Contact us at: sooddram@gmail.com

 

ஜூனியர் கோமாளியின் (விகடன்) சொதப்பல் செய்திக்கு ஈ.என்.டி.எல்.எப். தெளிவான விளக்கம்!

26-12-2010 தேதியிட்ட ஜூனியர் கோமாளியின் (விகடன்) “தமிழ் நாட்டில் தங்கி இருந்த “காட்டிக்கொடுப்பு” கருணா”, என்ற தலைப்பில் ஜூனியர் விகடன் “ஸ்பெசல் டீம்” என்ற சில கோமாளிகள் கதை எழுதியுள்ளனர். இந்தக் கோமாளிகள் பற்றி எங்களுக்குத் தெரியாது! வாராவாரம் ஈழத் தமிழர்கள் பற்றி கதை விட்டுப் பணம் சம்பாதித்து வரும் வார இதழின் இது போன்ற தவறான பிரசாரங்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் எற்படுத்தப்பட்டிருக்கிறது எங்களுக்கு. கருணா துரோகி என்றால் இவர்களும் துரோகிகள் தானே என்ற தோரணையில் எழுதப்பட்டிருக்கும் அக்கட்டுக்கதையில் விகடன் புலிகளிடம் பணம் பெறுவார்கள், சிங்கள அரசிடமும் பணம் பெறுவார்கள் என்பதை தங்களை அறியாமலேயே வெளிப்படுத்தியுள்ளனர் அந்த “டீம்”.

“இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்,

“1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழரின் பூர்விகப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும்”

என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஈ.என்.டி.எல்.எப். டில்லிவரை நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதை இலங்கை அரசு விரும்பவில்லை.

இதனை எப்படியும் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற சிங்கள அரசின் எண்ணத்தை ஜூனியர் கோமாளி (விகடன்) நிறைவேற்ற பெரிதும் தங்களது மூளையை முறுக்கி பணியாற்றியுள்ளனர்.

இந்தக் கோமாளிக்காக நாம் பதில்சொல்லவில்லை, தமிழக மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்குமாக நாம் பதில் சொல்கிறோம்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் “முதுகெலும்பு” கிழக்கு மாகாணமாகும். தமிழ் நாட்டில் புலிகளின் புகழ்பாடுபவர்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு கிழக்குத் தமிழர்களையும், வடக்குத் தமிழர்களையும் பிரித்து பகை மூட்டுவதற்காக சிங்கள அரசினால் தூண்டப்பட்டதுதான், யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற பாகுபாடு.

யாழ்ப்பாண மக்கள் படித்து அரசத்துறையில் அங்கம் வகிக்கின்றனர், என்ற வெறுப்பை சிங்கள அரசு தமிழ் மக்களைப் பிளவுப் படுத்துவதற்கு பயன்படுத்தியது. மட்டக்களப்பு மக்களுக்கு வரவேண்டிய அரசுப் பணிகளை யாழ்ப்பாணத்தான் தட்டிச்செல்கிறான் என்று வேண்டுமென்றே அரசாங்கம் விசத்தை விதைத்தது மட்டக்களப்பு மக்கள் மத்தியில்.

இந்த விதை சில இடங்களில் முளைத்தது. நாளடைவில் பெரிதாகியது, இந்தப்பாகுப்பாட்டை எப்படிக் களைவது என்று தெரியாமல் கட்சிகளும், தமிழ் இளைஞர்களும் திகைத்து நின்றனர். 1978ஆம் ஆண்டு நவம்பரில் மட்டக்களப்பில் மிகப்பெரிய சுறாவளிக் காற்று வீசி பேரழிவை ஏற்படுத்தியது. கிழக்கு மக்கள் அனைத்தையும் இழந்து நின்றனர். இலங்கை அரசாங்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை மட்டக்களப்பு மக்களை.

அப்போதுதான் வடக்கு மாகாணத்திலிருந்து கடல்மார்க்கமாகப் படகுகளில் அறுநூறு இளைஞர்கள் மட்டக்களப்பை அடைந்தனர். தரைவழியாக மட்டக்களப்புக்குச் செல்லும் பாதைகள் மரங்கள் வீழ்ந்ததால் மூடப்பட்டு விட்டன. இவர்கள் மட்டக்களப்புக்குச் சென்று தரைப்பாதைகளைத் திருத்தியமைத்து உணவு மற்றும் மருந்து நிவாரணப் பொருட்கள் வந்தடைவதற்கு வழிவகுத்தனர். இந்தப் பணிகளை அரசாங்கம் வேடிக்கைப்பார்த்ததே தவிர எந்தவித உதவியும் செய்யவில்லை. இந்த அறுநூறு இளைஞர்களுக்கும் தலைமை எற்றுச் சென்றவர் யார் என்று தெரியமா உங்களுக்கு, நீங்கள் இப்போது இழிவுபடுத்தி எழுதியிருக்கும் ராஜன் அவர்கள்தான்.

யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற பாகுபாட்டை கழைய ராஜன் அவர்கள் எடுத்த முயற்சிதான் கிழக்குமாகாணம் முழுமையாக போராட்டத்தில் இணையக் காரணமாக அமைந்தது. இலங்கை அரசாங்கம் செய்து வந்த பிரசாரம் பொய்த்துவிட்டது. கிழக்கு மாகாணத் தமிழருக்கு ஓர் ஆபத்து, அவயம் என்று வந்ததும் வடக்குப் பகுதி தமிழர்கள்தான் வந்தார்களே தவிர சிங்கள அரசு அல்ல என்பதைத் தெரிந்து கொண்டனர் கிழக்கு மக்கள். யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற பாகுபாடு மறைந்தது.

1979ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் நபர்கள் இல்லை, 1976ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொன்றுவிட்டார், இதனால் பிரபாகரன் அவர்களுடன் கிழக்கில் இருந்த ஒரு சிலரும் தங்கள் தொடர்பைத் துண்டித்துக்கொண்டனர்.

1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்வரை யாழ்ப்பாணத்து இளைஞர்கள் மட்டக்களப்பில் தங்கியிருந்து சுறாவளி நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். 1979ஆம் ஆண்டு ஜனவரியில் பிரபாகரன் அவர்கள் மட்டக்களப்புக்கு வந்து இந்த இளைஞர்கள் தங்கியிருந்த செல்வநாயகம் மெமோரியல் மண்டபத்தில் ராஜன் அவர்கள் தங்கியிருந்த அறையில் அவருடன் தங்கினார். இங்கிருந்துதான் ராஜன் அவர்களின் துணையுடன் மட்டக்களப்பு இளைஞர்களை தனது இயக்கத்துக்கு எடுத்தார்.

பழைய பகையை மறந்து அனைத்து இயக்கங்களிலும் மட்டக்களப்பு இளைஞர்கள் இணைவதற்கு ராஜன் (ஞானசேகரன்) அவர்கள் செய்த அந்தச் சுறாவளி நிவாரணப் பணிதான் காரணமாக அமைந்தது. துப்பாக்கி ஆதிக்கத்தால் வரலாறு மறைக்கப்பட்டது பற்றி இந்த “டீமுக்கு” எப்படி தெரிய வரும்? தமிழகத்திலிருக்கும் பல தலைவர்களுக்கே வரலாறு தெரியாது, உங்களைச் சொல்லி என்ன குற்றம் காணமுடியும்?

யாழ்ப்பாணம், குறிப்பாக வடக்கு மாகாணம் சிங்களவரால் சூழப்பட்டது அல்ல. ஆனால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய கிழக்கு மாவட்டங்கள் சிங்களவரால் சூழப்பட்டது. 1948ஆம் ஆண்டு முதல் கிழக்கின் மூன்று மாவட்டங்களையும் வளைத்து சிங்களக் குடியேற்றங்களை நடத்தி வந்தது சிங்கள அரசு. விடுதலையும், பாதுகாப்பும் கிழக்கு மக்களுக்குத்தான் அன்று தேவைப்பட்டது.

“இந்திய-இலங்கை” ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தலைநகரமாக கிழக்கின் திருகோணமலையைத்தான் நாம் தெரிவு செய்தோம். கிழக்கின் முக்கியத்துவம் என்ன என்பது உங்களைப் போன்ற டீமுகளுக்கு விளங்காது!

ஒப்பந்தம் ஏமாற்று, அதை ஆதரித்தவர்கள் துரோகிகள் என்று உங்களைப் போன்ற அரை வேக்காடுகள் தூற்றித் திரிந்ததை நாம் மறந்துவிட வில்லை.

ஒப்பந்தத்தில் என்ன பயன் என்று கூறுகிறோம்,

(01)    ஒப்பந்தம் கையெழுத்தானதும் இலங்கை இராணுவம் முகாம்களுக்குள் சென்று விடவேண்டும்.

(02)    வடக்குக் கிழக்கில் கடமையாற்றும் உரிமை சிங்கள இராணுவத்துக்குக் கிடையாது.

(03)    சிங்கள இராணுவம் மற்றும் பொலிஸ் தமிழர்கள் எவரையும் கைதுசெய்ய முடியாது.

(04)    சிறையிலிருந்த அனைத்து தமிழ் இளைஞர்களும் இயக்கப்பாகுபாடு இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.

(05)    வடக்குக் கிழக்கு மாகாணத்தை இணைத்து இடைக்கால நிர்வாகம் தமிழர்களைக் கொண்டு அமைக்க ஏற்பாடானது.

(06)    நிலம், கல்வி, பொலிஸ் ஆகியவை மாகாண அரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

(07)    அதனை புலிகள் இயக்கம் முறியடித்தனர், என்றாலும் கொள்கையின்படி தேர்தல் நடத்தி மாநில அரசு அமைக்கப்பட்டது.

(08)    அந்த மாநில அரசையும், தமிழர்களையும் பாதுகாக்க CVF (Citizen volunteer force) என்ற ஆயுதம் தாங்கிய படை அமைக்கப்பட்டது.

சட்டரீதியான பலம் கொண்ட ஒரு மாகாண அரசையும், தமிழ் மக்களையும் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட சி.வி.எப். (தமிழ்த் தேசிய இராணுவம்) என்ற முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்ட இராணுவப் படையைத்தான் எதிரியான பிரேமதாசாவுடன் இணைந்து முறியடித்தார் பிரபாகரன்.

சட்டபூர்வமாக ஓர் படை அமைத்ததை விரும்பாத சிங்களத் தலைவர் புலிகளைப் பயன்படுத்தி அந்த அதிகாரப்பூர்வப் படையை முறியடித்தனர்.

பின்னாளில் சிங்கள அரசு தனது தந்திரத்தை நிறுத்தி தாக்குதலில் இறங்கியபோது, ஐயோ எங்களைக் கொல்கிறார்கள் என்று ஒப்பாரி வைத்தனர் புலிகள். முன்யோசனை இருந்திருந்தால் தமிழ் இனம் இப்படி அனாதைகள் ஆக்கப்பட்டிருப்பார்களா? எத்தனை தமிழ் தலைவர்களையும் போராளிகளையும் கொன்றனர் என்ற கணக்காவது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு இராணுவத்தை முடக்குவதென்றால் சாதாரண விடயமா? எவ்வளவு மிகப்பெரிய போர் நடத்தி மிகப்பெரிய இழப்புக்களைச் சந்தித்துதான் ஒரு இராணுவத்தை முடக்க முடியும். ஆனால் மிக சாதாரணமாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் அந்த சிங்கள இராணுவத்தை எப்படி முடக்கியது என்று உங்களுக்குத் தெரியுமா?

“இந்திய-இலங்கை” ஒப்பந்தம் மூலம் எற்படுத்தப்பட்ட மாகாண அரசு கிழக்கை முக்கியத்துவப் படுத்தித்தான் அமைக்கப்பட்டது. இந்திய அமைதிப்படை வெளியேறிய வேளை அம்பாறை மாவட்டத்தில் சிங்கள அரசுக்கும் எங்கள் இயக்கங்களுக்கும் (ஈ.பி.ஆர்.எல்,எப்., ஈ.என்.டி.எல்.எப்.) இடையில் மோதல் ஏற்பட்டது. சிங்கள இராணுவ முகாம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது. மறுநாள் காலையில் விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவமும் இணைந்து வந்து எங்கள் இயக்கம் மீது தாக்குதல் தொடுத்தனர்.

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 700 பேரை புலிகளும் இராணுவமும் இணைந்து 1989ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் படுகொலை செய்தனர். நீங்கள் தூற்றும் கருணாவும், மாத்தையாவும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து வந்து எங்கள் இளைஞர்களைப் படுகொலை செய்த வரலாறு எப்படி உங்களைப் போன்றவர்களக்குத் தெரியவரும்?

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில்தான் இப்படி இவர்கள் கொலை செய்தனர்.

இப்படி எங்கள் இயக்கத்தோழர்களைப் படுகொலை செய்த கருணா தனக்குப் பிரபாகரனால் ஆபத்து என்றதும் எங்கள் இயக்கத்தினைத் தொடர்புகொண்டு காப்பாற்றும்படி வேண்டினார். நாங்கள் நினைத்திருந்தால் பழிக்குப் பழி தீர்த்திருக்கலாம். ஆனாலும் நாம் அவரையும் அவரது இயக்கத்தினரையும் காப்பாற்றினோம். அதுவே பிரபாகரன் என்றால் அத்தனை இயக்கப் போராளிகளையும் கொன்று பழிதீர்த்திருப்பார்.

கிழக்கு மாகாண இளைஞர்கள் ஆறாயிரம் பேர் கருணாவுடன் இணைந்திருந்தனர். இந்த ஆறாயிரம் பேரையும் அடித்து விரட்டி அழிக்கும் பணியினை பிரபாகரன் செய்தார். பிரபாகரன் தனது பலம் எது பலவீனம் எது என்று அறிந்திருக்கவில்லை. கிழக்கின் இளைஞர்கள் அடித்துவிரட்டப்பட்டால், ஈழப்போராட்டத்தின் வலிமை மூன்றில் ஒன்றாக குறையும், அப்படிக் குறைந்தால் சிங்கள இராணுவத்துக்கு அது சாதகமாக அமையும். விடுதலைப் போராட்டமானது பிரபாகரனிடத்துக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றல்ல!

எங்கள் பகுதியின் பூகோளத் தன்மையையும், இனத்தின் ஸ்திரத்தன்மையையும், எங்கள் இனத்தின் அரசியல் சாணக்கியத்தையும் பொறுத்துதான் எங்கள் விடுதலை தீர்மானிக்கப்பட்டிருக்கவேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது ஆயுத பலம் வன்னியிலும், அரசியல் பலம் தமிழ்நாட்டின் வாய்பேச்சு வல்லவர்களிடத்திலும் இருந்ததன் விளைவுதான் நாம் நாதியற்றவர்களாகக் காரணமாக அமைந்தது. இதனைக் கேள்விப்பட்டால் கொதித்து விடுவார்கள் வள்ளல்கள். ஆனால் இதுதான் உண்மை!

கருணா எங்களிடத்து உதவி கோரினார். நாங்கள் ஈழப்போராட்டத்தின் மூத்த தலைவர்களிடத்துப் பேசினோம், புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கூட எங்களிடத்து வேண்டினார்கள், காப்பாற்றுங்கள்! ஆறாயிரம் போராளிகள் வீணாகப் போகிறார்கள். மீண்டும் ஆறாயிரம் போராளிகளை அதிலும் அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தயாரிப்பதென்றால் அடுத்த பத்துஆண்டுகளானாலும் கூட முடியாது என்று எங்களை வேண்டிக்கொண்டார்கள்.

கருணா புலிகளை விட்டுப் பிரிந்தவுடனேயே இலங்கை இராணுவத்துடன் இணைந்திருக்கலாம். எங்களிடம் அடைக்கலம் கேட்டிருக்க வேண்டியதில்லை. ஈ.என்.டி.எல்.எப். அவர்களைக் காப்பாற்றிவிட்டது என்று அறிந்ததும், புலிகளின் வாய்வீச்சு வள்ளல்கள் ஈ.என்.டி.எல்.எப். க்கு எதிராகச் செயல்பட்டனர்.

நாங்கள் கருணாவுக்கென்று ஒரு கட்சியும் ஆரம்பித்து, அவர்களது கட்சியையும் இணைத்து கிழக்கின் இளைஞர்களை மீண்டும் ஒன்று திரட்ட முயற்சித்த வேளையில்தான் எங்கள் இயக்கத்தின் தலைவர் ராஜன் ஞானசேகரன் அவர்களையும் மற்றும் 10 உறுப்பினர்களையும் சிறப்பு முகாமில் அடைத்தனர், புலி ஆதரவாளர்களால் இது நடைபெற்றது.

இதனை அறிந்து கருணா புலிகளால் ஆபத்து வந்துவிடும் என்று பயந்து இலங்கை அரசிடம் சென்று சரணடைந்தார். இந்த விபரம் தெரியாத நபர்களால் அவர் துரோகி ஆக்கப்பட்டார். போராட்டமும் முடிந்தது.

அரசியல் அறிவோ, ராஜ தந்திரமோ, விட்டுக்கொடுப்போ, மன்னிக்கும் மனப்பாங்கோ இல்லாத விடுதலை இயக்கத்தினால் எங்கள் இனம் அடிமையாக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் வழிதவறிச் செல்ல தமிழகத்தின் சில தலைவர்கள்தான் காரணம் என்றால் யார்தான் நம்புவார்கள்?

உயர்திரு. அமிர்தலிங்கம் அவர்களை தமிழர்களின் எதிரியான பிரேமதாசவின் துணையுடன் கொழும்பில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் விளக்கக் கூட்டம் போட்டு, சரிதான் தம்பி விடாதே, கொல்லு என்று தூண்டிவிட்டவர்கள்தான் இவர்கள். இதனால் பாதிக்கப்பட்டு இழந்து நிற்பது ஈழ மக்கள்தான்! இந்த நபர்களுக்கு வந்துகொண்டிருந்த வருவாயில் இழப்பு அவ்வளவுதான்.

உயர்திரு. அமிர்தலிங்கம் அவர்களைப் படுகொலை செய்ததும், நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த யோகியும், அவரது சகாக்களும் சிங்கள இராணுவ கெலிகாப்டரில் பிரேமதாசாவின் உத்தரவின் பேரில் வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அமிர்தலிங்கம் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று அனைத்து சிங்களக் கட்சிகளும் நடாளுமன்றத்தில் கூடப் பேசினர். தமிழர்களின் எதிரியான சிங்களவர்கள் செய்யவேண்டிய வேலையை அவர்களுக்குப் பதிலாக புலிகள் செய்தனர்.

இவை இப்படியிருக்கையில் வாரப்பத்திரிகை நடத்தி பிளைப்பு நடத்தும் கோமாளி “டீம்” களும் எங்களுக்கு பட்டம் சூட்ட முற்பட்டு அதிலும் லாபம் தேட முனைந்துள்ளனர்.

அமைதிப் படைக்கு அஞ்சி பிரபாகரன் பிரேமதாசாவுடன் இணைந்தார் அன்று (1989), பிரபாகரனுக்குப் பயந்து கருணா ராஜபக்சேயடன் இணைந்தார் இன்று (2005). இவர் கட்சியில் இணைந்து அமைச்சர் பதவியை அடைந்தார். அவர் அப்படிக் கட்சியில் இணைந்து அமைச்சர் பதவியை நாடவில்லை, அதற்குப் பதிலாக பணத்தையும், ஆயுதத்தையும் பெற்றுக்கொண்டார்.

இவை ஒரு பக்கம் இருக்கட்டும் ஜூனியர் விகடனில் தலைமை நிருவாகியாக இருந்த சரவணக்குமார் நிர்வாகத்திலிருந்து விரட்டப்பட்டதற்கும், ஆசிரியர் அசோகன் அச்சுப் பகுதியில் மை நிரப்பும் பொறுப்புக்கு மாற்றப்பட்டதற்கும் என்ன காரணம்? இலங்கை தூதராலயத்தில் கைநீட்டியதற்காகவா?  இன்னும் என்னென்ன லஞ்சங்கள் வரப்போகிறதோ தமிழ் அனுதாபிகளுக்கு?

இந்தப் பத்தாண்டு காலத்தில் பிழைப்புத் தேடி ஈழப் பிரச்சினைக்குள் புகுந்த உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது! நாங்கள் நடந்த வரலாற்றைத்தான் சொல்லமுடியும், அது விடுதலைப் புலிகளுக்கு எதிராகத்தான் இருக்கும். உங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது, மோதுவதும் இழிவுபடுவதும் ஈழத் தமிழர்கள்தானே!

இவ்வண்ணம்,

சென்னையிலிருந்து நா. சங்கரன்

சுவிஸ் கிளைப் பொறுப்பாளர்,

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

(ஈ.என்.டி.எல்.எப்.)

N Shangaran 

Swiss Organiser

Tel: 0041 (0)793 545 637

 

Branch Address:

ENDLF

Postfach 641

3000 Bern 25

Switzerland

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com