ஆகஸ்ட் 23ம் 24ம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை தமிழ் கட்சிகளின் கூட்ட  அறிக்கை!

இலங்கை தமிழ் கட்சிகளின் கூட்டம் 2011 ஆகஸ்ட் 23ம், 24ம் திகதிகளில், புது தில்லியிலுள்ள அரசியல் சட்ட அமைப்பு நிறுவன மண்டபத்தில் (Constitution Club of India) மனித உரிமைகளுக்கும் சர்வதேச வளர்ச்சிக்குமான பாராளுமன்ற அமைப்பின் (PFHRGD) அனுசரணையின் ஊடாக நடைபெற்றது. தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை தமிழ் கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துக்களை உள்;;வாங்கி, இந்திய அரசு எந்த விதத்தில் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்து மிக விரைவாக தமிழர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை ஆராயும் முகமாக இந்த அமர்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன. மேலும் இந்த அமர்வுகளினால் இலங்கைத் தமிழ் கட்சிகள் தங்களது ஏகோபித்த கருத்துக்களை இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்வைப்பதினால் அவர்கள் இந்திய அரசுக்கு இலங்கை பரச்சினைகள் தொடர்பாக ஒரு வரைமுறையை, தூண்டுவதற்கு உதவி செய்யும் என்பதுவும் நோக்கமாக இருந்தது.

இந்த அமர்வுகளுக்கான, அழைப்புக்கள் டாக்டர். ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன் எம்.பி.அவர்களால் அனுப்பப்பட்டன. அவர் PFHRGD யின்; தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) அமைப்பின் திரு. எஸ்.வசீகரன் அவர்கள் அழைக்கப்பட்ட கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஒன்பது அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டன. அவற்றில் எட்டு கட்சிகள் பங்குபற்றின.

பின்வருவோர் கட்சிகள் சார்பாக பங்குபற்றினர்.

இலங்கைத் தமிழரசு கட்சியின் சார்பாக திரு. மாவை சேனாதிராசா எம்.பி. அவர்கள் மற்றும் திரு. சுமத்திரன் எம்.பி,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திரு. செல்வராசா கஜேந்திரன் அவர்கள் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்,

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ) சார்பாக அதன் தலைவர் திரு. அடைக்கலநாதன் (செல்வம்) அவர்கள்;, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அதன் தலைவர் திரு. வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள்,

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சார்பாக அதன் தலைவர் இரா. துரைரெத்தினம் அவர்கள், செயலாளர் திரு. சிறீதரன் அவர்கள்,

ஈ.பி.ஆர்.எல்.எப கட்சி சார்பாக அதன் செயலாளர் திரு. பிரேமச்சந்திரன் அவர்கள்,, திரு. சிவசக்தி ஆனந்தன் அவர்கள்,

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் சார்பாக உபதலைவர் திரு. கந்தையா சிவநேசன் அவர்கள், திரு. பெனடிக்ற் தனபாலசிங்கம் அவர்கள்,

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி சார்பாக அதன் தலைவர் திரு. ஞா.ஞானசேகரன் அவர்களும், திரு. எஸ்.ரவீந்திரன் அவர்களும் கலந்துகொண்டனர்.

அமர்வுகளுக்கு காரணியான டாக்டர். ஈ.எம். நாச்சியப்பன் அவர்கள் பிரதிநிதிகளை வரவேற்று தொடக்க உரை நிகழ்த்தினார். அமர்வுகளின் நோக்கங்களை விளக்கிய அவர் கட்சிப் பிரதிநிதிகள் ஆராய்ந்து ஏகமனதான முடிவுகள் செய்தால் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை உந்துவதற்கு உதவி செய்யும் என கூறினார்.

தொடர்வுகளின  ுதல் அமர்வு மகாநாட்டு அமர்வுத் தலைவர் திரு. செல்லையா நாகாராஜா அவர்களின் தலைமையில் தொடங்கியது.

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் வடகிழக்கில் தமிழ் மக்கள் படும் துன்பங்களையும் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஆழ்ந்த கவலைகளுடன் தெரிவித்து ஏகமனதாக பின்வரும் தீர்மானத்தை உடனடி நடவடிக்கைகளுக்காக கையளிக்க தீர்மானித்தனர்.

தீர்மானம்:-

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே இருந்த உச்சமான போர் 2009, மே மாத இறுதியில் முற்றுக்கு வந்தது. அந்தப் போரின் கடைசி கால கட்டங்களில் இரண்டு மாவட்டங்களின் முழு மக்களும் மூன்று மாவட்டங்களின் பல ஆயிரம் மக்களும் தங்கள் இடங்களை விட்டு இடம்பெயர நேர்ந்தது. முன்னர் இடம் பெயர்ந்தவர்களையும் சேர்த்து கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.

இவர்களில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்த வழிவகைகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக பல பகுதிகள் இன்னும் கண்ணி வெடிகள் அகற்றப்படுவதற்காக ஆயுதபடைகளிடம் கையளிக்கப்படவில்லை. அந்த இடங்களில் மக்கள் குடியமர்த்தப்படுவதற்கு உண்மையான காரணங்கள் ஆயுதப்படைகளால் முன்வைக்கப்படும் நியாயமற்ற கோரிக்கைகளாகும். பல பகுதிகள் இன்னும் 'உயர்வலயப் பாதுகாப்பு பிரதேசமாகவும்' இன்னும  ில 'மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பிரதேசமாகவும்' கருதப்படுவதுதான். இந்தப் பகுதிகள் பாதுகாப்பு படையினரின் வலயங்களாக மாற்றப்படுகின்றன. பல வீட்டு வசதி வாரியங்களும் மற்ற படைகளுக்குத் தேவையான கட்டிடங்களும் சீனாவினால் தாயாரிக்கப்பட்ட முன் ஏற்பாட்டு கட்டடப் பகுதிகளால் நிர்மாணிக்கப்படுகின்றன.

தங்கள் பகுதிகளுக்கு திரும்பிப் போக அனுமதிக்கப்பட்டோர் கூட இன்னும் தற்காலிகமான வதிவிடங்களில் தங்களுக்கு நிரந்தரமான வதி வீடுகளையோ மற்ற வசதிகளையோ ஏற்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கின் எல்லா நிர்வாகத்திலும் ஆயுதப்படைகளின் தலையீட்டை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆயுதப்படைகள் அரசாங்கத்துக்காக தேர்தலில் ஈடுபடுகின்றனர். ஆயுதப்படைகளின் அனுமதியின்றி எந்தக் கூட்டமும் கூட்ட முடியாது, அவர்களின் தலையீடு சாதாரணமான வாழ்க்கை முறையே சிதறடிக்கிறது.

ஆயுதப்படைகள் கைப்பற்றிய இடங்களில் சாப்பாட்டுக் கடைகள் நடத்துகின்றன. வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கின்றன, புத்த கோவில்கள் கட்டுகின்றன, அவர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வேலைகளை செய்கின்றன, சிங்கள மக்கள் அத்துமீறி தமிழர்களின் காணிகளில் குடியேற உதவிகள் செய்கின்றன. சிங்கள மீனவர்கள், இதுவரை தமிழ் மக்கள் தொழில் செய்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு மீன்பிடி தொழில் செய்ய ஆயுதப்படைகளால் அனுமதிக்கப்படுகிறார்கள்.

காணிகள் பற்றி வடக்கு கிழக்குக்கு மட்டும் அமுலாக்கப்படும் சுற்று நிருபம் முழுமையாகவே பாரபட்சமானது.

ஆயுதப்படைகளின் நிர்வாகம், காணிகள் பற்றி முடிவுகட்ட உருத்துள்ளவர்களாகின்றார். வெளியிடங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளோர் இரண்டு மாதங்களுக்கிடையே தங்களுக்கு உரிய காணிகளுக்கு உரிமை கோர நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்தியாவில் உள்ள அகதிகள், மற்றும் வெளியிடங்களில் உள்ளோர் அனைவரையும் இது பாதிக்கிறது. பல காணிகள் சுற்றுலா தளங்களுக்காகவும், புத்த கோயில்களுக்காகவும் மற்றும் இராணுவ முகாம்களுக்காகவும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

5000 முதல் 6000 வரையிலான தமிழர்கள் இதுவரையும் எந்தவித குற்றச்சாட்டுதலும் பதியப்படாமல் தடைமுகாம்களில் இருக்கிறார்கள்.

இன்றும் இரண்டு இலட்சம் அகதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். தொடர்ந்தும் தமிழ் பகுதிகளில் இருக்கும் அடக்குமுறைகள் காரணமாக இவர்கள் திரும்ப முடியாமல் இருக்கிறது.

இந்த சம்பவங்களால் பின்வருபவை மிக உடனடியாகவும் அவசரமாகவும் நடைமுறைபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

(01)      உயர்மட்ட பாதுகாவல் வலயங்கள் என்ற போர்வையில் காணிகள் பறிமுதல் செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

(02)      உடனடியாக வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து ஆயுதப்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்.

(03)      காணி பறிமுதலை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

(04)      அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

(05)      இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் மீளத் திரும்பி, தம் சொந்த இடங்களில் வாழ்க்கையை தொடங்கும் வகையில் சுமூகமான நிலை ஏற்படுத்த வேண்டும்.

(06)      அவசரகால சட்டங்களோடு வன்முறை சம்பந்தமாக இயற்றப்பட்ட பாதிப்புள்ள சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும்.

இவைகள் அனைத்தும் பிரதிநிதிகளால் முதல் தீர்மானமாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பிரதிநிதிகள் இந்தியாவிலுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் நிலைகுறித்து ஆராய்ந்தனர். திரு. ஞா.ஞானசேகரன் (தலைவர், ஈ.என்.டி.எல்.எப்.) அவர்கள் அகதிகள் படும் கஸ்டங்களையும், அவர்களது ஏற்றுக்கொள்ள முடியாத வாழ்க்கை நிலை பற்றியும் எடுத்து கூறினார். பலவற்றையும் ஆராய்ந்தபின், இதனை, தற்சமயம் நிறைவேற்றும் தீர்மானங்களோடு இணைக்காது வேறு அறிக்கையாக கொடுப்பது என முடிபு செய்யப்பட்டது.

அடுத்து, 'இலங்கை தமிழர் பிரச்சினைக்ளுக்கான ஒரு நிரந்தர தீர்மானம்' என்ற தலைப்பில் கருத்துக்கள் ஆராயப்பட்டன. திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் இது தொடர்பான கருத்துக்களை கூறியதுடன் அன்றைய அமர்வுகள் முற்றுபெற்றன.

2011 ஆகஸ்ட் 24ம் திகதி அமர்வுகள்:-

தொடர்ந்த அமர்வுகளில் இது தொடர்பாக எல்லா பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

திரு. வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைவர் (தமிழர் விடுதலைக் கூட்டணி) அவர்கள் இந்திய அரசியல் சாசனங்களின் அடிப்படையிலான சமஸ்டி முறையே தீர்வாக அமையும் என்று முன்மொழிந்தார்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்கள் இந்தியாவும் இலங்கை அரசும் 1987இல் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதோ அன்றில் அதனை மீளெடுப்பதோ தற்சமயத்துக்கு உகந்தது என்று முன்மொழிந்தார்.

தமிழரசுக் கட்சி பிரதிநிதிகள், 'இந்திய-இலங்கை' ஒப்பந்தம் ஒரு 'பொதி' என்று குறிப்பிட்டு ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், நாம் அதையும் தாண்டிய அரசியல் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆகவே மேற்சொன்ன இரண்டு கோரிக்கையையும் விடுத்து, பிரதிநிதிகளால் கூறப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கி, தமிழர் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய, இன்றைய அவசியமான கோட்பாடுகளைக் கொண்ட ஒரு தீர்மானத்தை உருவாக்கும் பணியை தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சிகளிடம் பணித்தனர்.

பின்னர், திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பின்வரும் தீர்மானத்தை முன்வைத்தார்.

'இலங்கையின் மேற்கத்தய காலனித்துவ ஆட்சிகள் முற்றுபெற்ற 1948இல் இருந்து தமிழ் மக்கள், இலங்கை அரசுடன் என்ன விதத்தில் அரசியல் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதிலும் அதில் எப்படி பங்கு கொள்வது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நடைபெற்ற எத்தனையோ பேச்சுவார்த்தைகளும், ஏன், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுமே தோற்றன. சிங்களப் பெரும்பான்மை, எந்தவிதத்திலாவது அரச உரிமையை தமிழ் மக்களுடன் பகிர்வதை பற்றி சிந்திக்க தயாராகவில்லை. கடந்த 60 வருடங்களாக நடந்த சரித்திரமே, கடந்த ஒரு வருடமும் நடைபெறுகிறது.

போர் முடிந்த மே, 2009 முதல் இலங்கை அரசு தமிழ் மக்களின் தனித்துவத்தை நிலைநிறுத்தும் எந்த அடையாளங்களையும் அழித்தொழிக்கும் பணியினையே உக்கிரமாக நடைமுறைபடுத்துகிறது. இவைகளை, வடகிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுத படைகளினால், தமிழ் மொழி, கலாச்சாரங்கள், அவர்களது மதங்கள், வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு, நிலங்கள் பலவந்தமாக பறிமுதல் செய்யப்படுவதாலும், போரினால் பாதிக்கப்பட்டோர் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி போக முடியாமல் செய்வதாலும் நடைமுறைபடுத்தப்படுகிறது. இவற்றின் நோக்க்மே தமிழ் மக்கள் ஒரு தனித்துவமானவர்கள் என்ற அடிப்டையை இல்லாமல் ஆக்குவதே.

இந்த பின்னணியில் இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு தனித்துமான இனம் என்ற முறையில் அவர்கள் சுயநிர்ணய உரிமையினால் தங்கள் எதிர்காலத்தை நியமிக்க அருகதை உள்ளவர்கள் என்ற அடிப்படையை ஏற்றுக்கொள்வதே தமிழர்கள் ஒரு தேச மக்களாக அங்கு தொடர்ந்து வாழ்வதற்கும் பாதுகாப்பிற்குமான வழி. அப்படியானால் மட்டுமே இலங்கை அரசோடு நடத்தப்படும் எந்த பேச்சுவார்த்தையும் பயனுள்ளதாக அமையும். ஆகவே இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும், தமிழ் தேசியத்தின் இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்று அதுவே ஒரு நாட்டுக்குள் ஏற்படக்கூடிய நியாயமான தீர்வு என்று சொல்ல விரும்புகிறோம்.'

தமிழ் பிரதிநிதிகளிடையே, இத் தீர்மானத்தின் முதல் இரண்டு பந்திகளையும் ஏற்றுக்கொள்வதில் கருத்து வேறுபாடு இருக்கவில்லை. ஆனால் மூன்றாவது பந்தியில் இருந்த இரண்டு வரிகளில் தமிழ் தேசம் (வுயஅடை யேவழைn) என்ற பாவிப்பில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அமர்வு தலைவர், மூன்றாம் பந்தியின் முதல் இரண்டு வரிகளையும் நீக்கி தேசம் என்றதற்கு பதிலாக தமிழ் மக்கள் என மாற்றி, அதனை கடைப்பிடிக்கலாம் என கருத்தை முன்வைத்தார்.

ஈ.என்.டி.எல்.எப். பிரதிநிதிகள் பின்வரும் பந்தியை மூன்றாவது பந்திக்குப் பதிலாக முன்வைத்தனர்.

 

'இன்றைய சூழ்நிலையில்;, நாங்கள் முன் சொல்லியவற்றையும் ஒப்புநோக்கி இந்திய அரசும் இந்திய மக்களும் உடனடியாக, தமிழ் மக்;கள் படும் இன்னல்கள் மேலும் சீரழியாதவாறு அவர்களது தனித்துவத்தை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்ட முறையில் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை நடைமுறைபடுத்த உத்தரவாதம் தரவேண்டும்'

இந்தப் பந்தி பல பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றாலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பிரதிநிதிகள் சம்மதத்தை பெறவில்லை. அவர்களிருவரும், தொடர்ந்த கருத்து பரிமாற்றலில் இந்த கருத்து வேற்றுமைகளினாலேயே தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பில்; (ரி.என்.ஏ) இருந்து வெளியேறியதாகவும், இதே போக்கு அவர்களால் கடைபிடிக்கப்பட்டால் இனிமேலும் அவர்களோடு தொடர்ந்து செயல்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அற்றுப் போகும் என்றனர்.

தெரிவிக்கப்பட்ட பலமான ஆதரவை ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாக மாற்ற மேலும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. ஆனால் அவை பலனளிக்கவில்லை. சுயநிர்னய உரிமைக்கோ, தமிழ் மக்கள் தனித்துவமான இனமாக வாழ்வதற்கோ நாங்கள் மறுப்புள்ளவர்களல்ல ஆனால் தற்சமய சூழலில் நாம் மேற்கொள்ளும் தீhமானங்கள் இந்திய அரசு ஒரு தனிநாட்டை உருவாக்க இயங்கும் அபிலாசைகளுக்கு உதவும் முகமாகவே செயற்படுகிறது என்று அதற்கு தர்மசங்கடத்தை அளிக்காமல், இந்தியாவுக்கும் அவை போன்ற பிரச்சினைகள் இருப்பதால் அதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டது.

'இந்திய-இலங்கை' ஒப்பந்தம் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஏற்றுக் கொள்வதினால் இன்றைய நிலையில் அதனை பாதுகாக்க செயல்படுவேதே முன்னிலையில் இருக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் வைக்கப்பட்டன. ஆனால் தமிழ் காங்கிரஸ் அவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்றைய சூழ்நிலையின் தேவை கருதி, மக்களின் நலனிற்காக மற்ற அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை, மற்ற கட்சிகள் விளக்கங்கள் அளித்து, தமிழ் காங்கிரசார் உண்மை நிலையை அறிந்து ஏற்றுக்கொள்ளும் தருவாயில், வெளிநாட்டில் இருந்து வரும் தொலைபேசியின் அழுத்தங்களினால், தமிழ் காங்கிரசாரால் தீர்வுக்கான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தியப் பாராளுமன்ற பிரதிநிதிகள், தமிழ் பிரதிநிதிகளுடன் கருத்து பரிமாற்றத்துக்கு வருகை தர இவற்றை ஒத்திவைத்து மற்றைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமர்வு:-

அமர்வுகளின் தலைவர், இந்திய பாராளுமன்ற அங்கத்துவர்களோடு இலங்கை பிரச்சினைகள் தொடர்பான சிறு விளக்கத்தோடு கூட்டத்தை ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் கலந்து கொண்ட திரு. நாச்சியப்பன் அவர்கள் பாராளுமன்;ற அங்கத்தவர்களை அறிமுகம் செய்ததோடு தமிழ் பிரதிநிதிகளும் தங்களை அறிமுகப்படுத்த ஆவன செய்தார். தமிழரசுக் கட்சியின் திரு. சுமத்திரன் அவர்களும், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும் வடகிழக்கு தமிழ் மக்களின் நிலை பற்றியும் அவர்கள் பிரச்சினை உடனடியாக அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தையும் விளக்கினார்கள். பாராளுமன்ற அங்கத்தினர் கேட்ட கேள்விகளுக்கு பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர். இந்தியாவின் இரண்டு சபைகளிலும் அங்கம் வகிக்கும் 27 பிரதிநிதிகள் இந்த கருத்து பரிமாறல்களில் பங்குபற்றினர். இதில் போர்குற்ற்ம் பற்றியும், மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

பாராளுமன்ற அங்கத்தவர்களுடன் ஏற்பட்ட கூட்ட முடிவில் பிரதிநிதிகள் தொடர்ந்தும் தீர்வு சம்பந்தமான கருத்து பரிமாறலில் ஈடுபட்டனர். அப்பொழுது இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தீர்வுக்கான விவாதத்திலிருந்து விலகி, போர்க்குற்றங்களையும் மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்களையும் ஆராய சர்வதேச ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற கோரினார்கள். இது நேரம் இல்லை என்பதால் அதனை விவாதத்திற்காக ஏற்க முடியாது என தலைவர் கூறியபோதும் பல பிரதிநிதிகள் அதனை நாம் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட தீர்மானத்தில் உள்ளடக்கலாம் என்று கருதியதால் பின்வரும் பந்தியை ஏழாவது(07) சரத்தாக சேர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

(07) 'போர் குற்றங்களையும் மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்ததான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும்.'

புpரதிநிதிகள் பின்னர், தமிழ் கட்சிகள் எல்லோரும் ஒருங்கிணைந்து தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர விடிவு ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படும் வழிமுறைகள் பற்றி ஆராய்ந்தனர். கால அவகாசம் பற்றாமையினாலும், அவைபற்றி முழுமையாக ஆராயாது உடனடியாக தீர்மானம் எடுப்பது கஸ்டமென பிரதிநிதிகள் கருதியதால், தொடர்ந்து அதுபற்றி கருத்து பரிவர்த்தனை செய்வது என்று கருதப்பட்டது.

இரண்டு நாள் அமர்வுகள் இதனுடன் முற்றுபெற்ற்து.

அதைத் தொடர்ந்து இரவு போசன விருந்தொன்றை ஈ.என்.டி.எல்.எப் தலைவர் ஞா.ஞானசேகரன் அளித்தார். அதன்பின்பு திரும்பவும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றி கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இதில் தமிழ் காங்கிரஸ் கலந்துகொள்ளவில்லை. பிரதிநிதிகள் திரும்பவும் தொடர்ந்து பேசியே ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும் என்ற ஒற்றை கருத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானமும் இன்றி கலைந்தனர்.

நன்றி!

இவ்வண்ணம்,

செல்லையா நாகராஜா

மகாநாட்டு அமர்வுத் தலைவர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com