Contact us at: sooddram@gmail.com

 

பிரதான எதிரிகளான பாசிச சக்திகளை தோற்கடிக்கவும் - இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து இந்நாட்டின் தொழிலாளர்களும் விவசாயிகளும் அடக்கப்படுகின்ற தேசிய இனங்களும் அக்கறையற்றவர்களாக இருக்க முடியாது. அதில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பேரினவாத பாசிச, நவபழைமைவாத சக்திகளையும் ரணில் தலைமையிலான நவதாராளவாத சக்திகளையும் ஒரேயடியாக சமகாலத்தில் மக்கள் தோற்கடிக்க முடியாததால், அவற்றில் தற்காலத்தில் ஒப்பீட்டளவில் பிரதான எதிரியாக இருக்கும் மஹிந்த தலைமையிலான பேரினவாத, பாசிச நவபழைமைவாத சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதற்காக மக்கள் அவர்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். அத்துடன் தொழிலாளர்கள், விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசிய இனத்தவர்கள் அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், நாட்டு மக்களின் ஐக்கியத்திற்கு பாதிப்பாக இருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் தேவையான ஜனநாயக இடைவெளியை வென்றெடுக்கவும், பாதுகாக்கவும் மக்கள் அவர்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் 2015ம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்சியின் இடையேற்பாட்டுக் குழுவின் இணை அழைப்பாளர்களான டபிள்யூ.சோமரட்ன, இ.தம்பையா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பின் காலனித்துவ காலத்திலிருந்து இலங்கையில் இருந்துவந்த குறைந்த பட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தையும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முற்றாக இல்லாமலாக்கியது. அந்த ஜனநாயகமும் இல்லாத சூழலில் அவரின் மீது அதிருப்தியடைந்தவர்களாலோ, அவருக்கு பதிலாக ஆட்சியை கைப்பற்ற எண்ணம் கொண்டிருந்தவர்களாலோ அவரை பதவி நீக்கம் செய்ய முடியவில்லை.

பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்படவும் காணாமல் போகவும் லட்சக்கணக்கானோர் அகதிகளாகவும் காரணமான யுத்தத்தை அவர் ஈவிரக்கமின்றி நடத்தினார். அரசியல் பழிவாங்கல் உச்சமாகியதுடன் தென்னிலங்கையில் பலர் காணாமல் போயினர். அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர். போதைப்பொருள் போன்ற சமூக விரோத வர்த்தகங்கள் பல்கிப் பெருகின. ஆட்சியாளர்கள் அவற்றில் சம்மந்தப்பட்டிருந்தனர். சட்டத்துறை, நிறைவேற்றுத் துறை, நீதித்துறையிலும் பாசிசம் மேலோங்கியது. தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் ஓரம்கட்டப்பட்டனர்.

இந்நிலையிலேயே பின் காலனித்துவ முதலாளித்துவ ஜனநாயகத்தை மீட்க விரும்பிய சோபித தேரர் போன்றவர்களும் ரணில் போன்ற நவதாராளவாதிகளும் விரும்பிய படி மக்களின் வாக்குகளினூடாக மேற்படி அழிவுகளுக்கு காரணமான மஹிந்த ஜனவாரி 8ம் திகதி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். ஆனால் அவர் ஆறு மாதங்களுக்குள் தன்னை தகவமைத்துக் கொண்டு நாட்டின் பிரதமராகும் எண்ணத்தில் தேர்தலில் சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணியிலும் பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொண்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இதற்கு அவரின் பேரினவாதம் மட்டும் கைகொடுத்தது என கூறமுடியாது. ஊழல் மோசடியூடாக சம்பாதித்து கொண்டுள்ள பணம், மாபியா பணக்காரர்கள், சர்வதேச தேசிய மாபிய வலைப் பின்னல்கள் போன்றனவும், சீரழிந்த ஆபிரிக்க சர்வதிகார நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பியா தவிர்ந்த சீனா போன்ற ஏனைய நவதாராளவாத ஏகாதிபத்திய சக்திகளும் அவருக்கு கைகொடுக்கின்றன. இது முறைசார்பற்ற ஜனநாயக விரோத உலக ஒழுங்கின் இன்னொரு போக்கு. இது முறைசார் நவதாராளவாத உலக ஒழுங்கை விடவும் அபாயமானது. இதிலிருந்து இலங்கை நாடும் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்படுவதற்கான முதல் நடவடிக்கை பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்தவையும் அவரது அணியையும் தோற்கடிப்பதாக இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள், விவசாயிகள் சாராதண மக்களை மேலும் சுரண்டலுக்குள்ளாக்கும் உற்பத்தி முறையிலிருந்து அந்நியப்படுத்தி தனியார் நிறுவனங்களிடம் பொருளாதாரத்தை ஏகபோகமாக ஒப்படைக்கும் நவதாராளவாத பொருளாதார கொள்கையை ஐ.தே.கட்சியும், ஸ்ரீ-லங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக்கொண்டு முழுமையாக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின்படி நடக்கும் முதலாளித்துவ கட்சிகளாகும்.

மஹிந்த தலைமையிலான அணி பேரினவாத, பாசிச, நவபழைமைவாத நிலைப்பாடு காரணமாக பழைய முதலாளித்து ஜனநாயகத்தை மட்டமன்றி நவதாராளவாத ஜனநாயகத்தையும் மறுத்து வருகிறது. தேசிய இனப்பிரச்சினைக்கு குறைந்த பட்ச அரசியல் தீர்விற்கு கூட தயாராக இல்லை. இதன் காரணமாக அமெரிக்கா தலைமையிலான பிரத்தியேக நவதாராளவாத நிகழ்ச்சி நிரலுடன் முரண்பாடுகளை கொண்டுள்ளதுடன் அதனை சமநிலைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு சீனா போன்ற ஏனைய நவதாராளவாத ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருங்கி உறவாடுகிறது. இதனால் ஏகாதிபத்திய சக்திகளின் முரண்பாடுகளுக்குள் இலங்கை நாடும் மக்களும் சிக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ரணில் தலைமையிலான ஐ.தே.கட்சி அமெரிக்கா தலைமையிலான நவதாராளவாத நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொண்டு செயற்படுவதுடன், அந்நிகழ்ச்சி நிரலுக்கு பங்கமில்லாத வகையிலேயே ஏனைய நவதாராளவாத ஏகாதிபத்திய சக்திகளுடன் உறவை பேணுகிறது. ஆனால் ரணில் தலைமையிலான அணி நல்லாட்சி, மனித உரிமைகள், ஊழல், மோசடி எதிர்ப்பு போன்ற நவதாராளவாத ஜனநாயக அம்சங்களுடன் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றியது. மஹிந்த அணி இனவாதத்தையே பிரதானமாக கொண்டு தேர்தல் பிரசாரங்களை செய்வதால் அதனை எதிர்கொள்வதில் ஐ.தே. கட்சி அணி பாரிய சவால்களை எதிர்கொள்கிறது.

மக்களின் அக்கறைகளுக்கு எதிரான இந்த இரண்டு அணிகளுக்கும் மாற்றாக பாராளுமன்றத் தேர்தல் களத்திலோ அதற்கு வெளியிலோ சரியான வேலைத்திட்டத்துடனான பலமான ஒரு இடதுசாரி கட்சியையோ, அல்லது இயக்கத்தையோ காண முடியவில்லை. அந்த இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் மக்களுக்கு மஹிந்த அணியை தோற்கடிக்க வேண்டியது உடனடி அரசியல் கடமையாக இருப்பதால், ரணில் அணிக்கு சாதகமாக இருப்பது தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாகவும் எதிர்கொள்ளப்பட வேண்டியதுமாகிறது.

இந்த இரண்டு அணிகளுக்கும் மாற்று அரசியலானது, விஞ்ஞான பூர்வமான சோஷலிஸமாவது போன்று அவற்றை அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றல் என்பது கற்பனாவாதத்தினாலன்றி விஞ்ஞான பூர்வமான நடவடிக்கைகளினாலேயே சாத்தியமாகும். தற்போதைய நவதாராள உலக ஒழுங்கானது உலகிலும் உள்நாட்டிலும் புதிய வடிவங்களில் மூலதனத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. மூலனத்தை பிரசவிக்கும் உழைப்பு தற்பாப்பு நிலையிலேயே உள்ளது. மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைதல் உழைப்பின் சோசலிசத்தை நோக்கிய படிமுறை பயணத்திற்கு ஒரு சாதகமான முன்னிபந்தனையாகும். அவ்வாறான படிமுறைகளில் ஒரு கட்டமாக எதிர்வரும் தேர்தலில் மஹிந்தவின் மக்கள் விரோத கருத்தியலும், நடைமுறைகளும் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பேரினவாத, பாசிச, நவபழமைவாதம் தோற்கடிக்கப்பட்டு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அடக்கப்படும் தேசிய இனங்களும், பிரிவினர்களும் ஐக்கியப்பட்டு புதிய அரசியல் பண்பாட்டை நிலைநாட்ட தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படக் கூடிய சூழலை உருவாக்க சரியான முடிவை எடுத்து செயற்பட வேண்டும். அடக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையக தேசிய இனங்கள் நாடளாவிய ரீதியில் பேரினவாத பாசிச நவபழைமைவாதத ;தை தோற்கடிக்கவும் நியாயமான அரசியல் தீர்வை வென்றெடுக்க குறிப்பாகவும் வாக்குகளை பயன்படுத்த வேண்டும். தமிழ் தேசியம் உட்பட அடக்கப்படும் தேசிய இனங்கள் அவற்றின் நியாயமான கோரிக்கையை முன்னெடுத்து போரட முனையும் நேர்மையான சக்திகளை பலப்படுத்தவும் பேரினவாதத்தை தோற்கடிக்கவும் வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

டிபில்யூ. சோமரட்ன
இ.தம்பையா
இணை அழைப்பாளர்கள்
இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்
071-3009026
071-4302909

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com