Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் மக்களின் நலன்சார்ந்த அரசியல் கட்சிகள் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையும் கிழக்கு பிரிவினை வாதத்தையும் பேசிக்கொண்டிராமல் தீர்வுத்திட்டத்தை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் (பத்மநாபா EPRLF)

தமிழ் மக்களின் நலன்சார்ந்த அரசியல் கட்சிகள் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையும்,கிழக்கு பிரிவினை வாதத்தையும் பேசிக்கொண்டிராமல் நேர்மையுடனும் இதயசுத்தியுடனும் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வுத்திட்டத்தை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் தமிழ் தேசம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமுகமாக சர்வதேசம் தலையிடுவது தொடர்பாகவும் தலையிடாமல் இருக்கவேண்டுமாயின் இலங்கை அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று அரசாட்சி செய்துகொண்டு தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் என சொல்வதும் திம்பு பேச்சுவார்த்தைபோல் என்று கூறுவதையும் நிறுத்திவிட்டு 89ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டதும் தமிழ் கட்சிகளால் முன்வைக்கப்பட்டதும் தற்சமயம் வடகிழக்கு இணைப்பு,காணி,பொலிஸ் அதிகாரங்களை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும்.அத்தோடு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அந்த மக்களோடு பேசி தீர்வுகாணவேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்ததாலேயே தமிழ் மக்களிடையே தனிநாட்டுச்சிந்தனை பிறந்தது.

இந்தப்பின்புலத்தில் இதற்காக நாம்கொடுத்த விலைகள் எண்ணற்றவை தமிழ் மக்களின் இனப்பிரச்சினை உரிமைகள் தொடர்பாக வடக்கிலும் கிழக்கிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் தமது இனத்தின் உரிமையை பெறுவதற்காக ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் பங்காற்றி உள்ளனர்.

குறிப்பாக இப்போராட்டத்திற்கு போராளிகள் தொடக்கம் பொருளாதாரம்;, வரையும் ஜனநாயகரீதியாக இப்போராட்டத்தை வளர்த்துச்செல்ல ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை வழங்கி உள்ளனர் என்பதை எவரும் மறுக்கமுடியாது அதனை மறுப்பதற்கும் எவருக்கும் உரிமையில்லை.

எமது நாட்டில் மூன்று தசாப்தமாக நீடித்த போரும ,உட்பூசல்களும்,முரண்பாடுகளும் விரும்பியோவிரும்பாமலோ இலங்கைதீவின் அனைத்து இனமக்களையும் பெரும்துயரத்தில் ஆழ்த்தியது இதனை எந்த இதயசுத்தியுள்ள மனிதர்களும் மறுதலிக்கமுடியாது.

இந்தவகையில் இன்று எமது நாட்டில் ஒரேநாடு, ஒரேதேசம் எல்லோரும் ஒரேதாய்மக்கள் என்ற கோட்பாட்டை முன்னிலைபடுத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது சிந்தனையை உணர்வு பர்வமாகவும் இதயசுத்தியோடும் நடைமுறைப்படுத்துவதற்கு இதைவிட வரலாற்றில் பிரிதொருசந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை.

எனவே உலக நாடுகளின் தலையீட்டை தவிர்ப்பதற்கும், சர்வதேசநெருக்கடிநிலையில் இருந்து தான் எதிர்நோக்கி உள்ள சவால்களை அகற்றவும ,உலகத்தமிழர்களின் இன்றைய இலங்கை அரசுதொடர்பான சந்தேகப்பார்வையை இல்லாது செய்யவும் உண்மையில் தனது சிந்தனையை நிலைநிறுத்தி தனது ஆட்சிஅதிகாரத்தை ஸ்திரப்படுத்தவும் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய நிரந்தரத்தீர்வை வழங்கி எல்லோரையும் ஒரேகுடையின் கீழ் அரவணைத்துக்கொள்ளவேண்டும்.

இதற்கு தமிழ் மக்களின் நலன்சார்ந்த அரசியல் கட்சிகள் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையும்,கிழக்கு பிரிவினை வாதத்தையும் பேசிக்கொண்டிராமல் நேர்மையுடனும் இதயசுத்தியுடனும் தீர்வுத்திட்டத்தை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

நீண்ட துயரவடுக்களை சுமந்து நிற்கும் எமது தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் எமது பிரதேசமான வடகிழக்கை சொர்க்க பூமியாக மாற்றவும் மிகக்குறைந்த இந்த தீர்வுத்திட்டத்தை முன்மொழிய ஓரணி திரளவேண்டும்.

இந்த குறைந்த தீர்வுத்திட்டத்தைக்கூட இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தவறுமேயானால் தமக்கான தீர்வுத்திட்டதை பெற சர்வதேசத்தை நாடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு இல்லையென்பதையும் ஆட்சியாளர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com