Contact us at: sooddram@gmail.com

 

தேர்தலில் கூட்டமைப்புக்கு ஆதரவில்லை - முதலமைச்சர் விக்கினேஸ்வரன்


என் அன்பார்ந்தசகோதரசகோதரிகளே,
நான் வெளிநாடுகள் சென்றசமயத்தில்த் தான் பொதுத் தேர்தல் நியமிக்கப்பட்டது. நான் தற்பொழுதுதிரும்பிவந்துள்ளேன். தேர்தலில் உங்கள் பங்களிப்புஎன்னஎன்றுபலரும் என்னைக் கேட்கின்றார்கள். யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்துபத்துப் பேர் ஏழு ஆசனங்களுக்காகவும் வன்னியில் ஒன்பதுபேர் ஆறுஆசனங்களுக்காகவும் போட்டியிடுகின்றனர். தற்போதையதேர்தல் முறைமையின் கீழ் ஒரேகட்சிக்குள்ளேயேவிருப்புவாக்குகளைப் பெறபோட்டியாளர்களிடையேமுரண்பாடுகள் எழுவதுஎதிர் பார்க்கப்படுவதொன்றே.
வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக 2013ம் ஆண்டில் பொதுவேட்பாளராகநான் நிறுத்தப்பட்டேன். நான் பதவிக்குவந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்அங்கத்துவக்கட்சிகள் பலநான் பக்கச் சார்பற்றுநடுநிலைவகிக்கவில்லையேஎன்றுஎன் மீதுகுறைபட்டுக் கொண்டனர். நான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பக்கச் சார்பாகநடந்துகொள்வதாகஎன்னைவிமர்சித்தனர். முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றமுறையில் பக்கச் சார்பற்றுநடந்துகொள்ளவேண்டும் என்றார்கள்.
உண்மையில் இதேமாதிரியானஒருநிலைசுமார் 53 வருடங்களுக்குமுன்னர் நான் கொழும்புசட்டமாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுஎனக்குஏற்பட்டது.
ஒருசாரார் தேர்தலில் எனக்குவாக்களித்துவெற்றிகொள்ளச் செய்தனர்.எனக்கெதிராகவாக்களித்தவர்கள் தலைவர் பதவிவகிக்கவந்தவுடன் நீங்கள் சகலசட்டமாணவமாணவியர்களுக்குந் தலைவர் என்றமுறையில் பக்கச் சார்பற்றுநடந்துகொள்ளவேண்டும் என்றுஎன்னிடம் கேட்டுக் கொண்டார்கள். எனக்குவாக்களித்தவர்கள் தாம் அவ்வாறுஎன்னைத் தேர்ந்தெடுக்கக் காரணமாய் இருந்ததால் தமதுநலவுரித்துக்களைமட்டுமேநான் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்கள். நான்ஏற்றுக் கொண்டபதவியின் கடமைகள்,பொறுப்புக்கள்,கடப்பாடுகள் ஆகியவற்றைஉத்தேசித்துசட்டமாணவனாகநான் இருந்தபோதேஅத் தருணத்தில் பக்கச் சார்பற்றவனாகநடந்துகொள்வதேஎனதுகடமைஎன்றுமுடிவுசெய்தேன். எனதுதலைவர் பதவிக்காலம் முழுவதும் என் ஆதரவாளர்களின் மன உளைச்சலுக்குமத்தியில் நான் பக்கச் சார்பற்றே நடந்து கொண்டேன். எதுசரியோ,எதுமுறையோஅதையேசெய்தேன்.
அதேவிதமானஒருசூழ்நிலைதற்போதுஎன்னைநாடிவந்துள்ளது.
என்னைக் கூட்டமைப்பினர் வடமாகாணமுதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் பக்கச் சார்பாக இறங்கி அக்கட்சி அபேட்சகர்களுக்காக ஆதரித்துப் பேசுவது எனக்கழகல்ல என்பதேஎனதுகருத்து.
என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அன்னியோன்யமாக இயங்குவது எனக்கு ஒருபிரச்சினையல்ல. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் ஐக்கியத்துடனும் கடமையாற்றக் கூடியவர்களாக இருக்கவேண்டும். கட்சிகளின் நலனை வி டஎமது மக்களின் நலனும்நலவுரித்துக்களுமே முதன்மைபெறவேண்டும் என்பதுஎனதுகருத்து.
அண்மையில் இங்கிலாந்தில் ஹரோ என்ற இடத்தில் இம் மாதம் 17ந் திகதிபேசும் போதுநான் கூறியதை இங்கு உங்களுக்கு குறித்துக் கூற ஆசைப்படுகின்றேன்.
“ மக்களுக்காகஅர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எம்நாட்டில் வாழும் எமதுமக்கள் தெரிவுசெய்யவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில் வள்ளுவன் வாக்கிற்கிணங்க,நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாதமனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.
அத்துடன்,தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமதுமக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றையகாலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்.
அதனை உணர்ந்துஅவர்கள் தமக்குள்ள வரலாற்றுப் பொறுப்பை, தார்மீகக் கடமையைச் சரிவரச் செய்வதற்குநான் துணையாகநிற்பேன்”என்று கூறினேன்.
போர் முடிந்து ஆறு வருடங்கள் கழிந்தநிலையில் எமதுவடமாகாண சபை தேர்ந்தெடுக்கப்பட்டுசுமார் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டநிலையில் போருக்குப் பின்னரானசூழலில் மூன்றுமுக்கியசவால்களைநாம் யாவரும் எதிர் நோக்கியுள்ளோம்.
முதலாவதாகபோருக்குப் பின்னரானபுனர்நிர்மாண,மீள்குடியேற்ற,அபிவிருத்திப் பணிகள் எமதுமக்களின் தேவைகளையும் அத்தியாவசியங்களையும் அறிந்துஅனுசரித்துமுழுமையானநோக்குடன் நடத்தப்படாமல் தான் தோன்றித் தனமாகஅப்போதைக்கப்போதையவாறுநடைபெற்றுவருவதுமனவருத்தத்தைஅளிக்கின்றது.
இரண்டாவதாகஅரசியல் ரீதியாகநிரந்தரத் தீர்வு இன்னமும் எங்கள் கைகளுக்குப் படாமல் விலகிச் செல்வதாகவே இருக்கக் காண்கின்றோம். மூன்றாவதாகபோரினால் பாதிக்கப்பட்டோருக்குநீதிகிடைப்பதும் சேய்மைப் பட்டுக் கொண்டே இருக்கின்றது.
இவ்வாறானஒருசூழலிலேயேநீங்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டியஒருகடப்பாட்டில் உள்ளீர்கள். இவ்வாறானசூழலிலே, இங்கிலாந்தில் நான் குறிப்பிட்டதற்கிணங்கவேஎமதுபிரதிநிதிகளைநீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டியதுஅத்தியாவசியமென்றுஎனக்குப்படுகிறது. நான் குறிப்பிட்டசவால்களுக்குமுகம் கொடுக்கும் விதத்தில் உங்களுள் சிறந்த பிரதிநிதிகளை நீங்கள் தேர்ந்தெடுத்துபாராளுமன்றத்திற்குஅனுப்புவதுஉங்கள் தலையாயகடமையாகவிளங்குகின்றது.
தேர்தல் முடிந்ததும் எமது மிகமுக்கிய சவாலான அரசியல் தீர்வுகளுக்காகஒருமனதுடன் அரசியல் ரீதியாகஒத்துழைக்கக் கூடியபிரதிநிதிகளையேநீங்கள் தேர்ந்தெடுத்துஅனுப்பவேண்டும்.
அண்மையில் தெற்கத்தைய அரசியல்வாதியொருவர் என்னிடம் கேட்டார் புதிதாகஅமைக்கப்படப் போகும் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மந்திரிப் பதவிகள் கொடுக்கமுன்வந்தால் உங்கள் கட்சி அவற்றை ஏற்குமா என்று. அப்போது பிரித்தானியபிரதமர் கமரூன் அவர்களுக்கு ஜேர்மானியத் தலைவி அன்ஜெலாமேர்கல் அவர்கள் கூறியதுதான் என் நினைவுக்குவந்தது. அரசியல் ரீதியான கூட்டுக்களிலும் கூட்டமைப்புக்களிலும் “சிறியகட்சியேஎக்காலத்திலும் அடிபட்டுப் போய் விடுகிறது”என்றார் அவர். எனதுசிங்களநண்பருக்குநான் கூறினேன்- அரசியல் ரீதியானஒருநிரந்தரத் தீர்வுஎ மக்குக் கிடைக்கும் வரையில் எக்காலத்திலும் அமைச்சுப் பதவிகளை எமது பிரதிநிதிகள் ஏற்கக் கூடாது என்பதே எனது கருத்து என்று.
இல்லையென்றால் அதாவது அவ்வாறு நாங்கள் ஏற்றுக் கொண்டால் எமதுமக்களின் கோரிக்கைகள் காற்றோடுகாற்றாய்ப் பறந்துவிடுவன. எம்மைப் பெரும்பான்மைச் சமூகம் தன்னுள் உள்ளிழுத்துக் கொண்டுவிடும் என்றேன். மேலும் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புஎன்றகொள்கையின் கீழ் எமதுஅமைச்சர்கள் சுதந்திரம் இழந்துவிடுவார்கள். எமதுமக்களின் உரித்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் அவர்கள் கைவிடவேண்டியநிலைவரும் என்றேன்.
மேற்கூறியவைபலஎமதுவடமாகாணமக்களுக்குமட்டும் பொருந்தும் கூற்றுக்கள் என்றுஎண்ணவேண்டியதில்லை. இந்நாட்டின் சகலருக்கும் பொதுவானகருத்துக்களேஅவை. இவ்வருடத் தொடக்கத்தில் எம்மக்கள் புதியதொருசகாப்தத்தைஉருவாக்கமுன்வந்தனர். நல்லாட்சி,நீதி,நியாயம்,சமத்துவம்,சமாதானம்,சகலருக்கும் பாதுகாப்புபோன்றகொள்கைகளைமுன்வைத்துபுதியதொருஎதிர்காலத்தைக் கட்டிஎழுப்பமுன்வந்தார்கள். அந்தவாறானமக்களின் அபிலாஷைகளை,எதிர்பார்ப்புக்களைநடைமுறைப்படுத்தவேண்டியகடப்பாடுசகலஅரசியல் வாதிகளுக்கும்,சகலநிறுவனத் தலைமைத்துவங்களுக்கும்,ஊடகங்களுக்கும்,குடிசனசங்கங்களுக்கும் இருக்கின்றதுஎன்பதைநாங்கள் மறக்கக் கூடாது. தனிப்பட்டமனிதகுழுக்களின் நன்மைகளுக்காகமட்டும் நடந்துகொள்ளாது,மற்றையமக்கட் கூட்டங்களுக்குக் கெடுதிவிளைவிக்காது,நல்லாட்சியைஏற்படுத்தக் கூடியசக்திகளை இனங்கண்டு ஜனநாயகரீதியில் நாம் யாவருஞ்சேர்ந்துஅச்சக்திகளுக்குத் துணையாகநிற்பதற்குவருந்தேர்தலானதுகளம் அமைத்துக் கொடுக்கும் என்றுநம்புகின்றேன். எமதுதேர்தல் வாக்குறுதிகளும் விஞ்ஞாபனங்களும் இந்நாட்டின் கூடியமக்களின் நலனைப் பேணும் விதமாகஅமையவேண்டும். அப்படிநடந்துகொண்டால்த்தான் வருங்காலச் சந்ததியினர் எம்மைநன்றிக் கண்களுடன் பார்ப்பார்கள்.
எதுஎவ்வாறுநடப்பினும் ஜனநாயகஅத்திவாரத்தை இட்டுஅதன் மீதுஎமதுவருங்காலத்தைநம் நாட்டில் ஏற்படுத்தசர்வதேசசமூகமானதுதுணையாகநிற்கும் என்றுஎதிர்பார்க்கின்றோம். எமதுமக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்யும் விதத்தில் சர்வதேசசமூகம் எம்முடன் கைகோர்த்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
எனவேஎனதுசதோதரசகோதரிகளே! நான் உங்களிடம் இச் செய்தியின் ஊடாகக் கேட்டுக் கொள்வதுயாதெனில் திறமானவேட்பாளர்களைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யுங்கள். வள்ளுவன் வழிநின்றுஉங்களைவாழவைக்கக் கூடியவர்களைத் தேர்ந்தெடுங்கள். நாம் யாவரும் எமது ஜனநாயகஉரித்துக்களைமுழுமையாகப் பாவித்துஎமதுஅரசியல் பயணத்தைபலம் மிக்கதாகச் செய்வோமாக! எம்முடையநடவடிக்கைகளைக் கூர்ந்துகவனித்துநாம் யாவரும் உங்கள் சேவையில் வெளிப்படைத்தன்மையுடனும் பதிலளிக்கும் கடப்பாட்டுடனும் நடந்துகொள்ளஉதவுவீர்களாக!தேர்தல் காலங்களில் நாம் சுற்றுலாக்காலப் பயணிகள் போன்றுநடந்துகொள்ளாதிருப்போமாக!
“அரசாங்கம் ஒருநம்பிக்கைப் பொறுப்பு. அதன் அலுவலர்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். நம்பிக்கைப் பொறுப்பும் அதன் பொறுப்பாளர்களும் மக்களுக்காகவேஉருவாக்கப்பட்டுள்ளார்கள்” (ஹென்றிக்ளே–மேம்பட்டஅரசியல்வாதியும் சிறந்தஅமெரிக்கப் பேச்சாளரும்)
இறைதுணைஉங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதாக!
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கட்சியின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மற்றும் கட்சியின் வேட்பாளரும் வடமராட்சி இணைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீ ரங்கேஸ்வரன் அவர்களும் இன்று (31) காலை வதிரி பூவற்கரை பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com