Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் இனத்தின் உரிமைக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நடைபயணத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கும்மாவீரன் நெடுமாறன்”!

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நெடுமாறன் என்றால் நன்கு அறிமுகமானவர் என்பதை அனைவரும் அறிவர்! இவர் 1983ஆம் ஆண்டு முதல் ஈழத் தமிழரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் நாட்டில் மக்கள் ஆதரவை இழந்து, தனிக்கட்சி ஆரம்பித்து அதனையும் இழந்து, இறுதியில் ஈழப்பிரச்சினைக்குள் நுழைந்து தனது வாழ்வை இன்றுவரை தமிழர் பணத்திலேயே நடத்தி வரும் இந்த நபர் வெளியில் நல்லவர், மறைவில் பெரும் சதிகாரர் என்பது யாருக்கும் தெரியாத விடயமாகும். பார்த்தால் அப்பாவி போன்ற தோற்றத்தை உடைய இந்த நபர் நயவஞ்சகத்திலும், சுய நலத்திலும் பெயர் பெற்றவர்.

தமிழ் நாட்டில் கட்சி நடத்துவதற்கு ஏதாவது கொள்கை இருக்க வேண்டும். இவரிடம் எதுவும் இல்லை. அதனால் ஈழப்பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்தபோது நுளைந்தார் இதனுள். எப்படி என்றா கேட்கிறீர்கள்? இலங்கைக்குப் படை எடுத்து ராமேஸ்வரம் வழியாக சிங்களவரைத் தாக்கி அழிக்கப் புறப்பட்டார் இவர். ராமேஸ்வரத்தை அடைந்ததும் என்னசெய்வதென்று தெரியாமல் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் சிறிய படகு ஒன்றில் ஏறினார். படகு சரிந்து தண்ணீரில் விழுந்தால் இவருக்கு நீந்துவதற்குக்கூடத் தெரியாது. இவர் கடல் கடந்து போராடப் போகிறார் என்று மக்கள் கூடி நின்று வேடிக்கைப் பார்க்கின்றனர். தூண்டில் படகில் ஆடாமல் நிற்பதற்குக் கூட இவருக்கு திராணி இல்லை. இந்த நபர் தமிழர்களுக்காகப் போராட இலங்கைக்குப் போகிறார். எவ்வளவு பெரிய ஏமாற்று!

படகில் ஏறியவர் காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டு, பொலிசாரைப் பார்த்து கைது செய்யுங்கள் என்று மன்றாடுகிறார். அந்த வேளை அங்கு கடமையிலிருந்த எஸ்.பி. மதுரை ஐ.ஜி யிடம் கேட்கிறார், என்ன செய்வதென்று, அவரை இலங்கைக்குப் போகவிடுங்கள் என்று அவர் உத்தரவிடுகிறார்.

எஸ்.பி. மௌனமாக வேடிக்கைப் பார்க்கிறார். திரு. குமரி ஆனந்தன் அவர்கள் எஸ்.பி.யிடம் மன்றாடுகிறார். எப்படியும் காப்பாற்றுங்கள் என்று. இறுதியில் அந்த ஆளை அங்கிருந்து விரட்டிவிடுங்கள் என்று உத்தரவு வர இந்தமாவீரன் நெடுமாறன்காப்பாற்றப்பட்டார்.

அன்று முதல் இவர் புலிகள் மத்தியிலும் இலங்கைத் தமிழர் மத்தியிலும் புகழ் பெற்ற தலைவரானார். ஒரு கால கட்டத்தில் புலிகளின் தமிழ் நாட்டின் ஏகப் பிரதிநிதி இவர்தான். இவர் போன்று பல நடிகர்கள் தமிழகத்தில் தோன்றினர். தமிழகத்தில் இருக்கும் சில அரசியல் தலைவர்களும், நடிகர்களும் இழிச்சவாய் தமிழர்கள்பற்றி (இலங்கைத் தமிழரும், மலேசியத் தமிழரும்) ஓர் கணீப்பீடு வைத்துள்ளனர். பணம் பறிக்கும் மாங்காய் (மடையர்கள்) மரங்கள்தான் இவர்கள் என்று.

நன்றாகக் கதை சொன்னால் பேர்சில் இருக்கும் டொலர்களையும் கழுத்து கைகளில் இருக்கும் நகைகளையும் கழற்றிக் கொடுத்துவிட்டுச் சென்று விடுவார்கள் இரு மடையர்களும் என்பது இந்த சுயநலவாதித் தலைவர்களின் கணிப்பு. அதனைத் திறம்பட இன்றுவரை செய்து வருகின்றனர் இந்த மாவீரர்;!

ஈழத் தமிழர்களுக்காக இவர்கள் தங்களது சொந்தப் பணத்தைச் செலவு செய்திருக்கிறார்களா என்று யோசித்துப் பாருங்கள்! கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ம.க., விஜயகாந் கட்சி, சரத்குமார் கட்சியும்தான் பணம் பெறாத கட்சிகள் என்று நாம் அறிந்துள்ளோம். தி,மு.க., அ.தி.மு.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இவர்கள்(புலிகள்) சொன்னபடி நடப்பவைகள் அல்ல.

இவ்வளவு காலமும் தான் இவர்கள் ஈழத் தமிழர்களை ஏமாற்றிப் பணம் பறித்து வந்தனர். கடைசியாக பதவிகளை அடைவதற்கு எம் இனத்தை எதிரியிடம் பலி கொடுத்தல்லவா லாபம் தேட முற்பட்டனர்.

யுத்த நிறுத்தத்துக்கு சம்மதித்து விடாதீர்கள், காங்கிரசும், தி.மு.க வும் ஒரு சீற்றில்கூட ஜெயிக்க முடியாது. ஆட்சி மாறப்போகிறது, இந்த நேரத்தில் நீங்கள் இந்திய அரசின் பேச்சைக் கேட்டு கடிதம் கொடுத்து சண்டை நிறுத்தப்பட்டால் அது தி.மு.க. வுக்கும் காங்கிரசுக்கும் சாதகமாகி தேர்தலில் ஜெயித்துவிடுவார்கள். அப்படி நடந்தால் உங்களுக்கு தமிழீழம் கிடைக்காமல் போய்விடும் எனவே விடாதே பிடி என்று பொய் வாக்குறுதி கொடுத்து எங்கள் மக்களில் ஒரு லட்சம் பேரைப் பலியிட்டவர்கள் இந்த நபர்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த நபர்கள் இப்போதும் ஈழத் தமிழ் பற்றாளர்களாகக் காண்பித்து தொடர்ந்தும் பணம் பறிக்க முயற்சித்து வருகின்றனர் ஈழத்தமிழ் மக்களிடம்.

இந்த நபர்களால் தமிழ் இனத்துக்கு ஏதேனும் நன்மை விளைந்துள்ளதா என்று சிந்தித்துப் பார்த்து யாராவது எதையாவது சொல்ல முடியுமா?

நெடுமாறன் இன்றுவரை அலுவலகமாக நடத்தி வரும் கட்டிடம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஈழத் தமிழர் திரு. சத்தியநாதன் அவர்களுடையது. இதற்கு அருகில் இருக்கும் வீடு சத்தியநாதன் அவர்களின் சகோதரருடையது. இந்த வீட்டைக்கூட நெடுமாறன் அபகரிக்க பெரிதும் முயற்சித்து வந்தார்.

அலுவலகத்துக்கு வீடு வழங்கிய சத்தியநாதன் அவர்கள் இன்று பைத்தியம் பிடித்து அவுஸ்திரேலியாவில் மருத்துவ மனையிலும் அவரது வீட்டிலுமாக சுயநினைவை இழந்து வாழ்ந்து வருகிறார். அவர் சுயநினைவை இழந்தது, இந்தியா வந்து இந்த நபர்களைப் பார்த்துச் சென்ற பிறகுதான். இப்போது அவரது மனோநிலை முற்றிய நிலையில் இருப்பதால் குடும்பம் பெரும் அவல நிலையில் வாழ்கிறது. நெடுமாறன் அந்த வீட்டை தனது பெயரில் மாற்றிவிட்டார் என்றும் குடும்பத்தார் கவலை தெரிவித்தனர்.

இது மட்டுமல்ல, அந்த அலுவலகத்தை நடத்துவதற்கென்று இன்னுமோர் ஈழத்தமிழரிடமிருந்து மாதம் 35,000 ரூபா பெற்று வருகிறார் நெடுமாறன். விடுதலைப் புலிகளின் பணத்தை மோசடி செய்துவிட்டார் நெடுமாறன் என்று புலிகள் சந்தேகப்பட்டு அதனை விசாரிக்க அமெரிக்காவில் வாழ்பவரை அனுப்பி கணக்குகள் பார்த்து நெடுமாறன் கையாடல் செய்துள்ளார் என்று அவர் அறிவித்துவிட்டுச் சென்றார். இந்த சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. இதன் பின்னர் நெடுமாறன் மீண்டும் புலிகளின் பாசறைக்குள் நுளைந்துவிட்டார்.

உலகில் உள்ள தமிழர்களுக்கு இப்போது தெரியும் இந்த நெடுமாறன்களால் எதுவும் முடியாது என்று, இருந்தும் இழிச்சவாய்த் தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அப்படியானவர்களை இந்த நெடுமாறன் போன்றோர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொடர்ந்தும் பணம் பறிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர்.

இவர் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுகிறார் என்று காண்பிப்பதற்காக ஏதாவது செய்தியை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அப்படி ஓர் செய்தியை அந்த நபர்களது செய்தித் தாளில் அண்மையில் வெளியிட்டார்.

இந்தியா அரசாங்கம் பல கோடிகள் கொடுத்து பெங்களுரில் ஈ.என்.டி.எல்.எப். மாநாடு நடத்தியது என்று தனது சிற்றறிவுக்கு எட்டியவரையில் விசத்தை விதைத்துள்ளார். அதுவுமல்லாது சென்னையிலிருந்து டெல்கிவரை நடைபயணம் மேற்கொள்வதும் காங்கிரசின் தேர்தல் வியூகம் என்றும் தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கைபேசியில் தகவல் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

எங்களது இனத்தவர் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் போது மத்திய அரசுக்கு எதிராக நெடுமாறன், வைகோ போன்றோர் மேடை மேடையாக பேசினார்கள். இவர்கள் பேசி மத்திய அரசுக்கு வெறுப்பூட்டினார்களே தவிர, மத்திய அரசை சம்மதிக்கச் செய்ய முடியவில்லை. மக்கள் கொல்லப்படும்போது அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்றுதான் உண்மையான தலைவர்கள் சிந்திப்பார்களே தவிர ஆத்திரமூட்டி எதிரியைத் தூண்டிவிடமாட்டார்கள்.

உலகமே கொந்தளித்து தமிழர்களின் அழிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் அமைதியாக இருந்தது. தேர்தலும் நடந்துகொண்டிருந்தது. காங்கிரசுக்கும், தி.மு.க. ஒருவாக்குக் கூட விழாது என்று பரப்புரை செய்யப்பட்டுக்கொண்டிருக்கையிலேயே காங்கிரஸ் அசைந்து கொடுக்காமல் இருந்தது. வாக்குக் குறைந்துவிடும் என்று கொள்கையை மாற்றவில்லை அவர்கள். இது உலகம் அறிந்த விடயம்தான். வரலாறு இப்படி இருக்கையில் இப்போதுதான் வியூகம் அமைத்து தேர்தலில் போட்டி போடப்போகிறது காங்கிரஸ் என்று நெடுமாறன்கள் கதை சொல்ல புறப்பட்டுவிட்டனர்.

இந்த நபர்கள் யாருக்குமே சொந்தமான புத்தி இருப்பதில்லை! தாங்கள் பணம் பெற்றுக்கொண்டு பணிவிடை செய்வது போன்று தான் ஏனையோரும் இருப்பார்கள் என்று கணக்குப் போட்டுக் கதை சொல்கின்றனர். இதனால் நாங்கள் மாநாடு நடத்தினால் யாரோ பணம் கொடுத்துத்தான் நடத்தினார்கள் என்பர், நாம் எதையாவது செய்தால் யாரோ சொல்லித்தான் செய்கின்றனர் என்று தங்களது அனுபவத்தை எம்மீதும் வீசுவர்.

ஈழத் தமிழரிடமிருந்து பணம் பறிக்கும் வித்தையை இவர்களைத் தவிர வேறு யாரும் கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் அப்படிச் செய்து பிளைத்துக் கொள்ளுங்கள், ஆனால் எங்கள் மீது சேறுவாரி வீசாதீர்கள். உங்களால் எதுவும் முடியாது என்பதை உலகமே பார்த்தது. இருந்தாலும் விடுவதாக இல்லை!

ஈழத் தமிழருக்கே ஈழ வரலாற்றைத் திரித்துக் கதை சொல்ல முற்பட்டுள்ளீர்கள். தமிழகத்து மக்களே உங்கள் கதைகளைக் கேட்கவில்லை. ஈழத் தமிழருக்குத் தேவை இருப்பதை அறிந்து அதனைக் காசாக மாற்றும் வித்தையில் கைதேர்ந்தவர் மாவீரன் நெடுமாறன் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இந்த மாவீரனுக்கு எப்படி இந்தப் பெயர் வந்தது என்று கேட்டால் சிரிப்புத்தான் வரும்.

திருமதி. இந்திராகாந்தி அம்மையார் மதுரைக்கு வந்தபோது மேடையில் கல் வீசினர் சிலர். அந்தக் கல் இவர் மீது விழுந்தது. இதனால் இவர் மாவீரன் என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டு கொஞ்ச காலம் சுவரொட்டிகள் ஒட்டிப்பார்த்தார் அதுவும் எடுபடவில்லை! கல்லெறிபட்டவன் எல்லாம் மாவீரனா என்று தமிழக மக்கள் விரட்டிவிட்டனர் இவரை அரசியலிலிருந்து.

இப்போது இவர் தரகு வேலை செய்து வருகிறார் கட்சிகளுக்கிடையில். புலிகள் கைவிட்டாலும் அவருக்கென்று ஓர் தொழில் கைவசம் உண்டு. அதற்கென்று திரு. சத்தியநாதன் அவர்களின் வீடும் இருக்கிறது.

நெடுமாறன்பற்றி எங்களிடம் நிறையவே செய்திகள் உண்டு, இனியொருதடவை இவரது கல்லெறிதல் தொடருமானால் இவரது நடிப்பு, ஏமாற்று, எப்படி எல்லாம் புலிகளை ஏமாற்றினார் என்ற விடயங்கள் விலாவாரியாக வெளியிடவுள்ளோம். குறிப்பாக 2009ல் இவர்கள் ஆடிய நாடகம் பற்றி அளவுக்கு அதிகமாகவே செய்திகள் திரட்டியுள்ளோம்.

நெடுமாறனிடம் வேண்டிக்கொள்கிறோம், ஏனைய தமிழர்களை துரோகிகள் என்று கூறியே பழக்கப்பட்டுவிட்டது உங்களுக்கு, பெற்றுக்கொள்ளும் பணத்துக்காக நிறையவே குரைத்துவிட்டீர்கள். மேற்கொண்டும் கெடுதல் செய்யும் பாணியைத் தொடரவேண்டாம் மீறியும் சேறு வீசினால் அது திரும்பி உங்கள் முகத்தில் வீசப்படும்.

நன்றி!

நெடுவழகன்

அரசியல்துறை

ஈழ தேசிய விடுதலை முன்னணி

(ஈ.என்.டி.எல்.எப்.) 28-12-2010

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com