Contact us at: sooddram@gmail.com

 

காணி, பொலிஸ் அதிகாரங்களை ன்னிடமிருந்து எவரும் பறிக்க முடியாது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

வடபகுதி ஜனநாயக ரீதியில் ஆளப்பட வேண்டும் என்பதில் அரசு அக்கறை

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் சொல்ல விரும்புவது என்ன?

முப்பது வருட கால ஏகாதிபத்திய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எமது அரசாங்கம் வடக்கில் மக்கள் ஜனநாயக ரீதியில் ஆளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. புலிகளின் மறைவிற்குப் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஜனநாயக ரீதியில் அம்மக்கள் செயற்பட சந்தர்ப்பத்தை வழங்கினோம். இப்போது மீதமாகவுள்ள மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படுகிறது. மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் எமது அரசாங்கம் வடக்கில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது.

யுத்தத்தின்போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட சுமார் 14,000 புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வளித்து சமூகத்தில் அவர்களை இணைத்துள்ளோம்.

புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் ஆளுங்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்படவிருந்த நிலையில் இறுதி நேரத்தில் அவரது பெயர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்குக் காரணம் என்ன?

எந்தவொரு சபைக்குமான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பிலும் நான் தலையிடவில்லை. அது கட் சியின் நியமனக் குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டது. அது அவர்களது தீர்மானம்.

அதற்காக தயா மாஸ்டர் தகுதியற்றவர் என்று பொருளல்ல. அவரை விடவும் தகுதியானவர்கள் இருந்தமையால் இவரது பெயர் பட்டியலில் இடம்பெறாது விடுபட்டிருக்கலாம். ஆனாலும் அவர் தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்க் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி.விக்னேஸ்வரன், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு மக்கள் தனக்கு ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தலில் வடமாகாண சபையை தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றினால் விளைவு என்னவாகும்?

ஓன்றுமே நடக்காது. இதனை விடவும் பாரதூரமான நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் நாம் முகங்கொடுத்துள்ளோம். அதனால் இது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஒருவேளை தமிழ்க் கூட்டமைப்பு வெற்றி பெற்று விக்னேஸ்வரன் முதலமைச்சராக வருவாரேயானால் அவருடன் இது தொடர்பாக பேசுவதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

தமிழ்க் கூட்டமைப்பு வடமாகாண சபையைக் கைப்பற்றி காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கோரினால் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

சட்டப்படி காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்னிடமே உள்ளன. அரசியலமைப்பிலும் அது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் என்னிடமிருந்து இந்த அதிகாரங்களை இலகுவில் எவராலும் பறித்துவிட முடியாது. எனது வரலாற்றில் அத்தகையதொரு மாற்றம் ஒருபோதும் ஏற்படாது.

யுத்தத்தில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் பொருட்டு தாங்கள் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நிறுவ முன்வந்தமைக்கு சர்வதேச அழுத்தமே காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் பிரசாரம் செய்துள்ளன. இதில் உண்மை உள்ளதா?

நான் நல்லது செய்ய முற்பட்டால் அழுத்தம் காரணம் என்று கூறுவது இப்போது வழமையாகிவிட்டது. உண்மையில் 1980 களில் காணாமற்போனோர் குறித்து அன்று பேசியவன் நான்தான். அதேபோன்றுதான் இதுவும். எனது கொள்கை எப்போதுமே மாறுபடாது. எனக்கு எந்த அழுத்தமும் எவராலும் விடுக்கப்படவில்லை.

எதிர்க்கட்சியிலுள்ள மேலும் பலர் அரசாங்கத்தின் பக்கம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் எத்தனை எம்.பிக்கள் இவ்வாறு வரவுள்ளனர்?

தற்போது நான் அதற்கான கதவினை மூடும்படி கூறியுள்ளேன். ஆனாலும் கண்டி, குருநாகல் போன்ற பகுதிகளிலிருந்து பலர் எம்முடன் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோன்று வடக்கிலிருந்து தமிழ்க் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை அங்கத்தவர்கள் பலரும் என்னை வந்து சந்தித்து எமக்கு ஆதரவு வழங்குவதாக கூறிவருகின்றனர்.

இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான் என்று அறிவிக்காமலேயே தங்களது கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இறுதியில் முதலமைச்சரை எவ்வாறு தெரிவு செய்வீர்கள்?

இம்முறை அப்பொறுப்பை நான் மக்களிடமே விட்டுள்ளேன். இன்றுவரை அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவரே முதலமைச்சராக நியமிக்கப்பட்டு வருகிறார். அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்.

வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்து வருவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

இலங்கை கடல் எல்லைக்குள் வெளியார் வந்து மீன் பிடித்தால் கைது செய்யுமாறு நாம் உத்தரவிட்டுள்ளோம். அவ்வாறு நாம் நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பங்களில் எமது கடற்படையினர் அப்பாவிகளான தமது நாட்டு மீனவர்களைக் கடலில் வைத்துத் தாக்குவதாகப் பொய்ப்பிரசாரம் செய்கின்றனர். இது குறித்து இந்திய அரசிற்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

யுத்த காலத்தில் எமது மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் கட்டுப்பாடுகள் இருந்தன. அதனை இந்திய மீனவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்தமையே உண்மையான வரலாறு. இப்போது யுத்தம் முடிந்து விட்டதே.

எமது மீனவர்கள் எமது கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதையே அவர்கள் தடுக்க முனைகிறார்கள். முடிந்தளவு சமரசமாகச் செல்வோம், எல்லை தாண்டி வந்தால் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று எமது மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்றால் கைது செய்யுமாறு இந்திய அரசிற்கு அறிவித்துள்ளோம்.

பொதுநலவாய உச்சி மாநாடு குறித்த சரியான தகவல்கள் பொதுமக்களுக்கு உரிய முறையில் சென்றடைவதாகத் தெரியவில்லை. இதனைச் சீர் செய்ய ஏதாவது நடவடிக்கை எடுப்பீர்களா?

இம்மாநாடு தொடர்பாக எதிர்மறையானதும், பொய்யானதுமான கருத்துக்களையே பல ஊடகங்கள் வெளியிடுகின்றன. இதனைவிடுத்து ஆக்கபூர்வமாக கருத்துக்களையே ஊடகங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

இது எமது நாடு தொடர்பான சர்வதேச நாடுகள் சிலவற்றின் போலிப் பிரசாரங்களை முறியடித்து உண்மை நிலையை வெளிப்படுத்த எமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கொள்ள வேண்டும். இன்று எமது நாட்டில் அமைதியான சமாதானச் சூழல் காணப்படுகின்றபோதிலும் சில வெளிநாடுகளில் இன்னமும் இங்கு யுத்தம் நடைபெறுவது போன்று பயண எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இத்தகைய நிலைமையை இம்மாநாடு மூலமாக மாற்றியமைக்க நாம் முன்வர வேண்டும்.

(தே. செந்தில் வேலவர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com