Contact us at: sooddram@gmail.com

 

தோழர் குமரனின் (வி. பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வு!

மறைந்த தோழர் குமரன் (வி. பொன்னுத்துரை) அவர்களின் நினைவுகளை பகிருமுகமாக ஓர் நிகழ்வு கனடாவின் டொரோண்டோ பெரும்பாகத்தின் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் அங்காடிகள்... வர்த்தக... சேவை நிலையங்கள் உள்ள கட்டிடத் தொகுதியான GTA SQUARE MALL இல் கடந்த ஞாயிரன்று இடம்பெற்றது. ஆரம்ப காலங்களில் இலங்கை கம்யூனிச கட்சி; (மாஸ்கோ பிரிவு) செந்தமிழர் இயக்கம்; காந்தீயம் ஆகிய அமைப்புக்களில் செயற்பட்டவராகவும் பின்னர் தமிழீழ மக்கள்  ிடுதலைக்கழகத்தின் (PLOTE) உறுப்பினராகவும் இருந்த மறைந்த தோழர் குமரன் (வி. பொன்னுத்துரை) அவர்களின் நினைவுகளை பகிருமுகமாக நிகழ்வு... பலதரப்பட்ட அமைப்பை... பின்புலத்தை... கொண்டவர்கள் கொண்ட... மண்டபம் நிறைந்த...  நிகழ்வாக தோழர் குமரனின் மனித நேய செயர்ப்பாடுகளுடனான நினைவுகளுடான சீலன் அவர்களின் தலமையுரையுடன்  ஆரம்பித்து...     

தோழர் குமரன் அவர்களின் சுயநலமில்லா மனித நேயம்... தான் பிறந்த ஊர்... மண்... பாடசாலை... என்று மட்டுமலாமல் சகல மக்களின் சுதந்திரம்... வாழ்வுரிமை... என்று ஓர் கொள்கையுடன் வாழ்ந்து... செயற்பட்டு... பின் தான்  நேசித்த மக்கள் மத்தியில் உயிருடன் வாழ தான் சேர்ந்தவர்களாலேயே அச்சுறுத்தப்பட்ட நிலையிலும்... புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற நிலையிலும்... தான் பிறந்த ஊர்... கல்வி கற்ற பாடசாலையின் வளர்ச்சியில் தீவிர அக்கறைகொண்டு 'மாதகல் நலன்புரி அமைப்பை' உருவாக்கியது மட்டுமலாமல்... மாதகல் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கிளைகளை நிறுவி... தான் கல்வி பயின்ற St. Joseph’s கல்லூரியின் வளர்ச்சிக்காக ஒரு கோடி பணம் சேர்த்து அனுப்ப தூண்டுகோலாக இருந்தார் என்று மட்டுமல்லாமல்... தொடர்ந்து சமூக வளர்ச்சியினூடான அங்கத்துவடுடான அக்கறையுடன் வாழ்ந்தததை மறைந்த தோழர் குமரன் அவர்களின் பிறந்த ஊரான மாதகலில் அவரின் அயலவராக மட்டுமலாமல் ... அவருடன்..பழகிய...அவரை நன்கு அறிந்த கனடா மாதகல் நலன்புரி சங்கத்தை சேர்ந்த... முன்னால் St. Joseph’s கல்லூரி அதிபர் அருள் சுப்பிரமணியம் அவர்கள் நினைவுகளுடன் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து மாதகலை பிறப்பிடமாக மட்டுமல்லாமல்... தோழர் குமரன் அவர்களுடன் ஒரே பாசறையான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த நண்பர் பாபுஜி அவர்கள் தனது நினைவுகளை மீட்கும் பொது தோழர் குமரன் அவர்களை விட தான் வயதில் சிறியவனாக இருந்திருந்தாலும்... St. Joseph’s கல்லூரி மதிலில் ஏறி இருந்து கதைப்பதையும்... வெலிங்கடன் சினிமா கொட்டகையின் பின்புறத்தில் வைத்து ராஜனை தான் தோழர் குமரன் அவர்கட்கு அறிமுகப்படுத்தியதையும்... வடலியடைப்பு வயல்களின் மத்தியில் இருந்த தேநீர் கடையில் வைத்து தன்னையும் மறைந்த கனகுலசிங்கம் அவர்களையும் 82ம் ஆண்டு இராணுவம் சுற்றி வளைத்து கைது செய்யும் போது துவிச்சக்கர வண்டியில் தோழர் குமரன் அவர்கள் அவ்விடத்தில் வந்து தப்பி சென்றதையும் நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து ஆரம்ப காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த தயாபரன் தனது நினைவுகளில்... மீட்குமிடத்து... தோழர் குமரன் அவர்கள் மத்திய குழுவில் இருந்து செயற்பட்டதையும்,.. அவரின் மக்கள் மீது கொண்ட நேசிப்புடனான நற்பண்புகளை நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட... டானியல் அவர்கள் தான் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்த காலத்தின் ஒரு பகுதியில் ஒரத்தநாட்டில் தன்னை ஓர் கீற்றுக் கொட்டகைக்குள் (ஓலை) அடைத்து வைத்திருக்கும் போது ஜான் மாஸ்டர் அவர்கள் வெளியில் இருந்து அரசியல் வகுப்பு எடுத்ததை தான் ஓலைகளின் ஓட்டைகளுடாக பார்த்ததையும்... உள்ளூர் மக்கள் நகர் பகுதியை (main road) அண்டி நகர்ந்து உள்ளதையும்... (அவர் விடுமுறைக்கு சென்று தற்போது இங்கு திரும்பி விட்டார்) அதனால் அப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள்... வாய்ப்பு... என்று தோழர் குமரனின் (வி. பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வை விட்டு தடம் மாறி தனது பகிர்தலை பகிர்ந்து கொண்டார்.

மேலும் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட குமார் அவர்கள் கழகத்தில் இருக்கும் பொது தோழர் குமரன் அவர்களுடன் ஒன்றாகப் பழகியதையும்... அவரின் சமூக சிந்தனையுள்ள நற்பண்புகளையும் பகிர்ந்து கொண்டார். (இரு வாரங்களின் முன் மாதகல் நலன்புரிச் சங்கம் தோழர் குமரன் அவர்களை  ினைவு கூர்ந்த நிகழ்விலும் கலந்து கொண்டு தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்). தொடர்து ராஜன் அவர்கள் தனது நினைவுகளை பகிரும்போது... தனக்கு ஒன்றரை வருடமாக தோழர் குமரன் அவர்களுடன் ஒன்றாகப் பழகியதையும்... தோழர் குமரன் கொண்ட சமூக சிந்தனைகளை எடுத்துக் கூறி... இவ் நினைவு பகிர்தல் ஓர் அஞ்சலியாக மட்டுமல்லாமல் தோழர் குமரன் அவர்கள் விட்டுச் சென்ற பணியை புரிந்து கொள்ளலுடன் தொடர வேண்டும் என்று ஓர் கோரிக்கையை வைத்தார்.

தொடர்ந்து மொன்றியலில் .இருந்து வருகை தந்த இளவாலையை  ேர்ந்த நீண்ட கால தோழர் போத்தார் அவர்கள் தோழர் குமரன் அவர்கட்கு தனது நினைவுகளுடான அஞ்சலியை செலுத்த... ஜீவன் அவர்கள் மொரட்டுவா பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் போது காந்தியத்தில் சென்று சமூக சேவை செய்ததையும்... பின் 83 இனக்கலவரத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து சமூக சேவைகளில் சேவை செய்ததையும் நினைவு கூர்ந்தார்.

கடைசியாக பாலா அவர்கள் தான் தோழர் குமரன் அவர்களுடன் நெருக்கிப் பழகிய கழக காலத்தை மட்டுமல்லாமல் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த காலத்தில் தான் அவர் மேல் வைத்திருந்த பற்றையும்...  கடையாக அவரை சந்தித்ததையும்... நினைவு கூறுமிடத்து... தொடர்ந்து வாயால் தனது நண்பனின்.... தோழனின்... இழப்பை பகிரமுடியாமல் கண்கள் நீர் மல்க... நன்றியுரையுடன் ஒருங்கமைக்கப்பட்ட  ினைவுகளை' பகிர்தல் நிகழ்வு' நிறைவு பெற...

 

நீண்ட காலத்தின் பின் சந்தித்த பலர் தமது நினைவுகளை பகிர்ந்து கொள்ள... தமிழரின் கூட்டம் என்றால் பிந்தித் தானே தொடங்கும் என்று பலர் நேரம் தாழ்த்தி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும்  ாந்தியத்தில் சேவை செய்தோர்... கழகத்தில் குமரனை நன்கு அறிந்தவர்கள்... பலர் இங்கிருந்தும்...2009 இன் பின் மண்டபம் எடுத்து தோழர் சுந்தரத்திற்கு அஞ்சலி செலுத்தியவர்கள் என்று ஒருவரையும் காணவில்லை.

- அலெக்ஸ் இரவி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com