Contact us at: sooddram@gmail.com

 

யாழ்.பல்கலைக்கழகம்

த.தே.கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு பகிரங்க வேண்டுகோள்!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமான வேண்டுகோளினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடங்களின் ஒன்றியங்கள் விடுத்துள்ளது. மாற்றம் என்பது இப்போதைக்கு அவசியமற்ற ஒன்று. நிலத்து மக்களின் யதார்த்த நடைமுறைகளைப் புறக்கணித்து புலத்திலுள்ளோர் சிலரின் தேவைக்கேற்ப ஆடப்படும் சதுரங்க நகர்த்தல் மூலமாக வரும் மாற்றமானது ஏமாற்றமாகவே முடியும் என்றும் ஒன்றியங்கள் சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடங்களின் ஒன்றியங்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நடைபெறவிருக்கும் 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடங்களின் ஒன்றியங்கள் பகிரங்கமான முடிவு ஒன்றினை எடுத்துள்ளது. மக்களின் குழப்பங்களைத் தெளிவாக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையை கருதியே இம் முடிவினை நாம் எடுத்துள்ளோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அன்றுதொட்டு இன்றுவரை தடம்மாறாக் கொள்கையோடு தமிழ்மக்களின் உரிமைக்குரலாய் மக்கள் நலன்சார்ந்து ஒலித்துவருகின்றது. தொடர்ந்தும் ஒலிக்கும் என்பதனை முதற்கண் பெருமையோடு கூறிக்கொள்கிறோம்.
நீண்ட பல தசாப்தங்கள் கடந்தும் பல்வேறுபட்ட வடிவங்களில் நகர்ந்துகொண்டிருக்கும் எமது விடுதலை வேட்கையிலே நாம் கடந்துவந்த பாதைகள் ஒருபோதும் பஞ்சுமெத்தையாய் இருந்ததில்லை. அதற்காய் நாம் கொடுத்த விலைகள் சொல்லிலடங்காதவை.
போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்டம் எப்பொழுதும் ஒன்றுதான் என்பதற்கேற்பவே மீண்டும் ஒரு தேர்தல் எம் முன்னே வந்துள்ளது. பல்வேறு குழப்பங்கள், மோதல்கள், பழிவாங்கல்கள், ஆசைகொண்ட அடிவருடித்தனங்களின் மத்தியிலேயே நாம் இந்தத் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம்.
அடித்தளத்தில் சேறுபடிந்திருந்தாலும் மேல்மட்டத்தில் தெளிந்த நீராயிருந்து கால்நடைகளுக்கு குடிநீரை வழங்கும் தண்மை பொருந்திய குளத்தைப்போல் அடிமனதிலுள்ள கலக்கங்களைக் களைந்து தெளிவானதொரு முடிவினை எமது மக்கள் எடுக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை இதுவாகும்!
தாயகத்தில் எமது மக்கள் அனுபவித்த அனுபவித்துவரும் நிதர்சனப் பிரச்சினைகள் ஏராளமாயுள்ளன. அவற்றை இன்னும் நீண்டகாலத்திற்கு இழுத்துச்செல்வதையே சிலர் தமது சொந்த அரசியல் நடவடிக்கைகளுக்காக கையாள எத்தனிக்கின்றனர். இந்த உண்மையினை அனைத்து மக்களும் உணர்ந்து கொள்ளவேண்டிய கட்டாயச் சூழ்நிலை இதுவாகும்.
“எழுச்சி கொண்ட எந்தவொரு இனமும் வீழ்ச்சி கண்டதாக வரலாறு இல்லை” என்ற எமது தனிப்பெரும் தலைவனின் கூற்றிற்கமைவாக எழுச்சியின்மூலம் வகுந்தெடுக்கப்பட்ட எமது உரிமைப் போராட்டத்தின் இப்போதைய வடிவத்தில் தம்மை தேசியத்தின் காவலராய்க் காட்டி மக்களின் உணர்வுகளைச் சுரண்டி அதில் சூடுகாய பல குழுக்களும் எத்தனிக்கின்றன.
இத்தகையோரை நன்றாக அடையாளங்காண வேண்டிய தருணம் இது! தமிழ்மக்களின் மூலப்பிரச்சினையைக் கூறுபோட்டு மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கும் முகமாக சிலர் தான்தோன்றித்தனங்களைப் புரிந்துவருவது வேதனைக்குரிய விடயமாகும். யதார்த்தத்தில் எம் மக்களை இன்னுமின்னும் படுகுழியில் தள்ளுவதே இத்தகையோரின் நோக்கமாக உள்ளது.
அன்புக்குரிய எமது மக்களே, நாம் அகிம்சை வழியில் போராடி அதில் பயனில்லை என உணர்ந்தே ஆயுதங்களைக் கையிலெடுத்தோம். ஆனால் அந்த ஆயுதப்போராட்டத்தையும் பிராந்திய வல்லரசுகளின் துணையோடு மீளமுடியாதளவிற்கு நசுக்கிவிட்டனர் ஆக்கிரமிப்பாளர்கள். இந்நிலையில் எமது போராட்டத்தின் வடிவம் மற்றொருபரிணாமத்தைப் பெற்றிருக்கின்றது.
முப்பதாண்டுகால ஆயுதப்போராட்டமும் அதற்குப் பிந்திய ஆறாண்டுகாலப் பட்டறிவும் கொடுத்த பெறுபேறுகளை வைத்தே எமது பிரச்சினையின் அடுத்த கட்டத்தில் நிற்கின்றோம். இந்த இடத்தில்தான் மீண்டும் பழைய இடத்திற்கே எம்மைக் கூட்டிச்செல்லும் உணர்ச்சிப் பெருக்கோடு ஒருசிலர் அலைகின்றனர்.
கடந்தகால அனுபவப் பெறுபேறுகளையும் தற்கால நிதர்சன நகர்வுகளையும் முன்னிறுத்திய போராட்டமே சீரான பயணத்தைக் கொண்டதாக அமையும். அதனடிப்படையில் எம்மால் ஒரு பலமான அரசியல் அணியாக வளர்த்துவந்த பக்கத்தை நாம் மீண்டும் பலப்படுத்தவேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
எமது சுயநிர்ணயக் கோட்பாட்டில் எவ்வித பழுதுமின்றி எந்த நோக்கத்தை நிறைவு செய்ய எமது தாய் இயக்கத்தின் தீர்க்கதரிசனத்தோடு உருவாக்கப்பட்டு சர்வதேச கண்காணிப்போடு கரைபுரண்டு பழக்கப்பட்ட அணியையே நாம் தொடர்ந்தும் பலப்படுத்தியாகவேண்டும்.
மாற்றம் என்பது இப்போதைக்கு அவசியமற்ற ஒன்று. நிலத்து மக்களின் யதார்த்த நடைமுறைகளைப் புறக்கணித்து புலத்திலுள்ளோர் சிலரின் தேவைக்கேற்ப ஆடப்படும் சதுரங்க நகர்த்தல் மூலமாக வரும் மாற்றமானது ஏமாற்றமாகவே முடியும்.
இது எமது மக்களின் வேதனை வாழ்க்கையை இரட்டிப்பாக்கிக்கொண்டே செல்லும். கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்டோர் அவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்து மீண்டும் அதே கொடுங்கோலரே ஆட்சியில் அமர்ந்திருந்தால் மக்களுக்கு என்ன பதிலைக் கொடுத்திருப்பார்கள்? இதுதான் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கவிருந்த தீர்வா?
பாசத்திற்குரிய எமது மக்களே, எமது தாயக விடுதலைப்போராட்டங்களிலெல்லாம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பல்வேறு தியாகங்களுடனான பங்களிப்பை நன்கு அறிவீர்கள். எமது தன்னாட்சிக் கோட்பாட்டிலிருந்து நாம் என்றுமே விலகியவர்கள் கிடையாது.
அந்த வகையில் எமது மக்களின் நலன்சார்ந்து சிங்களத்தோடும் சர்வதேசத்தோடும் பேரம்பேசவல்ல தனிப்பெரும் சக்தியொன்றினையே நாம் ஆதரிக்கின்றோம். கடந்த காலங்களைப்போலன்றி அனைவரும் வாக்களித்து அதிகரித்த வாக்குப்பலத்தால் உங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். கொள்கையில் தெரிவில் தடம்புரளாது எமது அரசியல் மரபில் வலுவான சக்திக்கே உங்கள் வாக்கினை வழங்குவீர்களென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடங்களின் ஒன்றியங்களாகிய நாம் உரிமையோடு வேண்டுகோள் விடுக்கிறோம்!
கடந்த காலங்களிலும் எமது மக்களின் ஒற்றுமையுடனான தெரிவு ஒரேமாதிரியானதாகவே இருந்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போதும் மாகாணசபைத் தேர்தலின்போதும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் காட்டிய சரியான தெரிவினை இம்முறையும் மக்கள் உறுதிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எம்மிடம் நிறைவாக உண்டு!
எமது மக்களின் அரசியல் தூரநோக்கினை இருள்மயமாக்கத்தக்க வகையில் பல்கலைக்கழகத்திற்கு உள்ளும் வெளியிலும் சிலர் திட்டமிட்டுச் செயற்பட்டுவருகின்றனர். மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி அதில் சுயலாபங்களைச் சம்பாதிப்பதே இத்தகையோரின் நோக்கமாக இருந்துவந்துள்ளது. இப்பொழுது மக்களிடம் நாம் முன்வைக்கும் வேண்டுகோளினை மலினப்படுத்தும் வகையிலும் இவர்கள் செயற்பட வாய்ப்புகள் உண்டு.
ஆகவே முன்னெச்சரிக்கையாக மக்கள் அவர்களையும் அறிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். கடந்த காலங்களைப் போலன்றி அனைவரும் தவறாது வாக்களித்து அதிகரித்த வாக்குப்பலத்தால் உங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். கொள்கையிலும் தெரிவிலும் தடம்புரளாது எமது அரசியல் மரபில் வலுவான சக்தியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே உங்கள் வாக்குகளை ஒட்டுமொத்தமாக வழங்கி தமிழ் மக்களின் ஒற்றுமையினை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டுங்கள்.
கடந்த காலங்களில் மக்களின் ஏகமனதான தெரிவில் குழப்பங்கள் இல்லாமை காரணமாக, சென்ற எமது மாணவர் ஒன்றியங்கள் தமது நிலைப்பாடுகளைச் சூசகமாகவே அறிவித்துவந்தன.
இருந்தாலும் இம்முறை விஸ்வரூபமெடுத்துள்ள மக்களின் குழப்பங்களைத் தீர்க்கவேண்டிய கட்டாய சூழ்நிலையின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வாக்களிக்குமாறு பகிரங்கமான வேண்டுகோளினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடங்களின் ஒன்றியங்களாகிய நாம் உரிமையோடு எம் மக்களிடம் முன்வைக்கிறோம்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com