Contact us at: sooddram@gmail.com

 

ஊடக அறிக்கை...

எமது வெற்றியே 13 திருத்தச்சட்டத்தை பாதுகாத்து மேலும் வளர்த்தெடுக்க உதவும்!

வட மாகாணசபை தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது ஆணையை வழங்கி, அரசியல் அதிகாரங்களை எம்மிடம் ஒப்படைக்கும் போது மட்டுமே 13 வது திருத்தச்சட்டத்தை பாதுகாத்து, அதை மேலும் வளர்த்தெடுத்து எமது மக்களின் அரசியல் இலக்கு நோக்கி செல்லும  இலட்சியக்கனவுகள் சாத்தியமாகும் என்று ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில,.... எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய பயணத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதில் நாம் கடந்த இருபது வருடங்களாக தீர்க்கதரிசனமாக சிந்தித்து சாத்தியமான  வழியில் செயற்பட்டும் வந்திருக்கிறோம். அதன் படி , 13 வது திருத்தச்சட்டத்தை பாதுகாத்து, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் திசை நோக்கி நாம் செல்வதில் பலத்த தடைகளையும், சவால்களையும்  உயிர் இழுப்புகளையும் எதிர் கொண்டு வந்தவர்கள்.

13 வது திருத்தச்சட்டம் அரை குறை தீர்வு என்றும், உழுத்துப்போன தீர்வு என்றும், உருப்பட்டு வராத தீர்வு என்றும் நிராகரித்து ஒதுக்கி வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகள் மக்களுக்கு இது வரை எந்த தீர்வை பெற்று தந்திருக்கிறார்?..

அரசியல் தீர்வை பெற்றுத்தருவதற்கு மாறாக,  13 வது திருத்தச்சட்டத்தை தொடர்ந்தும் நிராகரித்து  வந்ததன் மூலம், எமது மக்கள் மீது வதைகளையும் வலிகளையும், இடம்பெயர்வுகளையும் பேரவலங்களாக  சுமத்தியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே.

இன்று, அவர்களே 13 திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை தேர்தலில் முண்டியடித்துக்கொண்டு போட்டியிடவும் முன்வந்திருக்கிறார்கள்.13 வது திருத்தசட்டம் இல்லாதொழிக்கப்பட்டு விடுமா என்றும், அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு விடுமா என்றும் கேள்விகளும், சந்தேகங்களும் இன்று எழுந்திருக்கும் போது அன்று அதை அரை குறை தீர்வென்று ஒதுக்கி வைத்தவர்கள் அதற்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

காலம் கடந்தாவது 13 வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான மாகாண சபை தேர்தலில் போட்டியிட வந்திருப்பதை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.அனாலும் அதில் உண்ம  இருப்பதாக தெரியவில்லை.

வட மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று கனவு காணும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இது தமிழ் பேசும் மக்களுக்கு உரிய தீர்வல்ல என்று கூறி உலகத்தின் கண் முன்னால் வழமை போல் ஒப்பாரி வைத்து அழவே காத்திருக்கிறது.

இது கிடைக்கின்ற வாய்ப்புகளையும் கடந்த காலங்களைப்போல் உதாசீனம் செய்து எமது மக்களை அரசியல் தீர்வின்றி இருண்ட யுகத்தினுள் தள்ளி விட்ட சூழலையே எமக்கு ஞாகப்படுத்துகிறது.

அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும். எமது மக்கள் வதைபட்ட போது அவலம் தீர்க்க வெளியுலகில் இருந்து யாரும் இங்கு வரவில்லை. எல்லாம் முடிந்த பின்னரே சகலரும் வந்தார்கள்.

எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும். எமது மக்களுக்கு அரிசியலுரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விருப்பமும், பொறுப்புணர்ச்சியும் தமிழ் கட்சி தலைமைகளுக்கே பிரதானமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனாலும், அந்த விருப்பங்கள் அவர்களுக்கு இன்னமும் இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்தும் அரசுடன் பகமையை வளர்ப்பது போல் வேசமிட்டு, எமது மக்களின் அரசியலுமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக நீடிக்க வைத்து, மக்களின் அவலங்களை காட்டி மீண்டும் தேர்தலின் வென்று, தமது சுய லாப அரசியலை தொடர்வதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் எண்ணங்களாக தெரிகிறது.

போலியான வீர வசனங்களை பேசிக்கொண்டு, மறு புறத்தில் அரசின் பின் கதவு தட்டி சொந்த சலுகைகளையும், சுக போகங்களையும் அனுபவிப்போரை எமது மக்கள் தோற்கடிப்பது உறுதியாகிவிட்டது.

மாகாண சபைகளுக்கு இருக்க வேண்டிய அதிகாரங்களை பாதுகாத்து மேலும் வளர்த்தெடுப்பது மட்டுமன்றி,.. அதன் ஊடாக, மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்பதை இலக்காக கொண்டு, எமது மக்களின் எஞ்சியுள்ள நிலங்களிலும் அவர்களை மீள் குடியேற்றம் செய்யவும்,

எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை வளம் செழிக்கும் எழில் மிகு பூமியாக தூக்கி நிறுத்தவும,....

வெளிப்படையாகவே அரசுடன் உறவுக்கு கரம் கொடுத்த  மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்தும் வருகின்ற ஈ.பி.டி.பியினிராகிய எமது வேட்பாளர்களை தெரிவு செய்து, எமது மக்கள் அரசியல் ஆணையை எமக்கு வழங்குவதே ஒளிமயமான எதிர் காலத்திற்கான படிக்கற்களாகும். இவ்வாறு தெரித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் எமக்கு ஆணை வழங்குவது உறுதி என்றும். ஆணை கிடைக்கும் போது மக்களை கை விட்டு எங்கும் ஓடிப்போகாமல் இறுதி வரை மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து வரும் நாமே சகல விடயங்களுக்கும் பொறுப்ப  ூறுவோம் என்றும் உறுதி பட தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு செயலாளர்

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com